ஒதுக்கப்படும் பாரம்பரிய உணவுகள் ...!
நோய் என்று மருத்துவரிடம் சென்றால் முதலில் சொல்வது அரிசி சோறு சாப்பிடாதீர்கள் என்பதுதான். ...!!!
நோய் என்று மருத்துவரிடம் சென்றால் முதலில் சொல்வது அரிசி சோறு சாப்பிடாதீர்கள் என்பதுதான். ...!!!
அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?
ஒதுக்கப்படும் பாரம்பரிய உணவுகள் ...!!!
நிலத்திலே மனிதர்களால் விளைவிக்கின்ற நன்செய், புன்செய் பயிர்களின் நன்மைகளை எளிதில் சொல்லிவிட முடியாது. இதில் அரிசியானது சுவையும் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டதாகவும் விளங்கி வருகிறது. இதில் பச்சரிசி, புழுங்கல் அரிசி இரண்டு வகையும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியா, பர்மா, சீனா, யப்பான் உட்பட பல்வேறு நாடுகளில் விளைவிக்கப்படும் அரிசி உலகில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் உண்ணும் உணவாகவும் விளங்கிவருகிறது. ஆனால் இன்று நோய் என்று மருத்துவரிடம் சென்றால் முதலில் சொல்வது அரிசி சோறு சாப்பிடாதீர்கள் என்பதுதான்.
பிறந்தது முதல் அரிசி உணவு சாப்பிட்டு பழகியவர்கள் இதைக்கேட்டதும் வாடி வதங்கி, தங்களுக்கு பெரும் நோய் ஏற்பட்டுவிட்டது என்பதுபோல் முடங்கி விடுகிறார்கள். உண்மையில் மற்ற தானியங்களைப்போலவே அரிசியும் பல்வேறு நன்மைகளை தந்து நம்மை காத்து வருகிறது. உண்மையில் அரிசியை பட்டை தீட்டியும், குக்கரில் வைத்து சாப்பிடுவதால்தான் நமக்கு நோய் உண்டாகிறது என்பது பலருக்கு தெரிவதில்லை. உடலை வளர்த்தால்தான் உயிரை வளர்க்கமுடியும் என்பதில் தெளிவாக இருந்தார்கள் நமது முன்னோர்கள். எனவே உடலுக்கு எது தேவையோ அதை மட்டுமே உண்டு நலமாக வாழ்ந்தார்கள். இதில் தமிழர்களின் முக்கிய உணவான சோறு சமைப்பது என்பதே தனிக்கலையாக விளங்கியது எனலாம். இதில் தமிழர்கள் தனித்தன்மை பெற்று விளங்கினார்கள்.
சோறு வடிப்பது என்பது பழைய அரிசியைத் தவிடு, நொய் நீக்கி நன்றாக தீட்டி, முழு அரிசியாய் ஆய்ந்து எடுத்து இளவெந்நீரால் கழுவி சற்று ஆற விட்டுவைத்து கொள்ள வேண்டும். அரிசிக்கு மூன்றுபங்கு நீர்விட்டு அடுப்பிலேற்றி அது நுரைவிட்டு கொதிக்கும் பொழுது அரிசியை அதில் போட்டு முக்காற்பங்கு வெந்தவுடன், கரண்டியால் துழாவி வடித்து கொள்ள வேண்டும். கஞ்சி வடிந்தவுடன், அந்த அடுப்பு தணலில் சோற்று பானையை வைத்து விட வேண்டும். அதன் பிறகு நீர் முற்றிலும் வற்றி பக்குவமாய் இருக்கும் சமயத்தில் எடுத்து கொள்வதே சோறு. இந்த சோறே உணவுக்கு ஏற்றது. வாதம் பித்தம் கபம் ஆகிய முக்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் ஏற்றது. பத்தியத்திற்கும் உகந்தது. ஒவ்வொரு அரிசிக்கும் ஒவ்வொரு பண்பு உள்ளது என்பதையும் சொல்லிவைத்தார்கள்.
