Monday, April 22, 2019

புற்றுநோய்க்கு இயற்கை மருத்துவத்தில் தீர்வு -ஓர் அனுபவப்பகிர்வு.

புற்றுநோய்க்கு இயற்கை மருத்துவத்தில் தீர்வு -ஓர் அனுபவப்பகிர்வு.

பதிவிடும் நாள்:14.04.2019

என் பெயர் மகரஜோதி. எனக்கு வயது 42. 2014 ஏப்ரல் மாதம் எனக்கு மார்பகப்புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. 3A stage என்று சொன்னார்கள். கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டேன்.

முதலில் அறுவை சிகிச்சை செய்து இடதுபுற மார்பை நீக்கினார்கள். தொடர்ந்து கீமோதெரபி, ரேடியேசன் என்று ஏழுமாதங்கள் தொடர்சிகிச்சை.

அவ்வளவுக்குப்பிறகும் மீண்டும் கேன்சர் உடலின் பிற பாகங்களில் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என்பது அப்போது எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு 2016 செப்டம்பரில்  இடுப்புவலியும் கால்வலியும் வந்தது. அது கேன்சராக இருக்கலாம் என்றே தெரியாமல் இடுப்புவலிக்கும் கால்வலிக்கும் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டேன். ஆனால் ஆறுமாதங்கள் ஆகியும் வலி குறையவில்லை. எனவே புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொண்ட அதே மருத்துவரிடம் சென்றேன். பரிசோதனைகளுக்குப்பிறகு இடுப்பு மற்றும் தொடை எலும்புகளில் கேன்சர் கட்டி வளர்ந்திருப்பதை சுட்டிக்காட்டினார். கட்டியின் அளவு 4.4 மிமீ. என்றும் ரேடியேசன் மூலமாக அந்தக்கட்டியை ஓரளவு கரைக்கமுடியும் என்றும் சொன்னார் மருத்துவர். இப்போது கேன்சர் நான்காவது நிலையை (4th stage) அடைந்திருந்தது. ரேடியோதெரபிமூலம் அந்தக்கட்டி 3.2 மி.மீ. அளவிற்குக் குறைந்தது.

முற்றிலும் அந்தக்கட்டியை அகற்றுவதற்கு வழியில்லை என்றும் கேன்சர் மேலும் பரவாமல் இருக்க "Palbace" என்னும் மாத்திரையை எஞ்சிய வாழ்நாள் முழுவதும் எடுத்துக்கொள்ளவேண்டும் என்றும் சொன்னார் மருத்துவர்.

அந்த மாத்திரை ஒரு புட்டியின் விலை ரூ.95,000/-. அது ஒரு மாதத்திற்கானது. அந்த மாத்திரை விற்கும் நிறுவனம் நோயாளிக்கு ஒரு சலுகை வழங்குகிறது. தொடர்ந்து பத்து மாதங்கள் பணம் கொடுத்து இந்த மாத்திரை வாங்கினால் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் அந்த மாத்திரையை இலவசமாக வழங்கும். தெரிந்த மருத்துவர் ஒருவர்மூலம் (அவரும் Oncologist) மருந்து நிறுவனத்தினரிடம் பேசி, ரூ.76,000/- க்கு அந்த மாத்திரை வாங்க ஏற்பாடு செய்து மூன்று மாதங்கள் எடுத்துக்கொண்டேன்.

இதற்கிடையில் கருப்பை (Uterus) மற்றும் சினைப்பை (Ovaries) யிலும் சிறுசிறு கட்டிகள் இருப்பதாகவும் அவை கேன்சர் கட்டிகளாக மாற வாய்ப்பிருப்பதாகவும் மருத்துவர் சொன்னதால் கருப்பை மற்றும் சினைப்பை இரண்டையும் அறுவைசிகிச்சை செய்து அகற்றிவிட்டனர். இவற்றை அகற்றியதாலும் கேன்சருக்கு எடுத்துக்கொள்ளும் ஹார்மோன் மாத்திரைகளாலும் எலும்பு தேய்மானம் வரும் என்பதால் அதற்காக மாதம் ஒருமுறை ஒரு இன்செக்சன் போட்டுக்கொள்ளவேண்டியதிருந்தது.

ஆறுமாதங்கள் கழிந்தபிறகு மீண்டும் ஒரு ஸ்கேன் பரிசோதனை செய்ததில் இடுப்பில் இருந்த கட்டி 3.2 மி.மீ.இல் இருந்து 6.6 மி.மீ. வளர்ந்திருப்பதாக தெரியவந்தது. மருத்துவரிடம் கேட்டதற்கு நோயின் தன்மை அத்தகையது என்றும் இயன்றவரை கட்டுக்குள்வைப்பது மட்டுமே சாத்தியம் என்றும் சொன்னார்.

