உடல் நலம் சரியில்லையா ? ப்ரட் சாப்பிட்டீங்களா ?
நண்பர்கள் பீசா ட்ரீட் தந்தாங்களா ?
நல்லது. இப்ப கீழே படிங்க.
கடந்த வாரம் Centre of Environment and Science (CSE) தாங்கள் நடத்திய ஆய்வின் முடிவை சொன்னார்கள். அப்படியே ஷாக்க்காயிடும் ஆய்வு.
சி.எஸ்.சி நிறுவனம் டெல்லியில் பிரேட் தயாரிக்கும் நிறுவனங்களான பிரிட்டானியா , டொமினோஸ், மெக்டோனல்ட்ஸ் மற்றும் முக்கிய பெரிய நிறுவனங்களின் தயாரிப்புகளில் இருந்து 38 மாதிரிகளை எடுத்துப் பரிசோதித்துப் பார்த்ததில் அந்த பிரெட் , பீசா, பர்கர், சாண்ட்விச் ஆகியவற்றில் பொட்டாசியம் ப்ரோமேட் மற்றும் பொட்டாசியம் அயோடேட் அதிக அளவில் கலந்து இருப்பது தெரியவந்துள்ளது.
பஞ்சு போன்று வருவதற்கும் வெள்ளை நிறம் வருவதற்கும் பயன்படுத்தப்படும் பொட்டாசியம் ப்ரோமேட் & ஐயோடேட் ஐரோப்பிய யுனியன் மற்றும் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.
என்ன காரணம் ?
இவை புற்று நோய் உருவாக்கும் தன்மை கொண்டது. தைராய்ட் நோய்களையும் உருவாக்கும்.
தற்போது இந்தியன் பேக்கர்ஸ் அசோசியேஷன் இவற்றை பயன்படுத்தப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்கள்.
இலங்கையில் 2001 லேயே தடை செய்யப்பட்டது. கொரியா போன்ற நாடுகளில் கூட தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் நம் ஊரில் இப்பத்தான் கண்டுபிடித்து வெளிப்படையாக சொல்றாங்க. தலையிலே அடிச்சிக்கலாம்னு தோணுது.
இவ்வளவு காலம் சாப்பிட்டவர்களில் எவ்வளவு பேர் புற்று நோய் மற்றும் தைராய்ட் நோய்களால் பாதிக்கப்ப்ட்டு இருப்பார்கள் ? உயிர் இழந்து இருப்பார்கள் ?
இனிமே இந்த பேக்கரி நிறுவனங்கள் கலக்க மாட்டாங்க என்பதற்கு என்ன உத்திரவாதம் ?