Thursday, October 11, 2018

வாழ்வா சாவா நிலையில் பூமி ! பட்டாசு போதும் பட்டாச்சு !*

*வாழ்வா சாவா நிலையில் பூமி ! பட்டாசு போதும் பட்டாச்சு !*
-------------------------------------------------------------------

*Oct 7, 2018 இரவு ஐ.நா ஒரு அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டது.*

*தென்கொரியாவின் இஞ்ச்யான் நகரில் 200 சர்வதேச விஞ்ஞானிகள் பங்கு பெற்ற சுற்றுச்சூழல் மாநாடு தொடர்ந்து ஒரு வாரம் நடைபெற்றது. அதில் 728 பக்க அறிக்கையை வெளியிட்டார்கள்.*

*அதில் 2050 ற்குள் உலகம் மிகப்பெரும் பேரழிவை சந்திக்க காத்திருக்கிறது என்று விஞ்ஞானிகள் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.*

*உலகளவில் ஏற்கனவே நடந்த சுற்றுச்சூழல் மாநாடுகளில் புவி வெப்பம் 2℃ ஐ கடக்கக்கூடாது என்று எச்சரித்துள்ளார்களாம். ஆனால் இப்பொழுது வேகமாக 1.5℃ நெருங்கி வருகிறதாம். 2030 ல் இது 3℃ வரை அதிகரிக்கும் என எச்சரித்துள்ளார்கள்.*

*இதனால் ஏற்படும் பாதிப்புகளை இவர்கள் பட்டியலிட்டு உள்ளார்கள் !*
-------------------------------------------------------------------

*1 - வெப்ப கதிர்வீச்சு தாக்கம் இனி தொடர் கதை ஆகும் - Heat waves (2015 ல் இந்தியாவில் மட்டும் இதற்கு 2500 பேர் இறந்துள்ளார்களாம்.)*

*2 - அரிசி, கோதுமை விளையாத அளவிற்கு சுற்றுச்சுழல் மாசு ஏற்பட்டு மண் மலடாகும். இதனால் உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் கூட்டம் கூட்டமாக இடம் பெயர்வார்கள்.*

*3 - குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடும்.*

*4 - காடுகள் தீடீர் தீடீரென தீப்பற்றிக்கொள்ளும்.*

*5 - கடல் மட்டம் ஒரு மீட்டர் வரை உயர்ந்து உலகம் முழுக்க உள்ள கடலோர நகரங்கள் கடலுக்குள் முழ்கும் அபாயம்.*

*6 - பனிப்பாறைகள் உருகி அதில் இருந்து வெளியேறும் Methane gas வெளியேறும், இது Carbon-di-oxide ஐ விட பத்து மடங்கு அதிக நச்சு வாய்ந்ததாக இருந்து Ozone layer ஐ இது சேதப்படுத்திவிடும்.*

*7 - வரட்சி ஏற்படும்.*

*இதற்கு இவர்கள் குறிப்பிடும் முக்கிய காரணங்கள் தொழிற்சாலை, வண்டி வாகனங்களில் இருந்து வெளியேறும் நச்சு புகை மற்றும் காடுகளை அழித்தல்.*

*இதற்கான ஆதாரம் இதோ 👇🏾*

https://youtu.be/Pc1h9gCZWAg

*இப்படி சாகக்கிடக்கும் பூமியை வெடி வைத்து மேலும் சாகடிக்கலாமா ?*

*சரி இப்பொழுது பட்டாசிற்கு வருவோம் !*
-------------------------------------------------------------------

*நாம் அன்றாட கேட்கும் சப்தத்தின் அளவு சராசரியாக 30 டெஸிபல். மனிதனால் 60 டெசிபல் வரை செவிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் கேட்க முடியும். பல்லுயிர்கலுக்கான டெஸிபலின் அளவு மேலும் குறையலாம்.*

*ஆனால் பட்டாசின் ஒலி அளவு தெரியுங்களா ? 60 முதல் 120 டெஸிபல் வரை. 125 டெஸிபல் அளவிற்கு பட்டாசு தயாரித்தால் அவர் 1986 ம் ஆண்டு சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்புச்சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றவாளி ஆவார்.*

