பாட்டி வைத்தியம்.....
1) சிறிது படிக்காரத்தைக் கரைத்த நீரில் முகத்தை கழுவி வந்தால் முகப்பருவினால் தோன்றிய வடுக்கள் மாறும்.
2) எட்டிமரத்தின் இலையை மை போல அரைத்து கட்டி உள்ள இடத்தில் தினமும் தடவி வந்தால் கட்டிகள் குறையும்.
3) முளை கட்டிய தானியங்கள்,தக்காளி, ஸ்ட்ராபெரி, அத்திபழம் இவற்றை தினமும் உணவில் சேர்க்க வேனற்கட்டி வரமால் தடுக்கலாம்.
4) வெள்ளரி சாறெடுத்து பாலாடையுடன் கலந்து தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகம் குளிர்ச்சி அடையும்.
5) 20 கிராம் பழம்பாசியின் இலையை அரை லிட்டர் பாலில் காய்ச்சி வடிகட்டி எலுமிச்சைசாறு, தேன் கலந்து காலை, மாலை குடிக்க மூலம் குணமாகும்.
6) அதிக உடல் வெப்பம் உள்ளவர்கள் தினமும் கமலா ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வர உடல் வெப்பம் தணிந்து உடல் குளிச்சி அடையும்.
7) எட்டிமரத்தின் இலையை பறித்து வெந்நீரில் போட்டு சிறிது நேரம் கழித்து அந்த நீரில் குளித்து வந்தால் நரம்பில் ஏற்படும் வலி குறையும்.
8) கற்றாழை மடல் 10 கிராம், உப்பு 10 கிராம் இரண்டையும் இடித்து கடிவாயில் வைத்து 3 நாள்கள் கட்டினால் நாய் கடி விஷம் குறையும்.
9) கம்பளிப்பூச்சி கடித்த இடத்தில் முருங்கை இலையை அரைத்து பற்றுப் போட அரிப்பு குறையும்.
10) வெப்பம் பூவை காய வைத்து போடி செய்து வெந்நீரில் கலந்து தினமும் காலை, மாலை குடிக்க வாயுத் தொல்லை குறையும்.