Sunday, July 29, 2018

மருத்துவமணை நாடாமல் வீட்டிலேயே பிரசவம் பார்த்த பெண் , நல்ல ஆரோக்கியமான குழந்தையை ஈன்ற

உணர்வென்றும் அறிவியலென்றும்!

மரு.கோ. பிரேமா BHMS,
27/7/2018.

கடந்த சனிக்கிழமை திருப்பூரில் மருத்துவமணை நாடாமல் வீட்டிலேயே பிரசவம் பார்த்த பெண் , நல்ல ஆரோக்கியமான குழந்தையை ஈன்ற ஒரு மணிநேரம் பின் அதிக உதிரப்போக்கு ஏற்பட்டு மயக்கமடைய அவசரநிலைக்கு மருத்துவமணை செல்லும் வழியில் இறந்துவிட்டார். இது நடந்து முடிந்து ஐந்து நாட்கள் பின்னர் வெளிவருகிறது செய்தி யாதெனில், அம்மாவட்ட சுகாதார நிலையத்தில் குடும்ப உறுப்பினர் அல்லாத ஒருவர் இந்த மரணத்தை வீட்டு பிரசவத்தினால் ஏற்பட்டதால் தான் என்று சந்தேகிக்கும்படி புகார் கொடுத்து விசயம் இப்போது ஒரு முக்கிய விவாதப்பொருளாக மாறிவிட்டது.

எப்படி இவர்கள் வீட்டில் பிரசவம் பார்க்கலாம்? மருத்துவ பயிற்சி பெற்றவர் உடனிருந்துதான் ஒருவர் பிரசவிக்கவேண்டும் என்றும் இதை சுற்றி நயமாக ஒரு புதிய வாழ்வியல் விதியை உட்புகுத்துகிறார்கள்.

முதலில் மக்கள் ஏன் விரும்பி வீட்டில் பிரசவம் பார்க்க விளைகிறார்கள், ஏன் மருத்துவமணையை புறந்தள்ளுகிறார்கள் என்ற அடிப்படை கேள்வியை வைக்காமல் அதை விவாதிக்காமல் வெறும்  சட்டவிதிகளை வைத்து மட்டும் இந்த மாற்றங்களை ஒடுக்கிவிடலாம் என்றென்னுவது மடமை.

அலோபதி விபத்துகளுக்கும் அவசரசிகிச்சைகளுக்கும் தேவையானது.
சரியாக சொல்ல வேண்டும் என்றால், இதற்கு மட்டும் தான் தேவை.
மற்றவற்றில் அவர்களின் மருத்துவ முறைகள் நன்மையைவிட தீங்கையே ஏற்படுத்துகிறது. ஆதலினால் அதில் இருந்து ஒதுங்குவதே அறமாகும். ஆனால் விடுமா வணிக ஆசை?

அலோபதி மருத்துவத்துறையின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சமும் நம்பிக்கையின்மையும் தான் இன்றைய விவாதததிற்கு காரணம் என்றால் அதை இல்லை என்று சொல்ல முடியுமா?
எனில்?
அறமற்ற பல மோசடிகளை அனுதினமும் அலோபதி மருத்துவமணைகளில் நடப்பதுவே மக்களை மாற்று வழிக்கு தேடவைக்கிறது.
விளைவு?
வாட்ஸ்ஆப் முகநூல் சமூகவலைத்தளங்கள் யூடியூப் போன்றவற்றில் முளைத்து விட்ட திடீர் மரபு மருத்துவர்களின் பால் போகச்செய்கிறது.

அலோபதி மருத்துவம் வளர்ந்து வருகிறது என்பதே அம்மக்கள் மேலும் மேலும் ஆரோக்கியமற்ற சமூகமாக மாறிவருவதனால் தானே?
எனில் அலோபதியின் வெற்றி தான் என்ன?
நிரந்தர நோயாளிகளாக மக்கள்  அனுதினமும் தள்ளப்பட்டு வருவதா?
தடுப்பூசி உண்மையில் பலன் அளிக்கிறது என்றால் குறைந்தபட்சம் குழந்தைகள் நல மருத்துவர்களாவது எண்ணிக்கையில் தேவையின் அடிப்படையில் குறைந்து இருக்க வேண்டும் அல்லவா? ஆனால், இங்கு இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட15 கூடுதல் சிறப்பு பிரிவுகள் குழந்தைகள் மருத்துவத்தில் மட்டும். இது எதை காண்பிக்கிறது?
உண்மையில் ஒரு மருத்துவமுறையின் சாதனை மக்களை ஆரோக்கியமாக மருத்துவத்தின் அவசியம் குறைவாக வைத்திருப்பது தானே? ஆனால் நிலைமை மக்களின் ஆரோக்கியம் தொலைந்தும் இவர்களின் வணிகம் மட்டுமே வளர்ந்தும் வருகிறது.

