Tuesday, July 26, 2016

கல்லீரலில் உண்டாகும் நோயும் மஞ்சள்காமாலையும்
கல்லீரலில் உண்டாகும் நோயும் மஞ்சள்காமாலையும் என்பது என்ன,
கல்லீரலில் உண்டாகும் வியாதிகள் பல அவற்றின் காரணத்தால் கானப்படும் வியாதிகள் பல,
கல்லீரலில் உண்டாகும் வியாதிகளிள் முக்கியமாய் வீங்குவதாலும்,இரணத்தாலும்,சுருங்குவதாலும், பலவித வியாதிகள் கானப்படுகின்றன.
கல்லீரலையோ, லீவர், என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் கல்லீரல் சகாயத்தால் உண்ணும் ஆகாரம் ஜீரனிக்க பயன்படுகிறது, கல்லீரலுக்கும் ,இதயத்துக்கும், மூளைக்கும்,தொடர்ந்து வேலை செய்யக்கூடிய நரம்புகள் அமைக்கப்பட்டு உள்ளன, எனவே கல்லீரலின் சீர்கேட்டானது மூளையையும் இருதத்தையும்
சிறுநீரகத்தையும்,இறைப்பையும்,சீர்கேட்டைச் செய்துவிடும் என்பதை அனைவரும் அறிவார்கள, கல்லீரலில் வீக்கம் கானுமானால் இரத்தக் குறைவு ஏற்படும் இருதயம் பலவீனத்தையடையும் பிறகு மூளையும் சோர்வடையும் கடைசியில் சிறுநீரகம் சரியாக வேலை செய்யாமல் குறைந்த அளவு நீரையே வெளிபடுத்துவதும் மஞ்சள் அல்லது சிவந்த நிறமான நீரை வெளிபடுத்துவதும் தவிர சிறுநீரகத்தில் உள்ள நீர் உடளிலும் வயிற்றிலும் பரவ ஆரமிக்கும் முதலில் பாதங்களில் வீக்கம் கானும் பிறகு கால், தொடை,முதலியன இடங்களில் வீக்கம் பரவும் பிறகு வயிறு வீங்கும் இப்படி வீங்கிய பின் குரல் வளை வீக்கத்தை யடையும் அதற்க்கு மேல்
இருமலும்,சுவாசத்திலும் ஒருவித கர் என்ற சத்தம் உண்டாகும் இதையே மகோதரம் என சொல்லுவார்கள்,
கல்லீரலில் கானப்படும், வீக்கமானது குழந்தைகளுக்கு ஏற்படும் போது பால்கட்டி எனப்படும்,
Êசிலருக்கு கல்லீரல் வீங்குமானால் சிறுநீரகத்தில் மஞ்சள் நிரமான சத்து கலந்த நீர் வெளிபடும், அவர்கள் கண்கள், உடல் முதலியன மஞ்சள நிறமாக கானப்படும் இதையே மஞ்சள் காமாலை (ஜான்டிஸ்) என்று கூறுவார்கள் இவை கல்லீரலில் உண்டாகும் நோயே ஆகும்,
முதலில் இ ருதயம் ¢ கெட்டுஅதன்மூலம் கல்லீரல் வீக்கத்தை அடையுமானால் அவர்களுக்கு மேல் சுவாசம் வாங்கும் மூச்சுதினரும் பலவீனமாய் இருக்கும் என்றாலும் அவர்களுக்கு
லேசாய் கல்லீரல வீக்கத்தை அடைந்து இருக்கும் ஆனால் இதனைக் கல்லீரல் வியாதி எனசொல்வது இல்லை ஆனல் இருதய வியாதி என்பார்கள்,
இவ்வியாதியுள்ள மக்களுக்கு ஆகாரம் ஏற்றுகொள்ளாது பலாத்காரமாய் புசித்தாலும் சங்கடம் உண்டுபண்ணும்
