Wednesday, November 28, 2018

ட்ரைகிளிசரைடு (ட்ரைஜி) என்றால் என்ன ?

ட்ரைகிளிசரைடு (ட்ரைஜி) என்றால் என்ன ?

நம் உடலில் வெறும் இரு நாளுக்கு தேவையான ஆற்றலை மட்டும் தான் குளுகோஸ் ஆக தேக்கி வைக்க உடலால் முடியும். ஆனால் மனித உடலின் கொழுப்பை சேமிக்கும் ஸ்டோரேஜ் கெப்பாசிட்டி ஏராளம். ஆக நம் உணவில் தேவைக்கு அதிகமாக சர்க்கரை இருந்தால் அதை என்ன செய்வது என தெரியாமல் நம் உடல் அதை லிவருக்கு அனுப்புகிறது. லிவர் அந்த சர்க்கரையை ட்ரைஜி வடிவில் கொழுப்பு ஆக மாற்றி நம் ரத்தம் மூலம் அதை சேமிப்புக்கு அனுப்புகிறது. அது நம் தொப்பையாகவும், உடல் கொழுப்பாகவும் சேமிக்கபடுகிறது. ஆக ட்ரைஜி இல்லையெனில் நமக்கு தொந்தி, தொப்பை, உடல் கொழுப்பு ஆகியவை இல்லைவை இல்லை

ட்ரைஜி எப்படி உருவாகிறது?

இரு விதங்களில்...ஒன்று போலிச்சர்க்கரையான ப்ருக்டோஸ் (பழ சர்க்கரை) மூலம். அடுத்து நேர்மையான சர்க்கரையான குளுகோஸ் மூலம். உதாரணமாக அரிசி முழுக்க குளுகோஸ். நீங்கள் ஒரே நாளில் ஒரு குண்டா அரிசி சோற்றை உண்கிறீர்கள். அப்புறம் ஒரு மராத்தான் பந்தயம் ஓடுகிறீர்கள். ஆக நீங்கள் உண்ட அரிசியில் இருந்த குளுகோஸ் முழுக்க மராத்தான் பந்தயத்துக்கு செலவாகி விட்டது. சேமிக்க எந்த கூடுதல் சர்க்கரையும் இல்லை.ட்ரைஜி ஏறாது.அதே மராத்தான் ஓடாமல் ஒரு குண்டா அரிசியை தின்றால் உடலுக்கு தேவைக்கு அதிகமான குளுகோஸ் சேர்ந்து அந்த அதிகபட்ச குளுகோஸ் லிவருக்கு சென்று ட்ரைஜி ஆக மாறும். ஆக குளுகோஸ் ட்ரைஜி ஆகும் விதம் இது.

ஆனால் நீங்கள் ஆரஞ்சு ஜூஸ் குடிக்கிறீகள் என வைத்துகொள்வோம். ஆரஞ்சு ஜூஸ் முழுக்க போலிசர்க்கரையான ப்ருக்டோஸ் தான் உள்ளது. ப்ருக்டோஸ் ரத்தத்தில் கலந்ததும் அது குளுகோசை போல இன்சுலின் அளவை ஏற்றுவது இல்லை. நேரடியாக லிவருக்கு சென்றுவிடுகிறது. அங்கே லிவர் அதை ட்ரைஜி ஆக மாற்றி அனுப்பும். ஆக ப்ருகொடோஸ் நேரடியாக ட்ரைஜி அளவை கூட்டும். வெள்ளை சர்க்கரை, அனைத்துவகை பழங்கள், அனைத்துவகை ஜூஸ்கள் ஆகியவற்ரில் ட்ரைஜி உள்ளது

ட்ரைஜி நமக்கு தொப்பையை மட்டும் தான் கூட்டுமா? வேறு என்ன கெடுதலை ஏற்படுத்தும்?