இந்நிலை எப்படி மக்களிடம் அவர்கள் மேல் நம்பிக்கையை ஏற்படுத்தும்?

ஒரு சமூகத்தில் ஆரோக்கியமற்ற காரணிகளை என்றாவது சரியாக சுட்டிக்காட்டி அதனால் அச்சமூகம் ஆரோக்கியமானதாக எங்காவது கேள்விப்படுகிறோமா? நேர்மாறாகத்தானே இருக்கிறது.

இது அறிவியலின் சதி அல்ல. வணிகத்தின் சூழ்ச்சி!
அரைகுறை அறிவியலை மட்டும் வைத்து கொண்டு , வணிகநோக்கிற்காக மட்டுமே அந்த அறிவியலை பிடித்து நகரும் ஒரு துறை தானும் பெயர் கெட்டு அந்த அறிவியலுக்கும் கலங்கம் விளைவிக்கிறது.
அறிவியல் என்றாலே அது சூழ்ச்சி வணிகம் என்ற அச்சத்தை மக்கள் மனதில் விதைத்ததன் விளைவு? அறிவியல் என்றாலே ஆபத்து என்றும் அதனால் முன்னோர் கூறிய மரபு மட்டுமே சரி என்றும் மக்கள் மீண்டும் கண்மூடித்தனமாக திசைமாறவைத்துவிட்டது.

இயற்கையும் மரபும் அறிவியலும் ஒன்று தான். பிரிக்க முடியாதது.
இயற்கையை புரிந்து கொள்ள ஒரு மொழிதான் அறிவியல்.
ஆனால் உண்ரவுகளே போதும் என்ற அளவுக்கு அறிவியலை புறந்தள்ளும் அளவுக்கு மக்களை விளிம்புக்கு இட்டு சென்றது அலோபதியின் வணிக அரசியல் தான். இதில் மருத்துவர்கள் பாவம், வெறும் கைப்பாவைகளே. சிலர் இதை உணர்ந்தவர் வணக்கத்துக்கு உரியவர்கள். பலர் ஆட்டுமந்தை போல,பரிதாபத்திற்கு உரியவர்கள்.
வெகுசிலர் இருக்கிறார்கள் , இந்த அரசியலை புரிந்தும் அதன் வணிகத்திற்கு துணை போகும் நயவஞ்சகர்கள்.

பிரசவத்திற்கு வருவோம். முக்கிய அச்சம் என்ன? சுகபிரசவம் நடக்க உதவாமல் அறுவைசிகிச்சை செய்து வணிகம் வளர்க்கிறார்கள் என்ற அச்சமே.
இது முற்றிலும் இல்லை என்று யாராவது கூறமுடியுமா?

முதலில் இன்றைய மருத்துவர்களில் எத்தனை பேருக்கு பிரசவத்தின் இயல்பான நிலை அதாவது postion எப்படி எப்போது என்ன காரணங்களுக்காக தந்திரமாக மறக்கடிக்கப்பட்டு இன்றைய நிலையை சொல்லிக்கொடுக்கப்படுகிறது என்ற முக்கிய ஐரோப்ப மருத்துவ வரலாறு தெரியுமா??

2016ல் லேன்சட்டில் வெளிவந்த அறிவியல் ஆய்வுக்கட்டுரை இந்தியாவின் பிரசவத்தில் மருத்துவத்தின் ஊடுருவல் பற்றி சொல்வது அச்சுருத்ததான் செய்கிறது.

https://www.news18.com/news/lifestyle/health-and-fitness-caesarean-section-deliveries-up-from-10-to-30-percent-in-india-1347492.html

கடந்த 20 ஆண்டுகளில் சிசேரியன் எனப்படும் அவசர அறுவைசிகிச்சை மட்டும் 10-30% அதிகரித்திருக்கிறது என்கிறது.
உலக சுகாதார மையம் நிர்னயித்துள்ள ஒரு குறிப்பிட்ட மக்களில் தேவைப்படும் சிசேரியன் எண்ணிக்கையை என்றோ இந்தியா எகிறி சென்றுவிட்டது.