இந்த நோயாலும் பாதம் வீங்கும் ஆனால்வயிறு வீங்காது என்பதை முன்சொன்ன வியாதிக்கும் இதற்க்கும் உள்ள வித்தியாசமாகும்,
கல்லீரல் வீக்கமானது சன்னிபாத சுரங்களிலும் காணப்படும் அவ்வீக்கமானது சுரம் நின்ற ஒரு வாரத்திற்குள் தானாகவே குறைந்து விடும்,
கல்லீரலில் காணப்படும் வீக்கமானது அதிக உஷ்ணத்தாலும் மலை நீர் அருந்துவதாலும் சிறுநீரகம் உஷ்ணம் தாக்கிநீர் இரத்தம் போல் இறங்கி பிறகு கல்லீரலை வீங்க செய்து விடுமானால் அவர்களுக்கு மஞ்சள் காமாலை உண்டாகும்,
இத்தகைய காமாலை ஐந்தாக பிரிக்கபடும் அவை:
1,மஞ்சள் காமாலை
2,பித்தக்காமாலை
3,ஊதுக்காமாலை
4,வரக்காமாலை
5,வெள்ளக்காமாலை
என்பவை, பித்தக்காமாலை என்னும் நோயின்நீர்மென்மையாகவே காணப்படும்,ஆனாலும் இரத்தம் குறைந்து கண்ணிலும் உடலிலும் இரத்தம் இன்றி வெளுத்து கானும்,
மஞ்சள் காமாலைக்கு செய்ய வேண்டிய சிகிச்சை ரத்தத்தில் சிகப்பு சத்தை உண்டு பண்ண கூடிய வகையான மருந்து வகைகளால் என்பதை முதலில் உணர்தல் வேண்டும்,
காமாலை என்றுசொல்லப்பட்ட பெயரானது ஒன்றாகவே காணப்பட்டாலும்,காரணங்களும்,சிகிச்சையும் வேறாகவே இருப்பதால் காமாலை நோயானது வேறுபாடு உடையது என்று சொல்வதால் குற்றம் இல்லை,
பித்தக்காமாலைக்கும், மஞ்சள் காமாலைக்கும்,மூலக்காரணம் தெரியாத காரணத்தால் ஆங்கில மருத்துவர்கள் செய்யும் சிகிச்சையும் பயன்னற்றதாகிறது,
சிகிச்சை பயன்னற்று போவதால் அந்த நோயைக்கன்ட ஆங்கில மருத்துவர்கள் பயப்பட காரணம் ஏற்ப்பட்டு உள்ளது சில சமயங்களிள் பித்தக்காமாலையை ஆங்கில முறையில் குனப்படுத்தி வருவதாக சொன்னாலும் மங்சக்காமாலை என்னும்(ஜான்டிஸ் )நோயைக் குணப்படுத்த அவர்களால்முடிவது
இல்லை,பித்தக்காமாலையை ஆங்கில மருத்து வர்கள் எனிமியா என்று சொல்லுவார்கள், கல்லீரலில வீக்கமானது அதிகரிக்க அதிகரிக்க தீனிப்பையும் பித்தப்பையும் வீங்கி விடும் முடிவில் உடல் வீக்கம் அடைந்து மரணத்தை உண்டுபன்னும்,
மஞ்சள் காமாலைக்கு இயற்க்கை மருத்துவம்,
எந்த விதமான காமாலையாக இருந்தாலும் முதலில் நஞ்சுமுறிஞ்சான் என்ற குத்து பாளை என்ற மூளிகையை பசுந்தைரில் ஒரு எலும்பச்சை பழம் அளவுக்கு அரைத்து கலக்கி உள்ளுக்கு கொடுத்து உடல் முழவதும் கொஞ்சம் மூலிகை அரைத்து பூசி இளம் வெயிலில் 1மணி நேரம் இருக்க செய்தால்
இரத்தத்தில் உள்ள காமாலைகள் அனைத்தும் சிறுநீரில் வெளியேறும்,மருந்து உட்கொள்ளும் போது உப்பில்லா பத்தியம் இருக்க வேண்டும்,
