Wednesday, October 10, 2018

போலியோவும், 'போலி'யோ சொட்டுமருந்தும் .

போலியோவும், 'போலி'யோ சொட்டுமருந்தும் .

மரு. கோ. பிரேமா BHMS,

அவசியம் கருதி நீண்ட பதிவுதான்.
தடுப்பூசி மீது மாறா பற்றுகொண்டிருக்கும், போலியோவை ஒழித்தது தடுப்பூசிதானே என்று அப்பாவியாய் நம்பவைக்கப்பட்டவர்களுக்குமான பதில்களை இதில் கூறியிருக்கிறேன்.

அக்டோபர் 1லிருந்து இந்த செய்தியை பார்த்தீற்களா என்று குறைந்தது 30 பேரிடமிருந்து குறுஞ்செய்தி வந்தவன்னம் இருக்கிறது.
இதுவும் ஒருவகையில் சதிதான் என்று எப்படி ஒருவரியில் பதில் சொல்ல?

செய்தி இதுதான்.
தடுப்புமருந்தில் கலப்படமாம். 1.5 லட்சம் போலியோ தடுப்புமருந்து குப்பிகளில் முற்றிலும் நீக்கப்பட்ட போலியோ 2 வைரஸ் வகை என்று. அதனால் போலியோ தடுப்புமருந்தை கொடுப்பதை நிறுத்திவைக்கச்சொல்லி பல மாநிலங்களில் தடாலடி நடவடிக்கை. தமிழகத்திலும் சுகாதாரத்துறை செயலர் அறிவிப்பு. அந்த குறிப்பிட்ட தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தின் தலைவருக்கு கைதாணை என்றும் அடுத்தடுத்த செய்திகள். பார்க்க படங்கள்.

இதில் என்ன சதி?
சதி தான்.
எவ்வளவு லாவகமாக தடுப்பூசி அறிவியலின் பிழையை தடுப்பூசி தயாரிப்பின்மீது போடுகிறார்கள்? அப்போதுதானே தொடர்ந்து 'நல்ல தயாரிப்பை' கொண்டு மீண்டும் நடத்தலாம் இதே வணிகத்தை.

போலியோ பற்றியும் போலியோ சொட்டுமருந்து பற்றியும் சில அடிப்படைகளை முதலில் தெரிந்து கொள்ளலாம்.

போலியோ வைரஸை 1, 2, 3 என இப்போதுவரை  வகைப்படுத்தியுள்ளனர்
போலியோ நோயினை கண்டறிய உலக சுகாதார மையம் AFP எனும் குழந்தைகளில் குறுகிய காலத்தில் வரும் வாதநோயாக பார்த்தது. இதற்கு பின் போலியோ வைரஸ் தானா என்பதை உறுதி செய்வர்.
இப்படி AFP எனும் Acute Flaccid Paralysis ல் மொத்த எண்ணிக்கையில் போலியோ வாதநோய் என்றும், போலியோ அல்லாத வாதநோய் - NPAFP Non Polio Acute Flaccid Paralysis என்றும் வகைப்படுத்துவர்.

போலியோ சொட்டுமருந்தை பொருத்தமட்டும் இருவகை வைரஸ்(1 & 3), மற்றும் மூவகை வைரஸ்(1,2&3) என இரண்டு சொட்டுமருந்துகள் உலகெங்கும் உபயோகப்படுத்தப்பட்டு வந்தன.
இதில் போலியோ 2 வைரஸ் முற்றிலும் காணவில்லை எனவும் அதனால் மூவகை வைரஸ் மருந்தை நிறுத்திவிட்டு இருவகையை அதன் இடத்தில் தொடரவும் உலகசுகாதார மையம் உலகெங்கும் ஓர் அறிக்கை விட்டது மார்ச் 2016ல்.
அதன்படி அந்த சொட்டுமருந்து எங்கும் உபயோகப்படுத்தப்படவில்லை.
அதோடு அந்த குறிப்பிட்ட வைரஸ் வகையையும் வைத்திருக்கவேண்டாம் என்றும் கறாரான அறிவுரை.