*சரி பட்டாசில் என்னதான் உள்ளது ? வாருங்கள் பார்ப்போம்.*

*1 - பொட்டாசியம்*
*2 - பாஸ்பரஸ்*
*3 - சல்பர்*
*4 - துத்தநாகம்*
*5 - ஆண்டிமோனி சல்பைடு*
*6 - காட்மியம் காரீயம்*
*7 - நைட்ரேட்*
*8 - ஆர்செனிக் பேரியம்*
*9 - காப்பர் காம்பவுண்ட்*
*10 - லெட் காம்பவுண்ட்*
*11 - ஹெக்சா குளோரோ பென்சின்*
*12 - நைட்ரஜன் டை ஆக்சைட்*
*13 - லித்தியம் காம்பவுண்ட்*
*14 - சோடியம்*
*15 - அலுமினியம் பவுடர்*
*16 - மேக்னீசியம் பவுடர்*
*17 - அயர்ன் பவுடர்*
*18 - பொட்டாசியம் நைட்ரேட்*
*19 - பொட்டாசியம் பெர்குலோரெட்*
*20 - ஸ்ட்ரோன்ஷியம் நைட்ரேட்*
*21 - பொட்டாசியம் குளாரேட்*

*இந்த 21 இரசாயணங்கள் உங்கள் 21 தலைமுறையை உரு தெரியாமல் அழிக்கும் அளவிற்கு வல்லமை பெற்றவை.*

*பட்டாசால் ஐம்பூதங்கள் பாதிக்கின்றன*

*நீர் !*
--------

*பட்டாசு வெடித்தபின் அதன் கழிவுகள் நீரில் கலந்து செல்லும் இடமெல்லாம் சின்னாபின்னம் ஆக்கிவிடும். நீர்நிலைகளில் உள்ள உயிரினங்கள் அழிக்கப்படுகின்றன. நச்சுக்கள் நிலத்தடி நீரில் கலந்து நிலத்தடிநீர் மாசுபடுகிறது.*

*நிலம் !*
-------------

*பட்டாசின் கழிவுகளை நிலத்தில் கொட்டுவதன் மூலம் நில ஊர்வன உயிர்கள் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள்  அழித்தொழிக்கப்படுகின்றன. இதன் மூலம் விவசாயம் பாதிக்கப்படுகிறது. மட்கும் குப்பையை கூட மக்க வைக்க முடியாத அளவிற்கு மண் மலடாகிறது.*

*நெருப்பு !*
------------------

*பட்டாசு வெடிக்கும் போது உண்டாகும் வெப்ப மிகுதியால் சுற்றுச்சூழலின் தட்பவெட்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டு பாதிப்பு உண்டாகிறது.*

*காற்று !*
---------------

*பட்டாசில் இருந்து வெளிப்படும் புகை மற்றும் இதன் கழிவுகளை எரிக்கும் போது ஏற்ப்படும் புகையால் காற்று மண்டலம் மாசுபடுகிறது. இதன் மூலம் பறக்கும் இனங்களை இனப்படுகொலை செய்கிறோம்.*

*ஆகாயம் !*
-------------------

*21 நச்சு இரசாயனங்கள் வழி மண்டலத்தில் நைட்ரஜன் ஆக்ஸைட், சல்பர் டை ஆக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு போன்ற நச்சு வாயுக்களை மிக அதிக அளவு உமிழ்கின்றன. இதனால் புவி வெப்பமயமாதல், ஓசோன் மண்டல ஓட்டை போன்ற பேராபத்து நிகழ்கின்றன.*

*நம்மை ஆட்டிப்படைக்கும் பஞ்சபூதங்களையே இந்த அளவிற்கு சீரழிக்கும் பட்டாசு நம்மை சும்மா விட்டுவிடுமா என்ன ?*

*இதோ பட்டாசால் மனிதனுக்கு ஏற்படும் பேராபத்துக்கள் !*
-------------------------------------------------------------------