முற்றிலும் நம்பிக்கை இழந்த சூழ்நிலையில் புற்றுநோய்க்கான இயற்கை மருத்துவத்தின் சாத்தியம்குறித்து தேடத்தொடங்கினோம். சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, நியூரோபதி என்று பல இயற்கை மருத்துவ முறைகள்மூலம் புற்றுநோயிலிருந்து பலர் விடுபட்டிருக்கிறார்கள் என்று தெரியவந்தபோது ஒரு நம்பிக்கை பிறந்தது. அவ்வாறான பல முறைகளில் ஒன்று, கேரளா அட்டப்பாடி அருகே சிண்டக்கி என்ற கிராமத்தில் பழங்குடி மக்களால் வழங்கப்படும் "ஒற்றைமூலிகை" மருத்துவம். "வள்ளியம்மாள் குருகுலம்" என்ற பெயரில் எல்லாவிதமான கேன்சருக்கும் மருந்து கொடுக்கிறார்கள்.

முதல்முறை சென்றபோதே அங்கு வந்திருந்த பல நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களிடம் பேசியபோது அவர்களின் அனுபவம் மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது.

என்னை பரிசோதித்த மருத்துவர் சலீமா பத்து மாதங்கள் அவர்கள் கொடுக்கும் மருந்தை சாப்பிடவேண்டும் என்றும் எனக்குள்ள கேன்சரை முற்றிலும் குணமாக்க இயலும் என்றும் நம்பிக்கை தந்தார்.

பிப்ரவரி 2018 ல் முதல்முறை இருபது நாட்களுக்கு மருந்து கொடுத்தார்கள். ஆச்சர்யமான ஒரு மாற்றம் என்னவெனில் அதுநாள்வரையிலும் இடுப்பு மற்றும் தொடைப்பகுதிகளில் கேன்சர் கட்டிகள் இருந்ததால் என்னால் இடதுபுறம் திரும்பிப் படுக்க இயலாது. மேலும் தரையில் உட்காரும்போது காலை மடக்கவும் இயலாதிருந்தது. ஆனால் அந்த இருபது நாட்களிலேயே அந்தப்பகுதிகளில் இருந்த வலி சரியாகி என்னால் இயல்பாக இடதுபுறம் திரும்பிப்படுக்கவும் காலை மடக்கி உட்காரவும் முடிந்தது. அந்த அனுபவம் கொடுத்த உற்சாகத்தில் தொடர்ந்து பன்னிரண்டு மாதங்கள் அந்த மூலிகை மருந்தை சாப்பிட்டு வந்தேன்.

இதேவேளையில் இயற்கை மருத்துவம் குறித்த தொடர்ந்த தேடலில் திரு.ஹீலர் பாஸ்கர் குறித்து தெரியவந்தது. கோவைப்புதூரில் அவர் நடத்திவந்த "நிஷ்டை" நிலையத்தில் ஐந்துநாள் வகுப்பில் கலந்துகொண்டேன்.

அவர் கற்றுக்கொடுத்தபடி எனது உணவுமுறையிலும் வாழ்க்கைமுறைகளிலும் சில மாற்றங்களை செய்துகொண்டேன். உடல் கழிவுநீக்க முறையை தொடர்ந்து ஒருமாதம் மேற்கொண்டேன். உணவை மென்று உண்பது, வாயை மூடி உண்பது, வாரம் ஒருமுறை உண்ணாவிரதம், காலை உணவாக வெறும் பழங்களை மட்டுமே உண்பது, சில யோகாசனங்கள் இவற்றையும் தொடர்ந்து பின்பற்றி வந்தேன்.

திரு.ஹீலர் பாஸ்கர் அவர்கள் கற்றுத்தந்த இந்த வழிமுறைகளும் அவர் வலியுறுத்தும் "நேர்மறையான எண்ணங்கள் நேர்மறையான விளைவுகளை உருவாக்கும்" என்னும் வார்த்தைகள் கொடுத்த நம்பிக்கையும் கேன்சரிலிருந்து நான் மீள்வேன் என்ற மன உறுதியைக் கொடுத்தன. மேலும் அவரது வழிகாட்டலின்படி எனது வாழ்க்கைமுறையில் நான் மேற்கொண்ட மாற்றங்களும்கூட,  எனது நோயை வெல்ல ஒரு காரணமாய் அமைந்தது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

ஜனவரி 2019 ல் பன்னிரண்டு மாதங்கள் முடிவடைந்ததும் ஸ்கேன் செய்து பார்க்க முடிவுசெய்தோம். கோவையில் அதே மருத்துவமனையில் பரிசோதனை செய்வதைவிட வேறொரு மருத்துவமனையில் பரிசோதனை செய்தால் செகண்ட் ஒப்பினியன் வாங்கிய திருப்தியும் கிடைக்கும் என்று திருவனந்தபுரத்தில் உள்ள Regional Cancer Centre மருத்துவமனையில் PET scan எடுத்துக்கொண்டேன். பிப்ரவரி மாதம் எடுத்துக்கொண்ட ஸ்கேன் ரிப்போர்ட்டை வாங்க மார்ச் மாதம் சென்றோம். ஸ்கேன் ரிப்போர்ட்டை முழுவதும் பார்த்த மருத்துவர், உடலின் எந்த பகுதியிலும் கேன்சருக்கான அறிகுறியே இல்லை என்றார்.

