Sunday, July 29, 2018

உணவில் இரசாயணம், விஷத்தை முறிக்கும் வீட்டு மருந்துகள்..!

உணவில் இரசாயணம், விஷத்தை முறிக்கும் வீட்டு மருந்துகள்..! உங்களுக்கு தெரியுமா..???

உலகமே கைக்குள் என்ற நிலைமை வந்துவிட்டது. விஞ்ஞானமும் எவ்வளவோ முன்னேறிவிட்டது. ஆனாலும் புதிது புதிதாக வரும் நோய்களை வெல்ல எந்த அறிவியலாலும் முடியவில்லை.

இயற்கை மற்றும் மூலிகை மருத்துவத்தை முறையாகச் செய்தால் நிச்சயம் வெல்ல முடியும் என்று பலருக்குத் தெரியவில்லை. மூலிகை மருத்துவத்தால் நோய்கள் குணமாகின்றன என்பதற்கு எண்ணற்ற உதாரணங்களைச் சொல்லலாம். அதேநேரத்தில் மூலிகை என்றதும் அது ஏதோ அமேசான் காட்டில் இருந்து எடுத்து வரப்பட்டது, அப்படி எடுத்து வந்தால்தான் அதன் தரம் உயர்வாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம். உங்கள் வீட்டின் சமையலறையில் அல்லது சாப்பாட்டில் நறுமணத்துக்காகப் பயன்படுத்தப்பட்டு பிறகு தூக்கி எறியப்படும் கறிவேப்பிலைகூட ஓர் ஒப்பற்ற மூலிகை என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? 

உதாரணமாக கறிவேப்பிலையைக் குறிப்பிட்டாலும் சமீப காலங்களில் அது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறியிருக்கிறது என்பதைச் சொல்லியே ஆக வேண்டும். சாதாரண காய்ச்சலில் தொடங்கி பன்றிக்காய்ச்சல் வரை எல்லாவிதமான காய்ச்சலையும் விரட்டுவதில் இதன் பங்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

கைப்பிடி கறிவேப்பிலையுடன் 10 மிளகு, ஒரு டீஸ்பூன் சீரகம், சிறு துண்டு இஞ்சி சேர்த்து மையாக அரைத்து வெந்நீர் கலந்து வடிகட்டி அதனுடன் தேன் கலந்து குடித்தால் எப்பேர்ப்பட்ட காய்ச்சலும் காணாமல் போகும்.
பன்றிக்காய்ச்சலுக்கும், எலிக்காய்ச்சலுக்கும்... ஏன் வவ்வால் மூலம் பரவியதாகச் சொல்லப்பட்ட நிபா வைரஸ் காய்ச்சலுக்கும்கூட இந்த கறிவேப்பிலை மருந்து நல்ல நிவாரணம் தரும். பலருக்கும் இந்த மருந்து பலனளித்தது, பலன் தந்து கொண்டிருக்கிறது.

காலையில் இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலையில் கடுக்காய்... மண்டலம் உண்டால் கோலூன்றி நடக்கும் கிழவனும் கோலை வீசி விட்டு குலுங்கிக் குலுங்கி நடப்பானாம்.

என்றும் இளமையுடன் வாழ திருமூலர் இவ்வாறு கூறியிருக்கிறார். அதாவது காலையில் இஞ்சியை சாறு எடுத்து குடிப்பது, டீயில் இஞ்சி சேர்த்துக் குடிப்பது, இஞ்சித் துவையல் செய்து சாப்பிடுவது, இஞ்சி ஜூஸ் குடிப்பது என அன்றாட நிகழ்வுகள் அமைய வேண்டும்.

இதேபோல் சுக்குடன் மிளகு, தனியா சேர்த்துப் பொடியாக்கி மாலை நேரத்தில் டீக்குப் பதிலாக அந்தக் கலவையை கொதிக்க வைத்து கருப்பட்டி சேர்த்து குடிப்பதன்மூலம் செரிமானக் கோளாறில் தொடங்கி இதயம் தொடர்பான நோய்கள், சளித்தொல்லை என நிறைய நோய்கள் சரியாகும்.

இதேபோல் இரவில் கடுக்காயை (விதையை நீக்கிவிட்டு) இரவில் கஷாயம் செய்து குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்னை நீங்கும், மூல நோய் விலகும்.

