கண்களை பாதுகாக்கும் காய்கறிகள்...
நம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே கண்களைப் பாதுகாக்கும் காய்கறிகள் அடங்கி உள்ளன. பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சியும், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகளின் முதன்மை ஆதாரங்களும் அடங்கி உள்ளன. இவை கண்களுக்கு மிகவும் நல்லது.
அகத்திக் கீரை, பசலைக் கீரை, முருங்கை, பொன்னாங்கன்னி, முளக்கீரை, அரக்கீரை, வெந்தயக் கீரை ஆகிய கீரைகளில் இரும்பு, போலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி-12 ஆகிய சத்துக்கள் அடங்கியிருப்பதால் இவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. பச்சைக் காய்கறிகளுடன் சாலட் மற்றும் எலுமிச்சை நம் பார்வையை பெரிதும் கூர்மையாக்குகிறது.
வைட்டமின் ஏயில் கண்ணையும், மூளையையும் இணைக்கும் முக்கிய சத்து அடங்கியுள்ளது. கண் விழித்திரையிலுள்ள ரோடோஸ்பின் என்ற புரதத்தில் வைட்டமின் ஏ உள்ளது. பார்வையில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் ஏ சத்து பற்றாக்குறையால் முதலில் தோன்றும் அறிகுறி மாலைக்கண் நோய். காரட்டில் அதிகமான வைட்டமின் ஏ உள்ளது.
வைட்டமின் ஏ வாக நம் உடலில் மாற்றம் அடையும் பீட்டா கரோடின் மற்றும் அதிநிற பழங்களிலும், பச்சைக் காய்கறிகளிலும் வைட்டமின் ஏ உள்ளது. தக்காளி, பசலை, லிவர், முட்டை, நிறமயமான காய்கறிகள், கேரட், பப்பாளி மற்றும் பச்சை இலைகளில் உள்ளது.
உடலில் அதிகமாக சுரக்கும் குளூக்கோஸினால் கண்லென்ஸ் சேதமடைவதிலிருந்து புரத அமிலங்கள் நம்மை காக்கின்றன. இறைச்சி, மீன் மற்றும் பாலில் நமக்குத் தேவையான 8 முக்கிய அமினோ அமிலங்கள் உள்ளன. அரிசி, பட்டாணி, பீன்ஸ், அவரை, மொச்சை, துவரை, உளுந்து பயறு போன்றவற்றில் இறைச்சியில் உள்ள அளவுக்கு அமினோ அமிலங்கள் உள்ளன.
உடல்பலம்,உடல்மெலிவு.
அமுக்கராகிழங்குசாறு, பனங்கற்கண்டு,தேன்,திப்பிலி கலந்து 100மிலி, தினம்2 வேளை பருகிவர உடல் பலம் அதிகரிக்கும்.
ஆவாரைபூ,இலை,பட்டை,காய்,வேர் சமன் பொடித்து10கிராம்,தினம்3வேளை, வெந்நீரில் கொள்ள உடல் பலம் பெறும்.பிரமேகம்,மதுமேகம், மிகுதாகம், மிகுபசி, உடல்மெலிவு, பலக்குறைவு தீரும்.
இஞ்சியை தோல்நீக்கி,சிறுதுண்டுகளாக்கி,தேனில்48நாள் ஊறவைத்து, தினம் காலையில் சிறிது சாப்பிட்டுவர உடல் பலம் பெறும்.நரை,திரை,மூப்பு அணுகாது.
தண்ணீர்விட்டான்கிழங்கு மேல்தோல் நீக்கி,காயவைத்துப் பொடித்து,2கிராம், பசுநெய்யில் கலந்து,தினம் 2வேளை சாப்பிட்டுவர உடல் பலம் பெறும்
கள்ளி மலையானை,மிளகுசீரகம் சேர்த்து கீரை செய்து சாப்பிட்டுவர உடல் தேறும்
கல்யாணபூசனி காய்துருவல் 5கிலோ,அவல்1படி, மிளகுத்தூள்30கிராம், ப.மிளகாய்1கை, பெருங்காயம்15கிராம் கலந்து வேகவைத்து கொட்டைபாக்களவு உருட்டி காய வைத்து வற்றலாக்கி, ந.எண்ணெயில் பொரித்து வேளைக்கு 4உருண்டை சாப்பிட்டுவர இளைத்த உடல் பருக்கும்
கசகசா,வால்மிளகு,பாதாம்பருப்பு,கற்கண்டு வகைக்கு சமன் பொடித்து பசும்பால்.தேன், நெய் சேர்த்து லேகியம் செய்து அரைதேக்கரண்டி இரவில் பாலுடன் கொள்ள உடல் பலம் பெறும்
நாயுருவி வேர்தூள் 0.5-1கிராம் வெந்நீரில் சாப்பிட்டுவர உடல்பலம் பெறும்
கோரைக்கிழங்குசூரணம் 1-2கிராம் தினம் 2வேளை பாலில் உண்டுவர உடல் பருக்கும்
தேற்றான்கொட்டை சூரணம்1கிராம் தினம்2வேளை பாலில் கலந்து பருக நீர்சுருக்கு, நீர்கட்டு, வெள்ளை,மூலம் தீரும்.உடல் பலம் பெறும்.
நஞ்சறுப்பான் இலைசூரணம் 0.5 – 1 கிராம் உண்டுவர உடல் வலுவாகும்
சிறுகீரையை உணவுடன் உண்டுவர உடல் பலம் பெறும்
சந்தனத்தைசீவி குடிநீர் செய்து பருகிவர பருத்த உடல் இளைக்கும்.நீர்கட்டு,நீர்எரிச்சல் தீரும்.
அன்னாசி பழத்துடன் தேன் கலந்து உண்டுவர உடல்வலிவு, அழகு தரும்
கல்யாணபூசணிக்காயை வேகவைத்து, அரைத்து பால்,தேன்,நெய் கலந்து லேகியம் செய்து 5-10கிராம் தினம் 2வேளை உண்டுவர உடல் பருக்கும்.உடற்சூடு நீங்கும்