முழு அரிசிசோற்றை மிதமான சூட்டுடன் சாப்பிட்டால் முப்பிணிகளையும் நீக்கி உடலுக்கு வன்மை தந்து நலத்துடன் வாழவைக்கும். நன்றாக சமையாத சோற்றை உண்பதால் மலம் கட்டும். மறுநாளும் செரிக்காமல் இருக்கும். இதனால் உடலில் இதன் சத்துக்கள் ஊறாது. குழைந்த சோற்றை உண்டால் இருமல், மந்தம், பீளை, மேகம் உட்பட பல்வேறு நோய்கள் ஏற்படும். மிகுந்த சூட்டுடன் உள்ள சாப்பாட்டை சாப்பிட்டால் ரத்தம் சூடாகும், நீர்வேட்கை அதிகரிக்கும், பெருத்த வயிறு ஏற்படும். எனவே முழு அரிசிசோற்றை மிதசூட்டில் சாப்பிடுவதே நன்மை தரும்.
இதில் கார் அரிசியை கொண்டு வடிக்கப்படும் சோறு உடலில் உள்ள சிறு நஞ்சுகளை நீக்கி புண்களை ஆற்றும். ஈர்க்கச்சம்பா அரிசிசோறு கடவுளுக்கு படைக்கும் உணவிற்கு பயன்படுத்தப்படும் அரிசியாகும். இது பார்த்தவுடன் விருப்பத்தையும் நாவிற்கு சுவையை தரும். புழுகுசம்பா அரிசி சற்று அளவில் நீண்டு இருந்தாலும் இந்த அரிசியை சமைத்து உண்பதால் உடலில் வனப்பு ஏற்படும். நல்ல பசி எடுக்கும். தீராத தாகம் நீங்கும்.
கோரைச்சம்பா அரிசியை உண்பதால் வெப்பத்தால் ஏற்படும் வெறி, பெண்களுக்கான வெள்ளைபடுதல், உடலில் உண்டாகும் நமைச்சல் நீங்கி, உடல் குளிர்ச்சி உண்டாகும். குறுஞ்சம்பா அரிசிசோறு ஆண்மையை பெருக்கி உடலில் குத்துகின்ற வலியை போக்கும். ஆனால் உடல் சூட்டை உண்டாக்கும். மிளகுசம்பா அரிசிசோறு பல நன்மைகளை வாரி வழங்கக் கூடியது. பசியை உண்டாக்கும். பெருவளி என்கின்ற கடுமையான வாத நோய்களை நீக்கும்.சீரகச்சம்பா அரிசி சோற்றை மன்னர்களும், செல்வந்தர்களும் மட்டுமே உண்ணும் பழக்கம் நமது நாட்டில் இருந்து வந்தது.
இனிப்பு சுவையுள்ள இதை உண்பதால் உடலில் ஏற்படும் அனைத்து வளி நோய்களையும் நீக்கும். சாப்பிட்டு முடிப்பதற்குள்ளாக செரித்து மீண்டும் பசியை ஏற்படுத்தும் அளவிற்கு எளிமையானது. கல்லுடைச்சம்பா என்ற அரிசி சோறு அதிகமான ஆற்றலை தரக்கூடியது. மிகுந்த பலசாலியை கூட எதிர்க்கும் உடல் திறனையும் மனத்தெம்பும் ஏற்படுத்தும். நல்லசுவை கொண்ட இதை உண்டுவந்தால் பேசும் திறன் அதிகரிக்கும். குன்றிமணிச்சம்பா சோறு உண்டுவந்தால் உடல் வலித்து ஆண்மை உண்டாகும். வளி நோய்கள் அனைத்தும் போகும்.
அழகும் சுவையும் நிரம்பிய அன்னமழகி என்ற அரிசியை சமைத்து உண்பதால் உடல் வெப்பமாறுபாட்டால் ஏற்படும் சுரங்களை நீக்கி உடலுக்கு நன்மை தரும். மோர்ச்சோறு உண்டால் சிறுநீர் கழிப்பதால் ஏற்படும் எரிச்சல், தண்ணீர் தாகம், வயிற்றுப்போக்கு இவைகளை போக்கும். இரவில் நீரூற்றிய சோற்றை பழையது என்பார்கள். விடியற்காலையில் சோற்றில் உள்ள நீரோடு பழையதை சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும். உடலில் ஒளி உண்டாகும். வெறிநோய் முற்றிலும் நீங்கும். நன்றாக பசியெடுக்கும்.
