Friday, June 7, 2019

புற்றுநோயை எதிர்த்து போராடும் பச்சை மிளகாய்...

புற்றுநோயை எதிர்த்து போராடும் பச்சை மிளகாய்...

பச்சை மிளகாயின் உடல் நலத்தைப் பற்றி பேசுகையில் நாம் அனைத்து வகையான அயல்நாட்டு மிளகாய்களைப் பற்றியும் கற்பனை செய்வோம்.

குடைமிளகாய் என்பது வளமையான ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த உணவு என்பது அனைவரும் நன்கு அறிந்து செய்தி தான்.

இருப்பினும் நாம் உணவோடு சேர்த்து உண்ணுகின்ற சாதாரண பச்சை மிளகாயை சாதரணமாக விட்டு விட முடியாது.

இந்திய பச்சை மிளகாயில் உள்ள உடல் நல பயன்கள் உங்களை அதிசயிக்க வைக்கும்.

சராசரியான இந்தியர்கள் பச்சை மிளகாய் உண்ணும் பழக்கத்தை கொண்டுள்ளனர். பச்சை மிளகாயின் உடல் நல பயன்கள், நாம் நம் உணவோடு உண்ணும் பொதுவான மிளகாய்களிலேயே உள்ளது.

பச்சை மிளகாயில் நமக்கு தெரியாத பல உடல் நல பயன்கள் அடங்கியுள்ளது.

அதனால் தான் உணவிற்கு மிளகாய் போடி சேர்ப்பதை விட, பச்சை மிளகாயை உண்ணுவதே நல்லதாகும்.

அதற்காக பச்சை மிளகாயை அதிக அளவில் சாப்பிட்டு உங்கள் வயிற்றை எரித்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை.

சொல்லப் போனால் சாதாரண மிளகாய்களே காரசாரமாக இருக்கும்.

பொதுவாக, இந்த மிளகாய்களை குழம்புகளில் போட்டு அதை மென்று உண்ணுவது வழக்கம். பச்சை மிளகாய் சேர்த்த காரசாரமான உணவுகள் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும்.

ஆனால் மிளகாய் காய்ந்து சிகப்பு வத்தலாக மாறி விட்டால், அதன் ஊட்டச்சத்து குணங்கள் அனைத்தையும் இழந்து விடும்.

இந்திய பச்சை மிளகாய் பற்றிய அருமையான உடல்நல பயன்கள் மற்றும் அதனை ஏன் உண்ண வேண்டும் பற்றி இப்போது பார்க்கலாமா?

பச்சை மிளகாயில் வளமையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளது.

இதனால் நம் உடலின் பாதுகாவலனாக அது உதவுகிறது.

இயக்க உறுப்புகளின் பாதிப்பிலிருந்து நம் உடலை காக்கிறது பச்சை மிளகாய். மேலும் இயற்கை நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து புற்றுநோயிலிருந்து காக்கும். இதுப்போக, வயதாகும் செயல்முறையும் குறையும்.

இந்திய பச்சை மிளகாயில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மிளகாயை பயன்படுத்துவதால் மூக்கடைப்பு சரியாவதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.

பச்சை மிளகாயில் உள்ள வைட்டமின் சி, நோய்களை எதிர்க்க இயற்கை நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.
பச்சை மிளகாயில் வைட்டமின் ஈ-யும் கூட அதிகமாக உள்ளது.

இது சில சரும எண்ணெய் சுரப்பதற்கு உதவி புரிந்திடும்.

அதனால் காரமான உணவை சாப்பிட்டால் நல்ல சருமத்தை பெறலாம்.
பச்சை மிளகாயில் கிடைக்கும் அனைத்து நன்மைகளும் கலோரிகளே இல்லாமல் நமக்கு கிடைக்கிறது.

மிளகாயில் கலோரிகளே கிடையாது.

அதனால் உடல் எடையை குறைக்க நீங்கள் டையட்டில் இருக்கும் போது கூட இதனை பயன்படுத்தலாம்.

ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் வரும் ஆபத்து அதிகம் என்பதால், அவர்கள் பச்சை மிளகாயை உண்ண வேண்டும்.

பச்சை மிளகாய் உண்ணுவதால் புரோஸ்டேட் புற்றுநோய் பிரச்சனைகள் வராமல் இருக்கும் என அறிவியல் ஆராய்ச்சிகள் கூறுகிறது.

பொதுவான இந்திய மசாலாக்களால் சர்க்கரை நோயாளிகள் பல பயனை அடைகின்றனர்.

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க பச்சை மிளகாய் உதவிடும்.

ஆனால் அதற்காக இனிப்பு பலகாரங்களை சாப்பிட்டு விட்டு பச்சை மிளகாயை சாப்பிட்டு கொள்ளலாம் என்றில்லை
பச்சை மிளகாயில் எண்ணிலடங்கா நார்ச்சத்துக்கள் உள்ளது.

