: ✍ *இயற்கை வாழ்வியல் முறை*
🧘♂🧘♂🧘♂🧘♂🧘♂🧘♂
*உணவே மருந்து*
*மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் முதன்மையானது உணவு,*
*மக்கள் உண்ணும் உணவும் உணவுப் பழக்கவழக்கங்களுமே*
*அவர்களின் உடல் நலத்தைக் தீர்மானிக்கின்றன.*
*தமிழர் மருத்துவத்தில் உணவு என்பது அனைத்து நோய்களையும் தீர்க்ககூடிய சஞ்சீவி மருந்தாகக் கருதப்படுகிறது. இயற்கை உணவுமுறையினையும் இயற்கையோடு இயைந்த பழக்கவழக்கங்களையும் கடைப்பிடிப்பதன் மூலம் உடல்நலத்தையும் உளநலத்தையும் பாதுகாக்க முடியும் என மருத்துவர் பரிந்துரைகின்றனர்.*
🧘♂🧘♂🧘♂🧘♂🧘♂🧘♂
*இன்று சமையல் முறைகள் நாட்டுக்கு நாடு, மாநிலத்துக்கு மாநிலம்,*
*மாவட்டத்துக்கு மாவட்டம்* *வேறுபடுகின்றன. உணவகங்கள்*
*பெருகியுள்ளன.* *சத்துக்காக அன்றிச் சுவைக்காக* *உண்ணும் நடைமுறை மிகுந்திருக்கிறது. அட்டைப்பெட்டிகளிலும் தாள் பைகளிலும் பதப்படுத்தி அடைத்த ஆயத்த* *உணவுவகைகள், விரைவு உணவுகள், வழக்கத்துக்கு வந்துள்ளன. அதனால், நோய்களும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.*
🧘♂🧘♂🧘♂🧘♂🧘♂🧘♂ *உணவே மருந்து என்னும் நிலைமாறி, மருந்தே உணவு என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.*
*உணவின் இன்றியமையாமை :*
🧘♂🧘♂🧘♂🧘♂🧘♂🧘♂
*உண்டி முதற்றே உலகு என்பது நாமறிந்தது.*
*உணவு,* *உடலுக்கு*
*வலிமையைத் தருவது,* *வளர்ச்சியளிப்பது,* *வாழ்க்கைக்கு அடிப்படையாக இருப்பதுடன் கொள்கைகள்,* *பழக்கவழக்கங்கள், நாகரிகம்,*
*சமூக அமைப்பு, வாழ்க்கைத் தரம் முதலியவற்றிலும் மாறுபாடுகளை உண்டாக்கவல்லது. அஃது உடலையும் உயிரையும் வளர்க்கும் அமுதாகும். பசி வந்திடப் பத்தும் பறந்துபோகும் என்பது* *உலகறிந்த உண்மை. எனவேதான்,* *பசியின் கொடுமையைப் பசிப்பிணி என்னும் பாவி என்றது மணிமேகலைக் காப்பியம்.* *இப்பிணிக்கு மருந்து உணவே. ஆதலால்தான்,* *உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தாரே எனப்* *புறநானூறும் மணிமேகலையும் கூறுகின்றன.*
*உணவே மருந்து* :
🧘♂🧘♂🧘♂🧘♂🧘♂🧘♂
*உயிர்,* *உடலோடுகூடிய நிலையில்* *எப்போதும் புறச்சூழலோடு போராடி* *வருகிறது.* *அதில் வெற்றியடைவதே உடல்நலமாகும்,* *தோல்வி அடைந்தால் நோயில் முடியும். அந்நோயைத் தீர்த்து இன்பமளிப்பதே மருந்து.*
*திருக்குறளில் மருந்து என்னும் அதிகாரத்தில் உணவே* *மருந்தாகும்*
*தன்மையைத்* *திருவள்ளுவர் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.*
🧘♂🧘♂🧘♂🧘♂🧘♂🧘♂
*உண்ட*
*உணவு,* *செரித்தபின்னரே மீண்டும் உண்ணவேண்டும்மெனத் தமிழ்*
*மருத்துவம் கூறுகிறது.* *முன் உண்டது செரித்தது கண்டு உண்பார்க்கு*
