Saturday, June 22, 2019

ஆண்களுக்கு மட்டுமில்லாமல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தொப்பை வருவதற்கு முக்கிய காரணம் Toothpaste என்றால் நம்புவீங்களா? .

🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕

"ஆண்களுக்கு மட்டுமில்லாமல்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தொப்பை வருவதற்கு முக்கிய காரணம் Toothpaste என்றால் நம்புவீங்களா?
.
பெண் குழந்தைகளுக்கு
சிறு வயதிலேயே மார்பகங்கள் பெரிதாவதற்கும்
10 வயதிலேயே பூப்பெய்துவதற்குமான காரணிகளில் பற்பசையில் உள்ள வேதிபொருள்களும் ஒரு காரணம்
என அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஆய்வுகள் உருதிபடுத்துகின்றன
.
கறி+ உமி+ உப்பு கலந்து பயன்படுத்திய காலங்களில் பல் சம்மந்தமான பிரச்சனைகள் இருந்தது எனவோ உண்மை தான்
நூற்றுக்கணக்கான மக்கள் வாழும் கிராமங்களில் ஒரு சிலருக்கு மட்டுமே பல் பிரச்சனைகளை......
.
இன்று 78% மக்களுக்கு அவசியமான நோயாக
மாற்றியது எது?
Toothpaste
Toothpaste ஐ பயன்படுத்த வேண்டாம்
.
என்பதற்கான அறிவியல் காரணங்கள்
பல உண்டு
.
1.பற்பசையில் உள்ள புளோரைடின் அனவானது
17 ppm க்கும் மேல் இருக்ககூடாது என்பது
மருத்துவ நியதி நாம் பயன்படுத்தும் Colgate, close up ல் 80>100 ppm என்ற அளவில் உள்ளது
.
2. பற்பசையில் உள்ள bleaching agent ஆனது பற்களுக்கும் ஈறுகளுக்குமான இறுக்கத்தை
தளர்வாக்கி பல்ஆட்டம் சொத்தை
உருவாக்கும்
.
பற்பசையில் பல் துலக்கிய பிறகு உற்று
நோக்கினால் ஈறுகள் சிவப்புநிறத்தில்
காண்பதற்கு இதுவே காரணம்
.
3. Sodium lauryl sulfate (sls) இவை இல்லாத Toothpaste இல்லையென்றே கூறலாம்
.
Sls இந்த வேதி பொருள் பெட்ரோல்
உற்பத்தி நிலையங்களில் எண்ணெய்
பிசுபிசக்கை போக்க பயன்படும் உயர் வேதி பொருள்
.
இந்த sls ஆனது வயிற்றில் உற்பத்தியாகும் Hcl உடன் வினைபுரிந்து வயிற்றின் உட்பகுதியில்
புண்களை ஏற்படுத்துகிறது
.
இந்த புண் தான் ulcer ஆக
உருமாறி நமது உடலின் திரிதோஷமான...
வாதம்+ பித்தம்+ கபம்
சீர் கேட்டை உருவாக்கி எல்லா
நோய்களையும் அழையா விருந்தாளியாக
வரவழைத்து வரவேற்கும்
Toothpaste
அவசியமா?
.
4. நமது பற்களுக்கும் மூளைக்கும் நேரடி
தொடர்பு உள்ளது
கை விரலால் பல் துலக்கும் போது பற்களில்
மேல் பகுதியில் அமைந்துள்ள நரம்பணுக்கள்
மூலம் தூண்டபட்டு
அகோர பசி உருவாவதை உணரலாம்
.
இதுவும் ஒரு சிறந்த தொடு சிகிச்சை தான்
.
பாரம்பரிய முறையாக மூலிகை பொடிகளை கொண்டு பல் துலக்குவதால் ஏற்படும் அளப்பரிய
நன்மைகளால் உடல் ஆரோகியம் பெரிதும் பாதுகாக்கபடுவது மட்டுமின்றி நோய் அணுகாமல் வாழலாம்
.
நமது உடலின் நுழைவாயிலான பற்களுக்கு நன்மை செய்வது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி ....
அதன் மூலம் மட்டுமே நோய்களை உற்பத்தி செய்ய இயலும் என்பதை உணர்ந்த மேலைநாட்டு மருந்து கம்பெனிகளுக்கு எலி கள் இந்தியர்கள்
.
கிராமத்தில் வாழும் மக்கள்
இயற்கையாக உள்ள வேம்பு, ஆலங்குச்சி இருந்தும் இவற்றை பயன்படுத்துவதை மறந்து
.
மெல்ல கொள்ளும் விஷமான Colgate, close up" Etc.... தான் பயன்படுத்துகின்றனர்
.
பல் போகாமல் இருப்பதற்கான மரபான தரவுகளை முன்னெடுப்போம்...
🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕

