தண்ணீரின் நினைவாற்றல் (Water Memory) :
செம்பு பாத்திரத்தில் தண்ணீர் புழங்க வேண்டும், அடுத்த வீட்டில் தண்ணீர் குடிக்கக்கூடாது என நம்மவர்கள் கூறிச்சென்றதை இன்று உலகம் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக்கொண்டுள்ளது.
ஆங்கில வருடம் 2003 முதல் சமீபத்திய ஜூலை 2018 வரை ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள்
நடந்திய பல்லேறு ஆய்வு முடிவுகள் தண்ணீருக்கு நினைவாற்றல் உண்டு என்பதை உணர்த்தியுள்ளன. வேதியியல் இயற்பியல் பற்றிய நமது புரிதலையும், அறிவியலை நாம் அணுகும் ஒட்டுமொத்த கண்ணோட்டத்தையும் இந்த பல்வேறு ஆய்வுமுடிவுகள் மாற்றியமைக்கின்றன. பாரத கலாச்சாரத்தின் தொன்மையையும் ஸனாதன தர்மத்தின் கருத்தியல் ஆழத்தையும் புரிந்துகொள்ள இந்த ஆய்வு முடிவுகள் பெரிதும் உதவி புரியும் என்பதில் சந்தேகமில்லை.
மனித உடல் முக்கால் பாகத்திற்கும் அதிகமாக (72-75%) தண்ணீரைக் கொண்டுள்ளது. நாம் பருகும் தண்ணீர், உண்ணும் உணவில் உள்ள மறை தண்ணீர் (Virtual water), சுற்றுச்சூழல் தண்ணீர் என அனைத்தும் மனித தன்மையை நிர்ணயம் செய்யும் காரணிகளாக உள்ளன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தண்ணீரின் ஞாபக திறனை இவ்வாறு விவரிக்கின்றன "ஓர் ஆற்றில் ஒரு வீட்டு சாவியை போட்டுவிட்டு வேறொரு இடத்தில் அதே ஆற்றின் தண்ணீரை எடுத்து வீட்டை திறப்பதுபோல...," முன்னர் அறிவியல் சமூகம் இதை ஏற்க மறுத்தாலும், ஆய்வு முடிவுகள் அறிவியலை அணுகும் முறையையே மாற்றியமைத்ததை மறுக்கவில்லை, மறுக்க முடியவுமில்லை.
மனிதர்களின் கைரேகை, DNA, வரிக்குதிரை, புலியின் உடல் வரிகள், என எப்படி ஒவ்வொன்றும் தனித்துவமாக இருக்கிறதோ..., அதேபோல் ஒவ்வொரு தண்ணீரும் தனித்துவமானவை. அவை பயனிக்கும், உட்படுத்தப்படும் சூழல்கள் அனைத்தையும் தன்னுள்ளே க்ரஹித்துக் கொள்கிறது, தரவுகளாக மாற்றியமைக்கிறது. அதை வெவ்வேறான சூழல்களில் வெவ்வேறான நிலைகளில், அளவுகளில் வெளிப்படுத்தவும் மறப்பதில்லை.
தண்ணீரின் அறிவையும், புனிதத்தையும், அவசியத்தையும் அறிந்த நம் பாரத கலாச்சாரம், உணவு முறை, சமூக அமைப்பு , அது உள்ளடங்கிய வாழ்வுமுறை என ப்ரம்மிப்பூட்டும் விஷயங்கள் ஏராளம். மிக மிக கச்சிதமான வாக்கியம்....
"நீரின்றி அமையாது உலகு"