பழைய சோற்றில் மோர் கலந்து சாப்பிட்டால் உடல் எரிச்சல், பித்தம், மனப்பிரமை முதலியவை நீங்கும். இரவில் நன்றாக தூக்கம் வரும். மிகுதியாக உண்டுவிட்டால், அப்பொழுதே உறக்கம் கண்களை தழுவும். பொதுவாக எந்த உணவாக இருந்தாலும் அளவாக தேவைக்கு ஏற்ப சாப்பிடுவதால் கெடுதல் என்பதே உண்டாகாது. அதுவும் உணவே மருந்து. மருந்தே உணவு என்று வாழ்க்கை முறையை வகுத்து கொண்டு வாழும் தமிழர்களின் உணவே, இன்று உலகம் முழுவதும் உள்ள மக்களால், பெரிதும் விரும்பும் உணவாகவும் மாறி வருகிறது. எனவே அரிசிசோறு உண்டு நலமுடன் வாழ்வோம்.
பித்தத்தை போக்கும் கஞ்சி
சோறு கொதிக்கும் போது இருக்கும் நீரை கொதிநீர் என்பார்கள். வீட்டில் சமையல் செய்யும் பெண்கள், பசியுடன் இருக்கும் சிறுவர்களுக்கு இதை குடிக்க கொடுப்பார்கள். தாங்களும் குடிப்பார்கள். இதுவும் மருத்துவ குணம் கொண்டதுதான். கொதிநீரை குடிப்பதால் நீர்சுருக்கு என்னும் சிறுநீர்நோய் போகும். சோறு வடித்தவுடன் கிடைக்கும் கஞ்சியை சூட்டுடன் தண்ணீர் கலந்து உப்பிட்டு குடிப்பதால் உடல் பருக்கும். உடலில் ஒளி உண்டாகும். உடலில் உண்டாகும் பித்தம், வெப்பம் நீங்கும். சோறு வடித்த கஞ்சியை எந்த வகையில் குடித்தாலும் சிறு மந்தத்தை உண்டாக்கும் என்றாலும், விழிகளுக்கு குளிர்ச்சியும் கொடுக்கும். உடல் சூட்டால் தோன்றிய பல்வேறு நோய்களை குணமாக்கும்.
[05/08 06:59] NAGARAJAN G: இதைப் பயன்படுத்தாத ‘சுத்திகரிப்பு நிலையங்களே’ இருக்காது. அரசு குடிநீர்கூட குளோரின் வழியாகத்தான் சுத்திகரிக்கப்படுகிறது.
[05/08 06:59] NAGARAJAN G: இதைப் பயன்படுத்தாத ‘சுத்திகரிப்பு நிலையங்களே’ இருக்காது. அரசு குடிநீர்கூட குளோரின் வழியாகத்தான் சுத்திகரிக்கப்படுகிறது.
குளோரின் பயன்பாட்டினால் மன அழுத்தம், மனப் பதற்றம், பீதியடைதல் என மூன்று வகையான மன நோய்கள் உருவாகின்றன என நவீன அறிவியலின் ஆய்வுகள் சொல்கின்றன. இந்த மனநோய்கள், மோசமான உடல் நோய்களை உருவாக்கும் என்பதும், அந்த நோய்களை ஒரு வரையறைக்குள் அடக்கிப் பட்டியலிட இயலாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தச் சமூகத்தில் எல்லா பாவங்களுக்கும் ஒரு வடிகால் உள்ளது. அந்த வடிகாலுக்கு உள்ள மதிப்புமிக்க பெயர், ‘அனுமதிக்கப்பட்ட அளவு’ என்பது. `குடிநீரில் குளோரின் பயன்பாடு புற்றுநோயை உருவாக்குமா?' என்று நீங்கள் கேள்வி எழுப்பினால், ‘சுத்திகரிப்பு’ நிபுணர்கள் அளிக்கும் விடை, ‘அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் பயன்படுத்தினால் குளோரின் பாதுகாப்பானதுதான்’ என்பதாக இருக்கும்.
புட்டிகளில் அடைக்கப்பட்ட நீரை வாங்கிப் பருகுகிறீர்கள். நீங்கள் பருகும் நீரில் எவ்வளவு குளோரின் உள்ளது என உங்களுக்குத் தெரியுமா? அது ‘அனுமதிக்கப்பட்ட’ அளவில்தான் உள்ளது எனத் தெரியுமா? உங்களுக்குத் தெரிந்தது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். ‘இந்தக் குடிநீரில் கிருமிகள் இல்லை. ஆகவே, இது பாதுகாப்பானது’. கிருமிகளைக் காட்டிலும் கொடூரமான விளைவுகளை வேதி நஞ்சுக்கள் உருவாக்குகின்றன என்பதும், அந்த நஞ்சுக்கள் கலக்கப்பட்ட நீரைத்தான் பருகிக்கொண்டுள்ளோம் என்பதும் நீங்கள் அறியாதவை.
