Thursday, February 8, 2018

குலதெய்வங்கள் என்றால் என்ன ..? அவர்களின் பெருமை என்ன...?

குலதெய்வங்கள் என்றால் என்ன ..?
அவர்களின் பெருமை என்ன...?

குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது...?  ஒரு பார்வை...

குலதெய்வம்...
குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும்.

தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும்.

குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும்.

மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும்.

குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது.

அதன் சக்தியை அளவிடமுடியாது...

எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும்.

குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.

அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை.

எனவே தான் அந்த தெய்வங்கள் *குலதெய்வங்கள்* என்று சிறப்புடன்
அழைக்கப்படுகின்றன.

குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை.

இன்று நம் வாழ்க்கைப்போக்கு, அதிகபட்சம் இரு பாட்டன், பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா உள்ளது?

நம் முன்னோர்கள்...
அதாவது நம் தந்தை வழி பாட்டன், பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம் குல தெய்வமாகும்.

இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம்.
அது ஒரு ரிஷியின் வழி வழிப் பாதை...

இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.

இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம்.

இந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாக புண்ணியத்தை கட்டியிருக்கலாம்...
இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே!

நாம் அங்கே போய் நின்று...
அங்கு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்கள் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள்.

இது எத்தனை தூரப்பார்வையோடு,
வடிவமைக்கப்பட்டஒரு விஷயம்!...

விஞ்ஞான முறையில் யோசித்தால்...

ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே...

ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 க்ரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம்.

இது தாய் மூலம் 23, மற்றும் தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம்.

இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் க்ரொமொசொமே முடிவு செய்கிறது.

தாயிடம் xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன.

தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள் உள்ளன.

ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தையும்...

இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும்... பிறக்கின்றது. என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டு கூறி உள்ளது.

ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் ஆணிடம் மட்டும் தான் உள்ளது. பெண்ணிற்கு, y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை.

ஆனால், அதே ஆண் குழந்தைக்கு தந்தையிடம் இருந்து y க்ரோமோசோம்கள் வருகின்றன. அதனால் அவன் மூலம் வம்சம் மீண்டும் வழி வழியாக வளர்கிறது...

வழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டும், முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத்தொடர்ந்து...
இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டு...
தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகின்றது.

இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண்
குழந்தைகளை வாரிசுகளாக்கினார்கள்...

பெண் குழந்தைகளை குல விளக்காக காத்தனர்...

பொதுவாக, 13 தலைமுறைக்கு மேல் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை...

ஏனெனில், ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று.

மேலும், தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்கு சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம்.

எனவே, 13 தலைமுறைக்கு மேல் அது வலுவிழந்து பயனற்று போய்விடும்...

அதனால் ஏற்கெனவே பலவீனமான y க்ரோமோசோம்கள் மேலும்
பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடர கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது...

பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குல தெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான்.

பிறந்த வீட்டில் ஒரு தெய்வம்...
புகுந்த வீட்டில் ஒரு தெய்வம்...

திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள்.

பெண்கள் திருமணமாகி விட்டால் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவது கிடையாது...
அப்படி இல்லாமல், பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வழிபடுவது, அவர்களை புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ வழிவகுக்கும்.

இதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால், பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திருவிழாகாலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து, அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம்...

குலதெய்வதோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.

குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும்,
ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.

எனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி (குறைந்தது வருடம் ஒரு முறையாவது) செல்லுங்கள்.

அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள்.

அக்கோவிலுக்கு உதவுங்கள்.

தேனின் மகத்துவம்:

தேனின் மகத்துவம்:

உடலுக்கு மிகவும் இன்றியமையாதது என்று அனைவருக்குமே தெரியும். மேலும் தண்ணீரை தினமும் அதிக அளவில் குடித்து வர வேண்டியது அவசியம் என்றும் தெரியும். ஏனெனில் உடலானது 80 சதவீத நீரால் ஆனது. மேலும் உடலில் சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனை சுமந்து செல்வதற்கு தண்ணீர் தான் உதவுகிறது.

