தங்க பஸ்பம் தெரியும்.....
வெள்ளிபஸ்பம் பற்றி தெரியுமா...?
உடம்பில் தாதுவைப் பலப்படுத்த பல மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட தங்க பஸ்பம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்....
சித்த வைத்தியர் என்ற பெயரில் நடமாடும் பல போலி ஆசாமிகள் தங்கம் என்ற பெயரில் எதை எதையோ விற்று காசு பார்த்து கொண்டு வருகிறார்கள்....
ஆனால் எந்த செலவும் இல்லாமல் இயற்கையிலேயே இலவசமாக கிடைக்கிறது, ஒரு மூலிகை இதை இன்ஸ்டன்ட் ஆக பயன்படுத்தலாம் இந்த மூலிகைக்கு தாதுவை அதிகரிக்கும் தன்மை உண்டு.... அதனால் இதை வெள்ளிபஸ்பம் என்கின்றார்கள்...
நாம் தினமும் கடந்து போகும், சாலையோரங்கள், விவசாய நிலங்கள், வாய்க்கால் வரப்பு ஓரங்களில் சர்வ சாதாரணமாக ஒரு களைச்செடிகள் முளைத்து கிடைக்கிறது...
இந்த மூலிகையின் மகத்துவம் அறியாமல் காலில் போட்டு மிதித்து விட்டு கடந்து போய்க்கொண்டே இருப்போம்.... தனது விதைகளின் மூலம், தனது சந்ததிகளை வளர்த்துக் கொண்டே இருக்கிறது இந்த மூலிகை... மனித குலத்திற்குத் தேவையான பல அரிய மருத்துவ குணங்களை கொண்ட இந்த மூலிகையின் பெயர்... "அம்மான்பச்சரிசி"
இது நமது இந்தியாவினை தாயகமாகக் கொண்டது...
தீக்காயங்கள், சூட்டினால் ஏற்படும் கட்டிகள், வயிற்றுப்போக்கு, நமைச்சல் ஆகியவற்றிற்கு இது அருமருந்து...
இந்த செடியை பறித்து நிழலில் உலர்த்தி எடுத்துக் கொள்ள வேண்டும்.... ஒரு ஸ்பூன் பொடியுடன் சம அளவு பனங்கற்கண்டு சேர்த்து பாலில் கலந்து, தினமும் இருவேளை குடித்து வந்தால் ஆண்களுக்கு விந்தணுக்கள் அதிகரிக்கும்.... இந்த செடியின் எந்த பாகத்தை உடைத்தாலும் பால் வரும் அதனால் இதை "சித்திரப்பாலாடை" எனவும் அழைக்கிறார்கள் சித்த மருத்துவர்கள் இந்தப் பால் மருத்துவ தன்மை வாய்ந்தது உதடு நாக்கு போன்ற பகுதிகளில் ஏற்படும் வெடிப்புகளை போக்கும் தன்மை இந்த பாலுக்கு உண்டு... குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுப்பது தாய்ப்பால்.... ஆனால் நவீன உணவு பழக்கம் காரணமாக பல பெண்களுக்கு பால் சுரப்பது இல்லை.... அதனால் ஆவின் பால் குடித்து வருங்கால இந்தியா வளர்கிறது...... இதனால் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் ஐந்து வயதிலேயே கண்ணாடி அணிந்து கொள்கிறார்கள்.... இன்னும் சில நோய் தொற்றுக்கு ஆளாகிறார்கள்..... ஆரோக்கியமான குழந்தைகளை தாய்ப்பால்தான் உருவாக்க முடியும்..... சரி என்ன செய்ய அதான் இல்லையே என ஆதங்கப்படும் தாய்மார்களுக்கு உதவுவதற்காகவே காத்திருக்கிறது.... "அம்மான்பச்சரிசி" இந்த மூலிகையின் பூக்களை சுத்தம் செய்து, பசும்பால் விட்டு அரைத்து காலை, மாலை இருவேளை பருகி வந்தால் பால் நன்றாக சுரக்கும்...
சிலருக்கு உடம்பில் மரு தோன்றி இருக்கும்... இந்த மருவை சுலபமாக அகற்ற இந்த அம்மான் பச்சரிசி செடியின் தண்டை உடைத்தால் பால் வரும்..... இந்த பாலை மருவின் வேர்ப் பகுதியில் தொடர்ந்து பூசி வர 7 நாட்களில் மரு உதிர்ந்து விடும்..... சிலருக்கு காலில் ஆணி ஏற்படும் இதை அறுவை சிகிச்சை மூலமாக அகற்றுவார்கள் ஆனால் அது தேவையில்லாத ஒன்று அம்மான் பச்சரிசி பாலை ஆணி உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால் வலி குறைந்து, சிறிது நாளில் ஆணி மறைந்துவிடும்....
இந்த இலையின் சாற்றை பருகினால் உடல் மெலிவு மலச்சிக்கல் படை நமைச்சல் போகும் வெள்ளைப்படுதல் பெண்களுக்கு உள்ள பெரிய பிரச்சனை அதற்கு அருமையான தீர்வு அம்மான்பச்சரிசி இடம் உள்ளது இதன் இலையை பறித்து கழுவி சாறு எடுத்துக் கொள்ளவேண்டும் இந்த சாற்றுடன் கலந்து காலை மாலை இருவேளையும் பருகி வந்தால் ஐந்தே நாட்களில் வெள்ளைப்ப டுதல் நின்றுபோகும்...
அதெல்லாம் சரி அம்மான்பச்சரிசி எப்படி வெள்ளி பற்பம் ஆகும்... அம்மான் பச்சரிசி இலை, தூதுவளை இலை, ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து பாசிப்பருப்பு, உளுந்தம் பருப்பு, தேங்காய் துருவல் ஆகியவற்றுடன் சேர்த்து கூட்டு செய்து நெய் சேர்த்து உண்டு வந்தால் உடம்பில் தாது பலப்படும் விந்து அணுக்கள் அதிகரிக்கும்... அதனால்தான் சித்த புருஷர்கள் இதை வெள்ளிபஸ்பம் என்று அழைக்கின்றார்கள்....
இத்தனை சிறப்புகளை வைத்திருக்கும் "அம்மான்பச்சரிசி" மூலிகை சின்னச்சின்ன தொட்டிகளில் வைத்து வீடுகளில் கூட வளர்க்கலாம்......
🚶🏽♂HAROON SB