Thursday, October 11, 2018

*இந்துமதத்தை அழிக்க நினைக்கும் பத்திரிகைகள்*

*இந்துமதத்தை அழிக்க நினைக்கும் பத்திரிகைகள்*

இந்துக்கள் எண்பது சதவீதத்துக்கும் மேலாக வாழும் ஒரே நாடு நமது பாரதம் மட்டுமே. பாரத தேசத்தில் இந்து தர்மத்தைச் சிதைப்பதிலும்,இந்து விரோத சக்திகளுக்கு ஆதரவாகவும் செயல்படுபவர்களில் சிலரே களத்தில் இருக்கின்றார்கள்.

விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் இந்துவிரோத சக்திகள் இருந்தாலும், இவர்களின் செயல்பாடுகள் மிகப்பெரிய அளவில் வியாபித்துள்ளது. இந்த தீய சக்திகள் இந்து ஒற்றுமைக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் தங்களின் செயல்களை செய்து வருகிறார்கள்.

தங்களின் அதிகார பலத்தாலும்,வெளி உலக பலத்தாலும் கருத்துக்களையே மாற்றியமைக்கக்கூடிய சூழிநிலையை உருவாக்குகிறார்கள்.

உலகில் வலிமைமிக்க சக்தியாக விளங்குவது ஊடகங்கள் எனப்படும் மீடியாக்கள்.இந்து விரோத சக்திகள், தங்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்கொண்டு காரியங்களைச் செயல்படுத்த மீடியாக்கள் மூலம் முனைகிறார்கள்.

வெளிப்பார்வைக்கு இவர்களின் போக்கு இந்துக்களுக்கு ஆதரவாக இருப்பதாகத் தெரிந்தும், அந்நிய சக்திகளின் ஊக்குவிப்பால் தங்களின் ஊடகங்கள் (மீடியாக்கள்) மூலமாக இந்து விரோத செய்திகளை அதிக அளவில் வெளியிடுகிறார்கள்.

அடிமைத்தனத்தின் உச்சமான ஆங்கில மோகத்தின் காரணமாக பாரத நாட்டில் பெருவாரியான மக்கள் ஆங்கில நாளிதழ்களில் வரும் செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

பெருவாரியான ஆங்கில நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகள் கிறிஸ்தவர்களின் ஆதிக்கத்தில் அல்லது அந்நிய கிறிஸ்தவ மிஷனரிகளின் கையில் இருக்கின்றன.

இந்தியாவில் கிறிஸ்தவ மதமாற்றம் செய்யவேண்டும், இந்து ஒற்றுமைக்குப் பங்கம் ஏற்படுத்த வேண்டும் என்கிற தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய தெளிவான கொள்கையின் அடிப்படையில் ஊடகங்களில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளனர.

ஜனநாயகத்தின் நான்காவது தூண்,மூன்றாவது கண் என வர்ணிக்கப்படும் இதழ்கள் இரு சமுதாயத்திற்கு விரோதமான செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதும் தவறான செய்திகளாக இருப்பினும் சிறிதும் வெட்கம்,கூச்சமின்றியும்,எவ்வித சமுதாயக்கண்ணோட்டம் இல்லாமலும் செயல்படுகின்றன.

ஆங்கிலப்பத்திரிகை என்பது அறிவுஜீவிகளின் பத்திரிகை, நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுபவர்களால் என்ன நடந்துவிடும் என்று நினைக்கலாம்.

ஆனால்,உலக நாடுகளுக்குப் பாரதத்தைப்பற்றியும்,பாரதத்தில் பெரும்பான்மையாக வாழும் மக்களின் உணர்வுகளைப் பற்றியும் திசைதிருப்ப பெரும்பங்காற்றுவது ஆங்கிலப்பத்திரிகைகளே!!

அவை அப்படி செய்ய அதன் திரைமறைவு ரகசியங்களை ஆராய்வோம்:

தி ஹிந்து

125 ஆண்டுகள் பழமையான நாளிதழ் தி ஹிந்து. துவக்க காலங்களில் நாட்டின் விடுதலைக்கு முக்கிய பங்காற்றிய இதழ்.

ஆனால், தற்போது இந்து விரோத செய்திகளுக்கு அதிகமுக்கியத்துவம் கொடுப்பதன், இந்து விரோத சக்திகளுக்கு ஆதரவான கட்டுரைகள் அதிக அளவில் பிரசுரிப்பதும் தங்களின் தலையாய பணியாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்து நாளிதழின் ஆசிரியர் என்.ராம் சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் விஜில் என்னும் அமைப்பின் சார்பில் நடந்த ஒரு ஆய்வரங்கில் 1992 இல் அயோத்தியில் நடந்த சம்பவத்தைக் காட்டுமிராண்டியின் செயல்பாடு என வர்ணித்தார்.