அத்தகைய தண்ணீரை இன்னும் சிறப்பான வழியில் எப்படி குடிப்பது? நீருடன் தேனைக் கலந்து குடித்தால், இன்னும் ஏராளமான பலனைப் பெறலாம். ஏனெனில் தேனும் மருத்துவ குணம் நிறைந்த ஓர் மருத்துவ பொருள். அத்தகைய தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால், உடல் ஆரோக்கியம் இன்னும் மேம்பட்டு, நோய்களின்றி இருக்கும்.

சரி, இப்போது தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் தேனைக் கலந்து குடித்து வந்தால் பெறும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்...

வாய்வு குறையும்

நீங்கள் வாய்வுத் தொல்லையால் அவஸ்தைப்பட்டு வந்தால், அதிலிருந்து விடுபட இந்த தேன் கலந்த நீர் உதவும். அதற்கு வெதுவெதுப்பான நீரில் தேனைக் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் வயிற்றில் உள்ள வாய்வு நடுநிலைப்படுத்தப்பட்டு, வயிற்று உப்புசம் குறைந்து, ரிலாக்ஸாக இருப்பதை உணர்வீர்கள்.

நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்

தேனிற்கு நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும் சக்தி உள்ளது. அதிலும் அந்த தேனை தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால், நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்.

டாக்ஸின்கள் வெளியேறும்

வெதுவெதுப்பான நீரில் தேனைக் கலந்து தினமும் குடிக்கும் போது, உடலின் மூலை முடுக்குகளில் தங்கியுள்ள டாக்ஸின்கள் முழுமையாக வெளியேற்றப்படும். அதிலும் அந்நீருடன் சிறிது எலுமிச்சையை சேர்த்துக் கொண்டால், சிறுநீர் பெருக்கத்தினால், எளிமையாக டாக்ஸின்களை வெளியேற்றலாம்.

பொலிவான சுத்தமான சருமம்

தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், சருமத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்குவதோடு, கழிவுப்பொருட்களை உடலில் இருந்து வெளியேற்ற உதவும். மேலும் இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, சருமத்தை பாக்டீரியாக்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்து, சுத்தமான மற்றும் பொலிவான சருமத்தைப் பெற உதவும். எனவே உங்களுக்கு நல்ல பொலிவான முகம் வேண்டுமானால், நீரில் தேன் கலந்து தினமும் குடித்து வாருங்கள்.

எடையைக் குறைக்கலாம்

எடையைக் குறைக்க நினைப்பவர்கள் சர்க்கரையை உணவில் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். வேண்டுமெனில் இனிப்பு சுவைக்கு தேனை பயன்படுத்திக் கொள்ளலாம். அதிலும் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் தேனைக் கலந்து குடித்து வந்தால், உடல் எடையை விரைவில் குறைக்கலாம்.

தொண்டைப்புண்

குளிர் அல்லது மழைக்காலங்களில் வெதுவெதுப்பான நீரில் தினமும் காலையில் தேன் கலந்து குடித்து வந்தால், தொண்டையில் ஏற்படும் தொற்றுக்கள் மற்றும் புண்கள் குணமாக்கப்படும். மேலும் இக்கலவை சளி, இருமல், சுவாசக்கோளாறுகளுக்கு சிறந்த நிவாரணியும் கூட.

சீரான இரத்த சர்க்கரை அளவு

உங்கள் உடலில் இரத்த சர்க்கரையின் அளவை சீராகப் பராமரிக்க நினைத்தால், வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடித்து வாருங்கள். மேலும் எந்த ஒரு இனிப்பு பொருட்களிலும் சர்க்கரையைத் தவிர்த்து, தேனைக் கலந்து எடுத்து வாருங்கள். இதனால் இரத்த சர்க்கரை அளவு சீராக்கப்படுவதோடு, உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவும் குறையும்.

இதய நோயைத் தடுக்கும்

தற்போது இதய நோயால் தான் நிறைய மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த இதய நோய் தாக்காமல் இருக்க வேண்டுமெனில், தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடித்து வாருங்கள். இதனால் அவற்றில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதய நோயின் தாக்குதலில் இருந்து பாதுகாப்புத் தரும்.