மறு நாள் புளி,பூண்டு,மிளகாய்,இந்த மூன்றையும் நெருப்பு அனலில் சுட்டும் உப்பையும்,பருப்பையும் வறுத்தும் அவரக்காய் அல்லது முருங்காய் சேர்த்து சாம்பார்,வைத்து பத்தியம் முரித்து கொள்ளவும்,
ஒரு வாரம் கழித்து இரத்தத்தை பரிசோதனை செய்து பார்த்தால்
எந்தவிதமான காமாலைகளும், இருக்காது இது முற்றிலும் பாரம்பரிய முறை பல லட்சம் பேர்களுக்கு கொடுத்து குனம் அடைந்து உள்ளனர்,
சித்த மருத்துவம்,
அயச்செந்தூரம்,அயகாந்தசெந்தூரம்,மண்டூர செந்தூரம்,லோகமண் டூரசெந்தூரம்,போன்ற மருந்துகளை, காலை,மாலை இருவேலையும் உணவுக்கு முன் 1 ஒரு அரிசி எடை தேனில் உட்கொள்ள உடலில் இரத்த விருத்தி உண்டாகி,உடல் நல்ல திடகாத்தரமாக மாறும்.
லேகியம்:
கரிசாலை லேகியம் காலை மாலை இரு வேளையும் உணவுக்கு முன் நெல்லிக்காய் அளவு உண்டு வர அனைத்து விதமான காமாலைகளும் குணமடையும், இது துனைமருந்து, செம்பரன்டை தைலம்,
நமது உடலில் வெளியிலும், உட்புரமும் ஏற்பட்ட ரணங்கள் குணம் அடைய கல்லீரல் வீக்கம்,ரணம்,சுருக்கம் போன்றவை குணம்மடைய காலை,மாலை இருவேளையும் உணவுக்கு முன் 5மில்லி அளவு உள்ளுக்கு சாப்பிடவும்,
கல்லீரல் வீக்கம்,ரணம் சுருக்கம்:
போன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்ய சித்தமருந்துகளான நாகபஸ்பம் என்ற மருந்தை காலை,மாலை,இரு வேளையும் உணவுக்கு முன் குன்டு மணி அளவு நெய்யில் உட்கொள்ள 12நாளில் நல்ல ஆகாரம் உட்கொள்ளும் அளவுக்கு உடல் தேரி Õவரும் தொடர்ந்து 1மாதம் சாப்பிட அனைத்து விதமான குறைபாடும் நிவர்த்தியாகும்,
பத்திய முறை:
புளி,அசைவம்,போகம்,போதை, போன்ற லாகிரி வஸ்த்துகளை தவிர்த்தல் சால சிறந்தது,
குறிப்பு:
மக்கள் தொன்டே மகேசன்தொண்டு என்பதை மறவாமல் நாங்கள் கடந்த2008 ஆம் ஆண்டு முதல் எங்கள் அறக்கட்டளையின் சார்பாக மாதந்தோறும் அமாவாசை அன்று உளுந்தூர் பேட்டையில் மகான் ஸ்ரீ சங்கரலிங்கசுவாமிகள் ஆசிரமத்தில் சக்கரை நோய்க்கு இலவச மருத்துவம் செய்யபடுகிறது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உலகத்தில் தீர்க்க முடியாத நோயே இல்லை ஆனால் பசி என்பதை மட்டும் பசிப்பிணிஎன்று கூறுகிறோம் தீர்க்கமுடியாதநோய் பசி மட்டுமே அதனால் பசியை போக்க
தங்களால் முடிந்த அளவு அன்னதானம் செய்து ஆனந்தமாகவாழ்வோம்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...