பைபாஸ் மற்றும் ஆஞ்சியோபிளாஸ்ட்டிக்கு ஒரு மாற்று சிகிச்சை!

*அலட்சியம் வேண்டாம் அதிகம் பகிரவும்*

🇨🇭 *விழிப்புணர்வு பதிவு* 🇨🇭

சமீபத்தில், கடுமையான நெஞ்சு வலி காரணமாக எனது நண்பனின் தந்தை  பிரபல மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். அவர் 2012 ல் முன்னரே இதே போன்று நெஞ்சு வலி காரணமாக ஆஞ்சியோ பிளாஸ்ட்டி (Stent) பொறுத்தபட்டு மருத்துவரின்  சிகிச்சையின் கீழ் இருந்து வருகிறார்.
மருத்துவர்கள் இப்போது அவருக்கு  ஆஞ்சியோகிராபி பரிந்துரைக்கின்றனர்.
  
ஆஞ்சியோகிராபியின் முடிவில் அவருக்கு இருதயத்தில் மூன்று இடத்தில் *90%*  அடைப்புள்ளதாக மருத்துவர் அறிக்கை அளிக்கிறார். பல சிறப்பு மருத்துவ ஆய்வாளர்களின்   பரிந்துரைபடி ஆஞ்சியோபிளாஸ்டினை (Stent) அப்புறப்படுத்தி, அதற்கு பதிலாக 'பைபாஸ்' அறுவைசிகிச்சைக்கு  பரிந்துரைக்கபடுகிறார்.

"பைபாஸ்" சர்ஜரிக்கு ஆகும் பெரும் மருத்துவ செலவுகளை கருத்தில் கொண்டும்  மேலும் ஆஞ்சியோபிளாஸ்ட்டி (Stent) பொருத்திய பின்னும் இருதயத்தில் அடைப்பு ஏற்பட்ட காரணத்தினால் அவர் இருதய மருத்துவரிடம்  15 நாட்களுக்கு சில மருந்துகளை மட்டும்  பெற்றுக்கொண்டு வீட்டிற்கு வருகிறார்.
  
இதற்கிடையில்,மேற்படி சிகிச்சை செய்ய உறவினர் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் ஆலோசனை செய்யும் பொழுது, ஒரு குடும்ப நண்பர் ஒரு புதிய தகவலை அளித்தார்.
  
_*"ரத்த நாளம் சுத்திகரிப்பு சிகிச்சை" (கீலேஷன் தெரபி) மற்றும் "EECP Treatment" (Enhanced External Counter Pulsation)*_  எனப்படும் புதிய சிகிச்சையானது இந்திய மருத்துவ அரங்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  
இந்த சிகிச்சை, பைபாஸ் மற்றும் ஆஞ்சியோபிளாஸ்ட்டிக்கு  ஒரு மாற்று சிகிச்சையாகும்.

*"கீலேசன் சிகிச்சை"* என்பது
நோயாளிகளுக்கு  சில மருந்துகள் ஊசி  (IV drip) மூலம்  உட்செலுத்தப்படும். இந்த மருந்து முறையாக ரத்த நாளத்தை சுத்தப்படுத்தி, இருதயத்திலிருக்கும் தமனிகுள் போய் எல்லா அடைப்புகளையும் நீக்குகிறது. கொடுக்கப்பட வேண்டிய  ஊசி மருந்தின் (IV drip) எண்ணிக்கை நோயாளியின்  வயது மற்றும் இருதய அடைப்பின் தன்மையை  பொறுத்து 30 முதல் 50 வரை  பரிந்துரைக்கப்படுகிறது.

ஊசி மருந்து  (IV Drip) ஒன்றின்  விலை ரூ .1100/- மட்டுமே.