தற்போது இருக்கும் பொதுவான எண்ணத்துக்கு மாறாக, பச்சை மிளகாய் உட்கொண்டால், உணவு செரிமானம் வேகமாக நடைபெறும்.

மிளகாய்கள் மூளைக்குள் என்டோர்ஃபின்ஸை உற்பத்தி செய்யும். இது உங்கள் மனநிலையை நன்றாக வைத்திருக்கும்.

அதனால் நல்ல காரசாரமான உணவை உண்ண பிறகு சந்தோஷமாக இருக்கிறீர்கள் என்றால் அது தற்செயலாக நடப்பதல்ல.
நமக்கு இன்னும் எப்படி என்று தெரியவில்லை,

ஆனால் பச்சை மிளகாயை உட்கொண்டால், நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் இடர்பாடு குறைகிறது.

புகைப்பிடிப்பவர்கள் இதனை கவனிக்க வேண்டும்.

காரணம் அவர்கள் தானே தினமும் தங்களின் நுரையீரலை புகைத்து கொண்டிருக்கின்றனர்.
பச்சை மிளகாயில் ஆன்டி-பாக்டீரியா குணங்கள் அடங்கியுள்ளது.

இந்த குணத்தினால் தொற்றுக்கள் ஏற்படாமல் காக்கிறது.

அதுவும் முக்கியமாக சரும தொற்றுகள்.

இந்திய பெண்களுக்கும் இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கும் இந்திய மிளகாய் ஆரோக்கியமானதாகும். பச்சை மிளகாயில் இயற்கையாகவே இரும்புச்சத்து நிறைந்துள்ளது.

🚶🏼HAROON SB

மூளை சாவு அடைந்தவர்களை அறுத்து விடாதீர்கள்.

மூளை சாவு அடைந்தவர்களை அறுத்து விடாதீர்கள்.

மூளை சாவு அடைந்தவர்களை வர்ம மருத்துவத்தின் மூலம் எளிதில் குணமாக்க முடியும்.
தங்களுக்கு தெரிந்து யாரேனும் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
For further details contact:
Master:S.SIVA KUMAR-
MA(yoga),Msc(varma),M.phil(varma&yoga),Palm leaf reader,Dip.in.Sidhdha,Herbal science,
Address:
YOGALAYAM & VARMALAYAM,
10/A,Ettiyappan Nagar Extension,
Laxmipuram,Kolathur,CHENNAI-600099,INDIA
E-mail:b sivakumar0018@gmail.com
Mobile: +91-9444749969,9445687969

ஒரே மருந்தில் உங்களை மூப்பு மற்றும் வியாதிகளிலிருந்து காக்க முடியும்!!

ஒரே மருந்தில் உங்களை மூப்பு மற்றும் வியாதிகளிலிருந்து காக்க முடியும்!! அந்த ராஜ மருந்து எது தெரியுமா?

தலை முடியில் ஆரம்பித்து, சுவாசம், சருமம், இதயம், செரிமானம், இரத்த பாதிப்புகள், சிறுநீரக, மூட்டு வலிகள் என்று பல்வேறு வியாதிகளின் பாதிப்புகளில் அல்லல் பட்டு வருகிறது, இன்றைய தலைமுறை!

மனச் சோர்வு கொள்ள வைக்கும் அலுவல் மற்றும் வாழ்க்கை முறை, ஒய்வுகளுக்கு முழு இடம் கொடுக்காமல், எப்போதும், இணைய இணைப்பில், மொபைல் பயன்பாட்டில் இருப்பது என்று நிகழ்கால சந்தோசங்களே, வருங்கால துன்பங்களாக மாறி விடுகின்றன.

கால இடைவெளிகள் இல்லாத அலுவலக நடைமுறைகள், வீட்டிற்கு வந்தாலும் தொடரும் வேலைகள், குடும்ப வாழ்வில், உணவில் கவனம் செலுத்த முடியாத அளவிற்கு உள்ள வாழ்க்கை முறை காரணமாக, உடல் மன நல பாதிப்புகள் ஏற்படுகின்றன.

கிடைக்கும் உணவுகளை அவசரமாக சாப்பிட்டு, வேலைகளில் ஈடுபடுவதும், பணிச் சுமையால் மன அழுத்தத்தில் இருப்பதும், மிக விரைவிலேயே, தலைமுடி உதிர்வில் ஆரம்பித்து, கண் பார்வை கோளாறு, உடல் தளர்ச்சி, இரத்த பாதிப்புகள் போன்ற வியாதிகளை ஏற்படுத்தி விடுகின்றன. இதன் விளைவாக, இளைய வயதிலேயே, அனைவரும் கண்ணாடி அணிவதும், தலைமுடி நரைத்து, அதிகம் உதிர்ந்து, முன் வழுக்கை ஏற்படுவது போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதோடு மட்டுமல்லாமல், இளைய வயதிலேயே, முதுமை நிலையை அடைந்து, உடல் மன அளவில் சோர்ந்து போய், நாட்களை சிரமத்துடன் கழிக்கின்றனர்.