சூடா வெந்தய டீ குடிச்சா என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

சூடா வெந்தய டீ குடிச்சா என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

வெந்தயம் மிக எளிதாக கிடைக்கும் பொருள். எளிதாக கிடைக்கும் எதன் பலனையும் நாம் கண்டுகொள்வதிலை. அப்படித்தான் வெந்தயத்தின் மகிமையும் நாம் உதாசீனப்படுத்துகிறோம். அதிக நார்ச்சத்து, இரும்புச்சத்து, புரதச் சத்து(46%) மற்றும் இதயத்தை பாதுகாக்கத் தேவையான முக்கிய மினரல் பொட்டாசியமென பல சத்துக்களை அந்த சின்ன வெந்தய விதை பெற்றிருக்கிறது.

அது குணப்படுத்தும் நோய்கள் கணக்கில் சொல்ல முடியாதது. சர்க்கரை வியாதி, உடல் பருமன், பித்த நோய்கள், ரத்த அழுத்தம், இதய நோய்கள் என பல பெரும் நோய்களை தன் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆச்சரியங்கள் நிறைந்தது இந்த வெந்தயம்.

அந்த வெந்தயத்தை ஊற வைத்து குடிப்பதையும், மற்றும் வெந்தயப்பொடியை நீரில் கலந்து குடிப்பது மற்றும் அதிகமாக உனவில் சேர்ப்பது என நீங்கல் செய்திருப்பீர்கள். வெந்தய தே நீரை குடித்திருக்கிறீர்களா? அப்படி குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? இதோ உங்களுக்காக அதனை செய்யும் முறையும், அதன் அற்புத நன்மைகளையும் இந்த கட்டுரையில் காணலாம்.

தயாரிக்கும் முறை :
ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அதில் வெந்தயத்தை சிறிது சேர்த்து, மூடி வைத்து 3 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைத்து இறக்க வேண்டும். பின்னர் சூடு குறைந்து வெதுவெதுப்பாக ஆனவுடன் அதனை வடிகட்டி, தேன் சிறிது கலந்து குடிக்க வேண்டும்.


வெந்தய டீ குடிப்பதால் வரும் நன்மைகள் :
குடலை சுத்தமாக்க :

குடல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். குடல் மற்றும் உணவுக்குழாய்களில் தங்கும் கழிவுகளை உடலில் இருந்து எளிதில் வெளியேற்றும். நச்சுக்களை உடலில் தங்க விடாது.


ரத்த சோகை :
இளம் வயதினர் மற்றும் முதியவர்கள் பெரும்பாலோனோர் ரத்த சோகையால பாதிக்கபப்டுகிறார்கள். மன அழுத்தம் காரணமாக அவர்களுக்கு ரத்த சோகையால் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு இந்த வெந்தய டீ அருமருந்தாகிறது.


மாதவிடாய் வலிக்கு :
மாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிற்று வலி மற்றும் உடல் வலிகள் தோன்றும். அதோடு சிலருக்கு தசைப் பிடிப்பும் உருவாகும். இந்த சமயத்தில் வெந்தய டீயைக் குடித்தால், வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.


டீன் ஏஜ் பெண்கள் :
பூப்படையும் வயதில் உள்ள சிறுமிகள் வெந்தய டீயைக் குடிப்பது நல்லது. இது வளர்ச்சி ஹார்மோன்களையும் ஊக்குவிக்கும். பிற்காலத்தில் மாதவிடாய் கோளாறுகள் வராமல் தடுக்கும்.


தாய்ப்பால் அதிகரிக்க :
முற்றிலும் ஆராய்ச்சிகளால் நிரூபிக்கப்பட்ட உண்மை இது. தினமும் வெந்தய டீ குடித்து வந்தால் தாய்ப்பால் சரிவர சுரக்காத தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பது அதிகரிக்கும்.


கொழுப்பு கரைய :
கொலஸ்ட்ரால் பிரச்சனையைத் தவிர்க்க தினமும் வெந்தய டீ குடியுங்கள். இதனால் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை கட்டுக்குள் வரும். மேலும் இதனால் உண்டாகும் கல்லீரல், இதயம் மற்றும் ரத்த பாதிப்புகளை வராமல் தவிர்க்கப்படுகிறது.


மலச்சிக்கல் :
வெந்தய டீ மிகச்சிறந்த மலமிளக்கியாக செயல்படும். நீங்கள் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால், அதனை குணப்படுத்த, தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள்.