*"EECP Treatment" (Enhanced External Counter Pulsation)* சிகிச்சை இருதயத்தில் புதிய ரத்த நாளத்தை (Natural Collaterals) உருவாக்கி இருதயத்திற்கு தேவையான ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது...  மேலும் EECP சிகிச்சையில் இருதய நோயாளிகள் எந்த மருந்துகளும் உட்கொள்ள வேண்டிய அவசியமில்லை.. இந்த சிகிச்சையை "Natural Bypass" என்றும் கூறலாம்.
இந்த சிகிச்சையும்  நோயாளியின்  வயது மற்றும் இருதய அடைப்பின் தன்மையை  பொறுத்து 20 முதல் 30 வரை  பரிந்துரைக்கப்படுகிறது.
EECP சிகிச்சை செலவு ஒரு மணி நேரத்திற்கு Rs 1200/- மட்டுமே.

தற்போது, ​​இந்தியாவில் பல மருத்துவர்கள் இந்த துறையில் சிறப்பு பயிற்சி பெற்றுள்ளனர்.

இந்த அதி நவீன
மாற்று சிகிச்சை கோவை
*வெல்கேர் மெடிக்கல் சென்டர்,*
உக்கடம் பஸ் ஸ்டாண்ட் அருகில், (பழைய புக் மார்க்கெட் அருகில்)
*போன்* : 96266 39797* , 0422-4957597*

*வெல்கேர் மெடிக்கல் சென்டரில்* அமெரிக்காவில் சிறப்பு பயிற்சி பெற்ற சிறந்த இருதய மருத்துவர்கள் மற்றும் திறன்மிக்க செவிலியர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இங்கு சென்று சிகிச்சை பெற்ற என் நண்பனின் தந்தை பூரண நலத்துடன் மிகுந்த ஆரோகியமாக உள்ளார்.

இந்த விழிப்புணர்வு செய்தியை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

இது யாருக்காவது உதவலாம்.

💐💐 நன்றி 💐💐

Wednesday, June 19, 2019

உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை*

*உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை*

_திடக்கழிவு,_
_திரவக்கழிவு,_
_வாயுக்கழிவு,_
_சொந்தக்காசில் சூனியம் வைத்துக்கொள்ளும் *மருத்துவக்கழிவு,*_

     இவைகளை வாழ்நாள் முழுவதும், சிரமமில்லாமல் நீக்கும், எளிமையான,
சுவையான முறை.

      *வெந்நீர்*
              +
*எலுமிச்சை சாரு*
             +
       *தேன்*

*செய்முறை
*********

   ஒரு டம்ளர் நீரை குறைந்த தனலில் வைக்கவும் !
கொதிக்க வேண்டியதில்லை !
நாம் தாங்கும் சூடு இருந்தால் போதும் !

ஒரு காலி டம்ளரில் 1/2 எலுமிச்சை, சிறியதாயிருந்தால் ஒரு எலுமிச்சை பிழிந்துக்கொள்ளவும் !

3 ஸ்பூன் தேன் சேர்த்து, வெந்நீர் கலந்து, ஸ்பூனில் சிறிது சிறிதாக, அனுபவித்து, உமிழ் நீருடன் நன்றாக உறவாடி, பின் அருந்தவும் !

   காலையில் முதல் உணவாக, வெறும் வயிற்றில் அருந்தவும் !

எல்லா கழிவுகளும் உடனுக்குடன் நீக்கப்படுவதுடன் உடலுக்குத் தேவையான
உடனடி குளுக்கோஸ், தரமான உயிர்சத்துக்கள் மற்றும் தாது உப்புக்களும் கிடைக்கும் !

*வாழ்நாள் முழுதும் "கேன்சர்" என்ற சொல்லே நம் வாழ்க்கை அகராதியில் இல்லாமல் போகும் !*

   வயது வித்தியாசமின்றி உட்கொள்ளலாம் !

*உணவாகவும்,*
*மருந்தாகவும்,* செயல்புரியும் உன்னத இயற்கை பானம் !

பி . கு :
***

     சர்க்கரை நோயாளிகள் பயமில்லாமல் அருந்தலாம் !