பல வியாதிகளை உண்டு பண்ணும் தற்கால வாழ்க்கை முறையில், ஒரே மருந்தை எடுத்துக் கொள்வதன் மூலம், அனைத்து பாதிப்புகளையும் சரி செய்து, உடல் வளம் திரும்பப் பெற்று, மீண்டும் இளமைப் பொலிவுடன் வாழ முடியுமா? கேள்விகள், இதுபோல இன்னும் ஆயிரம் இருந்தாலும் சரி, அவற்றுக்கான பதில், ஒன்றே ஒன்றுதான்!. ஆம்!, இருக்கிறது!, நிச்சயம் முடியும்.

ஒரே மருந்தில், நீங்கள் கேட்கும் அனைத்தையும் பெற முடியும்!
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சித்தர்கள் மனிதர்களின் நல்வாழ்வுக்கு வழங்கிய அரும்பெரும் மருந்து, மூப்பு வியாதிகள் அணுகாமல், உடல் வளத்தை காத்து சீராக்கும், இராஜ மருந்து! உடலை வியாதிகளில் இருந்து காத்து, வலுவாக்கும் தன்மை மிக்க, காய கற்ப மருந்துகளில், உயர்வாக கூறப்படுவது! அதுவே, திரிபலா எனும் முக்கூட்டு மருந்து!

திரிபலா!
“மூர்த்தி சிறிதானாலும், கீர்த்தி பெரிது” என்பார்கள், பெயர் சிறிதாக இருந்தாலும், திரிபலாவின் பலன்கள் சொல்லில் அடங்காதது!
சித்த வைத்திய முறைகளில், அனைத்து மருந்துகளிலும் முதன்மையானதும், எல்லா மருந்துகளிலும் சேர்க்கப்படும் பெருமை மிக்கதும் திரிபலாவே!
திரிபலா என வட மொழி பெயர் கொண்டு விளங்கும் இந்த காய கற்ப மருந்து, மூன்று அதிசய மூலிகைகளின் கலவையாகும். மூப்பை தடுக்க அவ்வைக்கு கிடைத்த நெல்லிக்கனி, தான்றிக்காய் எனும் உடல் வெப்பம், கிருமி பாதிப்பு அகற்றும் மூலிகைக்காய் இவற்றுடன் “கடுக்காய் இருந்தால், பகைவன் வீட்டிலும் தைரியமாக உணவருந்தலாம்” எனும் சொல்லுக்கு ஆதாரமான சித்தர்களின் காய கற்ப மூலிகை கடுக்காய், இவை மூன்றும் சேர்ந்து உண்டான அற்புத கலவையே, திரிபலா எனும் கூட்டு மருந்தாகும்.

திரிபலா மனிதனுக்கு என்ன நன்மைகள் செய்யும்?
வியாதி எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடல் வியாதிகளின் பாதிப்புகளை விலக்கும் தன்மை மிக்கது. உடலின் வளர் சிதை மாற்றத்தில், முக்கிய பங்கு வகித்து, உடலில் செல்களின் உற்பத்தியைக் குறைத்து, செல்களின் இயக்கத்தை, சீராக்குகிறது.

சீரண கோளாறுகள் :
செரிமான பாதிப்புகள், குடல் இயக்கத்தை சீராக்கி, இரத்த கொழுப்புகளை கரைக்கும் கல்லீரல் சுரப்பை அதிகரித்து, உடலின் கார அமில நிலையை சீராக பராமரிப்பதில் பேருதவி புரிகிறது.

வயிற்றுப் பூச்சிகளை விரட்டும் :
வயிற்றின் விஷ பாதிப்புகளை நீக்கி, மலச்சிக்கல் கோளாறுகளை போக்கும் சிறந்த மலமிளக்கியாக செயலாற்றும், வயிற்றில் உண்டாகும் புழுக்கள் மற்றும் பூச்சிகளை வெளியேற்றி, மீண்டும் அந்த பாதிப்புகள் வயிற்றில் ஏற்படாதவாறு, குடலில் நச்சு தடுப்பு அமைப்பை உண்டாக்கி, உடல் நலம் காக்கிறது, திரிபலா.

ரத்த சோகையை குணப்படுத்தும் :
ஹீமோ குளோபின் எனும் இரத்த சிவப்பு அணுக்களை அதிகரித்து, இரத்த சோகை பாதிப்புகளை களையும் ஆற்றல் மிக்கது, கணைய இயக்கத்தை சரியாக்கி, இன்சுலின் சுரப்பு மூலம், உடலில் சர்க்கரை சம நிலையை உண்டாக்கி, சர்க்கரை பாதிப்புகளை நீக்கக் கூடியது, திரிபலா.