*மருந்துண்ணும் தேவை* *ஏற்படாது.*
🧘♂🧘♂🧘♂🧘♂🧘♂🧘♂
*மருந்தென* *வேண்டாவாம் யாக்கைக்கு* *அருந்தியது*
*அற்றது போற்றி* *உணின்*் . – *குறள் *942*
🧘♂🧘♂🧘♂🧘♂🧘♂🧘♂
*என்பது வள்ளுவர் வாக்கு. எனவே,* *உடல்நலத்துக்குப்*
*பொருந்திய* *உணவு எது?* *பொருந்தா* *உணவு எது? என*
*ஆராய்ந்து,* *தெளிந்து உணவு முறையை வகுத்துக்கொண்டால்,*
*உடலுக்கு ஊறுசெய்யும் நோய்கள் நம்மை அணுகா.*
*தமிழகத்து உணவு,* *தொன்றுதொட்டு மருத்துவமுறையில்*
*சமைக்கப்படுகிறது. வெப்ப நாடான நமது நாட்டுச்* *சமையலுக்குப்*
*புழுங்கலரிசியே* *ஏற்றது.* *அன்றாடச்* *சமையலில்* *கூட்டுவனவற்றுள்*
*மஞ்சள்,* *நெஞ்சிலுள்ள சளியை நீக்கும். கொத்தமல்லி,* *பித்தத்தைப்*
*போக்கும். சீரகம்,* *வயிற்றுச்* *சூட்டைத்தணிக்கும். மிளகு,* *தொண்டைக்*
*கட்டைத்* *தொலைக்கும். பூண்டு,* *வளியகற்றி வயிற்றுப்பொருமலை*
🧘♂🧘♂🧘♂🧘♂🧘♂🧘♂
*நீக்கிப் பசியை மிகுவிக்கும்.*
*வெங்காயம் குளிர்ச்சி உண்டாக்கிக் *குருதியைத்* *தூய்மைபடுத்தும*்.
*பெருங்காயம் வளியை* *வெளியேற்றும். இஞ்சி,* *பித்தத்தை ஒடுக்கிக்*
*காய்ச்சலைக் கண்டிக்கும்.* *தேங்காய் நீர்க்கோவையை நீக்கும்.*
*கறிவேப்பிலை, மணமூட்டி உணவிருப்பை உண்டாக்கும்.*
*நல்லெண்ணெய் கண் குளிர்ச்சியும் அறிவுத்தெளிவும் உண்டாக்கும்.*
*சீரகம் பூண்டு கலந்த மிளகு நீர், சூட்டைத் தணித்துச் *செரிமான*
*ஆற்றலை உடலுக்கு வலிமை ஊட்டும்* *கழிவு* *அகலவும்*
*கீரை நல்லது.* *உடலுக்குக் குளிர்ச்சி* *ஏற்படவும் பித்தம் போக்கவும்*
*எலுமிச்சை ஊறுகாயை* *மோர்ச்சோற்றுடன்* *உண்ணலாம்.*
*தவிர்க்க* *வேண்டியன :*
🧘♂🧘♂🧘♂🧘♂🧘♂🧘♂
*நோய்க்கு முதல் காரணம்,* *உப்பு.* *இதனைக் குறைவாகக்* *சேர்த்தல்*
*நன்று.* *உப்பு நிறைந்த* *பொருள்களான ஊறுகாய்,* *அப்பளம், வடாமவாழைக்காய்ச்*,* *முந்திரிப்பருப்பு, வறுத்த உருளைச் சீவல்,* *வாழைக்காய்ச்*
*சீவல்,* *புளித்தமோர்* *முதலியனவற்றை முழுவதுமாகத் *தவிர்த்தல்*
*வேண்டும்.*
*கொழுப்பு நிறைந்த* *இறைச்சிகள்,* *முட்டையின்* *மஞ்சள் கரு, தயிர்,*
*நெய்,* *வெண்ணை,* *பாலாடை,* *பனிக்கூழ், இனிப்புக்கட்டி *ஆகியவற்றை*
*நீக்குதல் வேண்டும்.*
*காரமும் புளிப்பும் மிக்க உணவுகள் கூடா.* *எண்ணெயில் *வறுத்த,*
*பொரித்த உணவுகளை ஒதுக்குதல் நன்று.* *நொறுக்குத் தீனி*
*வயிற்றுக்குக்* *கேடு என்பது பழமொழி.* *நொறுக்குத் தீனி கூடவே கூடாது.* *இடையிடையே எதனையாவது* *தின்பதும் கொறிப்பதும் உடலுக்கு நல்லது இல்லை.*
*உண்ணும் முறை :*
🧘♂🧘♂🧘♂🧘♂🧘♂🧘♂
*எளிதில் செரிக்கக் கூடிய பழம், காய், பருப்பு, அரிசி, கோதுமை,*