இடுப்பு எலும்பில் 6.6 மி.மீ. இருந்த கட்டியும் இல்லை. மேலும் அப்போது சிறிய அளவில் கல்லீரல் பகுதியிலும் கேன்சர் கட்டிகள் தென்படுவதாகச் சொல்லியிருந்ததும் இப்போது இல்லை.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல இன்னொரு செய்தியையும் சொல்லவேண்டும். எலும்புகளில் கேன்சர் பரவி நான்காம் நிலையை எட்டியபோது மருத்துவர் என் கணவரைமட்டும் தனியே அழைத்து சொன்னது -"இன்னும் அதிகபட்சம் இரண்டு வருடங்கள்தான் உங்கள் மனைவியின் வாழ்நாள்". அவர் சொல்லி சரியாக இரண்டுவருடம் முடிகிறது. ஆனால் முன்னைவிட இப்போது ஆரோக்கியமாக இருக்கிறேன். கேன்சர் நோயிலிருந்து விடுபட்டும் இருக்கிறேன். இயற்கை/ மூலிகை மருத்துவத்தில் இது சாத்தியம் என்பதற்கு நானே வாழும் உதாரணம்.

இந்த செய்தி அனைவருக்கும் பயன்படவேண்டும் என்ற நோக்கத்தில் இதனைப்பதிவு செய்கிறேன்.

கேரளாவில் மருந்து வழங்குமிடம்:

வள்ளியம்மாள் குருகுலம்,
சிண்டக்கி கிராமம்,
அட்டப்பாடி தாலுகா,
பாலக்காடு மாவட்டம்.

கோவையிலிருந்து ஆனைகட்டி வழியாக 2.30 மணிநேர பயணம்.

இங்கேயே பொன்னியம்மாள் குருகுலம் என்ற பெயரில் அதே குடும்பத்தைச் சேர்ந்த இன்னொருவரும் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கிறார். கேரளாவின் வயநாட்டிலும் கர்நாடகாவில் சிமோகா மாவட்டத்தில் நரசிம்மபுராவிலும் புற்றுநோய்க்கு மூலிகை சிகிச்சை அளிக்கப்படுகிறது.

எனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களோ அவர்களது உறவினர்களோ நம்பிக்கை இழந்துவிடவேண்டாம். இதுபோன்ற மாற்று மருத்துவ வழிமுறைகளை முயற்சிக்கலாம்.

குறிப்பு: சர்க்கரை நோய், கிட்னி நோய்களுக்கும் இந்த மருத்துவத்தில் தீர்வு கிடைக்கிறது.

மேலும் தகவல் தேவைப்பட்டால் எனது அலைபேசிக்கு அழைக்கவும்.

98948 67008
93842 07709

நன்றி.

Thursday, April 18, 2019

மதுமேக சூரனி* *5000 ஆண்டுகள் பாரம்பரியம்*

*மதுமேக சூரனி*

*ஸ்ரீஸத்குரு வாழ்வியல் மையம்*

               *மதுமேக சூரனி*

   *5000 ஆண்டுகள் பாரம்பரியம்*

  *மூன்று தலைமுறை அனுபவம்*

      *40 ஆண்டுகள் ஆராய்ச்சி*

          *கிடைத்தற்கரிய கனி!*              
  *வாழ்வுதனில் வசந்தமே இனி!!*  *கணையத்திற்கு இல்லை பினி!!!*
     *அஃதே மதுமேகச் சூரனி!!!!*

*சேர்ந்துள்ள பொருட்கள்:*

வெந்த அய தாவரம், காட்டு கருப்பு சீரகம், குரு மூலி
*இயற்கை மூலிகைகளின் செறிவூட்டப்பட்ட கலவை*

*பயன்படுத்தும் முறை:*

உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு மூன்று வேலையும் ஒரு தேக்கரண்டி முதல் இரண்டு தேக்கரண்டி வரை 50 மில்லி வெந்நீரில் கரைத்து குடிக்கவும் பின்பு *ஒரு மணி நேரம் வரை ஏதும் சாப்பிடாமல் இருந்து உணவு சாப்பிடவும்*