உடல் பருமனை குறைக்கும் :
உடல் கொழுப்பை உண்டாக்கும் செல்களை அழித்து, உடல் பருமனைக் குறைத்து, உடல் எடைக் குறைப்பில் முக்கிய பங்காற்றுகிறது, திரிபலா.சுவாச பாதிப்புகளை சரியாக்கி, இரத்த நாள அடைப்புகளைப் போக்கி, இரத்தத்தை சுத்தம் செய்து, சரும பாதிப்புகளை நீக்கும், சைனஸ் கோளாறுகளை சரி செய்து, உடலில் சளித் தொல்லைகளை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் ஆற்றல் மிக்கது.

ஒற்றைத் தலைவலி :
மைக்ரேன் உள்ளிட்ட தலைவலிகளுக்கு சிறந்த தீர்வாகி, வலிகளை போக்குகிறது. சமீபத்திய ஆய்வுகள், புற்று வியாதியை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியை தடுத்து, வியாதியை போக்கும் வல்லமை, திரிபலாவுக்கு இருப்பதாகக் கூறுகின்றன.

வயிற்றுப் புண்கள் :
மேலை மருந்துகள் அதிகம் எடுத்து, பசியின்மை மற்றும் வயிற்றுப் புண்களால் சிரமப்படுவோர், தினமும் உணவு சாப்பிட்டபின், இரு வேளை, திரிபலாவை தேனில் கலந்தோ அல்லது வெறுமனோ, சாப்பிட்டு தண்ணீர் பருகி வர, விரைவில் பாதிப்புகள் நீங்கும்.

சரும வியாதிகள் :
அனைத்து பாதிப்புகளுக்கும் திரிபலாவை சூரணம் எனும் பொடியாகவே, தினமும் சாப்பிட்டு வரலாம். இரவில் திரிபலா பொடியை தண்ணீரில் ஊற வைத்து, காலையில் பருகி வர, மலச் சிக்கல் நீங்கும், நரையை போக்கும், சரும வியாதிகளை விலக்கும்.

சொட்டை தடுக்க : தலைமுடி உதிர்வு மற்றும் சொட்டை எனப்படும் முடி அடர்த்தியாக கொட்டுதல் போன்ற பாதிப்புகளுக்கு, திரிபலா பொடியை சோற்றுக் கற்றாளை சதையுடன் கலந்து தலையில் தடவி ஊறவைத்து, தலையை அலசி வர, முடி உதிர்தல் நின்று, விரைவில் முடி அடர்த்தியாக வளரும். மேலும், திரிபலாவை ஊறவைத்த தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்து முழுகி வந்தாலும், தலை முடி உதிர்தல் நிற்கும் என்கிறது, சித்த மருத்துவம்.

பல்வலி: திரிபலாவை வெந்நீரில் கலந்து தினமும் வாய் கொப்புளித்து வர, பற்களில் ஏற்படும் பல் வலி, பல் சொத்தை போன்ற பாதிப்புகள், வாய் துர்நாற்றம் முதலியவை நீங்கும். திரிபலா நீரில் கழுவி வர, உடலில் உள்ள ஆறாத புண்களும் விரைவில் ஆறிவிடும்.

வாழை இலைக்குளியல்

வாழை இலைக்குளியல்

செய்வதால் போகப் போகும் உயிரைக்கூட திரும்ப மீட்க முடியும் என்கிறார்கள் இயற்கை ஞானி...

இதுக்கு பேருதான் வாழை இலைக் குளியல்.
வாழை இலையால நம்ம உடம்பு முழுவதும் மறைக்கப்பட்டு வெயிலில் ஒரு மணி நேரம் இருக்க வேண்டும்.

வாழை இலைக்குளியல் செய்வதால் போகப் போகும் உயிரைக்கூட திரும்ப மீட்க முடியும் என்கிறார்கள் இயற்கை ஞானிகள்.!
வாசியை சுத்தப்படுத்தும் இரகசியம் தெரிந்து விட்டால் உடலின் சேர்ந்து விட்ட அளவுக்கதிகமான கரியமில வாயுவை ஒரு மணி நேரத்தில் வெளியேற்றி விடலாமே.!