வீடுகளில் அஞ்சறைப்பெட்டியில் இருக்கும் மிளகு, சீரகம், வெந்தயம், வெள்ளைப்பூண்டு என எல்லாமே மருந்துதான் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? சிலர் கேட்கலாம், அப்படியானால் தினமும் அந்த மருந்துகள் இல்லாமல் எங்கள் வீட்டில் சமையலே செய்வதில்லை. ஏன், எங்களுக்கு சுகர் வருகிறது, பிரஷர் வருகிறது, புற்றுநோய் வருகிறது என்று நீங்கள் கேட்கலாம்.

நீங்கள் அந்த மருந்துகளையும் சாப்பிடுகிறீர்கள். கூடவே, பட்டை தீட்டிய அரிசியைச் சாப்பிடுகிறீர்கள், பல்வேறு ரசாயனங்களைப் போட்டு பிளீச் செய்யப்பட்ட வெள்ளைச் சர்க்கரையை தினம் தினம் சாப்பிடுகிறீர்கள், கல் உப்புக்குப் பதில் அயோடின் சேர்த்த உப்பு என்று யார் யாரோ சொல்வதைக் கேட்டு பொடி உப்பைச் சேர்க்கிறீர்கள், பெட்ரோல் எடுத்ததுபோக மிச்சமாகிப்போன குருடாயிலில்  தயாரித்த எண்ணெய்களில்தானே தினம் தினம் வறுக்கிறீர்கள், பொரிக்கிறீர்கள், வடை செய்கிறீர்கள், பூரி போட்டு சாப்பிடுகிறீர்கள். இப்படி விஷமாகிப்போன உணவுகளை ஒவ்வொருவேளையும் சாப்பிடும்போது நீங்கள் எத்தகைய விலைஉயர்ந்த மருந்துகளைச் சாப்பிட்டாலும் நோய்கள் வரிசைகட்டி நிற்கத்தான் செய்யும்.

இதுமட்டுமல்ல வாரம் ஒருநாள்தான் நான்வெஜ் என்று சொல்லிக்கொண்டு ஊசி போட்டு வளர்க்கப்பட்ட பிராய்லர் சிக்கனைச் சாப்பிடுகிறீர்கள். கல் வைத்து பழுக்க வைத்த மாம்பழத்தைச் சாப்பிடுகிறீர்கள், பூச்சிமருந்தில் முக்கி எடுத்த திராட்சைப்பழத்தைச்  சாப்பிடுகிறீர்கள், முட்டைக்கோஸ், காலிஃப்ளவரைச் சாப்பிடுகிறீர்கள். இவற்றில் உள்ள விஷங்கள் உங்களை பாதிக்காமல் என்ன செய்யும்?

இன்னும் நம்முடைய தட்பவெப்பநிலைக்கு ஒவ்வாத உணவுகளை வேண்டி விரும்பிச் சாப்பிடுகிறோம். டீக்கடையில் தேயிலையில் கலப்படம், அன்றாடம் அருந்தும் பாலில் கலப்படம் என எல்லாம் கலப்படம், ரசாயனம்... அவ்வளவும் நமக்கு நோயை வரவேற்க காரணமாகிறது.

இவற்றிலிருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள முதலில் நம்மிடையே பொதுவான விழிப்புணர்வு வேண்டும். முன்பைக்காட்டிலும் பெரிய அளவில் விழிப்புணர்வு வந்திருக்கிறது என்றாலும் செயலாக்கத்தில் ஒன்றுமில்லை. இன்னும் சொல்லப்போனா அந்த விழிப்புணர்வு ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்ட்ராகிராமிலேயே நின்றுவிடுகின்றன.

அதாவது பார்க்க, பகிர, கருத்து சொல்ல என முடிந்துவிடுகிறது. வீட்டுச் சாப்பாட்டை எடுத்துச் செல்வதில் ஏற்படும் சோம்பேறித்தனத்தின் விளைவாக ஓட்டல் உணவுகளை வாங்கிச் சாப்பிடுகிறோம். அங்கே சுவையூட்டுவதற்காகச் சேர்க்கப்படும் அஜினோமோட்டாவில் தொடங்கி உங்களுக்கு பார்சல் போட்டு கொடுக்கப்படும் பாலித்தீன் பேப்பர் வரை எல்லாம் உயிர்க்கொல்லிகள்.

சிந்திப்போம். நோய்களை வெல்ல எளிய வழிகள் நிறைய இருக்கின்றன.