இதே காலகட்டத்தில் சுயமாக இயங்கும்(மருத்துவ நிறுவனங்களின் தலையீடு இல்லாத) ஆய்வு இங்கு ஆரம்ப விகிதமே 10% அல்ல, 18% என்கிறது!
தெலுங்கானாவில் அதிகபட்சமாக தனியார் மருத்துவமனையில் சிசேரியன் விகிதம் 75%, அரசு மருத்துவமணையில் 40.6%  . சராசரியாக58%!!

தமிழகத்தில் சராசரியாக 34%!!
உலக சுகாதார மையம் 10% தொட்டுவிட்டாலே அது அதிகம் என்கிறது.
அதாவது உண்மையில் ஆரோக்கியமான சமூகத்தில் மருத்துவ உதவியுடன் கூடிய கர்பங்களில் பிரசவ சிக்கல்களானது 10% க்கும் குறைவாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் நடப்பது என்ன?
எனில் இதில் வணிக நோக்கம் தானே மேலோங்கி இருக்கிறது?

இதில் வேடிக்கை என்னவென்றால், உலக சுகாதார மையம் எந்த குறிப்பிட்ட மக்கள் தொகையில் பிரசவத்தில் சிசேரியன் அறுவைசிகிச்சை சதவிகிதம்10% தொடுகிறதோ அங்கு பிரசவ சிக்கலினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை குறையும் என்கிறது.
ஆனால் உண்மை நிலவரம் இந்தியாவின் அதிகளவிலான அவசர சிசேரியன் அறுவைசிகிச்சை எந்தவிதத்திலும் பிரசவ மரணங்களின் எண்ணிக்கையை குறைக்கவில்லை என்கிறது இந்த ஆய்வு!!
இது இந்தியாவுக்கு பிரசவத்தில் அலோபதியின் தலையீடு வணிகம் சார்ந்ததாக இருப்பதை சுட்டிக்காட்டுகிறது.

இந்த பிரசவ மரணங்களில் முதற்காரணமாக  மருத்துவமணைகளிலும் அறியப்படுவது அதிக உதிரப்போக்கு தான். அவ்வளவு எளிதாக மருத்துவ உதவி இருந்தும் இதை தவிர்க்க முடியவில்லை என்பதை அவசியம் கவனத்தில் கொள்ளவேண்டும். 

பிரசவ வணிக வளர்ச்சி உண்மையில் பிரசவ மரணங்களின் சதவிகிதத்தை பன்மடங்கு குறைத்திருந்தால் அந்த வணிகத்தில் குறைந்தபட்சம் அறம் இருப்பதாக கொள்ளலாம். ஆனால் அப்படி இல்லையே.

இந்த ஆய்வு அடிப்படையில் தான் இரண்டு ஆண்டுகள் முன்னர்,அலோபதி மருத்துவர்கள் வணிகத்திற்காக தேவையற்ற சிசேரியன் செய்வதை தடுக்க ஒவ்வொரு சிசேரியனையும் தீவிரமாக கண்காணிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இது அப்போதே செய்திகளில் கொஞ்சம் சலசலத்தது நினைவிருக்கலாம்.

சரி இதற்கெல்லாம் தீர்வு தான் என்ன?

உண்மையில் பிரசவத்தில் ஒரு மருத்துவரின் கண்காணிப்பு தேவையா?இல்லை என்கிறது உலக சுகாதார மையமே.
85-95% பிரசவங்கள் சிக்கல் இல்லாத இயல்பாக நடப்பவை தான். ஆதலால் இவர்களுக்கு மருத்துவர்கள் தேவையில்லை.
மருத்துவச்சிகள் போதும்.

ஆங்????
மருத்துவச்சிகளா? அப்படி னா?என்கிற அளவில் தான் இருக்கிறது இந்தியாவில் மருத்துவச்சிகள் நிலைமை.

முன்னர் அனுபவசாலிகளாக இருந்தவர்களையும் அழித்துவிட்டு, இப்போது இதை ஒரு முறையான அமைப்பில் அரசு அங்கீகாரத்துடன் பயிற்சி பெற்று பிரசவங்களை மக்களோடு மக்களாக மருத்துவமணை போல அச்சுறுத்தல் இல்லாமல் அதிக எண்ணிக்கையில் கையாளவேண்டியவர்களாக இருக்க வேண்டியவர்கள் இந்தியாவில் ஏட்டில் மட்டுமே இருக்கிறார்கள்.