ஒரு லிட்டர் நீரில் எவ்வளவு வேதிப்பொருட்கள் கலக்கலாம் என்ற கணக்கை, மிகத் துல்லியமாக எல்லா நிறுவனங்களும் கடைப் பிடிக்கின்றன என நம்புகிறீர்கள் அல்லவா? இந்த நம்பிக்கை உண்மையாகவே இருக்கட்டும். குளோரின் கலக்கப்பட்ட நீரை ஒரு நாளுக்கு எத்தனை லிட்டர் பருகுவது பாதுகாப்பானது? எத்தனை ஆண்டுகளுக்குப் பருகுவது பாதுகாப்பானது? ஆகிய இரு கேள்விகளுக்கான விடைகளைத் தேடிப்பாருங்கள். உங்களுக்கு நீர் வழங்கும் நிறுவனங்களிடம் இந்தக் கேள்விகளைக் கேளுங்கள். பதில் சொல்லவேண்டிய கடமையும் பொறுப்பும் அவர்களுக்கு உள்ளன.
பூமியில் வீசும் கதிர்வீச்சுகளில் அகச்சிவப்பு, புறஊதாக் கதிர்கள் அடிப்படையானவை. குறைந்த வெப்ப ஆற்றல் செறிவு கொண்டவை, அகச்சிவப்புக் கதிர்கள். மிகை வெப்ப ஆற்றல் செறிவுகொண்டவை புறஊதாக் கதிர்கள். பெரும்பாலான குடிநீர் நிறுவனங்கள் புறஊதாக் கதிர்வீச்சைப் பாய்ச்சித்தான் ‘சுத்திகரிப்பு’ச் செய்கின்றன. குளத்து நீரின் கீழே படித்திருப்பவை அகச்சிவப்புக் கதிர்கள். நீரில் மிகக் குறைவான அளவு கதிர்வீச்சு இருப்பது, நுண்ணுயிர் வாழ்க்கைக்கு நல்லது. குளத்து நீர் மாசுபடாதவரை, மனிதர்களும் பருகலாம். அதிக அளவிலான கதிர்வீச்சுகள், எந்த உயிரினத்துக்கும் ஆபத்தானவை தான். குறைந்த அளவு கதிர்வீச்சுகள் அடங்கிய உணவையும் நீரையும் உட்கொள்ளும் வகையில் நாம் படைக்கப்பட்டுள்ளோம். இப்போது மிதமிஞ்சிய புத்திசாலித் தனத்தின் வெளிப்பாடாக, மிகைக் கதிர்வீச்சுகள் குடிநீரில் செலுத்தப்படுகின்றன.
புறஊதாக் கதிர்களை நீரில் பாய்ச்சுவது கிருமிகளை மட்டும்தான் அழிக்கும்; அந்த நீரைப் பருகும் மனிதர்களை அழிக்காது என எந்த ஆய்வும் இதுவரை கூறவில்லை. நீங்கள் பருகும் குடிநீரில் கதிர்வீச்சுகள் உள்ளன என்பதையாவது முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.
எல்லா வேதிப்பொருட்களும் பிளாஸ்டிக்குடன் வினைபுரிபவைதான். பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட ஒரு சொட்டு நீர் உங்கள் வாயில் விழும்போது, அதில் பல வகையான வேதிப்பொருட்களும் கதிர்வீச்சுகளும் கலந்துள்ளன என்பதை நினைவில்கொள்ளுங்கள்.
`அரசு அனுமதிபெற்ற நிறுவனம்’ ‘தரச் சான்றிதழ் பெற்ற நிறுவனம்’ போன்ற அறிவிப்புகளின் பின்னால், மறைவான ஓர் உலகம் இயங்குகிறது. உங்களை வந்தடையும் ஒவ்வொரு நீர்ப்புட்டியையும் அரசு அதிகாரிகள் சோதித்து அனுப்புவதாகவும், உலகத்தரம் வாய்ந்த நிபுணர்கள் சோதித்து சான்று தருவதாகவும் ஒரு மாயத் தோற்றம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
வீட்டிலேயே நீரைச் `சுத்திகரிப்பதற்கு' என அமைக்கப்படும் கருவிகளுக்கும், மேலே உள்ள அனைத்து விளக்கங்களும் பொருந்தும்.
