எண்ணம்* என்பது ஒருவர் மனதில் எழுந்துவிட்டால் அது தனக்கோ அல்லது எங்கேயாவது.... யார் அந்த எண்ணம் செயலாவதற்குத் தகுதியானவர் என்பதை பொருத்தமாய் பார்த்து நடத்திக் கொண்டிருப்பது இறைநிலை. இதுவே இறைநீதி. இதையே Cause and effect என்றும் கூற முடியும். விதி என்றும் கூறலாம்.
ஆகவே தான் அக்காலத்தில் நல்லதை மட்டுமே நினை என்றார்கள். நல்லதை நினைத்தால் அது தனக்கும் செயலாகலாம். அதற்கு யார் உரியவர் என்று இறைநிலை தேர்ந்தெடுத்து அவருக்கும் செயல்படுத்தலாம். ஆகவே நல்ல எண்ணம் மட்டுமே சிந்திக்க வேண்டும்.
ஒருவருக்கு எதிர்மறை எண்ணங்கள் அடிக்கடி தோன்றுகிறது? அதை எப்படி கைவிடுவது அல்லது அதை எப்படி நேர்மறையாக மாற்றுவது என்று சிந்தித்தோம் என்றால் அடிப்படையில் மனிதப்பிறப்பே ஆறறிவு உடையது தான். அதுவே சிந்திக்கும் திறன். இதை முழுத் திறனாக பயன்படுத்துவதை பயிற்சியின் மூலம் நடைமுறைப்படுத்தி ஒருவர் தன்னை மேன்மைபடுத்த முடியும்.
உடல் இயக்கத்தை, கட்டுப்பாட்டுடன் வைக்க, *ஆக்கினை* தவத்தில் நன்கு பயிற்சி பெற வேண்டும். Pituitary gland is the Master gland. It controls Several hormones of the Body.
புலன்களை இயக்குவது மூளை. அங்கே தான் பிட்யூட்டரி சுரப்பி உள்ளது. ஆகவே அதை குருவின் உதவியுடன் விழிப்புநிலையில் வைத்தால் புலன்களை உடல் இயக்கங்களை ஒருவர் கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.
உடலைக் கட்டுப்படுத்த *மனமும்* ஒத்துழைக்க வேண்டும்.
அதை கட்டுப்பாட்டில் வைப்பதற்குத் தான் *துரியம்*. துரிய தவம் உச்சந்தலையில் பீனியல் சுரப்பியை இயக்கத்திற்கு கொண்டு வந்துவிட்டால் மன இயக்கமும் கட்டுப்பாட்டிற்க்குள் வந்துவிடும்.
ஒருவருக்கு குண்டலினி சக்தி எழுப்புதவன் மூலம் இந்த இரண்டு சுரப்பிகளும் நன்கு செயல்பாட்டுக்கு வரும்..
யாரெல்லாம் தன்னை தனது மாண்பை உயர்த்த நினைக்கிறார்களோ, அவர்கள் எல்லாருமே சிந்திக்கும் திறன் பெற்றவர்களாக மாற முடியும்.
அதற்குத் தகுந்த குரு உதவி தேவை.
குருவே சரணம்🙏🙇🏻♂