சிறிது சிறிதாக, உமிழ் நீர் சேர்த்து, சுவைத்து உட்கொள்வதால், தேனில் உள்ள குளுக்கோஸ் தரமான குளுக்கோஸாக மாற்றமடைந்து நன்மை மட்டுமே செய்யும் !

   மேலும், "தேன்" நாக்கிற்கு இனிப்பு, உடல் உறுப்புகளுக்கு கசப்பு !

சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடக்கூடாதென்பது வடிகட்டிய "மூட நம்பிக்கை"!

தொடர்ந்து அருந்துவதால் "அல்சர்" எனும் மருத்துவத்தால் தூண்டப்படும் உபாதை, சொல்லாமல் ஓடிப்போகும்.......!

           - சித்தர்களின் குரல்

👬உடலின் மொழி👫

1.  உடல் - உணவை கேட்கும் மொழி - பசி

2.  உடல் - தண்ணீரை கேட்கும் மொழி  - தாகம்

3.  உடல்  - ஓய்வை கேட்கும் மொழி  - சோர்வு, தலைவலி

4.  உடல் - நுரையீரலை தூய்மை செய்யும் மொழி - தும்மல், சளி, இருமல்.

5.  உடல் - உச்சி முதல் பாதம் வரை உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - காய்ச்சல்

6.  உடல் - காய்ச்சலின் போது உணவை உண்ணாதே என்று சொல்லும் மொழி -  வாய் கசப்பு மற்றும் பசியின்மை

7.  உடல் - காய்ச்சலின் போது நான் உடலை தூய்மை செய்கிறேன், நீ எந்த வேலையும் செய்யாதே என்று சொல்லும் மொழி - உடல் அசதி

8.  உடல் - எனக்கு செரிமானம் ஆகாத உணவை நான் வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வாந்தி

9.  உடல் - நான் குடல்களில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - பேதி

10. உடல் - இரத்தத்தில் உள்ள நச்சை நான் தோல் வழியாக வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வியர்வை

11.. உடல் - நான் வெப்பநிலையை சீர் செய்து இரத்தத்தில் உள்ள நச்சை முறிக்கப்போகிறேன் என்று சொல்லும் மொழி - உறக்கம்

12. உடல் - நான் முறித்த நச்சை இதோ வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - சிறுநீர் கழித்தல்

13. உடல் - உணவில் உள்ள சத்தை பிரித்து இரத்தத்தில் கலந்து, சக்கையை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - மலம் கழித்தல்

       எனவே நாம் அனைவரும் உடலின் மொழி அறிந்து, நமக்கு ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டால் அதை உடனே மருந்தோ, மாத்திரையோ கொண்டு தடை செய்ய வேண்டாம். உடல் தன் வேலையை சீராக செய்ய நாம் அனுமதித்தால் தான், நாம் நோய் எனும் பிணியில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்.

      நாம் அனைவரும் முதலில் நம் உடலை நேசிப்போம், நம் உடல் உள் உறுப்புகளை நேசிப்போம், நாம் நம்மை நேசிப்போம்.

       நாம் வெளி உறுப்புகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ, அதே அளவிற்கு நம் உள் உறுப்புகளின் உணர்வுகளும், மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நாம் ஆரோக்கியமாகவும், அழகான தோற்றத்துடனும் இருக்க முடியும்.

       நம் உடலை நேசிப்போம்.....

மூச்சு என்ன செய்யும்? ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசிக்கிறான்

மூச்சு என்ன செய்யும்?
ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசிக்கிறான் (மேலை நாட்டுக் கணக்குப் படி ஒரு நிமிடத்திற்கு 18 முறை). இந்தக் கணக்குப் படி ஒரு மணிக்கு 900 முறை. ஒரு நாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறான். இந்த சுவாசத்தை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு ஆயுள் கூடும்!

எவ்வளவுக்கு எவ்வளவு கூடுதலாகச் செலவழிக்கிறோமோ, அந்த அளவுக்கு ஆயுள் குறையும். இது ஒரு வங்கியில் பணம் சேமிப்பது போல. வங்கியிலுள்ள பணத்தை விரைவில் செலவழித்தால் என்ன ஆகுமோ அதைப் போலத் தான்  நம்முடைய மூச்சை விரைவாக செலவழித்தால் நாம் உயிர் வாழும் ஆண்டுகளும் குறையும்.