உடல் எடைக்கு :
வெந்தய டீ உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுக்கிறது. உடலில் அவசியமற்று தங்கி கேடு விளைவிக்கும் கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கச் செய்கிறது. அதோடு மேலும் உடல் எடையை தக்க வைக்கவும் உதவுகிறது.


இதய நோய்கள் :
தினமும் ஒரு கப் வெந்தய டீ குடிப்பதால், இதயத்தை பத்திரமாய் பாதுகாக்கலாம். இதிலுள்ள பொட்டாசியம், ரத்தத்தில் சோடியம் அளவை குறைப்பதால் இதயத்தை பாதிக்கும் அபாயம் இல்லை.


அசிடிட்டி :
அதிக அமிலம் எதுக்களிப்பு நோய்களால் நிறைய பேர் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு இந்த டீ ஒரு அருமருந்தாகிறது. இது அசிடிட்டி, நெஞ்செரிச்சல், மற்றும் உடலில் சுரக்கும் அதிகப்படியான அமிலத்தை தடுக்கிறது. இதனால் அல்சர் போன்ற நோய்கள் தடுக்கபப்டுகிறது.


சர்க்கரை வியாதி :
தினமும் வெந்தய டீயை குடித்து வந்தால், இந்த காலத்தில் பெரும்பாலோனோரைத் தாக்குகின்ற டைப்- 2 சர்க்கரை வியாதியை வாராமல் தடுக்கலாம். அவ்வாறு சர்க்கரை வியாதி வந்தவர்கள் இதனை குடித்தால் சர்க்கரை நோய்க்கு மாத்திரை சாப்பிட தேவையிருக்காது. சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.


கூந்தல் வளர்ச்சி :
இந்த காலத்தில் அனைவருக்கும் இருக்கும் பெரிய பாதிப்புகளில் ஒன்று முடி உதிர்வு. தினமும் இந்த வெந்தய தேனீர் குடித்து வாருங்கள். முடி அடர்த்தியாவை நீங்களே காண்பீர்கள். இது முடி வளற்ச்சியை வெகு வேகமாக ஊக்குவிக்கின்றது.


பித்த நோய்கள் :
நிறைய பேருக்கு உடல் சூட்டினால் அசிடிட்டி, நெஞ்செரிச்சல் என பலவித பாதிப்புகளில் ஆளாகிறார்கள். இந்த தேனீர் உடலை குளிர்ச்சி செய்வதால் பித்தம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது.

– அனைவருக்கும் பகிருங்கள்

Tuesday, November 14, 2017

கொழுப்பு உணவின் மிகப்பெரிய சக்தி.

 கொழுப்பு உணவின் மிகப்பெரிய சக்தி. கிராம் ஒன்றுக்கு 9 கலோரிசத்து அளிக்க வல்லது. உடலின் சில செயல் பாடுகளுக்கு கொழுப்பும் அவசியமே. உணவில் கார்போஹைடிரேட் புரத சக்தி இல்லாத பொழுது கொழுப்பை எரி சக்தி அளிக்கின்றது. கொழுப்பில் 4 பிரிவுகள் உண்டு ஆரோக்கியமான நல்ல கொழுப்பு

