பித்தக்கற்கள்
பித்தப்பையில் தோன்றும் பித்தக்கற்கள் பல அளவுகளில் அமையலாம். 40 வயதிற்கு மேற்பட்டவர்களில் பத்தில் ஒருவருக்கு இக்கற்கள் தோன்றலாம். இக்கற்கள் பித்தநீரில் தோன்றும். பித்தநீரில் கொலஸ்டிரால்,நிறமிகள் மற்றும் சில உப்புகள் உள்ளன. பித்தநீரின் தன்மைகளில் மாற்றங்கள் ஏற்பட்டால் கல் தோன்றுதல் நிகழலாம். இக்கற்கள் கொலஸ்டிராலால் ஆனவை. கல் தோன்றுதலுக்கான மிகச் சரியான காரணங்கள் தெரியவில்லை. உடற்பருமன் அதிகரிப்பு,உணவில் கொழுப்பு அதிகரித்தல் போன்ற காரணங்களால் கல் தோன்றலாம்.மிகுந்த பாதிப்பு நிலையில் கற்களால் பித்தநீர் நாளத்தில் அடைப்பு ஏற்பட்டு மஞ்சள் காமாலை தோன்றும்.
கல்லீரல் அழற்சி
பல காரணங்களால் கல்லீரல் அழற்சி ஏற்படுகிறது. இந்நோயில் வைரஸ்களின் தாக்குதலால் கல்லீரலில் வீக்கம் ஏற்படுகிறது. தொற்று நோயற்ற கல்லீரல் அழற்சி அதிக அளவு மது அருந்துதலால் ஏற்படும். ஆரம்ப நிலையில் இதன் அறிகுறிகள் தெளிவாக இருப்பதில்லை. இந்நோயால் உடற்சோர்வு, வாந்தியெடுத்தல், காய்ச்சல், வலது மேல் வயிற்றுப்பகுதியில் ஓர் வசதியற்ற உள்ளுணர்வு போன்றவை ஏற்படும். இந்நிலையுள்ளோருக்கு நல்ல ஓய்வு தேவை. மது அருந்துதலைத் தவிர்க்க வேண்டும். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் பூரணமாக முழுமையாக குணப்படுத்த முடியும். http://www.siddharmedicine.in/ @ 9943909495, 04258-226495