பல் வலிக்கு புளுக்களை வெளியேற்றும் உன்னதமான வெற்றிகரமான பாட்டி வைத்திய முறை
.
தேவையான பொருட்கள்:
(1) அகலமான அரிவாள் 1,
(2) தட்டு (plate) 1,
(3) கொட்டான்கச்சி எனும் ஒரு ஓட்டையுள்ள தேங்காய் சிரட்டை 1,
(4) கண்டங்கத்திரி விதை - கொஞ்சம்,
(5) சுத்தமான வேப்ப எண்ணெய் ,
(6) சிறிது தண்ணீர்.
செய்முறை: ஆழமான பிளேட்டில் படத்தில் கண்டபடி சிறிது தண்ணீர் எடுத்துக்கொள்ளவும். பிளேட்டின் மீது நன்கு பழுக்கக் காய்ச்சிய அரிவாளை வைக்கவும். அரிவாளின் அகலமான பகுதியில் சிறிது வே.எண்ணெயை விடவும் .புகை வரும். அதில் சிறிது கண்டங்கத்திரி விதையைப் போட்டு உடனடியாக ஒற்றை ஓட்டை உள்ள தேங்காய் சிறட்டையை கவிழ்த்து வைக்கவும்.புகை நேரடியாக வாய்க்குள் செல்வதற்காகவே சிரட்டை உபயோகிக்கப்படுகிறது. சிரட்டை ஓட்டை வழியாக வரும் புகையை ஆ வென்று வாயைத்திறந்து எல்லா பற்களிலும் படும் படி மூச்சை அடக்கிக் கொண்டு ஆவி பிடிக்கவும்.புகையை வாயுடன் நிறுத்திக்கொள்ளவும். வாய் வழியாக சுவாசிக்க வேண்டாம்.
மீண்டும் அரிவளை பழுக்கக் காய்ச்சி 2,3 தடவை செய்யவும். பின் பிளேட்டில் உள்ள நீரில் பார்க்கவும். மல கிருமிகள் போல் புளு அதில் விழுந்து இறந்து கிடப்பது தெரிய வரும்.
பல்வலி,அரணை வீக்கம் குறைந்து முற்றிலும் குணமாகிவிடும்.
தொடர்ந்து 3 நாட்கள் செய்யவும்.
அதிசயிக்கத்தக்க முறை.
எனது அலைபேசி எண்.
9443153662. மதுரை.