தலை வலித்தால் சுக்கை நீர் விட்டு உரசி (இழைத்து) நெற்றியில் பற்று போடுங்கள்,

ஜலதோஷம் வந்தால் மணத்தக்காளி சூப் குடியுங்கள்.

மூக்கில் நீர் வடிந்தால் நொச்சியிலையை கொதிக்க  வைத்து ஆவி (வேது) பிடியுங்கள்.

சளி பிடித்தால் வெள்ளைப்பூண்டு பாலில் (சிறிது நீர் சேர்த்து) வேக வைத்து மிளகுப்பொடி, மஞ்சள்தூள், பனங்கல்கண்டு சேர்த்துக் குடியுங்கள் குணம் கிடைக்கும்.

இவை மட்டுமல்ல கம்ப்யூட்டர் மயமாகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் கம்ப்யூட்டர்முன் அமர்ந்து வேலை செய்வதால் கழுத்து வலி, முதுகு வலி, இடுப்பு வலி என வலிகள் அணிவகுத்து நிற்கின்றன. இதுமட்டுமல்ல ஆண்மைக்கே சவால் விடும் பிரச்னைகளும் பூதாகரமாக எழுந்து நிற்கின்றன.

இவைதவிர பொதுவாக நமது உணவுமுறையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக வாய்ப்புண், வயிற்றுப்புண், மலச்சிக்கல், வாய்வுக்கோளாறு, இதயக் கோளாறு, சர்க்கரைநோய், புற்றுநோய் என  நோய்களின் ஆதிக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றன.

கை நிறைய காசு இருக்கிறது. ஆனால் அவற்றைக் கொண்டு நோய்களை விரட்ட முடியவில்லை. நோய்களை விரட்ட சரியான ஆட்களும் இல்லை. நோய்களுக்கேற்ப மருத்துவர்களும் பெருகிவிட்டார்கள், ஆனால் அவர்களிலும் பலர் பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு கையில் கிடைத்ததை, கார்ப்பரேட் நிறுவனங்கள் எங்கோ தயாரித்த மருந்துகளைக் கொடுத்து நம்மை சோதனை எலிகளாக்கி எட்ட நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்.

இதனால் நோய் குணமாவதற்குப்பதிலாக பக்கவிளைவுகளே அதிகம் ஏற்படுகின்றன. அன்றைக்கு 100 மில்லி கிராம் குரோசினைச் சாப்பிட்டால்  காய்ச்சல் விலகியது. இன்றைக்கு 600-ஐத் தாண்டியும் நம்மிடம் சவால் விடுகிறது காய்ச்சல்.

எது வந்தால் என்ன? இயற்கையாக நம்மைச் சுற்றி மிக எளிதாகக் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு நோய்களை வெல்லலாம். 

- தமிழ்க்குமரன், மூலிகை ஆராய்ச்சியாளர்

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது...

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது... 🌷🌺💐💐💐💐💐🌺
தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.
🌺💐💐💐💐💐🌺
தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.
🌺💐💐💐💐💐🌺
இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர்பாடல் ஒன்று.
🌺💐💐💐💐💐🌺
சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை
நம்பிக் காண்
இதன் விளக்கம் :-
🌺💐💐💐💐💐🌺
இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் [உடலில்] சோர்வு,
பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.
🌺💐💐💐💐💐🌺
எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.
🌺💐💐💐💐💐🌺
உத்தமம் கிழக்கு
ஓங்குயிர் தெற்கு
மத்திமம் மேற்கு
சிதைவு வடக்கு
கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.
🌺💐💐💐💐💐🌺 தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.
🌺💐💐💐💐💐🌺 மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும்.
🌺💐💐💐💐💐🌺 வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.
🌺💐💐💐💐💐🌺
இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி
தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன்,
இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும். 🌺💐💐💐💐💐🌺 மேலும் மல்லாந்து கால்களையும், கைகளையும்
அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன்
(பிராண வாயு) உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். 🌺💐💐💐💐💐🌺 குப்புறப் படுக்கக் கூடாது,
தூங்கவும் கூடாது. 🌺💐💐💐💐💐🌺 இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை
நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்துபடுத்து தூங்க வேண்டும்.
இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம்
வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான
🌺💐💐💐💐💐🌺
வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும்.
🌺💐💐💐💐💐🌺
இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.
🌺💐💐💐💐💐🌺
வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும்.
🌺💐💐💐💐💐🌺
இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும்.
🌺💐💐💐💐💐🌺
இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்
🌺💐💐💐💐💐🌺
சித்தர்கள் கூறியது அனைத்துமே நம் அனைவரின் நன்மைக்கே, இதை நாமும் பின்பற்றி பயன்பெறுவோம்.