* நிறைவு பெறாத கொழுப்பு
* பல நிறைவு பெறாத கொழுப்பு ஒமேகா-3 ஒமேகா-6 ஆரோக்கிய மற்ற கெட்ட கொழுப்பு
* நிறைவுற்ற கொழுப்பு
* மறு பக்க கொழுப்பு காலம் காலமாக சத்துணவு நிபுணர்களாலும் மருத்துவர்களாலும் குறைந்த கொழுப்பு உணவு பரிந்துரைக்கபடுகின்றது.
கெட்ட கொழுப்பு கெட்ட கொலஸ்டிராலை கொண்டுள்ளது. அதன் காரணமாக உடலில் பல பாதிப்புகளை எற்படுத்துகின்றது. நல்ல கொழுப்பு உடல் நலத்தையும் இருதயத்தையும் காக்கின்றது. குறைந்த கொழுப்பு என்பதை அறிவது எப்படி?
உணவு பொருட்களின் மீதுள்ள லேபிலை படியுங்கள் கொழுப்பு குறைந்த அசைவம் கிடைக்கின்றது கொழுப்பு குறைந்த பால், பால்பொருட்கள் கிடைக்கின் றது எண்ணையை அப்படியே கொட்டாமல் கரண்டி கொண்டு ஊற்றுங்கள். 17.5 கி/100 கி என்றால் மிகமிக அதிக கொழுப்பு. 3 கி/100 கி என்று இருந்தால் நல்ல கொழுப்பு.
கெட்ட கொழுப்பு :
* அடர் அசைவம்
* கோழி தோலுடன்
* கொழுப்பு நிறைந்தபால்
* வெண்ணெய்
* சீஸ்
* ஐஸ்கிரீம்
* பாம் ஆயில்
* தேங்காய் எண் ணெய்
* கேக், பிட்சா வகைகள்
* பொரித்த உணவுகள்
* சர்க்கரை அதிகம் சேர்ந்த உணவுகள் கெட்ட கொழுப்பு உணவை தவிர்ப்பது மட்டுமே போதாது.
நல்ல கொழுப்பையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் ஒவ்வொரு கிராம் கொழுப்பும் கார்போஹைடிரேட், புரத்தைவிட இரு மடங்கு, மும்மடங்கு அதிகமான கலோரி சத்தியை கொடுக்கின்றன. இதனால் தான் சரியான உடல் எடையை காக்க முடியாமல் போகின்றது.
கொழுப்புக்கு உடலில் என்ன வேலை :
* சக்தி அளிக்கின்றது
* வைட்டமின் ஏ,டி,ஈ,கே போன்றவைகள் கொழுப்பிலேயே கரைந்து உடலில் எடுத்துக் கொள்ளப்படுகின்றது
* உடலின் உஷ்ணத்தை சீராக வைக்கின்றது
* உறுப்புகளின் மேல் ஒரு போர்வை போல் படர்ந்து உடலை காக்கின்றது
* திசுக்களை ஆரோக்கியமாக வைக்கின்றது
* மூளை திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றது
* ஹார்மோன்களை உருவாக்குகின்றது
* தலை முடியும், சருமமும் செழுமை பெறுகின்றது
கொலஸ்ட்ரால் பற்றி ஒரு செய்தி:
கொலஸ்டிரால் மெழுகு போன்ற ஒரு பொருள். அவரவர் உடலே கொலஸ்டிராலை உற்பத்தி செய்து கொள்ளும். உணவிலிருந்து கொலஸ்டிராலை உடல் எடுத்துக் கொள்ளும். அசைவ உணவு, முட்டை இவற்றில் கொலஸ் டிரால் கிடைத்து விடும். கொலஸ்டிரால் உடலுக்கு அவசியமானதே உடல் திசுக்களை வளர்ப்பதற்கும், சில் ஹார்மோன்கள் உற்பத்திக்கும் கொலஸ்ட்ரால் அவசியமாகின்றது.
ஆனால், இதனை உடலே உற்பத்தி செய்து கொள்ளும். உணவில் அதிக கொலஸ்ட்ரால் சேரும் போழுது ஆராக்கிய மற்ற கெட்ட கொலஸ்டிரால் அதிகரிக்கின்றது. இதன் காரணமே இருதய பாதிப்பு, பக்கவாதம் ஏற்படுகிறது. நிறைவுள்ள கொழுப்பு நிறைந்த உணவுகளாலும் கெட்ட கொலஸ்டிரால் அதிகரித்து இதே பாதிப்புகள் ஏற்படுகின்றன.
உங்கள் உணவில் 20, 25 சதவீதம் நல்ல கொழுப்பால் ஆன உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம். நிறைவு பெறாத கொழுப்பு, பல நிறைவு பெறாத கொழுப்பு, ஒமேகா இவைகளை அளவோடு உண்ணும் பொழுது உடல் ஆரோக்கியமாகவே இருக்கின்றது.