*தீரும் நோய்கள்:*

*தீராத சர்க்கரை நோய்* மற்றும் சர்க்கரை நோயினால் ஏற்பட்ட பாதிப்புகள்
*உடல் எடை குறைவு
சத்துக்குறைபாடுகள்
கண் பார்வை மங்குதல்
அதிக பசி
அடிக்கடி சிறுநீர் கழித்தல்
உடல் அசதி மற்றும் வலி
நரம்பு மண்டல பலஹீனங்கள்
பாத எரிச்சல்
மலச்சிக்கல்
உடல் சோர்வு
உற்சாகமின்மை
தூக்கமின்மை
மனப் பதட்டம்
இருதய படபடப்பு
ஆண்மை குறைவு
பெண்மைக் குறைவு
கல்லீரல் பலஹீனம்
சிறுநீரக பலஹீனம்*
கோளாறுகள் இவைகள் அனைத்தும் தவிர்க்கப்படும் உடல் வன்மை பெறும்

*குறிப்பு:*

*ஆங்கில மருந்துடன் சாப்பிடலாம் எந்த பாதிப்பும் இல்லை*

ஆங்கில மருந்து உபயோகிப்பவர்கள் இரு வாரங்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்து தத்தமது மருத்துவர்கள் ஆலோசனைப்படி ஆங்கில மருந்தினை குறைத்து கொள்ளவும்

ஆங்கில மருந்து எடுத்துக்கொள்வதால் ஏற்படும் *பக்க விளைவுகள் மற்றும் ஊர் விளைவுகள் முற்றிலும் குணப்படுத்த பட்டு நோய் முக்தி கிடைக்கும்*

*பத்தியம் இல்லாத பக்கவிளைவுகளற்ற மிகச்சிறந்த துணை உணவு*

*இதனுடன் வெள்ளொளி தைலத்தை கண்ணுக்கு உபயோகித்து வர அதிசய குணம் கிடைக்கும்*

தொடர்புக்கு

*ஸ்ரீ ஸத்குரு வாழ்வியல் மையம்*
*திண்டுக்கல்*
83 44 00 7714 WhatsApp
73 39 09 5467

இத 1 ஸ்பூன் சாப்பிட்ட 40 வகை நோய்கள் குணமாகுமாம்! தெரியுமா?

இத 1 ஸ்பூன் சாப்பிட்ட 40 வகை நோய்கள் குணமாகுமாம்! தெரியுமா?

சீரகம் = சீர்+அகம். தமிழ்ச் சித்தர்கள் எதையும் காரணப் பெயர் கொண்டே அழைப்பர். சிலவற்றைச் சூட்சமப் பெயர் (அவர்களுக்கே விளங்கும் குறிச்சொல்/ மறைபொருள்/ பரிபாசை) கொண்டும் அழைப்பர். இங்கே அகத்தைச் சீர் செய்வதால் தமிழ்ச்சித்தர்களால் சீரகம் என அழைக்கப்பட்டது. அகத்தைச் சீர்செய்யும் சீரகம் (Cuminum cyminum) ஒரு மருத்துவ மூலிகையாகும்

இந்தியாவில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது. உலகம் முழுவதும் முக்கியமாக அரேபியாவில் மசாலா பொருள்களில் இது நீண்ட காலமாக உபயோகிக்கப்படுகிறது. குமின் என்ற வார்த்தையே அராபிய வார்த்தையாக கூறப்படுகிறது. சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்து உபயோகிக்கப்பட்ட வரலாற்றுச் சான்று சிரியாவில் இருந்து கிடைத்துள்ளது

தமிழர்கள் இதை நீண்ட நெடுங்காலமாக உபயோகித்து வந்தனர் என்பது தெரிகிறது. திருஅண்ணாமலையில் கிடைத்த ஒரு கல்வெட்டில் நெல்லுக்கு பதிலாக சீரகம் அடைக்காய் முதலிய வாங்கிய செய்தி கிடைத்துள்ளது

எட்டுத்திப்பிலி ஈரைந்து சீரகம்
கட்டுத்தேனில் கலந்துண்ண
விக்கலும் விட்டுப்போகுமே
விடாவிடில் நான் தேரனும் அல்லவே

என தேரையர் என்ற சித்தர் சவால் விட்டுக் கூறுவதாக பாடல் ஒன்று உண்டு.

சீரகத்திலிருந்து 56% Hydrocarbons, Terpene, Thymol போன்ற எண்ணெய்ப் பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இதில் Thymol வயிற்றுப்புழுக்களை அழிக்கவும், கிருமிநாசினியாகவும் – anthelminticagaint in HOOK WORM infections,and also as an Antiseptic பல மருந்துக்கம்பனிகளின் மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.

சீரகத்திற்கு ஆங்கிலத்தில் cumin என்று பெயர். இந்தியில் ஜீரா, தெலுங்கில் ஜீலகாரா, கன்னடத்தில் சீரகே, மராத்தியில் சிரே, குஜராத்தியில் ஜிரு, அசாமியில் கொத்த ஜீரா, ஒரியாவில் ஜிர்கா, காஷ்மீரியில் ஜையுர் என்று பெயர்.