மூட்டு வலி இனி இல்லை....

மூட்டு வலி இனி இல்லை....
====================
இந்த தகவல் உங்களுக்கோ உங்கள் குடும்பத்தாருக்கோ நிச்சயம் பயன்படும். மூட்டு வலி, இடுப்பு வலி, கைகால் குடைச்சல், எலும்பு தேய்மானம், குதிகால் வலி, கெண்டைக்கால் வலி, கழுத்து வலி என ஏதாவது ஒரு எலும்பு சம்பந்தமான வலிகளுடனே இன்று பலரும் வாழ்ந்து வருகிறோம். காரில் சென்று வருபவர்கள் முதல் சைக்கிளில் செல்பவர்கள் வரை இந்த பிரச்சனை பொதுவாகி போனது இன்று. டாக்டரிடம் போனால் எக்ஸ்ரே , ஸ்கேன் என எடுக்க சொல்லி பின்னர் வலி நிவாரண மாத்திரைகளை கொடுத்து விடுவார். சில வருடங்கள் கழித்து வலி அதிமாகி போனால் உங்களுக்கு ஜவ்வு தேய்ந்து விட்டது. லீகுவிட் இல்லை எனவே ஒரு ஆபரேஷன் செய்தாலே தான் இதற்க்கு தீர்வு என்று நம்முடைய சேமிப்பு சில லட்சத்தை பிடுங்கி கொள்வார்கள். இதற்க்கு நிரந்தர தீர்வு கிடையாதா?
நிச்சயம் இருக்கிறது. ஐம்பது வருடங்களுக்கு முன்பு நமது தாத்தா பாட்டிகளுக்கு இப்படி நோய்கள் இருந்து யாராவது ஆபரேஷன் செய்ததாக தகவல் இருக்கிறதா? இதனை மருத்துவமனைகள் இருந்துள்ளதா? காரணம் அப்போது அவர்கள் சாப்பிட்ட சில உணவுகள்.. அப்படி மறைக்கப்பட்ட மருத்துவ உணவுகள் நிறைய.. எலும்பு மூட்டு நோய்கள் எந்த நிலையில் இருந்தாலும் அதனை குணப்படுத்தக்கூடிய ஒரு சக்தி உள்ளது தான் வாத வள்ளி கிழங்கு. போகர் 12000 நூலில் இதனை கற்பமூலிகை என சொல்கிறார். ஞானிகளான சித்தர்களின் வாக்கு
வள்ளலார் இதனை மிக முக்கியமான மூலிகை மருந்தாக குறிப்பிடுகிறார் இதில் தாய் பாலுக்கு நிகரான (லாரிக் அமிலமும் உள்ளன)நோய் எதிர்ப்பு சக்தி உள்ளன 4448 நோய் நல்லாகுதோ இல்லையோ தெரியாது. மூட்டுவலி இடுப்புவலி நிச்சயமாக சரியாகிவிடும் குறிப்பாக மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிக்கு சிறந்த உணவு மருந்து. இதை பயன்படுத்தி பலன் கண்டவர்கள் முகநூலில் எனது நட்பு வட்டத்தில் பலர் உண்டு கால்சியம் குறைபாட்டுக்கு அலோபதி மாத்திரைகளுக்கு பதில் இவற்றை எடுத்து பாருங்கள் உங்கள் உடலில் ஏற்படும் முன்னேற்றத்தை உணர்வீர்கள் அதுவும் குறிப்பாக குழந்தை பேறு முடிந்ததும் உடலில் உறுவாகும் பெரும் குறைபாடு சுண்ணாம்பு சத்து பற்றாக்குறையும் அதற்காக ஆங்கில மருத்துவத்தை நாடுபவர்களுக்கு இது மிகச்சிறந்த Food supplements....

