Monday, September 3, 2018

சர்க்கரை நோயாளிகளின் உணவுக் கட்டுப்பாடு பற்றிய சில குறிப்புகள்*

*🥦🥦🥦🥦🥦🥦🥦💚சர்க்கரை நோயாளிகளின் உணவுக் கட்டுப்பாடு பற்றிய சில குறிப்புகள்*. 🔰* நீரிழிவு நோய் உள்ளவர்கள் உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது மிக அவசியமாகும் 🔰 நீரிழிவு நோய் உள்ளவர்களின் உணவு முறை அவருடைய வழக்கமான உணவு முறையை போன்றதே ஆகும். 🔰 நீரிழிவு நோயாளிகள் அரிசியை சிறிதும் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்றும் கேழ்வரகும் கோதுமையும்தான் உட்கொள்ள வேண்டும் என்ற எண்ணம்பரவலாக உள்ளது இதுமிகவும் தவறானது. நீரிழிவு நோயாளி அரிசி கோதுமை கேழ்வரகு மக்காச் சோளம் பார்லி போன்ற எல்லா வகையான தானியங்களையும் உண்ணலாம் எதை உண்டாலும் அதன் அளவு தான் முக்கியம். தானியங்கள் அனைத்திலும் 70 சதவீதம் மாவுச்சத்து அடங்கியுள்ளது. 🔰 நீரிழிவு நோயாளிகள் உணவில் போதுமான புரதம் இருக்க வேண்டும். தாவரப் புரதங்கள் அடங்கிய முழு கடலை, பச்சைப் பயறு, காராமணி பட்டாணி, மொச்சை போன்ற முழு பயறு வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 🔰 நார்ச்சத்து உள்ள உணவு வகைகள் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் முழு தானியங்கள் பயறு வகைகள் முக்கியமாக முழு கடலை பச்சைப் பயறு போன்றவை காய்கறி கீரை வகைகள் அனைத்தும் நார்சத்து அதிகமுள்ள உணவு வகைகள் ஆகும் இவை இரத்தத்தில் உள்ள கொழுப்பு சத்தை குறைக்க பயன்படும். 🔰 பச்சைக் காய்கறிகளையும் கீரைகளையும் எவ்வளவு வேண்டுமானாலும் உண்ணலாம் கிழங்கு வகைகளை தவிர்ப்பது நல்லது நமது வடலூர் வள்ளல் பெருமான் சொன்ன கருணைக்கிழங்கு சாப்பிடலாம். 🔰 *நிறைய சாப்பிட கூடிய காய்கறிகள்*. 🔰 அவரைப்பிஞ்சு பீன்ஸ் பாகற்காய் சுரைக்காய் கத்தரிக்காய் முருங்கைக்காய் வாழைப்பூ வாழைத்தண்டு எல்லா வகையான கீரை வகைகள் கத்தரிப்பிஞ்சு கோவைப் பிஞ்சு நீள புடலங்காய் பீர்க்கங்காய் வெண்டைக்காய் பப்பாளிக்காய் சௌசௌ காராமணி தக்காளி முள்ளங்கி புதினா கொத்தமல்லி கருவேப்பிலை பூசணிக்காய் இஞ்சி பூண்டு காலிபிளவர். 🔰 *ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுக்குள் இருப்பின் சாப்பிட கூடியவை*. 🔰 நெல்லிக்காய் ஆப்பிள், பச்சை திராட்சை சாத்துக்குடி ஆரஞ்சு எலுமிச்சை பப்பாளி கொய்யா மாதுளை அனைத்து வகையான பருப்பு வகைகள் மோர் கொழுப்பு நீக்கப்பட்ட பால். 🔰 *இளம் சூடாக சாப்பிட வேண்டிய வகைகள்*. 🔰 காலை உடற்பயிற்சி செய்து முடித்த உடன் ஆவாரம் பூ டீ (நமது அருள் ஹெர்பல்ஸ் தயாரிப்பு மட்டுமே) மற்றும் சுக்கு மல்லி காபி சிறிது பனங்கற்கண்டு அல்லது நாட்டு சர்க்கரை கலந்து சாப்பிடுங்கள் பயம் வேண்டாம் மாலையில் இதுபோன்றே சாப்பிடுங்கள் இரவு உணவுக்கு முன்பாக கட்டாயம் திரிபலா சூரணம் இரண்டு கிராம் அளவு சுடுதண்ணீரில் கலந்து சாப்பிட்டு வாருங்கள். மலச் சிக்கலும் இருக்காது உடம்புக்கு இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும் 🔰 *சர்க்கரை கட்டுப்பாட்டில் வராமல் இருப்பதற்கான சில காரணங்கள்*. 🔰 ❣ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரித்தால் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது. ❣ கல்லீரலின் செயல்பாடு சரியாக இல்லாமல் இருந்தால் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது. ❣ சிறுநீரில் அல்புமின் கசிவு இருந்தால் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது. ❣ சிறுநீரில் கிருமிகள் இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது. ❣ தொடர்ந்து சளி இருமல் இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது. ❣ குடலில் அமில சுரப்பு அதிகம் இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது. ❣ தூக்கமின்மை இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது. ❣ மன உளைச்சல் மன அழுத்தம் இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது. ❣ தைராய்டு பிரச்சினை இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது. 🔰 சர்க்கரை நோயாளிகளின் உணவு கட்டுப்பாடு மற்றும் சர்க்கரை கட்டுப்பாட்டில் வராமல் இருப்பதற்கான காரணங்களை மீண்டும் தாழ்வு சர்க்கரை பற்றிய விவரங்களையும் தடுக்கும் முறைகளையும் பின்பு எழுதுகிறேன் நன்றி வணக்கம்🙏🙏🙏🙏🙏 தாழ்மையுடன் மரு.அருள் நாகலிங்கம். அருள்ஹெர்பல்ஸ் அருள்சித்தாமெடிக்கல் அருள் இன்ஸ்டியூட் ஈரோடு9095905000 செவ்வாய் கிழமை 21.8.2018*🔰🔰🔰🥦🥦🥦🥦🥦🥦

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...