நற்சீரகம், பெருஞ்சீரகம், கருஞ்சீரகம், காட்டுச்சீரகம், பிலப்பு சீரகம், நட்சத்திர சீரகம், செஞ்சீரகம் என ஏழு வகை உண்டு. சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு பங்கு வகிக்கிறதுசெரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து.

பொதுவாக சீரகம்
வெப்பமுண்டாக்கி- stimulant
பசிதூண்டி- stomachic
துவர்ப்பி- astringent
வாய்வு அகற்றி- carminative

சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்

திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.

அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.

மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும்.

சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

நல்லெண்ணெயில் சீரகத்தை போட்டுக் காய்ச்சி, எண்ணெய் தேய்த்து குளித்தாலும் பித்தம் நீங்கும்.

சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச்செய்யும்.

உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.

சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும்.

சீரகத்தையும், உப்பையும் சேர்த்து மென்று தண்ணீர் குடித்தால் வயிற்று வலி உடனே தீரும்.

ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.

சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்த்துப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.

சீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இரத்த மூலம் தீரும்.

சீரகத்துடன் கற்கண்டை கலந்து மென்று தின்றால் இருமல் போகும்.

சீரகப்பொடியோடு தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் அகலும்.

சீரகத்தை அரைத்து மூல முளையில் பூசினால் மூலம் வற்றும்.

சீரகத்தை அரைத்து உடம்பில் பூச அரிப்பு நிற்கும்.

சீரகத்தை மென்று தின்றாலே, வயிற்று வலி நீங்கி செரிமானம் நன்றாக ஏற்படும்.

சீரகப்பொடியோடு தேன், உப்பு, நெய் சேர்த்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால் விஷம் முறியும்.

சீரகத்தை வறுத்து சுடு நீரில் போட்டு பால் கலந்து சாப்பிட பசி கூடும், மிளகுப்பொடியோடு கலந்து காய்ச்சி வடிகட்டிக் குடித்தால் அஜீரணம், மந்தம் நீங்கும்.

சீரகம், வில்வவேர்ப்பட்டை இரண்டையும் அரைத்து, பாலில் கலந்து காலையில் குடித்து வர தாது பலம் கூடும்.

கருஞ்சீரகம்
குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும். கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி எண்ணெயில் ஊறவைத்துப் பிறகு மூக்கில் சொட்டுகள் விட்டால் கடுமையான ஜலதோஷம் நீங்கும். கபம், குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நல்ல பலன் தரும்.

கருஞ்சீரகத்தைத் தூளாக்கி தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் சிறுநீரகக் கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும். மாதவிடாய்ப் போக்கையும் சீராக்கும்.

கருஞ்சீரகப் பொடியை ஒரு துணியில் கட்டி உறிஞ்சி வந்தால் தடிமனுக்கு நல்லது.

தாய்ப் பாலில் ஏழு கருஞ்சீரக வித்துகளை ஊறவைத்துப் பொடியாக்கி உறிஞ்சி வந்தால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.

5கிராம் கருஞ்சீரகத்தைத் தண்ணீருடன் கலந்து சாப்பிட்டால் சுவாசக் கோளாறு சீரடையும்.

கருஞ்சீரகத்தை அரைத்துப் பத்துப் போட்டால்தலைவலிக்கு நல்லது.

கருஞ்சீரகத்தை வினிகரில்(vineger) வேகவைத்து வாய் கொப்புளித்தால் பல் வலிக்கு நல்ல பலன் கிடைக்கும்.

கரும்பித்தம் மற்றும் கபத்தால் ஏற்படும் அஜீரணக் கோளாறை அகற்றுவதும் கருஞ்சீரகத்தின் தனிச் சிறப்பாகும்

கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி மெழுகு மற்றும் அல்லி எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்தால் தலைமுடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.

கருஞ்சீரக எண்ணெய் பக்கவாத நோய்க்குச் சிறந்த மருந்தாகும்.

நாய்க்கடி, சிரங்கு, கண்வலி, போன்ற நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும்.

உடல்நலம் காப்போம்

மலச்சிக்கல் தீர எளிய வழிகள்

மலச்சிக்கல் தீர எளிய வழிகள்

1-வாரம் ஒரு முறை எண்ணை தேய்த்து தலை முழுகுதல்.இது உடலில் உள் சூட்டை தணிக்கும்.மேலும் கண் பார்வை தெளிவாகும்.மூலாதார சூட்டையும் தணிக்கும்.

2 -தினமும் உணவில் ஏதாவது ஒரு கீரை வகையை  சேர்க்கவும்.மேலும் தண்ணீர் நிறைய குடியுங்கள்.

3 -தினமும் பச்சை காய்கறிகள்,பழங்கள் ஏதாவது ஒன்றை உணவாக சேர்த்து வரவும். இதில் நார்ச்சத்து மிகுந்துள்ளது.