வாத வள்ளி கிழங்கு ஒரு கிலோ கிராம் வாங்கி பத்து நாட்களுக்கு பயன்படுத்தலாம். நூறு கிராம் அளவிற்கு கிழங்கை சூப்பாக வைத்து இதை தினம் ஒரு வேளை வீதம், 10 நாட்கள் தொடர்ந்து குடித்துவர, கடுமையான முழங்கால் வலி, குதிகால் வலி, முழங்கால் சவ்வு பலவீனம், தசை பிறழ்சி ஆகியன நீங்கும். குளிர்காலத்தில் தோன்றும் கெண்டைக்கால் சதை இழுத்தல், உடல் முழுவதும் தோன்றும் வலி, அசதி மற்றும் பலவகையான தசைபிடிப்பு நீங்க இதை அனைவரும் குடித்துவரலாம்,.
ஒரு மண்டலம் இதனை குடித்து வர எப்பேர்பட்ட எலும்பு மற்றும் வாத நோய்களையும் குணப்படுத்தலாம் என்பது சித்தர்கள் காட்டிய வழி....
இந்த அற்புத வாத வள்ளி கிழங்கு தேவைக்கு 98430 93824 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு வாங்கி பயன் பெறுங்கள்..
இந்த அரிய தகவலை உங்கள் நண்பர்கள் உறவினர்கள் மற்றும் நீங்கள் உள்ள மற்ற க்ரூப்புகளுக்கும் பகிருங்கள்.

Saturday, July 28, 2018

தண்ணீரின் நினைவாற்றல் (Water Memory) :

தண்ணீரின் நினைவாற்றல் (Water Memory) :

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் புழங்க வேண்டும், அடுத்த வீட்டில் தண்ணீர் குடிக்கக்கூடாது என நம்மவர்கள் கூறிச்சென்றதை இன்று உலகம் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக்கொண்டுள்ளது.

ஆங்கில வருடம் 2003 முதல் சமீபத்திய ஜூலை 2018 வரை ஜப்பான் மற்றும்  ஐரோப்பிய நாடுகள்
நடந்திய பல்லேறு ஆய்வு முடிவுகள் தண்ணீருக்கு நினைவாற்றல் உண்டு என்பதை உணர்த்தியுள்ளன. வேதியியல் இயற்பியல் பற்றிய நமது புரிதலையும், அறிவியலை நாம் அணுகும் ஒட்டுமொத்த  கண்ணோட்டத்தையும் இந்த பல்வேறு ஆய்வுமுடிவுகள் மாற்றியமைக்கின்றன. பாரத கலாச்சாரத்தின் தொன்மையையும் ஸனாதன தர்மத்தின் கருத்தியல் ஆழத்தையும் புரிந்துகொள்ள இந்த ஆய்வு முடிவுகள் பெரிதும் உதவி புரியும் என்பதில் சந்தேகமில்லை.

மனித உடல் முக்கால் பாகத்திற்கும் அதிகமாக (72-75%) தண்ணீரைக் கொண்டுள்ளது. நாம் பருகும் தண்ணீர், உண்ணும் உணவில் உள்ள மறை தண்ணீர் (Virtual water), சுற்றுச்சூழல் தண்ணீர் என அனைத்தும் மனித தன்மையை நிர்ணயம் செய்யும் காரணிகளாக உள்ளன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தண்ணீரின் ஞாபக திறனை இவ்வாறு விவரிக்கின்றன "ஓர் ஆற்றில் ஒரு வீட்டு சாவியை போட்டுவிட்டு வேறொரு இடத்தில் அதே ஆற்றின் தண்ணீரை எடுத்து வீட்டை திறப்பதுபோல...," முன்னர் அறிவியல் சமூகம் இதை ஏற்க மறுத்தாலும், ஆய்வு முடிவுகள் அறிவியலை அணுகும் முறையையே மாற்றியமைத்ததை மறுக்கவில்லை, மறுக்க முடியவுமில்லை.

மனிதர்களின் கைரேகை, DNA, வரிக்குதிரை, புலியின் உடல் வரிகள், என எப்படி ஒவ்வொன்றும் தனித்துவமாக இருக்கிறதோ..., அதேபோல் ஒவ்வொரு தண்ணீரும் தனித்துவமானவை. அவை பயனிக்கும், உட்படுத்தப்படும் சூழல்கள் அனைத்தையும் தன்னுள்ளே க்ரஹித்துக் கொள்கிறது, தரவுகளாக மாற்றியமைக்கிறது. அதை வெவ்வேறான சூழல்களில் வெவ்வேறான நிலைகளில், அளவுகளில் வெளிப்படுத்தவும் மறப்பதில்லை.

