மூலம்,பவுத்திரம்
(HEMORROIDS)
ஆசனவழிக் கனலேறித் தூவாரப்பட்டு 9விதமான மூலத்தையும்,பலவிதமான வியாதியையும் பெறுதல். காயத்தில் மூலங் கண்டவிதங் கேளு
பாயொத்ததீபனம் பரிந்தே அடக்கிடினும்
மாயை அடக்க மலத்தை அடக்கிடினும்
ஓயற்ற குண்டலியினுள் புகும் வாயுவே உள்மூலம்,பிறமூலம்,இரத்தமூலம்,சீழ்மூலம்,மூலபாண்டு,முளைமூலம்,வாத,பித்த, சிலேத்ம மூலம் என 9வகை.
மூல நோயின் அறிகுறிகள் :
மலச்சிக்கல், அடித்தொடை கணுக்கால் வலி குடைச்சல், உடல் சோர்வு, களைப்பு, ஆசன வாய் எரிச்சல், ஆசனக்கடுப்பு, மலத்தோடு இரத்தம் கழிதல், மார்பு துடிப்பு, முக வாட்டம்,போன்றவை ஏற்படும். மேலும் இரத்தமூலம் ஏற்பட்டு தினமும் இரத்தம் வெளி ஏறிக்கொண்டிருந்தால் உடலில் பலம் குறையும்,மயக்கம் உண்டாகும்
உள்மூலக்குணம்;அபானத்துள் தசைபோல் வளர்ந்திருக்கும்;மலத்தை இறுக்கும்; மந்திக்கும்; இரத்தம் மலத்தில் விழும்;இடையில் வயிறு வலிக்கும்;பலங்கெடும்;தேகம் வரளும்.
பிறமூலக்குணம்;அஸ்தியில் அனலேறி அபானவழியில்கத்திபோல் சதை வளர்ந்து உள்ளும் புறமுமாயிருக்கும்;அபானங் கடுக்கும்;தினவெடுக்கும்;உதிரம் விழும்.
சீழ் மூலத்தின்குணம்:தேகத்தில்அக்னி அதிகரித்தால் அடிவயிறு நொந்து புண்ணாகி சீழ் தோன்றி மலத்துடன் சிறுத்திறங்கும்,அபானங்கடுக்கும்.மயக்கங்காணும். வாயு அதிகரிக்கும். மலங்கழியும் போது அபானம் எரிந்து சீதமும் இரத்தமும் விழும் நாபியைச் சுற்றிவலிக்கும்
இரத்தமூலக்குணம்:தொப்புளைச்சுற்றி வயிறு வலித்து நொந்து இரத்தம் விழும்.மூலம் வெளியில் தள்ளும்.மலம் சிக்கும்.அடிவயிறு இரையும.கைப்பையும் புளிப்பையும மிக விரும்பும்.அன்னஞ்செல்லாது.உடல் வெளுத்து வற்றும்.அபானங் கடுத்து எரியும், வெப்புதோன்றும்.
இரத்தமூலபாண்டுகுணம்;பித்தம் உடம்பெங்கும் பாய்தலால் தேகம் வெளுத்து ஊதும். மந்தம்,இரத்தம் உருண்டு திரண்டு வயிற்றில் தங்கி பிதிர்போல் மிக விழும்; தொப்புளைச் சுற்றி வலி காணும்;மேல்மூச்சு இளைப்பு காணும்;அடிவயிறு இரையும்; மலஞ்சிக்கும்;அன்னஞ் செல்லாது; கைப்பையும் புளிப்பையும மிக விரும்பும்.
மூலவாயுவின்குணம்;மந்தியும் மந்திக்கும்;உடல் வெளுக்கும்;வயிறு சதாகாலமும் இரைந்து கொண்டிருக்கும்.
மூலத்தில்வாயுகண்டு,மேகநீர் உண்டாகி புரையோடிகண்விட்டு சீழ்ப்பாச்சல் கண்டு முளைவிழுதல்
-பவுத்திரம்-
குணம்:போகத்தினால் கனல் மிகுந்து மேகம் உண்டாகி பீஜத்திற்கும் அபானத்திற்கும் இடையில் கொடியின் அடிநரம்பிலாவது,அதன்வலம் இடப்புறத்திலாவது அண்டத்திலாவது அபானவாயு விலாவது நமைச்சல் எடுத்து வீங்கி நொந்து கொப்புளித்து சீழும்சலமும் வடியும்.புரையோடி நரம்பழுகி அற்றுக் கண்விழுந்து அதன் வழியே நீரும் மலமும் இறங்கும்.அல்லது அபான வாயில் கழற்காய் போலும், குமிழ் முளை போலும்,கல்போல் புடைத்துப் பழுத்துச் சீழ்வடியும்.புரையோடும்,வேதனை காணும், மலசலம் சிறுக்கும்,அபானம் கடுத்தெரியும்,கைகால் காந்தும், கடுத்துளையும், நித்திரைச் சற்றும் வராது,உடல் மெலியும்,அன்னஞ் செல்லாது,ஆயாசங் களைப்புண்டாகும். குடல்வாதம்/ஹெர்னியா( herniyaa) ; குடல்வாயு அதிகரித்தால் குடல்பை பளுவாகி, குடலுக்குக் கீழுள்ள ஜவ்வில் இலேசான துவாரம் காணும். அதிநடை,மலபந்தம் ஏற்படில் குடல் கீழே இறங்கும். பீஜத்திற்குமேல் வலியும்,வீக்கமும் காணும்.