குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாத போது முதல் கட்டமாக பாரசிட்டமல் கொடுக்கப்படுகிறது. ஆனால் அவ்வாறு கொடுக்கப்படும் போது, அந்த குழந்தைக்கு மூன்று வயதிற்கு முன்னதாகவே ஆஸ்துமா வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கருவுற்றிருக்கும் தாய் வலி நிவாரணியாக, பாரசிட்டல் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால்கூட, அது கருவில் இருக்கும் குழந்தைக்கு பிற்காலத்தில் ஆஸ்துமா வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக லண்டன் பிரிஸ்டல் ஆய்வுக்குழு குறிப்பிட்டுள்ளது.
ஓஸ்லோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரிஸ்டல் ஆய்வுக்குழுவும் விஞ்ஞானிகளும் ஒரு லட்சத்து பதினான்கு ஆயிரத்து ஐநூறு கர்ப்பிணிப் பெண்களையும் குழந்தைகளையும் கொண்டு இந்த ஆய்வு நிகழ்த்தப்பட்டது.
3 வயது முதல் 7 வயது வரையிலான குழந்தைகள் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதற்குக் காரணம் அந்த குழந்தைகளின் தாய்மார்கள் கருவுற்றிருந்தபோது வலி நிவாரணியாக பாரசிட்டமல் மாத்திரைகளைப் பயன்படுத்தியிருந்தது தெரிய வந்தது. குழந்தையில் சிறியதாக தோன்றும் இந்த பாதிப்பு அவர்களுடைய மூன்று வயதில் வளர்ச்சியடைகிறது.
குழந்தைப் பருவத்தில் 26 சதவீதத்திற்கும் மேல் பாரசிட்டமல் கொடுக்கப்பட்டிருந்தால் அந்த குழந்தை தன்னுடைய மூன்று வயது முதல் ஏழு வயதிற்குள்ளாகவே ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது.
எந்த மருந்து என்ன மாதிரியான விளைவினை ஏற்படுத்தும் என்கிற பொது சுகாதாரம் குறித்த விஷயங்களை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
ஏனெனில் பெரும்பாலானவர்கள் வலி நிவாரணியாக பாரசிட்டமலைப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, கர்ப்பிணி பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் வலி நிவாரணத்திற்கு பாரசிட்டமலே மருத்துவர்களால் பரிந்துரையும் செய்யப்படுகிறது.
இந்த ஆய்வின் முடிவு, தொற்றுநோய் குறித்த பன்னாட்டு இதழில் வெளியிடப்பட்டுள்ளது
கருவுற்றிருக்கும் தாய் வலி நிவாரணியாக, பாரசிட்டல் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால்கூட, அது கருவில் இருக்கும் குழந்தைக்கு பிற்காலத்தில் ஆஸ்துமா வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக லண்டன் பிரிஸ்டல் ஆய்வுக்குழு குறிப்பிட்டுள்ளது.
ஓஸ்லோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரிஸ்டல் ஆய்வுக்குழுவும் விஞ்ஞானிகளும் ஒரு லட்சத்து பதினான்கு ஆயிரத்து ஐநூறு கர்ப்பிணிப் பெண்களையும் குழந்தைகளையும் கொண்டு இந்த ஆய்வு நிகழ்த்தப்பட்டது.
3 வயது முதல் 7 வயது வரையிலான குழந்தைகள் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதற்குக் காரணம் அந்த குழந்தைகளின் தாய்மார்கள் கருவுற்றிருந்தபோது வலி நிவாரணியாக பாரசிட்டமல் மாத்திரைகளைப் பயன்படுத்தியிருந்தது தெரிய வந்தது. குழந்தையில் சிறியதாக தோன்றும் இந்த பாதிப்பு அவர்களுடைய மூன்று வயதில் வளர்ச்சியடைகிறது.
குழந்தைப் பருவத்தில் 26 சதவீதத்திற்கும் மேல் பாரசிட்டமல் கொடுக்கப்பட்டிருந்தால் அந்த குழந்தை தன்னுடைய மூன்று வயது முதல் ஏழு வயதிற்குள்ளாகவே ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது.
எந்த மருந்து என்ன மாதிரியான விளைவினை ஏற்படுத்தும் என்கிற பொது சுகாதாரம் குறித்த விஷயங்களை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
ஏனெனில் பெரும்பாலானவர்கள் வலி நிவாரணியாக பாரசிட்டமலைப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, கர்ப்பிணி பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் வலி நிவாரணத்திற்கு பாரசிட்டமலே மருத்துவர்களால் பரிந்துரையும் செய்யப்படுகிறது.
இந்த ஆய்வின் முடிவு, தொற்றுநோய் குறித்த பன்னாட்டு இதழில் வெளியிடப்பட்டுள்ளது