Monday, September 17, 2018

இதன் செய்முறை எளிது. தண்ணீர் 1 லிட்டர், நாட்டுச் சர்க்கரை 100 கிராம், எலுமிச்சை பழம் 3 யை எடுத்துக்கணும். ஒரு லிட்டர் தண்ணீரில் மூன்று எலுமிச்சை பழங்களையும் மிக்ஸியில் அரைத்து ஊற்றி, அதில் நூறு கிராம் நாட்டுச் சர்க்கரை கலந்து அதிக காலி இடம் உள்ள கண்ணாடிப் பாட்டிலில் ஊற்றி மூடி வைக்கவும். அதில் உருவாகும் வாயு வெளியேறுவதற்காகத் தினமும் ஒரு முறை மூடியைத் திறந்து, மறுபடியும் மூடி வைக்கவும். ஏழு நாள்களில் தயாராகிவிடும். இதில், ஒரு பக்கெட் துணிக்கு நூறு மில்லி அல்லது அதற்கு மேல் கொஞ்சம் கலந்து ஊறவைத்துத் துவைக்கலாம். இதைப் பயன்படுத்தி துவைக்கும்போது துணிகளை துவைக்கும்போது நுரை வராது. எனவே, தண்ணீர் குறைவாகச் செலவாகிறது.

நான் ஐந்து லிட்டர் தண்ணீரில் அரை கிலோ நாட்டுச் சர்க்கரை சேர்த்து பிளாஸ்டிக் வாளியில் மூடிவைத்தேன். உண்பதற்கு வாங்கும் ஆரஞ்சு, மாதுளம் பழங்களின் தோலை அப்படியே அதில் சேர்த்து வருகிறேன். எலுமிச்சை சாறு பிழிந்து பின்னர் அதன் தோலையும் சேர்க்கிறேன். இப்போதும் பயன்படுத்துகிறேன். துவைக்கும்போதே நல்ல மணம். துவைத்து அலசிய பின்னும் தொடர்கிறது.

 

இதையே தரை துடைக்கவும் தண்ணீர் கலந்து பயன்படுத்தலாம். நீங்களும் பயன்படுத்துங்கள். சோப்பு வாங்கும் செலவு குறையும். எலுமிச்சையில் உள்ள ஆசிட்டுக்கு அழுக்கைப் போக்கும் குணமுள்ளது. அதில் நாட்டுச் சர்க்கரையை கலப்பதால், அது என்சைமாக மாறி, அதன் அழுக்கு நீக்கும் தன்மை கூடுகிறது. குளிக்கக்கூட கடலைமாவு, சீயக்காய்ன்னு கெமிக்கல் இல்லாத பொருள்களைப் பரவலாக பயன்படுத்துகிறோம். ஆனால், துணிகளைத் துவைக்க 90 சதவிகிதம் பேர் கெமிக்கல் அதிகம் உள்ள சோப், பவுடர்களைதான் பயன்படுத்துகிறோம். அதனால், எளிய வகையிலான, அதிகம் செலவில்லாத இந்த பயோ என்சைம் கரைசலை துணிகள் துவைக்கவும், தரைகளைச் சுத்தப்படுத்தவும் அனைவரும் பயன்படுத்த வேண்டும். இதை நான் எல்லா நிகழ்ச்சிகளிலும் முன்வைத்துப் பேசுகிறேன்.

பலமடையும் ஆதார்... பலவீனமாகும் RTI...தனிநபர் தகவல் பாதுகாப்புச் சட்டத்தின் சிக்கல்கள்!

நம் ஒவ்வொருவரின் சிறிய, ஆனால் சீரிய முயற்சியால் இயற்கை காக்கப்படும். செய்வீர்களா?" என்ற கேள்வியோடு முடித்தார். 

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...