இந்தத் தத்துவத்தைத் திருமூலர் பாடலிலும் ''கோயில்'' என்ற சொல்லால் பிரபலமான தில்லைச் சிதம்பரத்திலும் காணலாம்.
சிதம்பரம் கோவிலில் 72,000 ஆணிகள் அறையப் பட்ட 21,600 பொன் தகடுகள் இருந்ததாக அல்லது இருப்பதாகச் சொல்வர். 64 விதமான மரத்தாலான வேலைப்பாடுகளைப் பார்க்கலாம். ஆங்கிலத்தில் "beam" என்று சொல்லப் படும் இவை 64 கலைகளைக் குறிக்கும். 21,600 தங்க ஓடுகள் ஒரு மனிதன் ஒரு நாளில் விடும் 21,600 மூச்சுக் காற்றைக் குறிக்கும். 72,000 ஆணிகள் நம் உடலில் உள்ள நாடி, நரம்புகளையும் நாடித்துடிப்பையும் குறிக்கும்.

திருமூலர் தனது பாடலில்:-

விளங்கிடு முந்நூற்று முப்பத்தோ டொருபான்
தனங்கொளிரட்டிய தாறு நடந்தால்
வணங்கிடு ஆமைம்மலம் வாயுவெழுந்து
விளங்கிடு மவ்வழி தத்துவ நின்றே

விளக்கமிக்க முந்நூறும், முப்பதைப் பத்தினால் பெருக்கிக் கிடைத்த முந்நூறும் சேர்ந்து அறுநூறு ஆகும். இரட்டியதாறு என்பது ஆறும் ஆறும் பெருக்க முப்பத்தாறு ஆகும். இம்முப்பத்தாறை அறுநூறோடு பெருக்க 21,600 ஆகும். இதுவே ஒருநாள் நாம் சுவாசிக்கும் சுவாசங்கள்.

ஆனால் வரவு 7200 சுவாசம் தான். பாக்கி 14,400. இது தான் நம் மொத்த ஆயுளிலிருந்து கழிந்து கொண்டே வரும். இதைத் தடுக்க மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும். பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி) செய்தால் ஆயுள் விருத்தியாகும்.

ஒரு சுவையான கணக்கைப் பாருங்கள். ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100.

ஒரு நிமிடத்திற்கு ஒரு மனிதன்

18 முறை சுவாசித்தால் அவன் வயது 83 1/3 ஆண்டுகள்
2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு
1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு
0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை (இது சித்தர்களால் மட்டுமே முடியும்)

ஆம் சுவாசமே நம் உயிர் வாழ்விற்கு ஆதாரம். ஆனால் அதைக் குறித்த எந்த விழிப்புணர்வும் இல்லாமல் நாம் வாழ்ந்து வருகிறோம்.

சுவாசம் பற்றிய அறிவு அனைத்து தரப்பு மக்களுக்கும் அவசியமான ஒன்றாகும். பலப்பல தேவையில்லாத விஷயங்களைப் பற்றித் தெரிந்து வைத்துக் கொள்கிற நாம், நம் உயிர் வாழவிற்கு ஆதாரமான சுவாசம் பற்றி யோசிக்கக் கூடச் செய்வதில்லை.

சுவாசத்தை வாசி என்பார்கள். வாசியை மாற்றிச் சொன்னால் சிவா. ஆக சுவாசம் கடவுளுக்கு நிகரான அல்லது கடவுளை அறிய உதவும் விஷயமாகும். சுவாசிப்பதை இரண்டு நிலைகளாகச் சொல்லலாம்.

ஒன்று

நுரையீரலுக்குச் சென்ற பிராணவாயு நிறைந்த காற்று இரத்தக் குழாய்களுக்குக் கொடுக்கப்பட்டு இரத்தக் குழாய்களிலுள்ள கரிமிலவாயு காற்றால் வெளியேற்றப்படுகிறது.

இரண்டு

இரத்தக் குழாய்களில் உள்ள பிராணவாயு செல்களுக்குக் கொடுக்கப்பட்டு செல்களில் உள்ள கரிமிலவாயு இரத்தக் குழாய்களால் பெறப்படுகிறது. இப்படி இரண்டு நிலைகளில் வாயுக்களின் பரிமாற்றம் நடைபெறுகிறது.

