Friday, November 9, 2018

நாள்பட்ட மூட்டுவலி குணமாக

Aara Vedha:
கடுகு

நாள்பட்ட மூட்டுவலி குணமாக
-----------------------------------------------------
கடுகு (30 கிராம்) ,கோதுமை (100 கிராம்) ,  கஸ்தூரி மஞ்சள் (100 கிராம்) இவை மூன்றையும் அரைத்து , முட்டையின் வெள்ளைக்கருவில் கலந்து மூட்டுகளில் பற்றுப் போட்டு  வந்தால் எப்படிப்பட்ட மூட்டு வலியும் குணமாகும்.

நீர்க்கடுப்பு குணமாக
-----------------------------------------------------
கடுகைத் தேவையான அளவு எடுத்து அரைத்து , தொப்புளில் லேசாகப் பற்றுப் போட்டு வந்தால்  நீர்க்கடுப்பு குணமாகும்.

நாள்பட்ட தலைவலி குணமாக
-----------------------------------------------------
கடுகை நீரில் ஊறவைத்து முளைக்க வைத்து , பிறகு அதை அரைத்துத் தலையில் தேய்த்துக் குளித்தால் நாள்பட்ட தலைவலி குணமாகும்.

நாட்பட்ட விக்கல் குணமாக
-----------------------------------------------------
கடுகை (1 ஸ்பூன்)எடுத்து  இரவு முழுவதும் ஊறவைத்து, அந்த தண்ணீரை அதிகாலையில் குடித்து வந்தால் நாள்பட்ட விக்கல் குணமாகும்.

வாத , பித்த , கப தோஷங்கள் நீங்க
-----------------------------------------------------
கடுகு , உப்பு , மிளகு தலா இரண்டு கிராம் எடுத்து அரைத்து வெந்நீரில் கலந்து தினமும் குடித்து வந்தால் உடம்பில் ஏற்படும் வாத , பித்த , கப தோஷங்கள் நீங்கும்.

மூச்சிரைப்பு , இருமல்  குணமாக
-----------------------------------------------------
கடுகை (25 எண்ணிக்கை) , தேன் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் மூச்சிரைப்பு , இருமல் குணமாகும்.

தொன்டை வலி குணமாக
-----------------------------------------------------
கடுகைப் பொடி செய்து தொண்டையில் பற்றுப் போட்டு வந்தால்  தொண்டை வலி குணமாகும்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...