ட்ரைஜி நமக்கு தொப்பையை கொடுப்பதுடன் ஓய்வது இல்லை. நம் ரத்தம் முழுக்க ட்ரைஜி நிரம்பினால் அது தற்கொலைபடை மாதிரி மாறிவிடும். எல்.டி.எல் கொலஸ்டிராலில் மோதி வெடித்து எல்.டி.எல்லினுள் ட்ரைஜி புகுந்துவிடும். இது நிகழ்கையில் எல்.டி.அல் ஆக்சிடைஸ் ஆகி, ஆபத்தான வகை எல்டி.எல் ஆகி நம் ரத்தகுழாயில் அடைத்து மாரடைப்பி ஏற்படுத்தும். ட்ரைஜி 150 தான்டி இருந்தால் நம் எல்.டி.எல்லுக்கு அது மிக,மிக மோசமான விஷயம். நம் இதயத்துக்கும் தான்.

ட்ரைஜியை குறைப்பது எப்படி?

ட்ரைஜியின் பீடிங் மெக்கானிசம் ப்ருக்டோசும், குளுகோசும். இது இரண்டின் சப்ளையையும் துண்டித்தால் ட்ரைஜி தானே குறைந்துவிடும்.

ட்ரைஜி எத்தனை இருக்கணும்?

150க்கு கீழ் என்பது பரிந்துரை. ஆனால் நூறுக்கு மேல் ட்ரைஜி இருந்தால் அது உங்கள் எல்.டி.எல்லை பாதிக்கும். 100க்கு கீழ் ட்ரைஜியை கொண்டுவரவேண்டும்.

அப்ப என்ன சாப்பிட்டால் ட்ரைஜி குறையும்?

பழங்களை சுத்தமாக நிறுத்தவேண்டும். ஜூஸ், வெள்ளை சர்க்கரை பக்கமே போக கூடாது. தானியத்தில் குளுகோஸ் உண்டு. அதனால் அதை லிமிட் செய்யவேன்டும், முடிந்தால் சுத்தமாக நிறுத்தணும். துவக்கத்தில் ஒரு நாளைக்கு நூறு கிராம் நட்ஸ் சாப்பிடணும். இது பசியை குறைத்து, ட்ரைஜியையும் குறைக்கும். நிலக்கடலை, பாதாம், வால்நட்ஸ் முதல்லியவற்றை உண்ணலாம். மாமிசம், முட்டை ஆகியவற்றை உண்ணலாம்.பிரேக்பாஸ்டுக்கு சீரியல்/ இட்லி, தோசை சாப்பிட்டால் குளுகோஸ் ஏறி ட்ரைஜி ஏறும். அதுக்கு பதில் ஒரு 3 எக் ஆம்லட் சாப்பிட்டால் ட்ரைஜி துளியும் ஏறாது. காரணம் முட்டை, மாமிசத்தில் ஒரே ஒரு கிராம் சர்க்கரை கூட கிடையாது.

Dead People Know When They Are Dead, Say Scientists; Human Brain Stays Alive For A While After Death

Dead People Know When They Are Dead, Say Scientists;                                                                      Human Brain Stays Alive For A While After Death                     

                                                            Bone-chilling findings of a new research say that human beings may be aware that they are dead in the moments after they die. That’s because the human brain is still active – albeit for a short time –, letting the person register what is happening around him. The discovery was made by researchers from New York’s Stony Brook University School of Medicine after studying cardiac-arrest cases in Europe and US. A person’s time of death is based on the moment when the heart stops     When the heart stops beating, the blood circulation to the brain ceases to function eventually. The process, however, can be long-drawn, taking hours to complete. The brain technically stays alive for a short while till the blood flow is cut off, letting the “dead” person know what’s happening around them.

Data collected from people who have been resuscitated after their heart stopped beating showed that they could remember what happened after they were pronounced “dead.” They can clearly remember the conversations between the doctors and the nurses even after their cardiac activity stopped. Kerala Becomes the First State to Confirm Brain Death Through Standard Operating Procedure.                                                                                                                                                                                      Many of them have visual and auditory memory of everything that happens around them, things that they are theoretically not supposed to know. They know when the doctors pronounce them dead. Eerily, the dead become “trapped” in their own body.
The concept of Near Death Experience (NDE), where people who have “come back from the dead,” could be explained through this mechanism. Anita Moorjani, one of the well-known cases of NDE, recollected being completely aware of her surroundings while she was in a near-death stage.

Dr Sam Parnia, the lead researcher of the study, says, “What tends to happen is that people who've had these very profound experiences may come back positively transformed — they become more altruistic, more engaged with helping others.”

The study could open debates about human consciousness and what happens to it after the person dies.