நாம் சுவாசிக்கும் போது மூக்கில் நுழையும் காற்றிலுள்ள தூசுகள் மூக்கின் உள் உள்ள முடிகளாலும் ஈரப்பதமுள்ள மியூகஸ் பரப்பாலும் தடுக்கப்பட்டு தொண்டைப் பகுதிக்குக் காற்று செல்கிறது .

அங்கிருந்து குரல்வளைப் பகுதியைத் திறந்து கொண்டு மூச்சுக் குழலுக்குச் சென்று, அங்கிருந்து சிறிய மூச்சுக் குழலையும், நுண்ணிய மூச்சுக் குழலையும் தாண்டி காற்றறைகளுக்கு வந்து சேர்கிறது.

இங்கு வைத்துதான் பிராணவாயு நிறைந்த மூச்சுக் காற்றும் இரத்தத்தில் உள்ள கரிமில வாயு நிறைந்த காற்றும் பரிவர்த்தனை செய்யப்படுகின்றன.

நுண்ணிய காற்றறைகளும், நுண்ணிய மூச்சுக் காற்றுக் குழாய்களும், நுண்ணிய இரத்தக் குழாய்களும் நிறைந்த தொகுதியே நுரையீரல் ஆகும்.

இதன் கொள்ளளவு கிட்டத்தட்ட 5 லிட்டர் காற்று. இது மார்பின் இடப்பக்கமும், வலப்பக்கமும் இரு பாகங்களாக அமைந்துள்ளன. உயிர் மூச்சுக் காற்றுப் பரிவர்த்தனை நுரையீரலில் உள்ள நுண்ணிய காற்றறைகளில் நடைபெறுவதால் இது ஒரு முக்கியமான உறுப்பாகக் கருதப்படுகிறது.

செல்களில் உள்ள கரிமிலவாயு நிறைந்த காற்று அசுத்த இரத்தக் குழாய்களால்(சிரை) கவரப்பட்டு இதயம் செல்கிறது. அங்கிருந்து இரத்தக் குழாய்கள் வழியாக நுரையீரலுக்குச் செல்கிறது.

அங்குள்ள காற்றறைகளில் கரிமிலவாயு நிறைந்த காற்று இரத்தக் குழாய்களால் தள்ளப்பட்டு, காற்றறைகளில் உள்ள சுவாசத்தின் மூலம் வந்த காற்று இரத்தக்குழாய்களால் பரிவர்த்தனை செய்யப்பட்டு இதயம் வழியாக செல்களுக்கு அனுப்பப்படுகிறது.

உள்ளிழுக்கும் காற்றிலுள்ள வாயுக்களின் அளவு, நைட்ரஜன் 79%, பிராணவாயு 20 %, கரிமிலவாயு 0.04%, ஆகும்.

வெளிவிடும் காற்றிலுள்ள வாயுக்களின் அளவு நைட்ரஜன் 79%, பிராணவாயு 16%, கரிமிலவாயு 4.04% ஆகும்.

பிராணாயாமத்தின் பொழுது காற்று நுரையீரலில் அதிக நேரம் நிறுத்தப்படுவதால் காற்றிலுள்ள ஆக்சிஜன் அதிக அளவு பரிவர்த்தனை செய்யப்படுகிறது.

இதனால் செல்களுக்கு அதிக ஆக்சிஜன் என்கிற பிராணவாயு கொடுக்கப்பட்டு சக்தி வீணாவது தடுக்கப்படுகிறது. தேவைக்கு அதிகமாகக் கிடைக்கும் ஆக்சிஜனால் கிடைக்கும் பிராண சக்தி தசைகளில் உள்ள மயோகுளோபினால் சேர்த்து வைக்கப்படுகிறது.

சாதாரணமாக சுவாசிக்கும் போது நுரையீரலில் உள்ள 3000 காற்றறைகள் மட்டுமே செயல்படுகின்றன. ஆனால் பிராணாயாமத்தின் போது 6000 காற்றறைகள் செயல்படுகின்றன.