தண்ணீரின் அறிவையும், புனிதத்தையும், அவசியத்தையும் அறிந்த நம் பாரத கலாச்சாரம், உணவு முறை, சமூக அமைப்பு , அது உள்ளடங்கிய  வாழ்வுமுறை என ப்ரம்மிப்பூட்டும் விஷயங்கள் ஏராளம். மிக மிக கச்சிதமான வாக்கியம்....

"நீரின்றி அமையாது உலகு"

Cancer and sugar are FRIENDS

Fact No.1 : Sugar in Coke or Pepsi. A 12-ounce can of regular Coke or Pepsi contains 39 grams of total sugar, which is about 9 1/3 teaspoons of sugar.

Fact No.2 : Cancer cells love sugar! That is why refined carbohydrates like white sugar, white flour, high fructose corn syrup (HFCS) and soft drinks are extremely dangerous for anyone trying to prevent or reverse cancer. Sugar essentially feeds tumors and encourages cancer growth. (https://beatcancer.org/blog-posts/5-reasons-cancer-and-sugar-are-best-friends/)

You would not eat 9 1/3 teaspoons of sugar, so why are you drinking it?

If you value your Health, drink Kangen Water. It is Clean, delicious, smooth, high antioxidant and superiorly hydrating water that your immune system will thank you for.

https://youtu.be/a6f5-QDSNBE

Friday, July 27, 2018

மூளை சாவு அடைந்தவர்களை அறுத்து விடாதீர்கள்.

மூளை சாவு அடைந்தவர்களை அறுத்து விடாதீர்கள்.

மூளை சாவு அடைந்தவர்களை வர்ம மருத்துவத்தின் மூலம் எளிதில் குணமாக்க முடியும்.
தங்களுக்கு தெரிந்து யாரேனும் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
For further details contact:
Master:S.SIVA KUMAR-
MA(yoga),Msc(varma),M.phil(varma&yoga),Palm leaf reader,Dip.in.Sidhdha,Herbal science,
Address:
YOGALAYAM & VARMALAYAM,
10/A,Ettiyappan Nagar Extension,
Laxmipuram,Kolathur,CHENNAI-600099,INDIA
E-mail:b sivakumar0018@gmail.com
Mobile: +91-9444749969,9445687969

Thursday, July 26, 2018

புற்றுநோய் என்பது நோய் அல்ல வியாபாரம்.

உங்களால் நம்ப முடியாது ஒரு அதிர்ச்சியான உண்மை என்னவென்றால் புற்றுநோயை என்பது நோய் அல்ல வியாபாரம்.

புற்றுநோய் என்பது இன்று பரவி வரும் கொடிய நோய் மட்டுமின்றி குழந்தைகள், சிறார்கள், மற்றும் பெரியவர்கள் என அனைவரிடமும் பாரபட்சம் பார்க்காமல் பற்றிக்கொள்ளும் கொடிய நோய் ஆகும்.

இந்த பதிவை நீங்கள் மற்றவர்களுடன் பகிர்வதன் மூலம் இந்த மோசமான வியாபாரத்தை உலகம் முழுவதும் செய்பவர்களையும் தடுத்து நிறுத்தலாம்.

"கேன்சர் இல்லா உலகம்" - (WORLD WITHOUT CANCER) எனும் புத்தகம் உ ங்களில் எத்தனை பேருக்கு தெரியும். இன்றும் உலகம் முழுவதும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதற்கு தடுக்கப்படுவதும், தடுக்கப்படுவதற்கு உண்டான காரணமும்  உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.

இது வரை தெரியாத ஒரு வியாபார தந்திர உண்மையை தயவுசெய்து தெரிந்து கொள்ளுங்கள்,கேன்சர் என்பது நோய் அல்ல அது வைட்டமின் B17ன் குறைபாடு.

இதற்காக கீமோதெரபி, அறுவை சிகிச்சை மற்றும் பக்க விளைவுகள் தரும் மருந்தை தயவுசெய்து எடுத்துக்கொள்ள வேண்டாம்.

கடந்த காலத்தில் ஸ்கர்வி ( Scurvy )  எனும் ஒரு கொடிய  நோய் கடல்வாழ் மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்தது.  ஆனால் பிறகு ஸ்கர்வி என்பது நோய் அல்ல வைட்டமின் C ன் குறைபாடு  என்பது தெரியவந்தது.
 
