Saturday, August 11, 2018

சுகப்பிரசவம்

உண்மையில் பல பெண்கள் சுகப்பிரசவம் என்றால் பலமணி நேரம் வலியுடன் போராட வேண்டும் என்றும் சிசேரியன் என்றால் மயக்க மருந்து கொடுத்து வலியின்றி குழந்தை பெற்றுவிடலாம் என்கிற ஆவலிலும், தவறான கற்பனையிலும் சிசேரியனை வலியுறுத்துகிறார்கள். சில பெண்கள் இதை வெளிப்படையாக சொல்வார்கள். சில பெண்கள் நம்மை சொல்ல வைத்துவிடுவார்கள்.

ஆனால் சிசேரியன் செய்வதை தவிர்க்க ஏன் அறிவுறுத்துகிறோம்..?
முதலாவதாக மயக்க நிலையில் சிசேரியன் செய்யும்போது உடல் குழந்தை பிறந்துவிட்டதை அறியாது. குழந்தையும் தான் பிறந்துவிட்டதை அறியாது. அதனால் தாய்ப்பால் சுரக்காது. குழந்தை வெளியேறிவிட்டால் கர்ப்பப்பை அடுத்து என்னென்ன செய்ய வேண்டுமோ அவற்றை செய்யாது.

விளைவு: வயிறு பருத்து பல்வேறு விதமான ஹார்மோன் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
குழந்தை வெளியுலகுக்கு ஏற்ப செயல்பட சில வாரங்கள் ஆகும். முதல் தாய்ப்பால் கிடைக்காததால் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் குறிப்பிட்ட வயது வரை பல்வேறு நோய்களை எதிர்கொள்ளும். குறைந்த பட்சம் 12 வயது வரை அடுத்தடுத்து ஏதோவொரு நோய் தாக்கிக்கொண்டே இருக்கும்.

ஆனால் இந்த பிரச்சினை எதனால் என நமக்கு தெரியாது. மிக எளிதாக நாம் பிறரிடம் சொல்லிவிடுவோம்.
இவனுக்கு தயிர் சாப்பிட்டால் உடனே சளி பிடிச்சிக்கும். தலைக்கு குளிச்சா உடனே சளி பிடிச்சிக்கும். பஸ்ல போனா வாந்தி எடுத்திருவான். தடுக்கி விழுந்தா கை முறிஞ்சிரும். கொஞ்ச தூரம் ஓடினா கால் வலி வந்திரும்.

எல்லா சப்ஜெக்ட்லயும் புலி. ஆனா கணக்கு மட்டும் கொஞ்சம் வீக்.
எந்த பொருளையும் ஒழுங்கா வச்சிக்க தெரியாது. அடிக்கடி கீழே போட்டு உடைச்சிருவான்.
வகுப்பில் பாடம் நடத்தும்போது தூங்கிடுவான். நினைவாற்றல் குறைவு.
பால் ஒத்துக்காது. முட்டை ஒத்துக்காது. பாசிப்பருப்பு ஒத்துக்காது.
காயம் எளிதில் ஆறாது. குளிர்காலத்தில் மூச்சிரைக்கும்.

இப்படி.. சின்ன சின்னதாய் ஏராளமாக.. இவை அனைத்தும் முதல் தாய்ப்பால் குடிக்காததால் வந்தவை. பிள்ளை நல்ல உடல்நலத்துடன் இருக்க குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இதற்கு சுகப்பிரசவமாக குழந்தை பெற்றால்தான் சாத்தியம்.

அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் கணவன்மார்கள் சிந்தித்தால் போறாது. பெண்ணை பெற்ற பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும். ஏனெனில் சுகப்பிரசவத்திற்கு பெண் பூப்பெய்திய நாள் முதலே தயாராக வேண்டும்.