4 -இரவு உணவாக பாஸ்ட் புட் மற்றும் புரோட்டா போன்றவைகளை தவிர்த்து ஆவியில் வேகும் உணவான இட்லி,புட்டு,இடிஆப்பம் போன்றவைகளை உண்ணவும்.
இதனுடன் வாழைப்பழம் ஒன்றிரண்டு சாப்பிடலாம்.

மேற்கண்ட முறைகளை கடை பிடித்து வந்தால் மிக எளிதாக மலச்சிக்கல் பிரச்சினை தீரும்.உடலின் உள் சூடும் தணியும்.

சித்த மருந்துகளில் மலச்சிக்கலுக்கு மருந்து :    
1- கடுக்காய் -       விதை நீக்கி சதைப்பகுதி மட்டும்.
2 -நெல்லிக்காய் -விதை நீக்கி சதைப்பகுதி மட்டும்.
3 -தான்றிக்காய் - விதை நீக்கி சதைப்பகுதி மட்டும்.
இவைகள் மூன்றையும் ஒரே எடை அளவு எடுத்து இடித்து ஒன்று சேர்த்துக்கொள்ளவும்.

இதுவே "திரிபலா சூரணம்"எனப்படும்.இதனை இரவில் படுக்கும் போது அரை டீஸ்பூன் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து குடிக்கவும்.

இதனால் காலையில் மலம் இலகுவாக வெளியேறும்.வாத,பித்த,கப நாடிகள் சமநிலைப்படும்.உடலில் நோயெதிர்ப்பு சக்தி பெருகும்,இரத்தம் விருத்தியாகும்.

_🌻🌻🌻🌻🌻🌻🌻Venkatraman

மாரடைப்பை தடுக்கும் இஞ்சி

இஞ்சி..

மாரடைப்பை தடுக்கும் இஞ்சி

உணவுகளில் பயன்படுத்தப்படும் இஞ்சி பல்வேறு மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொப்பை கரைந்து விடும். இஞ்சி சாறில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.

இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும். இஞ்சியை வதக்கி தேன் விட்டு கிளறி நீர் விட்டு கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.

இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்த பின் நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.

இஞ்சியில் உள்ள சில மருத்துவத் தன்மைகள் இரத்தக் குழாய்களில் நேரிடும் இரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பைத் தடுப்பதாக தற்போது விஞ்ஞானிகள் ண்டுபிடித்துள்ளனர்.

ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி நசுக்கி, ஒரு கோப்பை பாலில் இட்டுக் காய்ச்சி வடிகட்டி, அதனுடன் கற்கண்டு சேர்த்து குடித்துவர, இருமல், சளி தொல்லைகள் நீங்கும்.

இனி இருமல், சளி வந்தால் இந்த முறையை பின்பற்றி பாருங்கள் உடனடி பலன் கிடைக்கும். உடலில் எந்தக் கோளாறையும், வலிகளையும் போக்கும் வல்லமை படைத்தது இயற்கை மூலிகைகள் தான்.

இயற்கையின் ஓர் கொடை தான் இந்த இஞ்சி, மூட்டு வலி உட்பட எந்த வலியையும் போக்கும் தன்மை இஞ்சிக்கு உண்டு..,l

🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 Venkatraman

இந்த எண்ணெயை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்துங்க தலைமுடி உதிர்வது நின்றுவிடும்.!

இந்த எண்ணெயை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்துங்க தலைமுடி உதிர்வது நின்றுவிடும்.!

👇👇👇👇👇👇

https://bit.ly/2VbIKN7

வீடியோ பார்க்கும் உறவுகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். இந்த பதிவை At least ஒரு Whatsapp Group-க்காவது Share பண்ணுங்க. இது மற்ற பல நண்பர்களுக்கு உதவலாம்

இருதயம்சார்ந்த நோய்கள் வராமல் தடுக்க

[18/04, 07:01] +91 90431 99315: TB.காசம் இருமல் ஈளை இலைப்பு கஷ்ட சுவாசம் தீர மருத்துவம் தாளக கட்டியை கல் சுன்னாம் பின் மேல் வைத்து கழுதையின் சிறுநீர் விட்டு 15 தடவை தாளிக்க சுத்தியாகும் பின் அதை பிரம்மி சமூலத்தின் சாற்றால் ஏழு நாட்கள் அரைத்து சிறு பில்லைகள் செய்து காய வைத்து சிறிய மண் அகல்களில் ஒன்று விதம் வைத்து மண் சீலை செய்து | 10 வரட்டியில் தனித்தனியே புடமிடபற்பமாகும் பின் 2 வரட்டியில் தனித்தனியே புடமிட கருப்பாகும் பின் அதை 3 வரட்டியில் புடமிட விபூதி போல் ஆகும் அதில் ஒன்று அல்லது | இரன்டு அரிசி எடை பற்பத்துடன் ஆடாதோடை முசு முசுக்கை தூதுவேளை இவைகளில் ஒரு சூரணத்தில் கலந்து தினம் இரு வேளை தேனில் கலந்து சாப்பிடவும் ஆசான் பாலசுப்ரமணி அவர்களின் அனுபவ முறை மரு.ரமேஷ் சிவன் 9043 199315 கும்மிடிப்பூண்டி

