*குழந்தைகளுக்கான குளியல் பொடி தயாரிப்பது எப்படி?*
*குளியல் பொடி தயாரிக்கும் முறை 1 (Bath Powder)*
*தேவையானவை:*
பச்சைப்பயறு – ½ கிலோ
கடலப்பருப்பு – ½ கிலோ
கஸ்தூரி மஞ்சள் – 25 கிராம்
பூலாங்கிழங்கு – 10 கிராம்
ஆவாரம்பூ – 50 கிராம்
ரோஜா – 50 கிராம்
செம்பருத்தி பூ – 10
வேப்பிலை – 30 கிராம்
துளசி – 30 கிராம்
வெட்டிவேர் – 10 கிராம்
*செய்முறை:*
மேற்சொன்ன அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
இவையெல்லாம் காய வைத்துதான் விற்கப்படும்.
நீங்களே வீட்டில் இருப்பதைப் பயன்படுத்த போகிறீர்கள் என்றால் நன்றாக வெயிலில் காய வைக்க வேண்டும்.
இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள்.
இதையே குளியல் பொடியாகப் பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு ஏற்றது.
*யார் பயன்படுத்தலாம்?*
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இதைப் பயன்படுத்தலாம்.
ஆனால், ஆண் குழந்தைகளுக்கு, ஆண்கள் இதைப் பயன்படுத்துவதாக இருந்தால் கஸ்தூரி மஞ்சளை மட்டும் நீக்கிவிட்டு இதைப் பயன்படுத்தலாம்.
*பலன்கள்:*
குழந்தைகளுக்கு இந்தப் பொடி மிகவும் நல்லது.
குழந்தைகளின் மென்மையான சருமத்திற்கு ஏற்றது.
இயற்கையாகவே சருமத்தில் சுரக்கும் எண்ணெயை நீக்காமல் பாதுகாக்க உதவும்.
துர்நாற்றம் வருவது தவிர்க்கப்படும்.
உடலில் எங்கும் சரும தொந்தரவுகள் வராது.
வெயில் காலங்களில் ஏற்படும் சரும தொல்லைகள் வராமல் தடுக்கப்படும்.
சருமத்தில் கருமை இருந்தால் அவை நீங்கும்.
பரு, மரு, கருத்திட்டுக்கள் வராமல் தடுக்கப்படும்.
வியர்க்குரு தொல்லையும் இருக்காது.
பெண் குழந்தைகள், பெண்கள் இதைப் பயன்படுத்தி வந்தால் சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகள் உதிர்ந்து விடும். மீண்டும் முடி சருமத்தில் வளராது. வாக்சிங் செய்யத் தேவையில்லை.
*குளியல் பொடி தயாரிக்கும் முறை 2*
*தேவையானவை:*
ரோஜா இதழ் – 150 கிராம்
பச்சைப்பயறு – 200 கிராம்
கடலப்பருப்பு – 100 கிராம்
கஸ்தூரி மஞ்சள் – 25 கிராம்
வேப்பிலை – 50 கிராம்
ஆரஞ்சு தோல் – 3-4 பழத்தின் தோல்கள்
பாதாம் – 10
எக்சோரா பூ (இட்லி பூ) – 1 கப்
செம்பருத்தி பூ – 10
*செய்முறை:* ச
இவை அனைத்தையும் நன்றாக காய வைத்துக் கொள்ளவும்.
கடையில் கொடுத்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
அவ்வளவுதான் குளியல் பொடி ரெடி.
*யார் பயன்படுத்தலாம்?*
குழந்தைகள், பெண்கள் அனைவரும் பயன்படுத்தலாம்.
ஆண் குழந்தைகளுக்கு, ஆண்கள் பயன்படுத்துவதாக இருந்தால் கஸ்தூரி மஞ்சளை நீக்கிவிட்டு பயன்படுத்தலாம்.
*பலன்கள்:*
தோலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் இதில் உள்ளன.
இயற்கையாகவே சருமம் பொலிவு பெறும்.
மினுமினுப்பான தோற்றம் கிடைக்கும்.
**வியர்வைத் துர்நாற்றம் வீசுவது தடுக்கப்படும்.*
*சருமத்தில்இயற்கையான பளிச் பிரகாசம் தெரியும். சருமத்தை* *ஆரோக்கியமாகப் பராமரிக்க உதவும்.**