கேன்சர் என்பதும் இதுபோன்றதே நோய் அல்ல வைட்டமின் B17 குறைபாடு என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன். மனித குலத்திற்கு தீங்கு விளைவிக்கும் சிலர் இதை வியாபாரம் ஆக்கி பில்லியன் இல் புரளுகின்றனர்.

இனி இந்த கேன்சர் நோயிலிருந்து விடுபடும் வழிமுறைகளை பார்க்கலாம்.

நீங்கள் கேன்சர் ஆல் பாதிக்கப்பட்டவரா? முதலில் அது எந்த வகை என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும். பயம் கொள்ள வேண்டாம்.

தினமும் 15 முதல் 20 ஆப்ரிகாட் பழத்தை உண்டு வந்தாலே போதுமானது. இதில் வைட்டமின் B17 நிறைந்துள்ளது.

கேன்சர் குறைபாடு நீங்க உண்ண வேண்டிய உணவுகள்  :

1. காய்கறிகள்- பீன்ஸ் , சோளம், ,  லீமா பீன்ஸ், பச்சை பட்டாணி, பூசணி.

2.பருப்பு வகைகள்- லென்டில் ( மைசூர் பருப்பு என சொல்வார்கள்) முளை கட்டியது, பிட்டர் ஆல்மண்ட் மற்றும் இந்தியன் அல்மோன்ட் ( பாதம் பருப்பு), இதில் இயற்கையாகவே வைட்டமின் பி-17 நிறைந்துள்ளது.

3. பழங்கள்-முசுக்கட்டை பழம் ( Mullberries )இல் கருப்பு முசுக்கட்டை , பிளூபெர்ரி , ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி.

4. விதைகள்-  எள் ( வெள்ளை & கருப்பு) , ஆளி விதை

5. அரிசி வகைகள்- பார்லி அரிசி, பழுப்பு அரிசி ( Brown Rice )

6. தானியங்கள்- கம்பு, குதிரைவாலி.

கேன்சர் உணவுகள் ஒரு பட்டியல்:

அப்ரிகாட்
லிமா பீன்ஸ்
ஃபாவா பீன்ஸ் ( Fava Beans )
கோதுமை புல் ( Wheat Grass)
பாதாம்
ராஸ்பெரிஸ்
ஸ்ட்ராபெர்ரி
ப்ளாக்க்பெரி  
பிளூபெர்ரி    
பக் வீட் ( Buck Wheat ) 
சோளம்
பார்லி
குதிரைவாலி
முந்திரி
மெகடாமியா கொட்டைகள்  ( Macadamia Nuts )
முளைகட்டிய பீன்ஸ்
இவை அனைத்தும் பி-17 நிறைந்த உணவுகள்.

இதை கவனிக்க வேண்டிய மிக அபாயகரமான விஷயம் என்னவென்றால் நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் handwash liquid , dishwash liquid  இல் அதிகளவு கேன்சர் ஐ ஏற்படுத்த கூடிய பொருட்கள் உள்ளது.

நாம் இதை பயன்படுத்தும் பொழுது இது நம் கைகளிலோ , உணவு தட்டுகளிலோ படிந்துவிடுகிறது. இது 100 முறை கழுவினாலும் சுலபத்தில் நீங்குவதில்லை. மேலும் நாம் உணவை சூடாக பரிமாறும்பொழுது இது உணவின் வெப்பத்தால் அதனுடன் கலந்து உடம்பிற்குள் சென்று புற்றுநோயை உண்டாக்குகிறது.

அதுமட்டுமின்றி நாம் உண்ணும் காய்கறிகளில் கூட புற்றுநோயை உண்டாக்க கூடிய ரசாயனம் கலந்திருப்பதை நாம் பலரும் அறிவோம். என்னதான் நாம் 100 முறை கழுவினாலும் தோல் மற்றும் தோலின் உட்புறங்களில் ரசாயன கிருமிகள் பரவிவிடும்.

அதற்கு   சிறந்த வழி  நீங்கள் தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறிகளை வருடம் 365 நாளும் மஞ்சள் மற்றும்  உப்பு நீரில் ஊரவைத்து பிறகு கழுவி பயன்படுத்துங்கள்.

உறவுகளே உங்களில் ஒருவனாக உங்களின் நண்பனாக சொல்கிறேன் இதை அனைவருக்கும் பகிருங்கள்.

நாமும் நம் குடும்பமும் நோயற்ற வாழ்வை குறைவற்று வாழலாம்.