நிலத்தில் வாழும் உயிரினங்களுக்கு நன்னீர்தான் உயிர் ஆதாரம். நன்னீர் என்றால், பல கோடி நுண்ணுயிரிகளை உள்ளடக்கிய நீர்தான். நீருக்கும் மனிதர்களுக்குமான இயற்கையான உறவை, நிறுவனங்களும் அவற்றைத் தாங்கிப்பிடிக்கும் தொழில்நுட்பங்களும் சிதைத்துவிட்டன. நமது மரபு, நவீனத்தின் சதிகளைக் காட்டிலும் வலிமையானது. `மழைநீர்தான் அமுதம்’ என்றார் ஆசான் திருவள்ளுவர்.

மழைநீரைச் சேமிக்கும் தொழில்நுட்பங்கள் இப்போது கூடுதலாகத் தேவைப்படுகின்றன. அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வாழ்வோர், தமக்குள் கூட்டமைப்பு ஏற்படுத்தி அனைவருக்கும் பொதுவாக மழைநீர் சேமிப்பில் ஈடுபடலாம். ஏரிகளும் குளங்களும் தூய்மையானவை யாகப் பாதுகாக்கப்பட வேண்டும். தேவையான நேரங்களில் நீரைக் காய்ச்சிப் பருக வேண்டும்.
வேறு வழியே இல்லாமல், ‘சுத்திகரிப்பு’ நீரைப் பயன்படுத்துவோருக்கு என, சத்து நீர
் முடிச்சு ஒன்றைப் பரிந்துரைக்கிறேன். நன்னாரி வேர், வெட்டி வேர், தேற்றாங்கொட்டைகள், சீரகம், மிளகு ஆகியவற்றை ஒரு தூய வெள்ளைத் துணியில் முடிச்சாகக் கட்டி வைத்துக்கொள்ளுங்கள். தொடக்கத்தில் இவை அனைத்தும் சிறிய அளவு இருந்தால் போதும். அனுபவத்தில் அளவுகளைக் கற்றுக்கொள்ளுங்கள். `சுத்திகரிக்கப்பட்ட’ நீரை, பானையில் ஊற்றிவைத்து, அந்த முடிச்சை உள்ளே போட்டுவிடுங்கள். ஓரிரு மணி நேரத்தில் குடிநீர் மணக்கும். பானையில் ஊற்றப்படும் நீரில் உயிரிகள் உற்பத்தி யாகின்றன. உள்ளே போடப்பட்ட முடிச்சு, சத்து வழங்குவதாகவும், இயற்கையான பாதுகாப்புக் கருவியாகவும் செயலாற்றும்.
் முடிச்சு ஒன்றைப் பரிந்துரைக்கிறேன். நன்னாரி வேர், வெட்டி வேர், தேற்றாங்கொட்டைகள், சீரகம், மிளகு ஆகியவற்றை ஒரு தூய வெள்ளைத் துணியில் முடிச்சாகக் கட்டி வைத்துக்கொள்ளுங்கள். தொடக்கத்தில் இவை அனைத்தும் சிறிய அளவு இருந்தால் போதும். அனுபவத்தில் அளவுகளைக் கற்றுக்கொள்ளுங்கள். `சுத்திகரிக்கப்பட்ட’ நீரை, பானையில் ஊற்றிவைத்து, அந்த முடிச்சை உள்ளே போட்டுவிடுங்கள். ஓரிரு மணி நேரத்தில் குடிநீர் மணக்கும். பானையில் ஊற்றப்படும் நீரில் உயிரிகள் உற்பத்தி யாகின்றன. உள்ளே போடப்பட்ட முடிச்சு, சத்து வழங்குவதாகவும், இயற்கையான பாதுகாப்புக் கருவியாகவும் செயலாற்றும்.

இதற்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். உங்கள் பொருளாதாரம், நாட்டு மருந்துக் கடைகளை நோக்கித் திரும்புவது மிக நல்லது. அங்குதான் நமது காடுகளுக்கும் நகரங்களுக்கும் இடையிலான வேர்கள் ஓடிக்கொண்டுள்ளன. அந்த வேர்களின் ஆயுள்காலம் மிக நீளமானது. எந்தச் சீர்கேடுகளையும் உறிஞ்சி எடுத்து மரங்களைக் காக்கும் வல்லமை அந்த வேர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- திரும்புவோம்...