ஆம்! உலக சுகாதார மையம் ஒவ்வொரு குறிப்பட்ட மக்கள்தொகைக்கும் மருத்துவச்சிகளின் தேவையை அழுத்தி தான் சொல்கிறது.

இங்கிலாந்தில் அரசே மக்களிடம் ஆரோக்கியமான கர்ப்பிணிகள் தயவுசெய்து மருத்துவமணை வராதீர்கள், மருத்துவச்சிகளை நாடுங்கள். மருத்துவர்களை உண்மையில் அவர்கள் தேவைப்படும் அவசர மருத்துவ உதவிக்கு செயல்பட அனுமதியுங்கள் என்கிறது.

இங்கே?

அனைவரும் மருத்துவர்களைதான் மருத்துவமணைதான் நாடவேண்டுமாம்.

இது அறிவியல் அறியாமையா? அல்ல வஞ்சகமான வணிக அரசியலா?

ஒரு சமூகத்தில் மருத்துவ வளர்ச்சி என்பது உண்மையில் அம்மக்களை மருத்துவ தேவையில் இருந்து விடுவிப்பதாக இருக்கவேண்டும்.
மேலும் மேலும் கூட்டம் சேர்பதும் மருத்துவமணை வளர்வதும் வணிகத்தின் வளர்ச்சி மட்டுமே. மருத்துவத்தின் வளர்ச்சி அல்ல.

உண்மையில் மருத்துவ அக்கரையோடு மக்களுக்காக செயல்பட விரும்பும் அரசென்றால் கொண்டு வாருங்கள், மீண்டும் மருத்துவச்சி முறையை.
இந்தியா போன்ற கிராங்கள் நிறைந்த, ஏழை, படிப்பறிவு குறைந்த மக்களிடம் சரியான முறையான பிரசவ கண்காணிப்பை எடுத்து செல்ல வேண்டும் என்றால் அது மருத்துவமணைகளால் மருத்துவர்களால் ஒருபோதும் முடியாது, மக்களோடு மக்களாக வணிகநோக்கம் குறைவான மருத்துவர்களின் ஊடுருவல் இல்லாமல் தனித்து இயங்ககூடிய மருத்துவச்சிகளால் மட்டுமே முடியும்!

செய்யுமா அரசுகள்?

அத்தனை விதிகளும் ஏடுகளில் இருந்தும் நடைமுறையில் இத்தனை ஆண்டுகளிலும் இம்முறை வராததற்கு காரணம்? மருத்துவ வணிகம் பாதிக்குமே!

இக்காரணங்கள் மக்களுக்கு புரிய ஆரம்பித்து விட்டது.
இந்நிலைதான் இவர்களை கோமாளித்தனமானதாக இருந்தாலும் இறுதி நோக்கம் அறம் சார்ந்த நல்லவையாக இருப்பதால் மரபு என லேசாக முனங்குபவரிம் கூட மக்களை ஈர்க்கிறது.

அரைகுறை அறிவியலை தொங்கிகொண்டு அதை நயவஞ்சமாக வணிகத்திற்கு பயன்படுத்துபவர்களை விட, கோமிளித்தனமாக இருந்தாலும் இறுதி தகவல் குறைந்த பட்சம் அதிக பாதகம் செய்யாத, வணிகநோக்கம் குறைவாக உள்ளவர்கள் பக்கம் மக்களை கூடச்செய்கிறது.

மெத்த படித்த அறிவியல் அறிவாளிகள் என்பதை அவர்கள் எனது பதிவுகளில் உதிர்க்கும் முதல் வார்த்தை ஃபக் fuck ல் தெரிந்துகொள்வேன். இவர்களை பார்த்தால் வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கும்.

இந்த காரணங்கள் தான் என்னை,  இவர்களில் எந்த பக்கம் துணை நிற்கவேண்டும் என்ற கேள்வியில் வணிகர்களைவிட கோமாளிகளை காப்போம் என அவர்களுக்கு வாதிட , அவர்கள் பால் வீசப்படும் மிகநேர்த்தியாக தந்திரமான ஒடுக்குமுறை நோக்கோடு எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்கவும் வைக்கிறது.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...