வாழை இலைக்குளியல்
செய்முறை

1. இயற்கை வழியில் விளைவித்த வாழை இலைகளை ஆளுக்கு தகுந்தாற்போலும் உருவத்திற்கு தகுந்தாற் போலும் சேகரித்துக் கொள்ள வேண்டும். சுமாராக ஒருவருக்கு  எட்டு இலைகள் வரை தேவைப்படும்.!
2.தரையில்  ஆறு வாழை நார், நூல் கயிறு அல்லது தென்னங்கயிற்றை வரிசையாக போட வேண்டும்.
3.அதன் மேல் நான்கு வாழை இலைகளை நன்றாக துடைத்து இலையின் தண்டை கையால்  லேசாக சதைத்து போடவேண்டும்.!
4.ஒரு காட்டன் டவலை சிறிது நனைத்து தலையில் மப்ளர்போல் சுற்றிக் கட்டிக் கொள்ள வேண்டும்.
5.நான்கு முதல் ஆறு டம்ளர் வரை நீரை குளியல் செய்யப் போகின்ற வருக்கு குடிக்க கொடுக்க வேண்டும்.!
6.பிறகு மெதுவாக அவரை வாழையில் படுக்க வைத்து விட்டு அவரின் மேல் நான்கு முதல் ஆறு இலைகளை  தலை முதல் பாதம் வரை வெளியே தெரியாமல் வைத்து நன்றாக மூடிவிடவும். சுவாசம் செய்வதற்காக மூக்கின் மேல் வைக்கும் இலையை மட்டும் லேசாக வெட்டிக் கொள்ள வேண்டும்.!
7.அப்படியே கயிறால் கட்டி படுக்க விடவும். இருபது முதல் 30 நிமிடம் வரை இப்படி இருக்க வேண்டும். உடல் முழுவதும் நன்றாக வேர்த்து இனிமேல் இருக்க முடியாது என்ற நிலை வந்தவுடன். கட்டுகளை அவிழ்த்து இலையை எடுத்துவிடவும்.
8.எழுந்தவுடன் பார்த்தால் கிட்டத்தட்ட இரண்டு முதல் நான்கு லிட்டர் வரை உடலில் இருந்து கெட்டநீர் வெளியேறி இருக்கும்.!
9.எழுந்தவரை நன்றாக ஐந்துமுறை சுவாசம் செய்ய வைத்து
தேன்  மற்றும் சிறிது இந்துப்புக்கலந்த  இரண்டு டம்ளர் நீரை குடிக்க கொடுக்க வேண்டும்.பிறகு 15 நிமிடம் கழித்து குளித்து விடலாம்.!

வாழைகுளியல் பலன்கள்
""''"'''"''"""""""'"'"'"
1.உடல் எடை சீராக இருக்கும்
2.உடலில் உள்ள கெட்ட நீரும் காற்றும் வெளியேறிவிடும்
3.தோல் நோய்கள் குணமாகும்
4.ஆஸ்துமா,இழுப்பு ,அடுக்குத்தும்மல், உடல் பருமன்  போன்ற நோய்கள் கட்டுப்படும்
5.சிறுநீரகம், கணையம், கல்லீரல் பலப்படும்
6.ஆண்மைக் குறைவு, கர்பபைக் கோளாறு குணமாகும்
7.உடலுக்கு புத்துணர்வும் புதிய நம்பிக்கையும் கிடைக்கும்
8.கை,கால் வலி, மூட்டுவலி, முதுகுவலி தண்டுவடக் கோளாறுகள் கட்டுப்படும்
9.பசியின்மை, அஜீரணக் கோளாறு, பித்த வாந்தி குணமாகும்
10.ஜாதகத்தில் சிலருக்கு ஏற்படும் மரண கண்டத்தில் இருந்து தப்புவிக்கும்.!

இது மட்டுமல்ல இன்னும் எத்தனையோ அற்புத பலன்களை உடையது வாழை இலைக்குளியல். ஏனெனில் உடலில் பிராணசக்தி துய்மையடையும் உடல், மனம், ஆன்மா அனைத்துமே தூய்மையடையும்.!

குறிப்பு: காலையில் 8 முதல் 11 மணிவரையும் மாலையில் 3 மணி முதல் 5 மணிவரையும் வாழையிலைக் குளியல் செய்ய ஏற்ற நேரம்.!
கீழே விரிப்பை விரித்து மொட்டை மாடி, வெட்டவெளியில் மட்டுமே குளியல் செய்ய வேண்டும். பெண்கள் சுற்றிலும் மறைவான வெட்ட வெளியில் செய்ய வேண்டும்.!
வாழை இலைக்குளியலுக்கு முதல்நாள் முற்றிலும் சமைக்காத உணவை உண்டு வாழை இலைக்குளியல் செய்தால் அதன் பலன் பல மடங்கு உயரும்.!
அதீத மன அழுத்தம், மனக்கோளாறுகள், கர்பிணிப் பெண்கள், இரத்த அழுத்தத்திற்காக பல ஆண்டுகள் மாத்திரை எடுப்பவர்கள், முற்றிய நிலையில் உள்ள இதய நோயாளிகள் வாழை இலை குளியல் எடுப்பதை தவிர்ப்பது நலம் பயக்கும். மற்றபடி 10 வயது முதல் நூறு வயதுவரை உள்ள ஆண், பெண் அனைவரும் வாழையில் குளியல் செய்து உடலில் பிராண சக்தியை அதிகரிக்கலாம்.!
வாழ்க வளமுடன்.!
நலம் பெருகட்டும் ....

கருப்பையை வலுப்பெறச் செய்யும் கறுப்புஉளுந்து.. !

கருப்பையை வலுப்பெறச் செய்யும் கறுப்புஉளுந்து.. !
  