**

[18/04, 08:01] +91 90431 99315:

**

இருதய வால்வு சுருக்கம் சரி படுத்த மருத்துவம்

தாமிர கட்டு செந்தூரம் ஒரு அரிசி எடைமான் கொம்பு பஸ்பம் 2 அரிசி எடை 5 கிராம் திரிகடுகு சூரணம் கலந்து தேனில் குழைத்து காலை மாலை சாப்பிட்டு வரவும் செம்பருத்தி பூ ெசந்தாமரை பூ மருதம் பட்டை ஆளி விதை கழற்ச்சிக்காய் சதகுப்பை ஆவாரம் பூஇவைகளை சம் அளவு எடுத்து சூரணம் செய்து கசாயம் வைத்து குடித்து வரவும் நொச்சி இலை சாற்றை மார்பின் மேல் தடவி வரவும் | மருரமேஷ் சிவன் 9043 199315 கும்மிடிப்பூண்டி

[18/04, 08:01] +91 90431 99315:

இருதயம்சார்ந்த நோய்கள் வராமல் தடுக்க

தேவையற்றகொழுப்புக்கள் கரைய உடல் எடை குறைய மருத்துவம்250 கிராம் பூண்டு மேல் தோல் உரித்து நன்றாக அரைத்துஓர் கன்னாடி பாட்டலில் போட்டு 250 மில்லி தேன் கலந்து காலை இரவு உணவுக்கு முன் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர இருதயம்சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கும் திடிரென நெஞ்சுவலி ஏற்பட்டால் ஒர் முட்டையின் வெள்ளைக் கருவும் சம அளவு தேன் கலந்து சாப்பிட சரியாகும்மரு.ரமேஷ் சிவன் 9043 199315 கும்மிடிப்பூண்டி

Wednesday, April 17, 2019

உங்கள் உடம்பை டயாலிசிஸ் செய்யாமல் கவனமாக பார்த்து கொள்ளுங்கள்...!!!!

உங்கள் உடம்பை டயாலிசிஸ் செய்யாமல் கவனமாக பார்த்து கொள்ளுங்கள்...!!!!

இப்போ பிரபலமான மருத்துவமனைல ஒரு ஷிப்டுக்கு டயாலிஸிஸ் பண்றவுங்களோட எண்ணிக்கை கிட்டதட்ட 100 பேர்...

ஒரு நாளைக்கு மொத்தம் 4 ஷிப்ட்..

ஒரு மருத்துவமனைல ஒரு நாளைக்கு 400 பேர் டயாலிஸிஸ் பண்றாங்க...

அப்போ ஒட்டு மொத்தமா எவ்வளவு பேருக்கு
கிட்னி பாதிப்பு இருக்குமுன்னு கணக்கு பண்ணிக்கோங்க..

ஒரு டயாலிஸிஸ்க்கு 2500 ரூபாய்.

வாரம் 2 அல்லது 3 தடவை பண்ணனும்...

அதுவும் ஆயுள் முழுவதும்..

என்ன தலை சுத்துதா..

சரி டயாலிஸிஸ் பண்ண வருகிறவர்கள் எல்லோரும் வயசானவுங்கன்னு நினைச்சீங்களா?

அதுவும் இல்லை..

5 வயது குழந்தைல இருந்து +2 க்கு எக்ஸாம் எழுத போற பையன், கை குழந்தையோட வர்ற தாய் என வயது வித்தியாசம் இல்லாம பாதிக்கப்பட்டு இருக்காங்க..

+2 பையன் டயாலிஸிஸ் பண்ணீட்டு எக்ஸாம் எழுத போறான்..

நான் 1000 க்கு மேல மார்க் வாங்குவேன்கான்னு சொல்றான்..

எதனால கிட்னி பெயிலியர்ன்னு அவுங்க அம்மாகிட்ட கேட்டேன்...

சிறு வயதுல இருந்தே அதிகமான மாத்திரை (காய்ச்சல், ஆஸ்துமா) கொடுத்து இருக்காங்க.

கல்லூரி விரிவுரையாளர் ஒரு பெண் கல்யாணம் ஆகி 5 வயது பையன் இருக்கான்..

எதனால இந்த பிரச்சினைன்னு கேட்டேன்...

காலேஜ்ல பாத்ரூம் நல்லா இருக்காதாம்...

யூரினை அடக்கிட்டே இருப்பாங்களாம்...

அதனால கிட்னி பெயிலியர்.

