Monday, November 5, 2018

மாதவிலக்கு சீராக கருப்பை கோளாறுகளை குணப்படுத்தும் த

இன்றைய மருத்துவ குறிப்புகள் :

மாதுளை:

மாதவிலக்கு சீராக கருப்பை கோளாறுகளை குணப்படுத்தும் தன்மையும் மாதுளம் பூவிற்கு உண்டு.

இதன் பூவுடன் சம அளவு வால் மிளகு, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து இடித்து பொடியாக்கி காலை, மாலை இருவேளையும் 5 கிராம் அளவு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு தடைபட்ட மாதவிலக்கு சீராகும்.

மாதவிலக்கின் போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கை கட்டுப்படுத்த மாதுளை பழத் தோலை (1) அரைத்து புளித்த மோரில் கலந்து கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால் மாதவிலக்கின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தலாம்.

தொண்டைப் புண், தொண்டை வலி குணமாக மாதுளம் பூவை இடித்து சாறு பிழிந்து, அதை காய்ச்சி வடிகட்டி, அதனுடன் தேன் கலந்து உட்கொண்டு வந்தால் தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலி குணமாகும்.

ஆண்மைக் குறைபாடு நீங்க மாதுளம் பழத்தை, இரவு தூங்குவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன் சாப்பிட்டுவந்தால் ஆண்மைக் குறைபாடு நீங்கும்.

மூலத்தால் உண்டான புண் குணமாக மாதுளம் பழத் தோலைத் தண்ணீரில் ஊறவைத்து, அந்தத் தண்ணீரால் மலம் கழித்த பிறகு ஆசனவாயைக் கழுவி வந்தால் மூலத்தால் ஏற்பட்ட புண் குணமாகி, ரத்தக் கசிவும் நிற்கும்.

காதில் சீழ் வருவது நிற்க மாதுளம் பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து, அதை சூடுபடுத்தி ஆறிய பிறகு காதில் இரண்டு சொட்டுகள் விட்டு வந்தால் காதில் சீழ் வருவது நிற்கும்.

சளித்தொல்லை நீங்க மாதுளம் பழச்சாற்றுடன் எலுமிச்சம் பழச்சாற்றை கலந்து குடித்துவந்தால் சளித் தொல்லை தீரும்.

மலச்சிக்கல் பிரச்சனை தீர தினமும் ஒரு மாதுளம் பழத்தை இரவில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.

எலும்பு மற்றும் பற்கள் உறுதியாக மாதுளம் பழத்தை ஒருநாள் விட்டு ஒருநாள் அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவந்தால் எலும்பு, பற்கள் உறுதியாகும்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...