*1 - கருவில் உள்ள குழந்தைகளை பாதிக்கும்*
*2 - காது கேளாமை*
*3 - சளி*
*4 - இருமல்*
*5 - தும்மல்*
*6 - ஆஸ்துமா*
*7 - மூச்சுத்தினறல்*
*8 - நுரையீரல் புற்றுநோய்*
*9 - சொரியாஸிஸ்*
*10 - கண் பார்வை இழப்பு*
*11 - தைராய்டு*
*12 - மூளை செயல்பாடு பாதிப்பு*
*13 - அனீமியா*
*14 - சிறுநீரக கோளாறு*
*15 - கல்லீரல் பாதிப்பு*
*16 - வாந்தி*
*17 - தலைவலி*
*18 - வயிறுக் கோளாறுகள்*
*19 - சைனஸ்*
*20 - மூக்கு, தொண்டை பாதிப்பு*
*21 - இரத்த அழுத்தம்*
*22 - மாரடைப்பு*
*23 - தூக்கமின்மை*
*24 - குழந்தையின்மை*
*25 - புற்றுநோய்*

*இவை அனைத்து தீபாவளி நமக்கு கொடுக்கும் அன்பு பரிசுகள்.*

*மனிதனை பாதாளத்தில் தள்ளும் பட்டாசுகள் பல்லுயிர்களை சும்மாவிட்டுவிடுமா ?*
------------------------------------------------------------------

*1 - பறவையின் கரு கலைக்கப்படுகிறது.*
*2 - பறவை இனங்கள் இனப்படுகொலை செய்யப்படுகிறது.*
*3 - நிலஊர்வன உயிர்கள் அழிக்கப்படுகிறது*
*4- நிலத்தில் வாழும் பிற உயிர்கள் அழிக்கப்படுகிறது.*
*5 - நீர்நிலை உயிர்கள் அழிக்கப்படுகிறது.*

*ஒரு நாட்டின் வளமே பல்லுயிர்களால் தான் கட்டமைக்கப்படுகிறது. பல்லுயிர்களை அழித்துவிட்டு நாடு எப்படி வளமாகும் ?*

*நீ இல்லாமல் பல்லுயிர்கள் வாழும்*

*ஆனால் பல்லுயிர்கள் இல்லாமல் ஒரு நொடி கூட உன்னால் வாழ முடியாது.*

*சமுதாய பாதிப்புகள் !*
----------------------------------------

*பறவைகள் இல்லையேல் காடுகள் இல்லை*

*காடுகள் இல்லையேல் ஓடைகள் இல்லை*

*ஓடைகள் இல்லையேல் ஆறுகள் இல்லை*

*ஆறுகள் இல்லையேல் நீர் இல்லை*

*நீர் இல்லையேல் வேளாண்மை இல்லை*

*வேளாண்மை இல்லையேல் உணவு இல்லை*

*உணவு இல்லையேல் மனிதன் இல்லை*

*நீ வெடிக்கும் பட்டாசு உனக்கு நீயே வைக்கும் வேட்டு என்று இப்பொழுது புரிகிறதா ?*

*ஏன் ஆறுகள் வறண்டு உள்ளது என்பது புரிகிறதா ?*

*ஏன் நமக்கு குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது என புரிகிறதா ?*

*ஏன் விவசாயம் அழிந்து வருகிறது என தெரிகிறதா ?*

*கொண்டாட்டங்கள் அன்பு, வளம், வளர்ச்சி, மகிழ்ச்சியை தர வேண்டுமே தவிர அழிவை அல்ல.*

*பண்பாடு !*
--------------------

*வீட்டு வாசலில் சாணம் தெளித்து மண்ணில் உள்ள நுண்ணுயிர்களுக்கு உணவளித்த நம் முன்னோர் என்ன முட்டாளா ?*

*அரிசிமாவில் கோலமிட்டு எறும்புகளுக்கும், பூச்சிகளுக்கு உணவளித்த நம் முன்னோர் என்ன முட்டாளா ?*