Wednesday, July 25, 2018

பாக்கெட் பால் விஷம் என்று தெரியுமா உங்களுக்கு*

🐂🐂🐂🐂🐂🐂🐂*பாக்கெட் பால் விஷம் என்று தெரியுமா உங்களுக்கு*

⚖ *உண்மை*⚖

🏴பாக்கெட் பாலில் என்ன இருக்கு என்று தெரியுமா
உங்களுக்கு

*பால் திக்காக இருக்க*

🔸ஸ்டார்ச்சு,
🔸மைதா மாவு,
🔸டிடர்ஜண்ட்,
🔸யூரியா,
🔸சர்க்கரை,
🔸குளுகோஸ்,
🔸பால் பவுடர் போன்றவை சேர்க்கப்படுகின்றது

*பாலை அப்படி கெட்டியாகக் காட்டிக் கெடாமல் இருக்கக் கெட்டவழியில் பாதுகாப்பு செய்யப்படுகிறது*

அதற்க்கு

🔻அமோனியா யூரியா,
🔻சோடியம் ஹைட்ராக்ûஸடு,
🔻கார்பன் ட்ரை ஆக்சைடு,
🔻பொட்டாசியம் ஹைட்ராக்சைடு சேர்க்கப்படுகின்றது

*இது போல் பாக்கெட் பால் தொடர்ந்து குடிப்பதால்*

🔹வயிற்றுப்போக்கு, 
🔹பிரசர்,
🔹சர்க்கரை நோய்,
🔹ஹார்மோன் சீர்கேடு,
🔹பாலியல் கோளாறுகள்,
🔹சிறு வயதிலே பருவமடைதல்
🔹ரத்த சோகை ஏற்படும். 🔹சிறுநீரகப் பாதிப்பு,  ஏற்படும் வாய்ப்பும் உண்டு.
என்று மருத்துவ ஆராய்ச்சி சொல்கின்றது

*ஆதாரம்*

https://www.youtube.com/watch?v=mRwjp3tMh6o

🐄தண்ணீர் பால்தான் நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றார்கள். ஆதாரம் கிளிக் செய்து பாருங்கள்

http://www.vikatan.com/article_amp.php?aid=8437

*பாக்கெட்பால் விஷம் என்று சன் டிவியில் கூறுகின்றார்கள் இந்த வீடியோ பாருங்கள்*

https://www.youtube.com/watch?v=N_JcUjg2l-M

*எனவே  முடிந்த அளவு பாக்கெட் பாலை தவிர்த்துக்கொள்ளுங்கள்*

🐄உங்கள் பகுதியில் பசும்பால் கிடைத்தால் வாங்கி உபயோகியுங்கள்
அதில் தண்ணீர் தான் கலப்பார்கள்  கெமிக்கல் கலக்கமாட்டார்கள்.

*​மறந்துவிடுவது மக்கள் இயல்பு​*

*​நினைவு படுத்துவது நம் கடமை​*

👉🏻சமூக மாற்றத்தை உங்களிடமிருந்து ஆரம்பியுங்கள்......

​⚖ *உண்மை*⚖​

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்....!

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்....!


சித்தமருத்துவத்தில் மிக முக்கியமான காயகற்ப மூலிகைப் பொருளாக திகழ்வது, கடுக்காய். உடலில் உள்ள கழிவுகளை நீக்கி, நோய்களை போக்கும் அற்புத  மருந்து கடுக்காய்.
பல் ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவு, பல் அசைவு, ஈறுகளில் உண்டாகும் புண், வாயில் ஏற்படும் வாடை போன்றவைகளை போக்க கடுக்காய் தூளை வெதுவெதுப்பான நீரில் கலந்து கொப்பளிக்கவேண்டும். இது சிறந்த கிருமிநாசினியாகவும் செயல்படுகிறது.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்:

கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண்,  குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல்,  கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய  நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய  அருமருந்தே கடுக்காய்.

இதை பற்றி சித்தர் கூறும் பாடலில் “காலை இஞ்சி கடும்பகல் சுக்கு மாலை கடுக்காய் மண்டலம் உண்டால் விருத்தனும் பாலனாமே. அதாவது காலை வெறும் வயிற்றில் இஞ்சியும்,  நண்பகலில் சுக்குவும், இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே  இந்தப் பாடலின் கருத்தாம்.

எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய  பொக்கிஷமாகும்.

– அனைவருக்கும் பகிருங்கள்

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...