Thursday, August 16, 2018

புற்றுநோய்ல_இத்தனை #வகையா...?

#புற்றுநோய்ல_இத்தனை #வகையா...?

தற்போது உலகில் உள்ள மக்கள் அதிகம் பாதிக்கப்படும் ஒரு நோய் தான் புற்றுநோய். இத்தகைய புற்றுநோய்க்கு அக்காலத்தில் எந்த மருத்துவ வசதியும் இல்லாததால், பலர் இறந்தனர். ஆனால் தற்போது பல நவீன மருத்துவ வசதிகள் இருப்பினும் மக்கள் புற்றுநோய்க்கு பயப்படுகின்றனர். ஏனெனில் இத்தகைய புற்றுநோயில் ஒன்று இரண்டு இருந்தால் பரவாயில்லை. ஆனால் உடலில் எத்தனை உறுப்புக்கள் இருக்கிறதோ அந்த அளவிற்கு புற்றுநோய்களும் உள்ளன.

மேலும் புற்றுநோய்களில் ஆண்களுக்கு, பெண்களுக்கு வரும் புற்றுநோய்கள் என்ற சில உள்ளன. உதாரணமாக, கருப்பை, மார்பகம் போன்றவை பெண்களுக்கு வரும் புற்றுநோய்கள். ஆனால் ஒருவருக்கு புற்றுநோய் வந்தால், அந்த புற்றுநோய்க்கான அறிகுறி ஒரே மாதிரி மற்றவருக்கு இருக்காது. ஒவ்வொருவருக்கும் புற்றுநோயின் அறிகுறிகள் மாறுபடும்.

இங்கு பல்வேறு வகையான புற்றுநோய்களை
பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

#மார்பகபுற்றுநோய்

மாதவிடாய் சுழற்சி நின்ற பெண்களுக்குத் தான் இந்த மார்பக புற்றுநோய் மிகப்பெரிய அளவில் தாக்கும். மேலும் இது பரம்பரையில் யாருக்கேனும் இருந்தாலும் வரகூடியது[/b]

#சருமபுற்றுநோய்

சரும புற்றுநோயானது சருமத்தில் அதிகப்படியான அளவில் புறஊதாக்கதிர்களின் தாக்கம் இருந்தால் ஏற்படும். எனவே தான் வெயிலில் செல்லும் போது சருமத்திற்கு போதிய பாதுகாப்புடன் செல்லுமாறு கூறுகின்றனர்.

#கருப்பைபுற்றுநோய்

இந்த புற்றுநோயும் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான ஒன்று. இந்த நோயில் கருப்பைக்குள் கட்டிகள் வளர ஆரம்பிக்கும். இதனை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் ஒரு நல்ல செய்தி என்னவென்றால், இந்த கருப்பை புற்றுநோயானது பெண்கள் கருத்தரித்தால் மற்றும் தாய்ப்பால் கொடுப்பதால், இது அதிகம் தாக்காது.

#உணவுக்குழாய் #_புற்றுநோய்

உணவுக்குழாய் புற்றுநோயானது புகைப்பிடிப்போருக்கு அதிகம் ஏற்படும். அதுமட்டுமின்றி, காரமான மற்றும் சூடான உணவுகளை அதிகம் உட்கொள்வதாலும் இது ஏற்படும். ஆனால் இந்த புற்றுநோய் வந்தால் உயிர்பிழைப்பது சற்று கஷ்டமாக இருக்கும்.[/b]

#புரோஸ்டேட்புற்றுநோய்

இது ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான புற்றுநோய். இது அதிகப்படியான அளவில் அசைவ உணவுகளின் கொழுப்பு உடலில் சேர்வதால் மற்றும் புகைப்பிடிப்பதால் புற்றுநோயை தூண்டும்.

#இரத்தபுற்றுநோய்

இரத்த வெள்ளையணுக்களின் அளவு அதிகமானால் ஏற்படுவது தான் இரத்த புற்றநோய். இது பெரும்பாலும் 10 வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு ஏற்படும்.

#கர்ப்பப்பை
#வாய்புற்றுநோய்

கர்ப்பப்பை வாய் புற்றுநோயானது வைரஸால் ஏற்படுவது. இது பெண்களின் கருப்பையை தாக்குவதால், இதனை கண்டுபிடிப்பது கஷ்டம். ஏனெனில் இது நினைத்து பார்க்க முடியாத அளவில் அறிகுறிகளைக் கொண்டிருக்கும்.

#நுரையீரல்புற்றுநோய்

நுரையீரல் புற்றுநோய் தான் இருப்பதிலேயே அதிக நபர்களை தாக்கி, உயிரைப் பறித்த புற்றுநோய். இது புகைப்பிடிப்பதால் அதிகம் வருவதுடன், அதிகப்படியான காற்று மாசுபாட்டின் காரணமாகவும் தாக்கக்கூடியது.

#கருப்பைக்
#குரியபுற்றுநோய்

இது பெண்களைத் தாக்கும் புற்றுநோய். இது கருப்பை சுவருக்கு வெளியே வீரியம் மிக்க கட்டிகள் வளர்வதால் ஏற்படும். இதுவும் மாதவிடாய் சுழற்சி முடிந்த பெண்களை அதிகம் தாக்கும் வாய்ப்புள்ளது.

#சிறுநீர்ப்பைபுற்றுநோய்

சிறுநீர்ப்பையில் கெமிக்கல்கள் அதிகம் சேர்ந்தாலோ அல்லது அதிகம் புகைப்பிடித்தாலோ தாக்கக்கூடியது. மேலும் இதனை சரிசெய்ய அதிகம் செலவாகும். ஆகவே வருமுன் காப்பதே மேல்.

#மலக்குடலுக்
#குறியபுற்றுநோய்

மலசிக்கல் மற்றும் மூலநோயல் வரும்
இது 50 வயதிற்கு மேற்பெட்ட ஆண்களை அதிகம் தாக்கக்கூடியது.
இப்போது சிறு வயது ஆண் மற்றும் பெண்களுக்கு அதிகமாக இருக்கு
இந்த வகையான புற்றுநோய் குடல் மற்றும் மலக்குடலுக்கு சேதம் விளைவிக்கும்.

#நிணநீர்
#சுரப்பிபுற்றுநோய்

தற்போது நிணநீர் புற்றுநோய் பொதுவாக ஏற்படுகிறது. இந்த புற்றுநோய்க்கான காரணம்
#ஆட்டோஇமூன் தான் இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும்.
இது எச்.ஐ.வி நோயாளிகளை பெரிதும் பாதிக்கிறது.

#கணையபுற்றுநோய்

கணைய புற்றுநோய் அளவுக்கு அதிகமாக அசைவ உணவுகளையும், காய்கறிகளை குறைவாகவும் உட்கொள்வதால் வரக்கூடியது. அதிலும் #நீரிழிவுநோய் இருந்தாலோ அல்லது கணைய #அழற்சி இருந்தாலோ, உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவாக இருக்கும்.

#வயிற்றுபுற்றுநோய்

ஆல்கஹால், புகைப்பிடிப்பது மற்றும் அளவுக்கு அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதாலும், வயிற்று புற்றுநோய் வரும். இந்த புற்றுநோய் வந்தால், கடுமையான
#வயிற்றுவலியை உண்டாக்கி, பல மக்களை அழிக்கும்.

#வாய்புற்றுநோய்

அளவுக்கு அதிகமாக
சூயிங் கம் மெல்லுவதாலோ அல்லது புகைப்பிடிப்பதாலோ,
வாய் புற்றுநோய் தாக்கக்கூடும்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...