இலவசமாக சிறு நீரகக்கல் கரைய...
=================================
கடந்த 30.05.2017 அன்று என்னிடம் முதுகுக்கு பிம்புறம் இடதுபக்கத்தில் தாங்கமுடியாத வலியுடன் வீரமுத்து என்ற நோயாளி என்னிடம் மருத்துவம் பார்க்க வந்தார்.
அவர் கடந்த ஒரு வருட காலமாக 7 mm அளவு சிறுநீரகக்கல் தொந்தரவினால் கடுமையாக பாதிக்கப்பட்டு, வாழைத்தண்டு சாறு குடித்தும், பல ஆங்கில மருத்துவர்களை அணுகி குளுகோஸ் வாயிலாக கல் கரைக்கும் மருந்துகளை உடலில் செலுத்தியதின் வாயிலாக அது 6 mm அளவு குறைந்தும், நோயை முழுவதுமாக குணப்படுத்த முடியாமல் லேப்ராஸ்கோப்பி ஆபரேஷன் செய்யப்பட வேண்டும் என்ற கட்டாயத்தின் காரணமாக என்னை பார்க்க வந்தார்.
நான் அவரது மருத்துவ குறிப்பேடுகளை பார்த்ததில் அவரது இடதுபுறம் சிறு நீரகத்தில் கல் உருவாகி அது 7 mm அளவு வளர்ந்து பிறகு சில மருந்துகளினால் அது 6 mm அளவு குறைந்தும் அவருக்கு தாங்க முடியாத வலியைக் கொடுத்து வந்தது தெரிந்தது.
இதற்கு ஒரு பைசா கூட செலவு இல்லாத இயற்கை மருந்து ஒன்று கூறுகின்றேன் என அவரிடம் கூறி அவருக்கு நாம் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு முதல் நாள் காப்பு கட்டுதல் என்ற ஒரு சம்பிராதாயத்தை காலம் காலமாக கடைப்பிடித்து வருகின்றோமே அதில் கட்ட பயன்படும் சாதாரணமான பீளைப்பூ தேவை என்றேன்.
இதன் தாவரப் பெயர் : Aervalanata.
தாவரக்குடும்ப பெயர்: Amarantaceae.
இதன்வேறுப் பெயர்கள்: சிறு பீளை, சிறுகண் பீளை, கண் பீளை, கற்பேதி. காப்பூக்கட்டு பூச்செடி,கூரைப்பூச் செடி என்பார்கள்.
இந்த பீளை பூவை சிறிது எடுத்து ஒன்றறை டம்பளர் நீரில் அவைகளைப் போட்டு நீரை நன்றாக கொதிக்க வைத்து நீர் பாதியளவு சுண்டக்காய்ச்சி அந்த நீரை தினமும் வெறும் வயிற்றில் 10 நாட்களுக்கு எடுத்து வரவும் என்று கூறியிருந்தேன். இத்துடன், அசைவ உணவுகள் மற்றும் மசாலா உணவுப்பண்டங்களைத் தவிற்கக் கூறியிருந்தேன்.
அவரும் 10 நாட்களாக நான் கூறிய இந்த இலவச வழிமுறையை கைடைப்பிடித்து வலி நின்றவுடன் மிகுந்த சந்தோஷத்துடன் என்னை வந்து சந்தித்தார்.
நான்,மீண்டும் சிறுநீரகக்கல் எந்த அளவுக்கு கரைந்து உள்ளது என்பதைப் பரிசோதித்து பார்த்ததில் அவருக்கு முழுவதுமாக கல் கரைந்திருந்ததை அறியமுடிந்தது.
இதில் அவருக்கு முழுவதுமாக கல் கரைந்து பூரண குணம் கிடைத்து.
இதில் எனக்கும்,அவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியே.
எனவே, நம் முன்னோர்கள் ஆங்கில மருந்துகள் இந்தியாவிற்கு வரும் முன்னர் இதுபோல இயற்கை முறையில்தான் மருத்துவம் செய்துகொண்டார்கள், பணத்தை பல மடங்கு பிடுங்கி இலாபம் பார்க்கும் பண்ணாட்டு மருந்து கம்பெனிகளை நம் நாட்டில் அனுமதிக்கவில்லை. ஆனால், தற்பொழுது மருந்து விற்பனைக்காக இந்த நாட்டையே விற்க தயாராக இருக்கும் அரசியல்வாதிகளிடத்தில் நம் நாடு உள்ளதை நினைக்கும் போது மனம் வேதனைப்படுகின்றது.