*மகளிர் மருத்துவம்*
*திருமணமான - திருமணமாகாத பெண்களுக்குப் பொதுவாக வரும் நோய்களும் அவற்றிற்கான மருந்துகளும் கீழ்வருமாறு :*
1. *வெள்ளைபடுதல்* -
அசோகப் பட்டையைக் காய்ச்சி வடித்த நீரை அளவுடன் பருகி வர நிற்கும்.
2. *பிறப்புறுப்பில் புண்* -
மாசிக்காயை அரைத்துத் தடவிவர ஆறும்.
3. *சீரற்ற மாதவிலக்கு* -
அரிநெல்லிக்காயைப் பச்சையாகச் சாப்பிட்டு வரச் சீர்பெறும்.
4. *மாதவிலக்குக் கால வயிற்றுவலி* -
முருங்கை இலைச்சாற்றை வெறும் வயிற்றில் குடித்து வர நிற்கும்.
5. *உடல் நாற்றம்* -
ஆவாரந் தழையுடன் கஸ்தூரி மஞ்சளைச் சேர்த்து அரைத்துக் குளித்து வர நீங்குவதுடன் மேனியும் அழகு பெறும்.
*திருமணத்துக்குப் பின்பு வரும் சில நோய்கள், அவற்றிற்கான மருந்துகளை இனிக் காணலாம்.*
1. *கர்ப்பகால வாந்தி* -
அரிநெல்லிக்காயை உண்டு வர நிற்கும்.
2. *பிரசவ காலத்தில் ஏற்படும் வயிற்றுப்புண்* -
வேப்பந்தழையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து உண்டு வரப் புண் ஆறி வயிற்றிலுள்ள பூச்சிகள் நீங்கிப் பிரசவித்த பெண்கள் நலம் பெறுவர்.
3. *பிரசவத்திற்குப் பின் உடல் மெலிவு* -
சீரகம், பூண்டு, குறுமிளகு சேர்த்துச் சமைத்த வெள்ளாட்டுக் கறியை உண்டு வர உடல் வலுப்பெற்று நலம் திரும்பும்.
4. *தாய்ப்பால் பற்றாக்குறை* -
பேய் அத்திப்பழத்தை உண்டுவரப் பெருகும்.