Wednesday, July 5, 2017

கடுக்காயின் மகத்துவம்:

Rajasaravanan:
கடுக்காயின் மகத்துவம்:கடுக்காய் அனைத்து கடைகளிலும் அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு,நன்கு தூளாக அரைத்து வைத்து கொள்ளவும்.இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.
கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்:கண் பார்வை கோளாறுகள்,காது கேளாமை,சவையின்மை,பித்த நோய்கள்,வாய்ப்புண்,நாக்குப்புண்,மூக்குப் புண்,தொண்டைப்புண்,இரைப்பைப்புண்,குடற்புண்,ஆசனப்புண்,அக்கி,தேமல்,படை,தோல் நோய்கள்,உடல் உஷ்ணம்,வெள்ளைப்படுதல்,மூத்திரக்குழாழ்களில் உண்டாகும் புண்,மூத்திர எரிச்சல்,கல்லடைப்பு,சதையடைப்பு,நீரடைப்பு,பாத எரிச்சல்,மூல எரிச்சல்,உள் மூலம்,சீழ் மூலம்,ரத்த பேதி,ரத்த பேதி,பௌத்திரமக்கட்டி,சர்க்கரை நோய்,இருதய நோய்,மூட்டு வலி,உடல் பலவீனம்,உடல் பருமன்,ரத்தக் கேளாறுகள்,ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளியஅருமருந்தே கடுக்காய்.
காலை இஞ்சி கடும்பகல் சுக்கு மாலை கடுக்காய் மண்டலம் உண்டால் விருத்தனும் பாலனாமே.
காலை வெறும்வயிற்றில் இஞ்சி,நண்பகல் சுக்கு,இரவில் கடுக்காய் என தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர கிழவனும்,குமரனாகலாம்.என்பதே இந்த பாடலின் கருத்தாகும்.
எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...