ஓம் நமச்சிவாய ஓம் அகத்தீசாயநம"
🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏
*பிரதான வாயுக்கள் ஐந்து 5*
*1) பிராணவாயு* இது இருதய ஸ்தானத்தில் இருந்து நாசிகா வழியாக (மூக்கு) இந்திரிங்களின் வழியாய் மேல்நோக்கி நடந்து பசி தாகங்களை உண்டாக்கி பூசித்த ஆகாரத்தை ஜீரணம் செய்யும்.
*2)அபானவாயு;* இது குதத்தைப்பற்றி நின்று மலமூத்திரங்களையும் சுக்கில சோணிதத்தையும் வெளியில் தள்ளுபடி செய்யும்.
*3)உதாண வாயு:* இது கண்ட ஸ்தானத்தில் இருந்து அன்னத்தை விழுங்கி, அந்த அன்னரசத்தை நாடிகளுக்கு வியாபிக்கச் செய்து சப்தத்தோடு கலந்து குரலோசை சேய்விக்கும். இஃதன்ன்றியும் தூங்கும் போது கண்கள் மூக்கு வாய் செவிகள் சரீரத்தின் மேலிருக்கும் தோல் எனும் ஐந்து இந்திரியங்களையும் அஞ்ஞான மென்று இருளில் ஆழுத்தக் செய்து, பிறகு தூங்கி எழுந்தவுடன் அந்தந்த இந்திரியங்களைத் தம் தம் ஸ்தானத்தில் வந்து இருக்கும்படி செய்விக்கும்.
*4)ஸமானவாயு:* இது நாபி ஸ்தானத்திலிருந்து உதானவாயுவினால் அனுப்பப்பட்ட அன்ன ரசத்தை நாடி(நரம்பு)களுக்கு சமப்படுத்தி பங்கிட்டு தேகத்தை வளமாக்கும்.
*5)வியானவாய்வு:* இது சரீரத்தின் எல்லா இடங்களிலும் வியாபித்து ஸ்பரிசத்தை கிரஹிக்க செய்யும் மேலும் பூசித்த அன்னத்தை திப்பி வேறு ரசம் வேறாக செய்து கொண்டிருக்கும் இவ்வைந்தும் தேகத்திலிருப்பதனால் ஒருவன் ஜீவித்திருக்கின்றான் ஆதலால் இவைகளை பஞ்சபிராணன்களெனப்படும்.
*உப வாயுக்கள் -ஐந்து*
*6)நாகன்:* இது கண்டத்திலிருந்து வாந்தியை உண்டு பண்ணும் அன்றியும் நேரங்களினால் எல்லா வயிற்றையும் பார்க்க செய்யும்.
*7) கூர்மன்:* இது கண்களிலிருந்து திறக்கவும் மூடவும் செய்யும்.
*8)கிருகரன்:* இது மூக்கிலிருந்து குருகுருத்துத் தும்மலை உண்டாக்கும்.
*9) தேவதத்தன்:* இது மார்பினின்று கபத்தை சேர்ந்து நெட்டிக் கொட்டாவியையும் விக்கலையும் உண்டாக்கும்.
*10 )தனஞ்சயன்:* இது கர்ப்பத்திலிருந்து பிண்டத்தை வெளியில் தள்ளும். அன்றியும், மரணமடைந்த சரீரத்தையும் விடாமல் காஷ்டடத்திற்கு போகும் வரையில் சரீரத்தை வீங்கி வெடித்து நாற்றமெடுக்கும் படிச் செய்விக்கும் இந்த தனஞ்சயன் னென்னும் வாயு சரீரம் தஹனம் செய்யும்வரையில் ஸரீரத்திலேயே இருக்கும்.
ஸ்ரீ அகத்தியர் பிரபு காரணகுரு தொடர்புக்கு 9842627918