இந்தியாவின் முக்கிய   உணவு, நோயாளிகளுக்கு பரிந்துரைக்கும் நல்ல உணவு ஆவியில் வேக வைக்கும் இட்லிதான். இது எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனால் இட்லி பரிந்துரைக்க காரணம் அதில் சேர்க்கப்படும் உளுந்தம் பயிறாலும் என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டுமே.

இயற்கை அழகைக் கொண்டிருக்கும் நாமே பாலீஷ் போட்டுக்கொள்வது போல நாம் சாப்பிடும் உணவு பொருள்களையும் பளபளவென பாலிஷ் போட்டு வரு வதையே  விரும்புகிறோம். பளபளக்கு வெள்ளை சர்க்கரை போலவே பளபளக் கும் பருப்பு வகைகள் தான் உணவை வெள்ளையாக்கி மிருதுவாக்கி சத்துக்களை தருகின்றன என்ற எண்ணம் நம்மில் பெரும்பாலோருக்கு உண்டு. குறிப்பாக உளுத்தம் பருப்பு. 

நீள் உருளை வடிவில் காணப்படும்  தோல் அகற்றப்படாத  உளுந்து கறுப்பு உளுந்து என்றழைக்கப்படுகிறது. இந்தத் தோலில்  பாக்டீரியாக்கள் நிறைந்திருக்கிறது. இவைதான் மாவை பக்குவமாக புளிக்க செய்கின்றன. மேலும் இதில் கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. ஆனால் நாம்  தோல் நீக்கிய  உளுந்தை பயன்படுத்தி  இதில் உள்ள சத்துக்களை இழந்துவிடுகிறோம்.

இன்றும் கிராமங்களில் கறுப்பு உளுந்து பயன்படுத்தும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. பெண்கள் எலும்பு வலுபெற கருப்பை வலுபெற இவைதான்  பிரதான உணவாக  நம் முன்னோர்களால் கொடுக்கப்பட்டது.   பெண்களும் ஆண்களும் குழந்தைகளும் என அனைவருக்கும் சத்து அளிக்கும் பலகாரம் உளுந்தங்களி எப்படி செய்வது பார்க்கலாமா?

தேவையான பொருள்கள்:
பச்சரிசி - 1 கப், 
கறுப்பு உளுந்து- 1 கப்,
கருப்பட்டி -ஒன்றரை கப்,
நல்லெண்ணெய் - 1 கப்,
ஏலத்தூள் - 1 டீஸ்பூன்.

செய்முறை:

பச்சரியை சுத்தம் செய்து மாவாக்கி வைக்கவும்.   கறுப்பு உளுந்தையும் சுத்தம் செய்து மாவாக்கி வைக்கவும். அகன்ற பாத்திரத்தில் இரண்டு மாவையும் கொட்டி நன்றாக கலக்கவும். கறுப்பு உளுந்தை  இலேசாக வாசம் போக வறுத்து சேர்த் தால் பச்சை வாசனை போகும்.அகன்ற பாத்திரத்தில் கருப்பட்டியை போட்டு கால் தம்ளர் தண்ணீர் விட்டு பாகு பதம் வந்ததும் மாவை  சிறிது சிறிதாக சேர்த்து  நன்றாக கலக்கி  நல்லெண்ணெய் சேர்த்துக்கொண்டே வரவேண்டும்.   மாவு வேகும் வரை நல்லெண்ணெயைச் சிறிது சிறிதாக சேர்த்து வர வேண்டும். களி பதத்துக்கு வந்ததும்  இறக்கி சிறு சிறு உருண்டைகளாக பிடித்து குழந்தைகளுக்கு தரலாம். அப்படியே கிண்ணத்தில் போட்டும் சாப்பிடலாம்.   சுவையிலும் குறை யிலும் சத்திலும் குறையில்லா களி இது.

இயன்றவரை இட்லி,  தோசை மாவு அரைக்கும் போது கறுப்பு உளுந்தை ஊற வைத்து  அரைத்து பயன்படுத்துங்கள். தேவையெனில் தோலை மேலாக நீக்கி கொள்ளலாம்.  சத்தில்லாத வெள்ளை  இட்லியை விட சத்துக்கள் நிறைந்த சற்று நிறம் குறைந்த இட்லி சுவையிலும் மிருதுத்தன்மையிலும்  முதன்மையா னதாக இருக்கும். செய்துபாருங்கள் நீங்களே உணர்வீர்கள்.

🚶🏼HAROON SB 👍🏼

இன்சுலின்_இயற்கையாய்_சுரக்க_எளியமுறை

#இன்சுலின்_இயற்கையாய்_சுரக்க_எளியமுறை :

* இன்சுலின் சீராக சுரப்பதினால் நீரிழிவு நோய் என்பது தானாக கட்டுக்குள் வந்துவிடும்...

* கணையத்தில் சுரக்கக்கூடிய இன்சுலினைத் தூண்டுவதற்கு பல்வேறு உணவுகள் இருக்கிறது. அதில் விசேசமாக சொல்லவேண்டும் என்றால் பாகற்காய்.

