Saturday, August 25, 2018

நரம்பு தளர்ச்சி

நரம்பு தளர்ச்சி

பாதாம் பருப்பு, பிஸ்தாப் பருப்பு, முந்திரிப் பருப்பு, சாலாமிசிரி ஆகியவற்றை தலா பத்து கிராம் எடுத்து அதனுடன் 200 மில்லி கரும்புச்சாற்றை கலந்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குறையும்.

பூனைக்காலி விதை, தண்ணீர் விட்டான் கிழங்கு, நிலப்பனை கிழங்கு, நத்தை சூரி விதை, சாலாமிசிரி, சிறுபீளை, அமுக்கரா ஆகியவற்றை எடுத்து சுத்தம் செய்து ஒன்றாகக் சேர்த்து இடித்து பொடி செய்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியை ஒரு ஸ்பூன் வீதம் தொடர்ந்துச் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குறையும்.

ஆப்பிள் பழம், அத்திப் பழம் இரண்டையும் சுத்தம் செய்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த சாறுகளை ஒன்றாக கலந்து தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் பதற்றம் குறையும்.

வசம்பு, மயிலிறகுச் சாம்பல், வெள்ளைப் பூண்டு, புங்காங் கொட்டை ஆகியவற்றை துளசிச் சாற்றை விட்டு அரைத்து வேப்ப எண்ணெயில் கரைத்து காய்ச்சி வடிகட்டி சீசாவில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும். இந்த தைலத்தை உடலில் தேய்த்து வந்தால் வலிப்பு நோய் குறையும்.

குங்குமப்பூ, சங்கன் வேர் மேல்பட்டை, எருக்கன்வேர் மேல்பட்டை, கொடிவேலி மேல்பட்டை ஆகியவற்றை துளசிச் சாறு விட்டு மையாக அரைத்து சுடுதண்ணீரில் கலந்து வேளைக்கு ஒன்று முதல் 1½அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வந்தால் வலிப்பு குறையும்.

பிரண்டை உப்பு ஒரு குண்டுமணி அளவு எடுத்து ஜாதிக்காயை இடித்து பொடி செய்த சூரணத்துடன் சேர்த்து நெய்யில் கலந்து சாப்பி்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி குறையும்.

துளசியை இடித்து சாறு எடுத்து அதனுடன் உப்பு சேர்த்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் வலிப்பு குறையும்.

தென்னை மரத்தில் வெடிக்காத பாளையிலுள்ள பிஞ்சு தென்னங்காய்களை (தேங்காய் குரும்பல்) பசும்பால் விட்டு அரைத்து எலுமிச்சை காய் அளவு எடுத்து காய்ச்சிய பாலில் கலந்து காலை, மாலை என 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி குறையும்.

10 பாதாம் பருப்பை இரவு நீரில் ஊற வைத்து காலையில் தேவையான அளவு நீருடன் பாதாம் பருப்பை அரைத்து அதனுடம் ஜாதிக்காய் மற்றும் சிறிது இஞ்சி சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைத்து இந்த கலவையை 1 தேக்கரண்டி அளவு இரவு சாப்பிட்டு வந்தால் பதற்றம், நரம்பு தளர்ச்சி ஆகியவை குறையும்.

முருங்கை கீரையை காயவைத்து இடித்து பொடியாக்கி காலை, மாலை என பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி குறையும்.

நூல்கோல் கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குறையும்.

அத்திபழத்தை எடுத்து நன்கு சுத்தம் செய்து தினந்தோறும் 5 பழங்கள் சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குறையும்.

வாத நோய்

பச்சௌலி இலைகளை தண்ணீரில் போட்டு பின்பு அந்த தண்ணீரை குளித்து வந்தால் வாதநோய்கள் குறையும்.