பெற்றோரின் கவனக்குறைவு, அலட்சியம், தவறான உணவூட்டல் போன்றவற்றின் கடும் பின்விளைவை கணவனே அனுபவிக்கிறான். இந்த பிரச்சினைகளிலிருந்து பெற்றோர் தப்பி விடுவதால் கடைசி வரை அவர்கள் தாம் செய்த தவறுகளை உணருவதே இல்லை. ஆனால் கணவனின் மனவலிமை வெகுவாக பாதித்து அவன் சிசேரியனுக்கு எளிதில் உடன்படுகிறான்.

பூப்பெய்திய நாள் முதலே பெண்ணின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்தினால் வலியில்லா சுகமான பிரசவம் நடக்க 100% வாய்ப்புள்ளது.

பிரசவம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய சில முக்கிய செய்திகள்:

நல்ல ஆரோக்கியமான பெண்ணால் ஒரேயொரு நபரை துணைக்கு வைத்துக்கொண்டு தனியாக குழந்தை பெற முடியும். ஆனால் இதை நான் யாரையும் செய்யச் சொல்லவில்லை.

உடல் ரீதியாக முதல் பிரசவம் வேறு. மற்றவை மிக எளிதானவை. பெண்ணுக்கு போதிய உடல் வலிமையோடு மனவலிமையும் அவசியம். ஆனால் நாமெல்லாம் கூடி அவளின் மனவலிமையைத்தான் முதலில் தகர்க்கிறோம். சுற்றியுள்ள உறவினர்களும் நண்பர்களும் தம்பதிகளை மிரட்டாமல் இருந்தாலே, அது நீங்கள் அவர்களுக்கு செய்யும் பேருதவி ஆகும்.

கண்ட கண்ட கார்பொரேட் சத்து மாவுகளை, பானங்களை வாங்கிக்கொடுத்து தாயை உண்ணச்சொல்லாதீர்கள். அவை உடலில் வெறும் கொழுப்பை மட்டுமே சேர்த்து பிரசவத்தை மேலும் சிரமமாக்கிவிடும்.

ஆரோக்கியமான பெண்ணிற்கு பிரசவம் பார்க்க அனுபவமும் திறமையும் உள்ள நபர் போதும். மருத்துவர் தேவையில்லை.

போதிய உடல்நலன், வலிமை இல்லாத பெண்ணுக்கு கண்டிப்பாக மருத்துவ உதவி தேவை.

மருத்துவ உதவி தேவைப்படும் சூழலில் உகந்த மருத்துவத்தை நாடலாம். தடுக்கவில்லை.

பெரிய மருத்துவமனைகளில் கூட மருத்துவர் முன்னிலையில் அனுபவம் உள்ள செவிலியர் தான் பிரசவம் பார்க்கிறார்கள்.

சிசேரியன் எனப்படும் அறுவை முறையை மட்டுமே மருத்துவர் செய்வார்.

சிசேரியன் செய்யும் போது ஏற்படும் பிரச்சினைகளை மருந்துகள் மூலம் தற்காலிகமாக சரிசெய்து விட்டாலும் தாய் சேய் இருவரும் வாழ்நாள் முழுதும் இதற்கான பின்விளைவுகளை அனுபவிப்பார்கள்.

கடந்த முப்பது வருடங்களில் பிரசவம் பார்க்கும் திறனுள்ள பெண்கள் இல்லாமல் போனதுதான் இதன் பின்னடைவேயன்றி அஞ்சக்கூடிய வேறு பிரச்சினை எதுவுமில்லை.

பிறந்த குழந்தைக்கு ஆறு மாதங்கள் வரை வெறும் தாய்ப்பால் மட்டுமே போதும். தண்ணீர் கூட தேவையில்லை. ஆனால் லாக்டோஜன் அது இதுவென நீங்கள் கொடுக்க முயல்வது குழந்தையின் உண்மையான வளர்ச்சியை பாதிக்கும். தாய்ப்பால் விரைவாக நின்றுவிடும்.

- Senthil Vel.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...