* பாகற்காயை அடிக்கடி சூப் செய்து சாப்பிடக் கூடியவர்களுக்கு கணையம் உற்பத்தி செய்யக்கூடிய இன்சுலினை அதிகமாக சுரக்கும். இன்சுலினைத் தூண்டக்கூடிய உணவுப்பொருட்களில் கருவேப்பிலை, லவங்கப்பட்டை, வெந்தயம், மாம்பருப்பு, ஓமம் இதெற்கெல்லாம் முக்கியமான பங்கு உண்டு.

* நாளமில்லா சுரப்பிகளை ஒழுங்குப்படுத்தக்கூடிய தன்மை பருத்திக்கொட்டைக்கு உண்டு. கணையம் சுரக்கக்கூடிய இன்சுலினை முறைப்படுத்துவதில் பருத்திக்கொட்டைக்கு நிகர் எதுவுமே இல்லை என்று சொல்லலாம்..
*  அதனால்தான் பண்டைய தமிழ்ச்சமுதாயத்தில் ஒவ்வொரு வீடுகளிலேயுமே வாரத்தில் ஒருநாள் பருத்தி பாலை காய்ச்சக்கூடிய தன்மை இருந்தது.

* வயிறு சார்ந்த பிரச்சனைகள், புண் ரணம் மாற்றக்கூடிய தன்மை எல்லாமே இந்தப் பருத்திப்பாலுக்கு உண்டு.

* ஹார்மோனைத் தூண்டக்கூடிய தன்மை பருத்திப்பாலுக்கு உண்டு. பருத்திக்கொட்டையை நன்றாக ஊறவைத்து அதை ஆட்டி பாலெடுத்து அந்தப் பாலுக்கு சமமாக தேங்காய் பால் சேர்த்து சுக்கு, ஏலக்காய் தட்டிபோட்டு சிறிது பச்சரிசி மாவையும் கரைத்து ஊற்றி இதமாக, பதமாக இந்தப் பருத்திப்பாலை செய்வார்கள்.

* இந்தப் பருத்திப்பாலைத் தொடர்ந்து சாப்பிடக்கூடியவர்களுக்கு கணையம் சுரக்கக்கூடிய இன்சுலின் பற்றாக்குறை வருவதில்லை, இன்சுலின் முறையாக சுரக்கும்..அதனால் சுகர் கட்டுக்குள் வரும்...

அக்குபிரஷர் மூலம் வர்ம புள்ளிகள் மூலம் சுகப்பிரசவம்

*Reel இல்ல Real*

நம் நேசம்(the symbol of confidence) அக்குபஞ்சர் & வர்மம் படித்து கொண்டிருக்கும் சகோதரி *R. ஜெயசிந்தியா* அவர்கள் தன் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்..இதோ

*அக்குபஞ்சர்/வர்ம மருத்துவத்தில் சுகப்பிரசவம் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 குருவே....*💐💐💐

என் சகோதரி PIMS  மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்...

மூன்று நாட்களுக்காக அவர் டெலிவரி வலி வருவதற்காக காத்திருந்தார்..

ஆனால்,  கர்ப்பப்பை வாய் 1 செ.மீ. கூட திறக்கவில்லை...

*நமது ஆசான் வர்மகலை வல்லரசரும் அக்குமருத்துவ களஞ்சியம்          Dr.பொன். அண்ணாதுரை அய்யா  அவர்களிடம்* அக்கு புள்ளிகளை கேட்டுத் தெரிந்து கொண்டேன்...

என் சகோதரிக்கு அதைப் பயன்படுத்தினேன். அவள் கால் அருகே உட்கார்ந்து புள்ளிகளை அழுத்தினேன்...

*நம்மால் நம்பமுடியாத அளவிற்கு 15 நிமிடங்களுக்குள் கர்ப்பப்பை  3 செ.மீ வரை திறந்தது..*

நான் முழு நம்பிக்கை பெற்று மீண்டும் மீண்டும் அழுத்தத் தொடங்கினேன்.

அக்குபஞ்சர் மிகவும் நன்றாக வேலை செய்தது, *அரை மணி நேரத்திற்குள்ளே அது 5-6 செ.மீ வரை திறக்கப்பட்டு* பிரசவ வலி ஏற்பட்டு, என் சகோதரி ஒரு அழகான அழகான ஆண் குழந்தையை ஈன்றெடுத்தாள்.
அவர் நீண்ட நேரம் போராடவில்லை, விரைவில் குழந்தையை  ஈன்றெடுத்தாள்....

*வர்ம மருத்துவம் மற்றும் அக்குபிரஷர்* ஆகியவற்றின் அற்புதமான ஆற்றலை அறிந்து வியந்தேன்..