மூச்சுத் திணறல் வந்து அவுங்க படும்பாடு வெளிய சொல்ல முடியாது..

பெரிய கொடுமை😓 

பிரச்சினை வந்துட்டா தீர்வு இல்லை...

சரி வராம தடுக்க சில விஷயங்களை சொல்கிறேன்...

1 எப்பவுமே சிறுநீரையோ, மலத்தையோ அடக்காதீங்க

2. தாகம் எப்பவெல்லாம் எடுக்குதோ அப்பவெல்லாம் தண்ணீர் குடிங்க

3. பசித்தால் மட்டும் உணவை எடுத்துக்கோங்க

4. உணவை உமிழ்நீரோட சேர்த்து நல்லா வாயை மூடி மென்று சாப்பிடுங்க..

5. கடைகளில் விற்கின்ற பாக்கெட் அயோடின் உப்பை பயன்படுத்தாதீங்க..

தெருவுல கடல் உப்பு கொண்டு வருவாங்க.. அதை பயன்படுத்துங்க

6. அல்லது இந்துப்பை பயன்படுத்துங்க

7. பிஸ்கட், பாக்கெட்ல அடைச்சது.. கூல்ட்ரிங்ஸ் அறவே தவிர்த்திடுங்க

8. வசதி இருக்குன்னு கடையில் போய் இனிப்பு பண்டங்கள்,  நூடுல்ஸ், செயற்கை நிறமூட்டி உள்ள எந்த பொருளையும் வாங்கி சாப்பிடாதீங்க...

10. ரசாயனம் கலக்காத இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட உணவுகளை மட்டுமே உண்ணுங்க...

11. மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறி, பழங்கள் வாங்குவதை அறவே தவிர்த்திடுங்க

12. வலி மாத்திரைகளை தவிர்த்திடுங்க...

தலைவலி காய்ச்சல் வந்தா தாங்கி பழகுங்க..

வீட்டு வைத்தியமே பாருங்க.

13. உடல் கழிவுகளை சரியான முறையில் வெளியேற்றுங்க..

14. டென்ஷன் இல்லாம, சரி விகித உணவு எடுப்பதன் மூலமே பல்வேறு நோய்களை தவிர்க்க முடியும்

தயவு செய்து இந்த பதிவையும் கடந்து போய் விடாமல் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு சொல்லுங்க..

ஆரோக்கியமா வாழுங்கள்.

உணவே நம் மருந்து.

Saturday, April 13, 2019

ரஃபேல் - தொடர்ந்து பொய் பேசி நாட்டை முட்டாளாக்கும் ராகுல் காந்தி.

ரஃபேல் - தொடர்ந்து பொய்  பேசி நாட்டை முட்டாளாக்கும் ராகுல் காந்தி.

கத்தார் நாடு  24 ரஃபேல் போர் விமானங்களை வாங்கியது. அதற்காக கத்தார் கொடுத்த தொகை 6.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
ஒரு ரஃபேல் போர் விமானத்தின் விலை: 0.2625 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

இப்போது இந்தியாவின் ரஃபேல் ஒப்பந்தத்திற்கு வருவோம். இந்தியா 36 ரஃபேல் போர் விமானங்களை 7.8 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியுள்ளது. இந்தியா ஒரு ரஃபேல் போர் விமானத்திற்கு கொடுத்துள்ள விலை 0.2166 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

அதாவது கத்தார் நாடு வாங்கிய விலையிலேயே இந்தியா வாங்கியிருந்தால் நமக்கு 9.45 பில்லியன் டாலர்கள் செலவு ஆகியிருக்கும். ஆனால் இந்தியா கொடுத்தது வெறும் 7.8 பில்லியன் டாலர்கள் மட்டுமே.

இந்த விஷயத்தில் மட்டுமே மோடி அரசு சேமித்துள்ள தொகை சுமார் 11,200 கோடிகள்!!!

ஆனால் ராகுல் காந்தி கும்பல்களுக்கு இது ஊழல்.... தேசத்தின் செலவு 11,200 கோடிகளை மிச்சம் செய்த மோடி ஊழல்வாதி ஆனால் காற்றை விற்று 1.75 லட்சம் கோடிகளும் கரியை விற்று மேலும் சில லட்சம் கோடிகளும் கொள்ளையடித்தவர்கள் நேர்மையான ஏழை பங்காளர்கள்.

இவர்கள் எதைப் பேசினாலும் நம்பும் முட்டாள்கள் என்று பொதுமக்களை முடிவு செய்து விட்டு தான் இத்தகைய  அபாண்டமான பொய்களை மோடி மீது சுமத்தத் துணிந்துள்ளது இந்த கொள்ளைக்காரர்களின் கூட்டணி. இதனை உண்மையாக்குவோமா அல்லது  பொய்யாக்குவோமா?
பதிவு வெங்கட்ராமன் சீனிவாசன்.. நன்றி.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...