*தானியங்களை அள்ளி இறைத்து பறவைகளுக்கு உணவளித்த நம் முன்னோர் என்ன முட்டாளா ?*

*இன்னும் எத்தனை எத்தனை சொல்லிக்கொண்டே போகலாம்.*

*பல்லுயிர்_நன்மைகள் !*
-------------------------------------------

*சுற்றுப்புறச்சூழல் மனித குலத்திற்குத் தரும், நீர் ஆதாரத்தை அது பாதுகாக்கிறது.*

*மணல் ஆதாரத்தை அது உருவாக்குகிறது; மற்றும் பாதுகாக்கிறது.*

*ஊட்டச் சத்துக்களை சேமித்து வைக்கிறது; மறு சுழற்சி செய்து தருகிறது.*

*சுற்றுப்புறச் சூழல் மாசுகளை தகர்க்கிறது; உறிஞ்சிக் கொள்கிறது.*

*உலகின் தட்பவெப்ப நிலையைச் சீராகப் பராமரிக்க உதவுகிறது.*

*சுற்றுப்புறச் சூழல் அமைப்புகளைப் பராமரிக்கிறது.*

*எதிர்பாராது எற்படும் இயற்கை நிகழ்வுகளிலிருந்து நம்மை மீட்கிறது.*

*உயிரிய ஆதாரங்களான  உணவு, மருத்துவ ஆதாரங்களாக உதவும் செடிகள், மரச் சாமான்களைத் தயாரிக்க உதவும் மரங்கள், ஆகியவற்றைப் பாதுகாக்கிறது.*

*பறவைகளுக்கான உணவு வகைகளைத் தருவதோடு  பல்வேறு வகை உயிரினங்களின் பாதுகாப்பு, மரபணு பாதுகாப்பு ஆகியவற்றிற்கும் உதவி செய்கிறது.*

*இது தவிர சமூகத்திற்கு ஆதாயம் தரும் வகையில் பண்பாட்டைப் பாதுகாத்துப் பேணுகிறது; சுற்றுலா ஸ்தலங்களை உருவாக்கி மக்களை மகிழ்விக்கிறது. எதிர்காலத்திற்கான கல்வி மற்றும் ஆராய்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.*

*ஒரு செலவும் இல்லாமல் இயற்கை நமக்குத் தரும் இதைப் பாதுகாக்க வேண்டும் அல்லவா? இவற்றை மனிதனால் உருவாக்கவே முடியாது.*

*ஆகவே அரிதாக நமக்கு இயற்கை அருளியுள்ள பயோடைவர்ஸிடி எனப்படும் பல்லுயிர்ப் பெருக்கத்தை அழிக்காமல் காத்து சுற்றுப்புறத்தைக் காப்பது நமது கடமை.*

*இப்படி*

*"பகுத்துத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்"*

*என்ற உயர்ந்த நெறியை வாழ்க்கை முறையாக கொண்டு வளர்ந்த நாம்.*

*இன்று !*
----------------

*கொண்டாட்டம் என்ற பெயரில் அனைத்து உயிர்களையும் அழித்தொழித்துவிட்டு நம்மை நாமே அழித்துகொள்கிறோம்.*

*பட்டாசு தயாரிப்பவன் கொலைகாரன்*

*பட்டாசு விற்பவன் கொலைகாரன்*

*பட்டாசு வாங்கித்தருபவன் கொலைகாரன்*

*பட்டாசு வெடிப்பவன் கொலைகாரன்*

*இதற்கு சட்டத்தில் தண்டனை இல்லாவிட்டாலும் கர்மா அடிப்படையில் இவர்கள் யாரும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது.*

*பல்லுயிர்களை அழித்துவிட்டு ஒரு நொடி கூட நம்மால் இந்த மண்ணில் உயிரோடு வாழ முடியாது.*

*பல்லுயிர்களை வாழவைத்து*
*நாம் வாழ்வோம்.*

*விளம்பி வருடம் வரும் ஐப்பசி மாதம் ௨० ஆம் நாள் (Nov - 6) வரும் தீபாவளி பண்டிகையில் பல்லுயிர்களை பாதுகாத்து செடி, கொடி, மரங்களை நட்டு "பசுமை தீபாவளியாக" கொண்டாட இன்றே இறைவன் முன்நிலையில் உறுதிமொழி ஏற்போம்.*

*வெடிகளை வைத்து பூமியை அழிப்பதை விட !*
*செடிகளை வைத்து பூமியை பாதுகாப்போம் !*

*பட்டாசுகள் ஒழியட்டும் !*
*பல்லுயிர்கள் தழைக்கட்டும் !*

*நன்றி*

*- ஹீலர்.இரா.மதிவாணன்*

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...