Saturday, November 10, 2018

கற்றாழையின் மருத்துவ பயன்கள்:-

கற்றாழையின் மருத்துவ பயன்கள்:-

தோல் நீக்கிய சோற்றை ஏழு முறை கழுவி கசப்பு நீக்கி குழம்பாகச் சமைத்துண்டால் தாதுவெப்பு அகன்று தாகந்தணியும், மலச்சிக்கல் போகும்.

தோல் நீக்கிய சோறு கசப்பில்லாத வகையும் உள்ளது. ஒரு வகை இனிப்புக் கூழ் மூலநோயிக்கு மருந்தாகும். சோற்றை கரண்டியளவு உள்ளுக்கு சாப்பிட்டு வர வெப்ப நோய்கள் யாவும் தீரும். அடிபட்ட வீக்கங்களுக்கு வைத்து கட்டி வர வீக்கம் தீரும்.

கடும் வயிற்றுப்புண்ணுக்கு இலையின்சாறு பயன்படுகிறது.

இதன் ஜெல் தோலின் மேல் தடவினால் வெப்பத்தின் தன்மையை போக்கும். முக அழகு சாதனமாகப் பயன்படுகிறது.

இலை மஞ்சள் நிறத் திரவமும் (கரியபோளம்) தேனும் கலந்துண்டால் இருமல் சளி போகும். வயிற்றில் உள்ள நாக்குப்பூச்சிகளை வெளியேற்றுகிறது.

எரிசாராயத்துடன் கலக்கி முடிக்குப் போட முடிவளரும், நிறம் கருமையடையும்.

முக அழகு கொடுக்கும் எல்லா களிம்புகளிலும் கற்றாழை சேர்க்கப்படுகிறது. கற்றாழை சோற்றை நன்றாக மிக்சியில் அரைத்து முகத்தில் பூசி வரலாம். முகம் பளபளப்பாக மாறி விடும். இதனை குமரி களிம்பு என்பர்.

குமரி பக்குவம் – இளம் பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு தொடர்பான நோய்களுக்கு கற்றாழை சோற்றை சர்க்கரையுடன் கலந்து நன்றாக மிக்சியில் அரைத்து கரண்டியளவு சாப்பிட தீரும்.

குமரி எண்ணெய் – கற்றாழை சோற்றை எண்ணெய் சேர்த்து தைலம் பண்ணி தலைக்கு தேய்த்து வர முடி நன்றாக கருமையாக வளரும். தூக்கம் சிறப்பாக வரும்.

மூசாம்பரம் – கற்றாழையைக் கீறும்போது வடியும் பாலினை காயவைத்து கிடைக்கும் பொருளுக்கு மூசாம்பரம் என்று பெயர். இதனை இரத்த கட்டிற்கு நீரில் அரைத்து போட தீரும். மூட்டு வீக்கத்திற்கு மூசாம்பரத்தை நீரில் அரைத்து போட தீரும்.

ஜெல்லைப் பதப்படுத்தி குளிர்பானமாகவும் பயன்படுத்தப்படுகிறது.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...