Monday, November 19, 2018

பாட்டி வைத்தியத்தின் மூலம் நிவாரணம் தரும் சில வைத்திய குறிப்புகள்....!

பாட்டி வைத்தியத்தின் மூலம் நிவாரணம் தரும் சில வைத்திய குறிப்புகள்....!


வெந்தய பவுடரை தலையில் நன்றாக தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும், உடல் உஷ்ணமும் குறையும்.
மருதாணி இலையை அரைத்து அதனுடன் கொஞ்சம் தயிர், எலுமிச்சை சாறு சேர்த்து தலையில் தேய்த்து வர பொடுகு தொல்லை நீங்கும்.

சின்ன வெங்காயத்தை கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்த்து 15 நிமிடத்திற்கு பிறகு குளிக்கவும். தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம்.

பொடுகை தடுக்க வாரம் ஒரு முறையாவது நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கலாம்.

வசம்பு பவுடரை தேங்காய் எண்ணெயில் கலந்து தேய்ப்பது நல்லது.

தேங்காய் எண்ணெயுடன் சிறிது கற்பூரத்தை போட்டு வைத்து, அந்த எண்ணெயை தொடர்ந்து தேய்த்து வந்தால் பொடுகு மறைந்துவிடும்.

கடலை மாவு வெந்தயம் அடிக்கடி தேய்த்து வந்தால் பருக்கள் நீங்கும். முகம் சொரசொரப்பு எரிச்சல் நீங்கும்.

பசும்பாலில் சிறிதளவு ஓமம் போட்டுக் காய்ச்சி அடிக்கடி காலையில் குடிக்க தொண்டை வலி, தொண்டை அடைத்தல் நீங்கும்.

இஞ்சியைப் பிழிந்து கொஞ்சம் உப்புப் போட்டுக் குடித்தால், வயிற்று வலி, வயிற்றுப் போக்கு நிற்கும்.

🚶🏽‍♂HAROON SB

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...