எனவே இரு மடங்கு சக்தி கிடைப்பதோடு, அதிகமான பிராணசக்தி சேமிக்கப்பட்டு ஒரு நிலையில் ஓஜஸாக மாறி மூலாதாரத்தில் சேர்கிறது. இதனால் ஆயுளும் அதிகரிக்கிறது.

செல்களுக்குத் தேவையான பிராணவாயுவை பிராணாயாமம் மூலம் பெறும் தன்மையையும் உடல் அடைவதால் உடலிலுள்ள அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கும் தன்மையைப் பெற்றுவிடுகின்றன.

நிமிடத்துக்கு 15 முறை சுவாசிக்கும் மனிதன் 10 நிமிடம் பிராணாயாமம் செய்யும் போது ஒரு பங்கு நேரம் உள் இழுத்தல், நாலு பங்கு நேரம் உள்ளே வைத்தல், இரண்டு பங்கு நேரம் வெளியே விடுதல் என்று சுவாசம் செய்யும் போது 140 சுவாசங்களை மிச்சப்படுத்துகிறான்.

காலை, மாலை இரு வேளையும் செய்தால் 280 சுவாசம் ஒருநாளில் மிச்சமாகிறது. மேலும் சுவாசத்தை ஆழமாக இழுத்து மெதுவாக விடும் பழக்கத்தைப் பெற்றுவிடுவதால் நிமிடத்திற்கு மூன்று சுவாசம் மிச்சமானால் கூட, தூங்கும் நேரம் போக மற்ற நேரங்களில் எவ்வளவு சுவாசம் மிச்சமாகும் என்று கணக்கிட்டுப் பாருங்கள்.

அந்த அளவு ஆயுள் அதிகரிக்கும் என்பதோடு மட்டுமல்ல ஆரோக்கியமும் மேம்படுகிறது.

என்னிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. பிராணன் அடங்கினால் மனம் அடங்கும், பிராணனின் சலனம் மனதின் சலனம், பிராணன் வசமானால் மனம் வசமாகும் என்றெல்லாம் சொல்கிறீர்கள்.

அப்படியானால் எதற்காக அஷ்டாங்க யோகத்தில் இயமம், நியமம், ஆசனம் என்கிற மூன்று நிலைகளை பிராணாயாமத்திற்கு முன்னால் கடைபிடிக்கச் சொல்கிறீர்கள் ?

நேரடியாகப் பிராணாயாமம் அதற்கு அடுத்து பிரத்யாகாரம் , தாரணை, தியானம், சமாதி என்று போய் விடலாமே ?

ஒருவன் தன் ஆன்மிக வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறியே இயமம், நியமம் என்பனவாம், வேறொன்றும் இல்லை. இந்த ஒழுக்க நெறிகளையும், ஆசனம் என்கிற உடலை உறுதி செய்கின்ற பயிற்சியையும் மேற்கொண்டவர்கள் மட்டுமே தியானத்தில் நிலைத்து நின்று சமாதி நிலையை அடைய முடியும்.

மற்றவர்கள் மனதையும், உடலையும் வலுவாக்கி உலகாய வாழ்வை திறம்பட நடத்திக் கொள்ளலாம். ஏனென்றால், எவ்வளவு சக்தியை மேம்படுத்திக் கொண்டாலும், உலகாய வாழ்வைப் பொறுத்த மட்டில் சக்தி விரையமாவதைத் தடுக்க முடியாது.

இந்த உலகாய வாழ்விலும் இல்லற ஒழுக்கம் என்ற நெறியைத் தவறாமல் கடைபிடித்து மேம்பாடு அடைந்தவர்களும் உண்டு.

எனினும் இரண்டிற்கும் பலனடையும் காலம் வித்தியாசப்படும். என்றாலும் பிராணனைக் கையிலெடுத்தவர்கள் காலதாமதமானாலும் உண்மையை உணரும் வழிக்கு தானே வருவார்கள். இது நிச்சயம்.

ஒரு ஆரோக்கியமான சூழலில் வாழும், திடகாத்திரமான மனிதன் சராசரி ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசிப்பான். ஆனால் நாமெல்லாம் இருபது முறைக்கும் அதிகமாகவே சுவாசிக்கிறோம் என்பது அதிர்ச்சிதரும் புள்ளி விபரம்.

