Sunday, November 25, 2018

சுவாசக்கலை மூலம் வியாதிகள்

ஒவ்வொரு நாளும் சூரிய உதயம் முதல் ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை நம் நாசித்துவாரங்களில் சுவாசம் மாறுகிறது. 12 மணிநேரம் வலது நாசி வழியாகவும், 12 மணி நேரம் இடது நாசி வழியாகவும் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மாறி மாறி சுவாசம் நடக்கிறது. இதை ஆராய்ந்து சித்தர் பெருமக்கள் எந்தெந்த தினங்களில் சூரியநாடியில் ஓடும், எந்தெந்த நாட்களில் சந்திரநாடியில் ஓடும் என்று கணித்து வைத்துள்ளார்கள். அது எவ்வாறு எனில், சுக்லபட்சம்- பிரதமை, துதிகை, திரிதிகை,சப்தமி,அஷ்டமி,நவமி,திரியோதசி,சதுர்தசி,பௌர்ணமி இந்த நாட்களில் சூரிய உதயம் முதல் இடது நாசியில் சரம் ஓடத்துவங்கும். சுக்லபட்சம்- சதுர்த்தி,பஞ்சமி,சஷ்டி,தசமி,ஏகாதசி,துவாதசி இந்த நாட்களில் வலது நாசியில் சரம் ஓடத் துவங்கும். கிருஷ்ணபட்சம்- பிரதமை,துதிகை,திரிதிகை,சப்தமி,அஷ்டமி,நவமி,திரியோதசி,சதுர்தசி,அமாவாசை ஆகிய நாட்களில் சூரிய உதயம் முதல் வலது நாசியில் ஓடத்துவங்கும். கிருஷணபட்சம்- சதுர்த்தி,பஞ்சமி,சஷ்டி,தசமி,ஏகாதசி,துவாதசி நாட்களில் இடது நாசி வழியாக சரம் ஓட ஆரம்பிக்கும். மூன்று நாட்களுக்கு ஒருமுறை மாறுவதை கவனியுங்கள். ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை மாறிக்கொண்டே இருக்கும். எதோ ஒரு காரணத்திற்காக சுவாசத்தை மாற்ற வேண்டுமானால் அதற்கும் சித்தர்கள் உபாயம் கூறியுள்ளார்கள். 1 - எந்தப் பக்கம் சரம் ஓடுகிறதோ அந்தப் பக்கம் தலையை சாய்த்து ஒர்க்களித்து படுத்துக் கொண்டால் சுவாசம் சிறிது நேரத்தில் அடுத்த பக்கம் ஓட ஆரம்பிக்கும். 2 - எந்த பக்கம் சரம் ஓடுகிறதோ அந்தப் பக்கம் சிறிது பஞ்சைக் கொண்டு நாசியை மூடி விட்டு சுவாசிக்க ஆரம்பித்தால் சிறிது நேரத்தில் மறு பக்கத்திற்கு சரம் மாறிவிடும். 3 - எந்தப் பக்கம் சுவாசம் ஓடுகிறதோ அந்தப் பக்கம் முழங்காலை குத்துக்காலிட்டு கையை அடிப்பக்கமாக கக்கத்தை அண்டை கொடுத்து அழுத்தி உட்கார சிறிது நேரத்தில் சுவாசம் அடுத்த பக்கம் ஓட ஆரம்பிக்கும். ரிஷிகள், சித்தர்கள், முனிவர்கள் போன்ற தவசிகள் தண்டம் வைத்திருப்பது இதற்க்காகவே. இருநாசிகள் வழியாகவும் சரம் ஓடும் போது எந்த காரியத்தை துவங்கினாலும் அது ஜெயம் தராது. இடது நாசி வழியாக சரம் ஓடும்போது, பிரயாணம் செய்ய, வீடு கட்ட,குளம் வெட்ட, கிணறு தோண்ட, புதிய ஆடைகள் வாங்கி அணிய, கோவில் பணிகள் ஆரம்பிக்க, பெரிய மனிதர்களை சந்திக்க, ஆபரணங்கள் வாங்கி அணிய, நல்ல காரியங்களுக்காக வெளியே புறப்பட, தேர்வு எழுத, திரவியங்கள் சேகரிக்க இதுபோன்ற காரியங்கள் செய்தால் வெற்றி தரும். வலது நாசி வழியாக சரம் ஓடும் போது, எதையும் கற்றுக்கொள்ளத் துவங்க, கற்பிக்கத் துவங்க, எதிரிகளை நிர்மூல மாக்கும், காரியங்கள் செய்ய, யந்திரங்கள் பூட்ட, கப்பல் பிரயாணம் ஆரம்பிக்க,மலைகளில் ஏறத் துவங்க,மருந்து உட்கொள்ள, பரிசோதனைகள் செய்ய, எதையும் வாங்க விற்க போன்ற காரியங்களைச் செய்யலாம். செய்தால் பலன் மிகும். இயற்கையான முறைப்படி சுவாசம் நடை பெறவில்லை என்றால் வியாதி வருவதற்கான அறிகுறியாகும். வியாதி வருவதற்கு முன் நாம் சுவாசத்தை சீர்செய்து கொண்டால் வியாதிகளில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும். வியாதி வந்துவிட்டால் சுவாசம் முறைப்படி நடக்காது. அப்போது நாம் அதை சரி செய்து ஒழுங்கு முறையில் இயக்கி வெற்றி அடைந்தோமானால், படிப்படியாக வியாதி குணமாகும். முற்றிலும் குணமாகும் வரை சுவாசத்தை சரியாக இயக்கி வெற்றிகாண வேண்டும். அந்த வியாதி நம்மை விட்டு நீங்கிவிடுவதோடு மட்டுமல்ல, மீண்டும் அந்த வியாதி நம்மிடம் ஒருபோதும் அனுகாது. சுவாசக்கலை மூலம் விலகிய வியாதி நம்மை அண்டவே அண்டாது. சுவாசக்கலையை முறைப்படி கற்றுத் தெளிந்து ஞானமடைந்தவர்களை தேவர்களும் வணங்குவார்கள் என்கிறார் திருமூலர்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...