ஆனால் இப்போது இந்தியாவில் உ.பியின் மலம் கலந்த சாக்கடைகளில் இந்த வைரஸ் இருப்பதை தொடர்கண்காணிப்பில் தெரியவந்தது.
இதனையடுத்து தீவிர மருந்து மாதிரி சோதனைகளில் இது மீண்டும் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டு அந்நிறுவன மருந்துகள் எங்கும் திரும்பப்பெறப்பெற்று நிறுவன தலைவருக்கும் கைதாணை.
இதுதான் சமீபத்திய செய்தி.

இந்த போலியோ சொட்டுமருந்தில் வைரஸ்களின் ஒரு பகுதி உபயோகப்படுத்தப்படுகிறது.
இது சொட்டுமருந்தாக கொடுக்கப்படுவதால் வாய் மூலம் வயிறு குடல்களுக்கு செல்லும். குடல் முக்கியமாக பெருங்குடல், ஒரு கூட்டுக்குடும்பத்தின் இருப்பிடம். அங்கே வாழ்பவர்கள் பலலட்சம் நுண்ணுயிர்கள். பேக்டீரியாவும் வைரஸ்களும். இவை நமது உடல் இயக்கத்தில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. இவை  இன்றி நாம் இல்லை.
இந்த கூட்டத்திற்குள் தான் இப்போது சொட்டுமருந்துமூலம் போலியோ வைரஸும் செல்லும். அங்கே ஊர்போல கூடித்திளைத்திருக்கும் நுண்ணுயிர்களோடு இதுவும் சற்றே உருமாறி பெருக ஆரம்பிக்கும். அப்படி பெருகும் வைரஸுக்குப்பெயர் Vaccine Derived Polio Virus, VDVP. பெருங்குடலில் பெருகிய போலியோ வைரஸ் அக்குழந்தையின் மலத்தின் வழியாக சொட்டுமருந்து கொடுத்து குறைந்தது 6 வாரங்கள் வரைக்கும் வெளியேறும். அப்படி வெளியேறும் சற்றே உருமாறிய போலியோ வைரஸ், இந்த சொட்டுமருந்து கொடுக்கப்பட்ட குழந்தையின் சுற்றத்தில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மற்ற குழந்தைகளிடம் எளிதாக தொற்றும். அப்படி சற்றே உருமாறிய வைரஸினால் ஏற்படும் வாதத்தை vaccine associated paralytic polio VAPP என்பர். இது தனிக்கணக்கு. இதற்கு அரசிடம் இழப்பீடு கோரிய வழக்கு பற்றி முன்னர் எழுதியது..
https://m.facebook.com/story.php?story_fbid=720399981489247&id=695061590689753

இயற்கையாக தொற்றும் போலியோவிற்கு wild polio என்கின்றனர். இது   2012 க்கு பின்னர் இந்தியாவில் எங்கும் காணப்படவில்லையாம்.
இதற்கு ஒரு ஆய்வு சமர்ப்பிக்கப்பட்டது. அந்த ஆய்வில் இருந்த பல சந்தேகங்கள் பற்றி முன்னரே எழுதிய கட்டுரை படிக்க..
https://m.facebook.com/story.php?story_fbid=795564153972829&id=695061590689753

மேலும் ஒரு அடிப்படை அறிவியலை தெரிந்துகொள்ளவேண்டும். மனிதவரலாற்றில் பல நூற்றாண்டுகளாக ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு இனக்குழுவிலும் கொள்ளைநோய்களும் தொற்றுநோய்களும் வந்துபோயுள்ளன. ஆம். வந்து பின் போயின. அதாவது தடுப்பூசி மற்றும் நவீன மருத்துவத்தின் அறிமுகம் ஏற்படும் முன்னரே பல தொற்றுநோய்கள் வந்து, சிலகாலம் இருந்து பின் மறையும். சில மீண்டும் வரும். சில வரவே இல்லை.
இங்கே மருந்துகளின்றி வைரஸ்கள் என்னாயிற்று? எப்படி மறைந்தது?
எப்படி இயற்கையாக ஒரு வைரஸ் ஒரு காலகட்டத்தில் உருவாகி பெருகுகிறதோ அதுபோலவே இயற்கையிலேயே அவை பரிணாமமாற்றத்தாலும் இன்னபிற சூழல் மற்றும் மனிதச்சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களாலும் காணாமல் போகும்.