ஆரோக்கியமான நல்ல மனிதனுக்குக் கூட ஒரு நாளைக்கு 21600 சுவாசங்கள் இயங்கினாலும், 7100 சுவாசங்கள் பாழாகும் என்று சித்தர்களால் சொல்லப்பட்டுள்ளது.

எஞ்சிய 14500 சுவாசங்களே உள்ளே புகுந்து உடலுக்கு நன்மை செய்யும் என்று கணக்கிட்டு கூறியிருக்கிறார்கள்.

தற்போது மனிதர்களின் ஆயுள் குறைந்துள்ளது எதனால் என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.

மூச்சை நன்றாக இழுத்து மெதுவாக வெளியே விடும் பழக்கம் நமக்கு இல்லை.

கட்டாயம் அதை நாம் பழகிக் கொள்வதோடு நம் குழந்தைகளுக்கும் இளம் வயதிலேயே அதைப் பழகித்தர வேண்டும்.

எனெனில் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பிராண சக்தியே மானிட உடலுக்குள் உயிராய் விளங்குகிறது. அதை நாம் உணவு, நீர் மற்றும் வாயுவிலிருந்துப் பெற்றுக் கொள்கிறோம். எனினும் சுவாசம் மூலமாகவே நாம் அதிகம் பெறுகிறோம்.

அதிகாலையில் நிறைய தண்ணீர் குடியுங்கள் என்று சொல்வதன் காரணம் கூட அதில் உள்ள பிராண சக்தி எந்தத் தடையுமில்லாமல் கிடைக்கும் என்பதால்தான்.

மனித சக்திக்கு ஆதாரமாய்த் திகழும் பிராணனே உடலில் ஒவ்வொரு அணுவுக்குள்ளும் இயங்கிக் கொண்டிருக்கிறது. பிராணன் உடலின் தொழிலாகவும், நரம்பில் ஓட்டமாகவும், இதயத்தில் துடிப்பாகவும், நுரையீரல் விரிந்து, சுருங்கவும், சுரப்பிகள் சுரப்பு நீரை சுரப்பதற்கும், உணவு செரிப்பதற்கும், கழிவுகள் வெளியேற்றப்படவும் எல்லாவற்றிற்கும் மேலாக எண்ணத்தின் போக்குக்கும், வலிமைக்கும் காரண, காரியமாகவும் விளங்குகிறது.
எவர் ஒருவர் உடலில் பிராணசக்தி குறைவில்லாமல் உள்ளதோ, அவர் முகத்தில் வனப்பும், உடலில் வலிமையும் மிகுந்து காணப்படும்.

நாம் சுவாசிப்பது மூச்சுவிடுவது என்பது நமது உயிரின் வடிவம். அதிலிருந்து எழும் பிராணசக்தி அதன் சூக்கும வடிவம். எனவேதான் உயிர் மூச்சு உள்ளவரை பிராணன் இருக்கும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

பிராணன் நம் உறுப்புகள் அனைத்தும் தோன்றுவதற்கு முன்பே கருவிலேயே உதயமாகிவிடுகிறது. பரம ஆத்மாவிலிருந்து உண்டாகும் பிராணன் ஜீவாத்மாவிடம் பரவி நிற்கின்றது.

ஆத்மாவின் நிழல் போன்றது பிராணன் என்று சொல்வார்கள். ஆகவேதான் பிராணன் நம் மனதையும், புலன்களையும் இயக்கும் சக்தி பெற்றுள்ளது.

பிராணனை முறைப்படுத்தி, கட்டுப்படுத்தி பயன்படுத்தினால் நெருப்பினால் உலோகம் தூய்மையடைவது போல ஜீவாத்மாவின் கரும வினைகளும் தொலைந்து ஜீவன் தூய்மையடையும்.

உடம்பிலும், இந்திரியங்களிலும் உள்ள அசுத்தங்கள் யாவும் நீங்கி அவைகளும் தூய்மையடையும். மனதை அழிவிலிருந்துக் காத்து காயசித்தி பெற்று மரணத்தை வெல்லலாம்.

“மூச்சு என்ன செய்யுமடா (என அலட்சியம் காட்டினால்) நரகில் தள்ளும், மோசமது போகாதே பாசன் (எமன்) கையில்”. – அகத்தியர்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...