50 *அனுபவ குறிப்புகள்*

50 *அனுபவ குறிப்புகள்*

1. *நெஞ்சு சளி*

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

2. தலைவலி

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

3. தொண்டை கரகரப்பு

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

4. தொடர் விக்கல்

நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

5. அஜீரணம்

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.

சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.

6. வாயு தொல்லை

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

7. வயிற்று வலி

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

8. சரும நோய்

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

9. மூக்கடைப்பு

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

10. கண் எரிச்சல், உடல் சூடு

வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

11. வயிற்றுக் கடுப்பு

வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

12. பற் கூச்சம்

புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

13. வாய்ப் புண்

வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

14. தலைவலி

பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

15. வயிற்றுப் பொருமல்

வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

16. அஜீரணம்

ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.

17. இடுப்புவலி

சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

18. வியர்வை நாற்றம்

படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

19. உடம்புவலி

சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

20. ஆறாத புண்

விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

21. கண் நோய்கள்

பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

22. மலச்சிக்கல்

தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.

23. கபம்

வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.

24. நினைவாற்றல்

வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

25. சீதபேதி

சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

26. ஏப்பம்

அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.

27. பூச்சிக்கடிவலி

எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

28. உடல் மெலிய

கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.

29. வயிற்றுப்புண்

பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

30. வயிற்றுப் போக்கு

கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

31. வேனல் கட்டி

வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.

32. வேர்க்குரு

தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.

33. உடல் தளர்ச்சி

முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

34. நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு

நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

35. தாய்ப்பால் சுரக்க

அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

36. குழந்தை வெளுப்பாகப் பிறக்க

கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.

37. எரிச்சல் கொப்பளம்

நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

38. பித்த நோய்கள்

கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

39. கபக்கட்டு

நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.

40. நெற்றிப்புண்

நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.

41. மூக்கடைப்பு

இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.

42. ஞாபக சக்தி

வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

43. மாரடைப்பு

சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்

44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல்
வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

45. கை சுளுக்கு

கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.

46. நீரிழிவு

அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.

47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்
உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன்
புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்

49. உடல் வலுவலுப்பு

ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.

50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது..
கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.

எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.

நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.

கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடுமாம்

பாலில் மருந்தைக் கலந்து குடிப்பதை தவிர்க்கவும். தாய்மார்கள் கவனத்திற்க்கு

எச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை செய்தார்.

குழந்தைகள் இருமல்  மருந்து குடிக்க மறுத்தனர். அதனால் ஸிரப் மருந்தை
பாலில் கலந்து குழந்தைகளுக்கு குடிக்கக் கொடுத்தார்.  குழந்தைகள்
தூங்கச் சென்றனர்.

கணவர் வந்து மீதமுள்ள பாலைக் குடித்துவிட்டு வயிற்று வலியால் அவதியுற்றார்.

பின்னர் அவர்களது அனைத்து 4குழந்தைகளும் படுக்கையில் இறந்துவிட்டனர் என்பதைக் கண்டு மருத்துவ சோதனைக்குட்படுத்தியதில், இருமலுக்கான மருந்தைப் பாலில்  கலவை செய்ததால் அது விசமாக மாறி மரணத்தை ஏற்படுத்தியது என்று  நிரூபித்தது.

குழந்தைகளைத் தன் கையால் கொன்றுவிட்டேன் என அந்தத் தாய்
உளவியல் ரீதியானஅதிர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளார்.
எனவே, பாலில் மருந்தைக் கலந்து குடிப்பதை தவிர்க்கவும்.
தாய்மார்கள் கவனத்திற்க்கு

கைவிரல் நகங்களைத் தேய்த்தால் தலைமுடி உதிர்வதைத் தடுக்கலாம் என்பது தெரியுமா?

கைவிரல் நகங்களைத் தேய்த்தால் தலைமுடி உதிர்வதைத் தடுக்கலாம் என்பது தெரியுமா?

தலைமுடி உதிர்வதற்கு எத்தனையோ மருத்துவர்களை நாடி, அவர்கள் கொடுக்கும் மருந்துகள் மற்றும் எண்ணெய்களைப் பின்பற்றி இருப்போம். ஆனால் அந்த தலைமுடி உதிர்வதற்கு ஏராளமான இயற்கை வழிகள் உள்ளன. அதில் ஒன்று தான் கைவிரல் நகங்களைத் தேய்ப்பது.