150 கிராம் தேங்காய் எண்ணெயை ஒரு பாத்திரத்தில் விட்டு, அந்த எண்ணெயில் செண்பகப் பூவைப் போட்டு தினசரி வெயிலில் வைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். அந்த எண்ணெயை வாதவலி, வீக்கம் உள்ள இடத்தில் சூடுபறக்கத் தேய்த்து உடல் தாங்கும் அளவிற்கு வெந்நீர் விட்டு உருவி விடவேண்டும். இவ்வாறு காலை, மாலை என இருவேளை செய்து வந்தால் வாதவலி, வீக்கம் ஆகியவைகள் குறையும்.

தூதுவேளை, நிலவாகை வகைக்கு 30 கிராம் எடுத்து உலர்த்தி, அதை 100 மில்லி கரிசலாங்கண்ணி சாற்றில் ஊறவைத்து வெயிலில் காயவைத்து இடித்து சூரணம் செய்து ஒரு தேக்கரண்டி அளவு தேனில் குழைத்து காலை, மாலை என 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வாதக்கடுப்பு குறையும்.

அவுரி இலை, அவுரி வேர்பட்டை, பெரரித்த பெருங்காயம், மிளகு ஆகியவற்றை சமனளவு எடுத்து அரைத்து சுண்டைக்காய் அளவு மாத்திரை செய்து நிழலில் உலர்த்தி பத்திப்படுத்தவேண்டும். இந்த மாத்திரையை நாள் ஒன்றுக்கு மூன்று வேளை வீதம் சாப்பிட்டு வந்தால் கீழ்வாதம் குறையும்.

வெங்காயச் சாற்றை கடுகு எண்ணெயில் கலந்து வலியுள்ள இடத்தில் தடவி வந்தால் வாத மூட்டுவலி குறையும்.

கறிவேப்பிலை ஈர்க்கு, வேம்பு ஈர்க்கு, முருங்கை ஈர்க்கு, நெல்லி ஈர்க்கு வகைக்கு ஒரு பிடி, சுக்கு, மிளகு, சீரகம் ஆகியவைகள் 20 கிராம் எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கால் லிட்டராக சுண்டக்காய்ச்சி ஒரு மடக்கு வீதம் தினமும் நான்கு வேளை சாப்பிட்டு வந்தால் வாதத்தினால் ஏற்படும் காய்ச்சல் குறையும்.

வேப்பெண்ணெயை தேய்த்து தலைமுழுகி வந்தால் வாதநோய்கள் குறையும்.

வெண்கடுகை எடுத்து அரைத்து உடலில் பூசி வந்தால் வாதசம்பந்தமான நோய்கள் குறையும்.

குப்பைமேனி இலையை சுத்தம் செய்து நன்கு இடித்து சாறு பிழிந்து, அந்த சாற்றை தினசரி ஒரு அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால் வாதநோய்கள் குறையும்.

கீழ்வாதம் இருப்பவர்கள் 2 சிறிய கத்தரிக்காயை எடுத்து மிதமாக சுட்டு பிசைந்து பிறகு ஆமணக்கு எண்ணெய் விட்டு பிசைந்த கத்தரிக்காயை போட்டு அதனுடன் சிறிது சீரகம், கொத்தமல்லி தூள், மஞ்சள் தூள், பூண்டு மற்றும் உப்பு போட்டு நன்றாக வதக்கி கூட்டு போல செய்து சாப்பிட்டு வந்தால் மிகவும் சிறந்தது. தொடர்ந்து 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் கீழ்வாதம் குறையும்.

சிறிது மிளகாய் பூண்டு விதையை சர்க்கரையில் கலந்து காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் சூலை நோய் குறையும்.

வாழ்வோம் ஆரோக்கியமாக
அன்புடன்
கா.பா.உதயகுமார்
திருப்பூர்
9843211108

ஆரோக்கியமான வாழ்விற்கு இணைய

WhatsApp
https://chat.whatsapp.
/ItlAosnI61h3XiymY8eZZW
வாழ்வோம் ஆரோக்கியமாக

Telegram
https://t.me/joinchat/AAAAAAx-p4YBm9Mh1AFUdw

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...