Monday, July 30, 2018

கருஞ்சீரகம் அதிக மருத்துவ குணம் கொண்டது என்பது நாம் அறிந்த ஒன்றே.

கருஞ்சீரகம் அதிக மருத்துவ குணம் கொண்டது என்பது நாம் அறிந்த ஒன்றே.

ஆனால் இதை எதற்கு எப்படி பயன்படுத்துவது என்பதே நம்மில் சிலருக்கு தெரிவதில்லை. இந்த பதிவில் கருஞ்சீரகத்தை எந்த பிரச்சினைக்கு எப்படி பயன்படுத்தலாம் என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். தவறாமல் முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கருஞ்சீரகப் பொடியை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து வெண்ணீரில் கலந்து சிறிதளவு தேனும் சேர்த்து பருகினால் சிறுநீரக கற்களும், பித்த பை கற்களும் மறைந்து விடும். இதை காலை மாலை என இருவேலைகளிலும் தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும். தொடர் இருமல் மற்றும் ஆஸ்துமா நோயால் துன்ப்படுகிறவர்கள் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரக பொடியை தேன் மற்றும் அரை தேக்கரண்டி அறைத்த பூண்டுடன் சாப்பிட வேண்டும். இது நுரையீரலில் உருவாகும் சளியை அகற்றும்.

அதேபோல் அடிக்கடி ஜலதோஷத்தால் பாதிக்கபடுபவர்கள் கருஞ்சீரகத்தை வறுத்து பின் அதை அரைத்து தூளாக்கி எண்ணெயில் ஊற வைத்து அதனை மூக்கில் இரண்டு அல்லது மூன்று முறை விட்டுவந்தால் ஜலதோஷத்துக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.

மேலும் தோல் நோய்களுக்கு கருஞ்சீரகம் ஒரு சிறந்த மருந்து. இதனை பொடி செய்து கரப்பான் மற்றும் சொரியாசிஸ் நோய் இருப்பவர்கள் தேய்த்து குளித்து வரலாம். புண்களால் ஏற்படும் தழும்புகள் மறையும். குளியளுக்கு பயன்படுத்தும் பொருட்களில் கருஞ்சீரகத்தை அரைத்து பயன்படுத்துவது நல்லது.

அடுத்து முக்கியமாக சில பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் இருக்கும். அந்த நாட்களில் அடி வயிறு கனமாகி சிறுநீர் வெளியேறுவதில் சிரமம் இருக்கும். இதற்கு கருஞ்சீரகம் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. கருஞ்சீரகத்தை லேசாக வறுத்து தூள் செய்து கொண்டு மாதவிடாய் ஏற்படும் தேதிக்கு 10 நாட்கள் முன்பு இருந்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தினமும் இருவேலை தேன் அல்லது கருப்பட்டி கலந்து சாப்பிட வேண்டும். இது மாதவிடாய் சிக்கலை போக்கும். வயிறு குணம் குறைந்து சிறுநீர் நன்றாக புரியும்.மேலும் கருஞ்சீரகத்தை அரைத்து தேமல் மீது தடவி வர தேமல் கொஞ்சம் கொஞ்சமாக மாறும்.

இதை கர்ப்பிணி பெண்கள் எடுத்து கொள்ள வேண்டாம்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...