என்ன நம்ப முடியவில்லையா? உண்மையிலேயே கைவிரல் நகங்களைத் தேய்ப்பதன் மூலம் தலைமுடி உதிர்வதைத் தடுப்பதோடு, முடியின் வளர்ச்சியையும் தூண்டலாம். சரி, இப்போது அந்த வழிமுறை பற்றியும், அதனால் கிடைக்கும் வேறுசில நன்மைகள் குறித்தும் காண்போம்.

செய்யும் முறை
* படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு கைவிரல்களை மடித்து, விரல்நகங்கள் ஒன்றோடொன்று தொட்டுக் கொள்ளுமாறு வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் முன்னும், பின்னும் என கைவிரல் நகங்களை 5-10 நிமிடம் தேய்க்க வேண்டும்.
* இந்த முறையை 5-10 நிமிடம் என ஒரு நாளைக்கு 2-3 முறை செய்து வர வேண்டும்.

எப்படி?
கைவிரல் நகங்களைத் தேய்க்கும் போது, நகத்திற்கு அடியில் உள்ள நரம்பானது மயிர்கால்களுடன் இணைக்கப்பட்டிருப்பதால், அப்பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது, இரத்த ஓட்டமானது ஸ்கால்ப்பில் அதிகமாக தூண்டப்படுகிறது. ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் போது, மயிர்கால்கள் வலிமையடைந்து, முடி உதிர்வது தடுக்கப்படும்.

நன்மைகள்
இந்த வழிமுறையின் மூலம், முடி உதிர்வது தடுக்கப்படுவதோடு, நரைமுடி வருவதும் தடுக்கப்படும். மேலும் நகங்களை ஒன்றோடொன்று தேய்க்கும் போது, முடியின் இயற்கை நிறம் தக்க வைக்கப்படும். முக்கியமாக வழுக்கைத் தலை உள்ளவர்கள், இந்த செயலை தினமும் செய்து வந்தால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம். ஆனால் இதற்கு ஒரு வருட காலமாவது ஆகும்.

பெருவிரல் கூடாது
கைவிரல் நகங்களைத் தேய்க்கும் போது கட்டைவிரலைப் பயன்படுத்தக்கூடாது. ஒருவேளை அப்படி பயன்படுத்தினால், மீசை, தாடி போன்றவை வளர ஆரம்பிப்பதோடு, காதுகளிலும் முடி வளர ஆரம்பிக்கும்.

அறுவை சிகிச்சையெனில் கூடாது
அறுவை சிகிச்சையை மேற்கொண்டிருந்தால், முக்கியமாக அப்பெண்டிக்ஸ், ஆன்ஜியோகிராபி போன்றவை எனில், இச்செயலைத் தவிர்த்திடுங்கள்.

மகப்பேறு காலத்தில் கூடாது
மகப்பேறு காலத்தில் நகங்களைத் தேய்ப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதன் மூலம் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் மற்றும் கருப்பையில் இறுக்கம் ஏற்படக்கூடும்.

உயர் இரத்த அழுத்தமெனில் கூடாது
உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால், இந்த செயலைச் செய்யாதீர்கள். ஏனெனில் இச்செயலின் மூலம் இரத்த அழுத்தம் இன்னும் அதிகரிக்கும்.

கடுமையாக செய்யக்கூடாது
கைவிரல் நகங்களைத் தேய்க்கும் போது மிகுந்த வேகத்திலோ அல்லது கடுமையாகவோ செய்யக்கூடாது. அப்படி செய்தால், விரல்நகங்கள் தான் பாதிக்கப்படும்.

நோய்த்தொற்றுக்கள் என்றால் கூடாது
கைவிரல் நகங்களில் ஏதேனும் தொற்றுக்கள் ஏற்பட்டிருந்தால், இச்செயலைச் செய்யாதீர்கள்.

குறிப்பு
முக்கியமாக இச்செயலை 10 நிமிடத்திற்கு மேல் செய்யக்கூடாது மற்றும் ஒரு நாளைக்கு 3 முறைக்கு மேல் செய்யக்கூடாது.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...