இப்போது ஒரு சின்ன பிளாஷ்பேக் செல்வோமா?

2018 ஆகஸ்டு மாதம் 15ம் தேதியன்று இணையத்தில் இந்தியாவில் நடத்தப்பட்ட மிக முக்கியமான போலியோ சொட்டுமருந்து பற்றிய ஒரு அறிவியல் ஆய்வு, ஆதாரப்பூர்வமாக வெளியாகிறது.
இதைப்பற்றி செய்திகளில் ஆங்காங்கே வந்தாலும் எவர் கண்களுக்கும் அறிவுக்கும் எட்டாமல் லாவகமாக பார்த்துக்கொள்ளப்பட்டது.

சர்வதேச சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் ஆய்விற்கான அறிவியல் பத்திரிகையில் இந்தியாவின் குழந்தைகள் சிறப்பு மருத்துவரும் , பரவலான தடுப்பூசி திட்டத்தை கேள்விக்கு உள்ளாக்குபவருமான மரு. ஜேக்கப் புலியல் மற்றும் அவரது சகாக்களது இந்திய அரசின் போலியோ கண்காணிப்பைக்கொண்டே ஒரு அறிக்கையை தாக்கல் செய்கிறார்கள்.
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC6121585/

இதில், போலியோ சொட்டுமருந்தினாலேயே இந்தியாவில் 2000-2017க்குள் மட்டும் கிட்டத்தட்ட 4.91லட்சம் குழந்தைகள் போலியோ மாதிரியான ஆனால் போலியோ வைரஸ் இல்லாத வாதநோயினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் தான் அது.

97லிருந்து இந்தியாவில் தீவிரமாக்கப்பட்ட AFP கண்டறிதலில் இதுவரை  ஆண்டுதோறும் 50,000 குழந்தைகள் வாதநோயினால் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும்,
1. இயற்கையான போலியோ வைரஸ் முற்றிலும் எங்கும் காணப்படாத நிலையில் போலியோ அல்லாத வாதநோய் உட்பட மொத்தத்தில் AFP ஒரு லட்சத்தில் இரண்டு என்ற கணக்கில் தான் இருக்கவேண்டும். போலியோ அல்லாத வாதநோய்கள் மிகக்குறைவான எண்ணிக்கையில் தான் இருந்துவருகிறது.
ஆனால், நிலவரம் கலவரம் தருகிறது. ஒவ்வொரு லட்சத்திலும் 30 குழந்தைகள் வரை இன்றும் வாதநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
முக்கியமாக உ.பி மற்றும் பிகாரில் இந்த எண்ணிக்கை அதிகமாக இருப்பது தெரியவந்தது.

2. அதிலும் எங்கெல்லாம் போலியோ சொட்டுமருந்து தீவிரமாக கொடுக்கப்பட்டதோ அங்கெல்லாம் அந்த காலகட்டத்தை ஒட்டியே இந்த போலியோ(வைரஸ்) அல்லாத வாதநோய் பெருகுகிறது.

3. இதை உறுதிபடுத்த மற்றொரு கோணத்தில் பார்க்கப்படுகிறது.
அதாவது இதே இடங்களில் போலியோ சொட்டுமருந்து கொடுப்பதை குறைத்த்துப்பார்த்ததில் அங்கே இதே போலியோ அல்லாத வாதநோய்களின் எண்ணிக்கை மடமடவென குறைகிறது.

4. 2000 முதல் 2017 வரை மொத்தம் 6,40,000  போலியோ வைரஸ் அல்லாத வாதநோய்கள்.
இதில் 4,91,000 லட்சம் வாதநோய்கள் எதிர்பார்க்கும் எண்ணிக்கையைவிட அதிகம்.