நல்ல கொழுப்பு :
* ஆலிவ் எண்ணெய்
* பாதாம், வேர்கடலை போன்ற கொட்டை வகைகள், பல நிறைவு பெறாத கொழுப்பு
* நல்எண்ணைய்
* சூரியகாந்தி எண்ணெய்
* சோயாபால்
* முட்டை வெள்ளைக்கரு உங்களை மாற்றிக் கொள்ளுங்கள் :
* சிறிய குட்டி குட்டியான உணவாக நாள் ஒன்றுக்கு ஆறுமுறை சாப்பிடுங்கள்.
* இளவயதினர் என்றால் ஜாகிங் தினமும் செய்யுங்கள்.
* உங்கள் உணவு தட்டை சிறியதாக உபயோகிங்கள்.
* நீலநிற தட்டை பயன் படுத்துங்கள். இதற்கு உணவு உண்ணும் ஆவலை குறைக்கும் தன்மை உள்ளதாம். சிகப்பு, மஞ்சள் நிறத்திற்கு உணவு உண்ணும் ஆவலை தூண்டும் தன்மை உள்ளதாம்.
* வேர்கடலையை தோல் உரித்து சாப்பிடுங்கள். அப்பொழுது குறைவாக உண் பீர்கள். மேலும் இதை உப்பின்றி சாப்பிட பழகுங்கள்.
* சர்க்கரை இல்லாத சூயிங் கம் மெல்லுங்கள். புதினா வாசனையுடைய சூயிங்கமாக இருக்கட்டும். புதினா வின் மணம் மூளைக்கு சாப்பிடுவது போதும் என்ற சிக்னல் கொடுத்து விடும்.
* உப்பில்லா பிஸ்தா சிறிது சாப்பிடுங்கள்.
* யோகாவிற்கு உடல் கொழுப்பை குறைக்கும் ஆற்றல் உண்டு. எனவே யோகா பழகுங்கள்.
* வாரம் ஒரு நாள் ஒரு வேளை உபவாசம் இருங்கள்.
* காலை உணவு ஓட்ஸ், முட்டை என இருக்கட்டும்.
* நன்கு தண்ணீர் குடியுங்கள்.
* படுக்கையில், சோபாவில் உட்கார்ந்து சாப்பிடாதீர்கள். சாப்பிடும்போது மேஜையிலோ அல்லது தரையிலோ அமர்ந்து சாப்பிடுங்கள்.
* பொரித்த உணவுகளை தவிர்த்து விடுங்கள்.
* டீ, கீரின் டீ இரண்டும் எடுத்துக் கொளுங்கள் சர்க்கரையை குறைவாக எடுத்துக் கொள்ளுங்கள்.
ஆசையை தூண்டும் நொறுக்குத் தீனிகளை வீட்டில் வைக்கவே வைக்காதீர்கள். சுவீட் ஆசை விடவில்லை என்றால், அதை ஸ்பூனின் பின்புறத்தை கொண்டு ருசியுங்கள். அதிக கலோரி சத்து உடலில் ஏறாமல் பிழைத்துக் கொள்வீர்கள். நார் சத்து உணவாகவே சாப்பிடுங்கள்.
நீங்கள் உண்ணுவதை அன்றாடம் எழுதி இரவில் பாருங்கள். உங்களை திருத்திக் கொள்ள இது பெரிதும் உதவும். காலை உணவை கண்டிப்பாக எடுத்துக் கொள்ளுங்கள்.

www.siddharmedicine.in @ 9943909495

Friday, November 10, 2017

இதய வலுவுக்கு கருஞ்சீரகம்:

இதய வலுவுக்கு கருஞ்சீரகம்:

கருஞ்சீரகம் உடலில் எங்காவது ரத்த சுழற்சியில் தடை இருந்தாலும் உடனே நீக்குகிறது. கொழுப்பினை கரைக்கும் இதய வால்வுகளில் உண்டாகும் அடைப்பினை நீக்கும்.

கருஞ்சீரகம் – 150 கிராம்
சீரகம் – 100 கிராம்
பெருஞ்சீரகம் – 100 கிராம்
காட்டுச்சீரகம் – 50 கிராம்
பிளப்புசீரகம் – 50 கிராம்
எலுமிச்சம் பழம் – 10 எண்ணிக்கை

முதலில் சீரகம் அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பாத்திரத்தில் இட்டு எலுமிச்சம்பழத்தைச் சாறு பிழிந்து பாத்திரத்தில் சேர்த்து வெய்யிலில் காய வைக்கவும். நன்கு காய்ந்த பின் தூள் செய்து கொள்க.

இதில் காலை- மாலை ஒரு தேக்கரண்டி (ஐந்து கிராம்) அளவு சாப்பிட்டு வர ரத்த அழுத்தம், இதய வீக்கம், வாய்வுக் கோளாறுகள் அனைத்தும் நீங்கும்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...