மருத்துவர்கள் பிரசவ வலி வந்தவுடன் 3 மணியில் இருந்து 4 மணி நேரம் கழித்து தான் பிரசவம் நடைபெறும் *ஆனால் முக்கால் மணி நேரத்திலேயே சுகப்பிரசவம்* ஆனது எங்களுக்கு வியப்பை அளிக்கிறது என்று சொன்னார்கள்......

பிரசவம் முடிந்த பின் என் சகோதரி "அக்குபிரஷர் சிகிச்சை,  வர்ம மருத்துவம் மிகவும் நன்றாக வேலை செய்கிறது என்று சொன்னாள்"

*வர்ம புள்ளிகள்: கோனார் சன்னி,  அசோகுதிரி, உதிரி அண்டகாலம்*

*அக்குபிரசர் புள்ளிகள்*
*Ub40, St36, Sp6, Gb34, K3, Ub60*

அக்குபிரஷர் மூலம் வர்ம புள்ளிகள் மூலம் சுகப்பிரசவம்  அடைந்தமைக்கு மகிழ்ச்சி கொள்கிறேன்...
*எனது ஆசான் மருத்துவக் களஞ்சியம் பொன் அண்ணாதுரை  அவர்களுக்கு* மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்....

Mobile phone :
Hr. R. Jaya Sinthiya, Neyveli
8825533474
நன்றி

அக்குபிரஷர் மூலம் வர்ம புள்ளிகள் மூலம் சுகப்பிரசவம்

*Reel இல்ல Real*

நம் நேசம்(the symbol of confidence) அக்குபஞ்சர் & வர்மம் படித்து கொண்டிருக்கும் சகோதரி *R. ஜெயசிந்தியா* அவர்கள் தன் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்..இதோ

*அக்குபஞ்சர்/வர்ம மருத்துவத்தில் சுகப்பிரசவம் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 குருவே....*💐💐💐

என் சகோதரி PIMS  மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்...

மூன்று நாட்களுக்காக அவர் டெலிவரி வலி வருவதற்காக காத்திருந்தார்..

ஆனால்,  கர்ப்பப்பை வாய் 1 செ.மீ. கூட திறக்கவில்லை...

*நமது ஆசான் வர்மகலை வல்லரசரும் அக்குமருத்துவ களஞ்சியம்          Dr.பொன். அண்ணாதுரை அய்யா  அவர்களிடம்* அக்கு புள்ளிகளை கேட்டுத் தெரிந்து கொண்டேன்...

என் சகோதரிக்கு அதைப் பயன்படுத்தினேன். அவள் கால் அருகே உட்கார்ந்து புள்ளிகளை அழுத்தினேன்...

*நம்மால் நம்பமுடியாத அளவிற்கு 15 நிமிடங்களுக்குள் கர்ப்பப்பை  3 செ.மீ வரை திறந்தது..*

நான் முழு நம்பிக்கை பெற்று மீண்டும் மீண்டும் அழுத்தத் தொடங்கினேன்.

அக்குபஞ்சர் மிகவும் நன்றாக வேலை செய்தது, *அரை மணி நேரத்திற்குள்ளே அது 5-6 செ.மீ வரை திறக்கப்பட்டு* பிரசவ வலி ஏற்பட்டு, என் சகோதரி ஒரு அழகான அழகான ஆண் குழந்தையை ஈன்றெடுத்தாள்.
அவர் நீண்ட நேரம் போராடவில்லை, விரைவில் குழந்தையை  ஈன்றெடுத்தாள்....

*வர்ம மருத்துவம் மற்றும் அக்குபிரஷர்* ஆகியவற்றின் அற்புதமான ஆற்றலை அறிந்து வியந்தேன்..

மருத்துவர்கள் பிரசவ வலி வந்தவுடன் 3 மணியில் இருந்து 4 மணி நேரம் கழித்து தான் பிரசவம் நடைபெறும் *ஆனால் முக்கால் மணி நேரத்திலேயே சுகப்பிரசவம்* ஆனது எங்களுக்கு வியப்பை அளிக்கிறது என்று சொன்னார்கள்......

பிரசவம் முடிந்த பின் என் சகோதரி "அக்குபிரஷர் சிகிச்சை,  வர்ம மருத்துவம் மிகவும் நன்றாக வேலை செய்கிறது என்று சொன்னாள்"

*வர்ம புள்ளிகள்: கோனார் சன்னி,  அசோகுதிரி, உதிரி அண்டகாலம்*

*அக்குபிரசர் புள்ளிகள்*
*Ub40, St36, Sp6, Gb34, K3, Ub60*

அக்குபிரஷர் மூலம் வர்ம புள்ளிகள் மூலம் சுகப்பிரசவம்  அடைந்தமைக்கு மகிழ்ச்சி கொள்கிறேன்...
*எனது ஆசான் மருத்துவக் களஞ்சியம் பொன் அண்ணாதுரை  அவர்களுக்கு* மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்....

Mobile phone :
Hr. R. Jaya Sinthiya, Neyveli
8825533474
நன்றி

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...