Health Care :-
ஆற்றுநீர் வாதம் போக்கும்
அருவிநீர் பித்தம் போக்கும்
சோற்றுநீர் இரண்டையும் போக்கும்
ஆமாங்க! ஆறும், அருவியும் இல்லாத ஊரில் உள்ள மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்ததுதான் சோற்றுநீர். இதை நீராகாரம், நீச்சுதண்ணி என்றும் சொல்வர். கிராம மக்களின் தினசரி உணவாகவும், காலைநேர பானமாகவும் தொன்று தொட்டு இருந்து வரும் ஆரோக்கிய பானம் நீராகாரம் என்கிற சோற்று நீர். முதல்நாள் இரவில் 2 பிடி சோற்றினை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 குவளை சுத்தமான தண்ணீர் விட்டு மூடி வைக்க வேண்டும். காலையில் எழுந்ததும் அதில் தேவையான அளவு கல்லுப்பும் கொஞ்சம் புளித்த மோரும் சேர்த்து சிறிய வெங்காயம் மூன்று நறுக்கிப் போட்டுக் கரைத்து அப்போதே சாப்பிட வேண்டும். கொஞ்சம் கொத்துமல்லி தழையும் கறிவேப்பலையும் கிள்ளிப் போட்டுக் கொள்ளலாம். உடன் கடித்துக் கொள்ள இரண்டு பச்சைமிளகாயும் இருந்தால் அதன் ருசியே தனி தான். இப்படி கோடைக்காலம் முழுதும் தினசரி ஒரு வேளையாவது நீராகாரத்தை (சோற்றுநீர்) இரண்டு குவளை பருகினால் என்ன நிகழும் என்பதை தான் மேலேஉள்ள பழமொழி சொல்கிறது. ஆமாங்க! சோற்று நீரை பருகினால் வாத நோய்களான பக்கவாதம் கைகால் அசதி, முடக்குவாதம் மற்றும் பித்த நோய்களான வயிற்றுப்புண், இரத்த மூலம், சரும நோய்கள் வராது தடுக்கும். அத்துடன் கோடைக்கால பாதிப்புகளான வயிற்றுவலி, சருமத்தில் தோன்றும் வேனல் கட்டி, வேர்க்குரு, தேக அனல் ஆகியன வராது காக்கும். முதல் நாள் சோற்றில் நீர் ஊற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் விட்டமின் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது. அதுமட்டுமின்றி உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் "ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்" (கவனியுங்கள்- மில்லியன் அல்ல "ட்ரில்லியன்") பெருகி நம் உணவுப்பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம். கூடவே இரண்டு சிறு வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அதனால் எந்த காய்ச்சலும் நம்மை அணுகாது. இப்பொழுது புரிந்திருக்கும் நமது மூதாதையர்கள் எதனால் பலசாலிகளாகத் திகழ்ந்தனர் என்று!
பழைய சாதத்தின் மகத்துவத்தைப் பற்றி இந்திய விஞ்ஞானி ப்ரதீப் கூறியதில் சில உங்களுக்காக இதோ ...
1. காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.
2. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது.
3. மறுநாள் இதை குடிக்கும்போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்றுவலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.
4. அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.
5. இந்த பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிடும்.
6. மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியைத் தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.
7. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும்.
8. அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வந்த்தால் ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்.
9. எல்லவற்றிற்கும் மேலாக, நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில் கூட வராது.
10. ஆரோக்கியமாகவும் அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்.
🤝