5. இதன்மூலம் போலியோ சொட்டுமருந்து போலியோ வைரஸ் அல்லாத வாதநோய்களுக்கு காரணமாவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா கடந்த 18 ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட5 லட்சம் குழந்தைகளை தாரைவார்த்து கொடுத்துள்ளது சொட்டு மருந்து கொடுத்து.

6. மேலும் ஒரு தகவலும் இங்கே சேர்க்கப்படுகிறது.
முன்னரே இதைப்பற்றி மாறுவேடம் தரித்த போலியோ என்று  வேடிக்கையாக நான் சொன்னதுண்டு.
https://m.facebook.com/story.php?story_fbid=10211826366285579&id=1562622139
குல்லியன் பார் சின்றோம் (Gullian Barre Syndrome) எனப்படும் ஒருவகை ஆட்டோ இமூன் வாத நோயும் போலியோ சொட்டுமருந்தோடு நேரிடைத்தொடர்பாக அதிகரிக்கிறது என்று பின்லாந்து மற்றும் துருக்கியில் நடந்த ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர்.

GBS ஒரு ஆட்டோ இமூன் நோய். உடலின் நோய் எதிர்ப்பாற்றல் தன்னைத்தானே எதிரியாக பாவித்து வரும் நோய்வகைதான் ஆட்டோ இமூன். இதற்கும் தடுப்பூசிக்கும் சம்பந்தமில்லை என்பவர்கள் கவனத்திற்கு.
தடுப்பூசியின் அதிபயங்கர பாதகத்தில் முதன்மையானது ஆட்டோ இமூன் தன்மையை ஏற்படுத்துவதுதான்(இதை விளக்க தனிப்பதிவு வேண்டும்). இதுவே , சர்க்கரை நோய், தைராய்டு, கட்டிகள், புற்றுநோய், ஆஸ்துமா, ஸோரியாஸிஸ், முடக்குவாதம் , என்று பல நோய்கள் இன்று பெருகக்காரணம்.
இந்த போலியோ சொட்டுமருந்தில் வாதத்தை(கைகால்கள் செயலிழக்கும் வாதம்) ஏற்படுத்தக்கூடிய வைரஸின் பகுதியும் சேர்ந்தால் அது ஆட்டோ இமூன் வாதநோயை ஏற்படுத்தாமல் வேறு என்ன பன்னும்?

மீண்டும் மீண்டும் ஒரு குழந்தைக்கு போலியோ சொட்டுமருந்து கொடுக்கும்போது சற்றே உருமாற்றப்பட்ட வைரஸ் குடலில் பெருகி அங்கே பெறும் பரிணாமமாற்றத்தை பெறக்கூடும். இதை பலமுறை நாம் கூறிவந்தாலும் இந்த ஆய்வில் இதை மேலும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உலகசுகாதார மையத்தின் பரிந்துரைப்படி ஒரு குழந்தைக்கு 6 தடவையாவது போலியோ சொட்டுமருந்து கொடுக்கவேண்டும். அதற்கு மேலும் கூட 5 வயது வரை கொடுத்துக்கொண்டே இருங்கள் என்றே அறிவுருத்துகிறார்கள் தடுப்பூசி ஆதரவாளர்கள்.

ஆகஸ்டு 15 ஆய்வுக்கும் அக்டோபர் 1 செய்திக்கும் என்ன சம்பந்தம் என்று இனியும் நான் சொல்ல வேண்டுமா?

தடுப்பூசி அறிவியலே நோய்கள் பெருகவும் புதுப்புது பயங்கர வைரஸ்கள் பெருகவும் காரணமான முதல்குற்றவாளி என்கிறேன்.
இங்கே தயாரிப்பில் வைரஸ் கலப்படமெல்லாம் .... ?

இப்போதும் தடுப்பூசி மீது காதல் கொண்டவர்கள் எனது ஒரே ஒரு கேள்விக்கு முதலில் பதில் சொல்லவும்.
ஒரு வைரஸுக்கு இறப்பு உள்ளதா? அதாவது, அதை கொல்லமுடியுமா?

இந்த அடிப்படை அறிவியல் தெரிந்தால் அப்போது புரியும் தடுப்பூசி எவ்வளவு பயங்கரமானது என்று.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...