இன்று இந்து பத்திரிகையின் முழு நிர்வாக அமைப்பு சுவிஸ் நாட்டின் ஜோஷ்வா சொசைட்டி என்னும் நிறுவனத்தின் பிடியில் இருக்கிறது.(Joshuna Society, Berne).

என்.ராமின் முதல் மனைவி ஐரிஷ் நாட்டைச் சேர்ந்த சூசன் என்பர். இவர் ஆக்ஸ்போர்டு பிரஸ் வெளியீட்டின் பொறுப்பாளர். இவரது மகள் வித்யாராம் ஒரு பத்திரிகையாளர்.

என்.ராமின் இரண்டாவது மனைவி மரியம். சுவிஸ் நாட்டைச் சேர்ந்த பெண்மணி.இவரின் தூண்டுதலின் பலனாகவே கிறிஸ்தவ அமைப்பிடம் இந்து பத்திரிகையின் நிர்வாக அமைப்பு மாறிவிட்டது.

எக்ஸ்பிரஸ் பத்திரிகை

தேசபக்தி கொண்ட ராம்நாத் கோயங்காவால் துவக்கப்பட்டது இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை.இந்துப்பண்பாட்டிற்கும்,கலாச்சாரத்திற்கும் ஊறு விளைவிக்காமல் பத்திரிகை நடத்தியவர்.அவசர காலத்தில் ஆட்சியாளர்களின் சர்வாதிகாரத்தை எதிர்த்து குரல் கொடுத்தவர்.

ஆனால்,இன்று,தி இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை எனவும்,தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் எனவும் இரண்டாக பிரிந்துள்ளது.

இந்த இரண்டில் தி இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் அதிக பங்குகளை வாங்கியது ஏசிடிஎஸ் கிறிஸ்டியன் மினிஸ்டர்ஸ் என்ற (ACTS Christian Ministers) கிறிஸ்தவ நிறுவனமாகும்.

இரண்டு பிரிவுகளில் இந்துக்களுக்கு ஆதரவாக இயங்கும் பத்திரிகை தற்போது மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள தி நியு இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையாகும்.ஏனெனில்,இது கோயங்காவின் நேரடி வாரிசுகளின் கையில் இருக்கிறது.

டைம்ஸ் குருப் பத்திரிகைகள்

வடமாநிலங்களில் அதிக அளவில் வெளிவரும் பத்திரிகை டைம்ஸ் குரூப்பின் பத்திரிகைகளாகும்.இந்த நிறுவனத்திலிருந்து வரும் பத்திரிகைகள் டைம்ஸ் ஆப் இந்தியா,மிட்டே,நவபாரத் டைம்ஸ்,ஸ்டார் டஸ்ட்,பெமினா,விஜய் டைம்ஸ்,விஜய் கர்நாடகா

இந்த நிறுவனத்தின் உரிமையாளர் பென்னட் கோல்மேன் என்ற நிறுவனமாகும்.(Bennett & Coleman). இந்த நிறுவனத்தின் 80% பங்குகள் உலக கிறிஸ்தவ கவுன்சில் (World Christian Council) வசம் உள்ளது.

ஏசியன் ஏஜ்,டெக்கான் கிரானிக்கல்

ஏசியன் ஏஜ்,டெக்கான் கிரானிக்கல் என்னும் இரண்டு ஆங்கிலப்பத்திரிகைகளும் சவுதி அரேபியாவின் நிறுவனத்தைச் சேர்ந்தவை.இந்த இரண்டு பத்திரிகைகளின் ஆசிரியர் எம்.ஜே.அக்பர்.இவர் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக 1989 முதல் 1991 வரை இருந்தவர்.

பல பத்திரிகைகளில் இந்துக்களுக்கு எதிராகவும்,இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவும் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருபவர்.

அமெரிக்காவில் இருக்கும் புருக்கிங் (The Brookings Institution, Washington) நிறுவனத்தில் இஸ்லாமிய உலகின் அமெரிக்கக் கொள்கை பற்றிய வகுப்பு எடுக்கும் பகுதி நேர ஆசிரியர்.

2006 ஆம் ஆண்டு மக்கா அல் முக்கரமா என்னும் இடத்தில் நடந்த இஸ்லாமிய அறிஞர்களுக்கான அமைப்பின் உறுப்பினர்(Member of the Forum of Islamic Scholars and Intellectuals, held in Makka-al-Mukaramma).இவரின் துணைவியார் மல்லிகா ஜோசப் டைம்ஸ் ஆப் இந்தியாவில் பணியாற்றுகிறார். ஆகவே, இவர் எழுதும் எழுத்துக்கள் அனைத்தும் இந்துவிரோத கருத்துக்களாகவே இருக்கின்றன.

    🏵INTELLIGENCE🏵

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...