*பால் இவற்றையே குடல் ஏற்றுக்கொள்கிறது. நாச்சுவை கருதி*
*உண்ணாமல், உடல்நலங்கருதி உண்ணுதலே நல்லது.*
*உணவை விரைவாக விழுங்குதல் கூடாது, நன்றாக மென்று*
*விழுங்குதல் வேண்டும்.* *அப்போதுதான் வாயிலுள்ள உமிழ்நீர் வேண்டிய அளவு சுரந்து உணவுடன் கலக்கும்.* *உமிழ்நீர் கலக்காத உணவு உள்ளே சென்றாலும்,* *அது செரிக்காது, குடலும் தன் செரிமான*
*ஆற்றலை இழந்துவிடும்.*
*உணவின் சத்துகள் வீணாகாமல் பார்த்துக்கொள்ளுதல் வேண்டும்.*
*காய்கறிகளை முக்கால்* *வேக்காட்டில் வேகவைத்து* *உண்ணுதல்*
*வேண்டும்.* *வேகவைத்த காய்கறி நீரில் மிகுதியான சத்துகள்*
*இருப்பதனால்,* *அதனை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.*
*நொறுங்கத் தின்றால் நூறு வயது :*
🧘♂🧘♂🧘♂🧘♂🧘♂🧘♂
*தண்ணீரும் மருந்தே.* *நீரின்றியமையாது உலகு என்பது வள்ளுவம்.* *இயற்கை* *உணவுப்பொருள்களில் நீரில்லாத உணவுப்பொருள்களே இல்லை.* *எல்லாவகையான உணவுப் பொருள்களும்* *விளைவதற்குக் காரணாமாக அமைவது நீர்.*
*உண்ட உணவு குருதியுடன் கலப்பதற்கும்,* *குருதி தூய்மை*
*பெறுவதற்கும் உடலிலுள்ள* *கழிவுப்பொருள்கள்* *வெளியேறுவதற்கும்*
*நீர் இன்றியமையாதது. எனவே, நீரைத்* *தேவையான( நாளொன்றுக்குக்*
*குறைந்தது* *மூன்று லிட்டர் )* *அளவுக்குக் குடித்தல்* *உடலுக்கு நல்லது.*
*உணவு உண்ணும் போது இடையில் நீர் குடித்தல் கூடாது.*
*சமச்சீர் உணவு :*
🧘♂🧘♂🧘♂🧘♂🧘♂🧘♂
*ஒருவர் உட்கொள்ளும் உணவில் புரதம், கொழுப்பு,* *மாச்சத்து,*
*கனிமங்கள்,* *நுண்ணூட்டச் சத்துகள் சேர்ந்ததே சமச்சீர் உணவு.* *எனவே, அளவறிந்து உண்ண வேண்டியது ஒவ்வொருவரின் கடமை*
*சோறும் காய்கறியும் அரைவயிறு பால், மோர்,* *நீர் கால்வயிறு,*
*கால்வயிறு வெற்றிடமாக இருத்தல்* *வேண்டும். வயிறு புடைக்க*
*உண்ணுதல் நோய்க்கு* *இடமளிக்கும்.* *எனவேதான்,* *ஒளவையார் மீதூண் விரும்பேல்* *என்றார்.* *அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது பழமொழி.*
*வயது ஏறும்போது கொழுப்புச்சகுருதியுடன்*ின் *அளவைச் சிறிது*
*சிறிதாகக்* *குறைத்துக்கொண்டே வருதல் வேண்டும்.* *உணவைக்*
*கட்டுபடுத்துவ*தொடு எளிய* *உடற்பயிற்சிகளையும் செய்தல் வேண்டும்.* *நடைபயிற்சியே எளிய உடற்பயிற்சி.* *நாள்தோறும்* *தவிராமல் நடந்தால் நோய்* *நம்மைவிட்டு நடக்கும்,* *ஓடினால் நோய் நம்மைவிட்டு ஓடும், எப்போதும் படுத்துக் கிடந்தால் நோய் நம்மீது படுத்துக்கொள்ளும்.*
*காலை மாலை உலாவி நிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத்தொட்டுக் கும்பிட்டு காலன் ஓடிப் போவானே.* *– கவிமணி*
🧘♂🧘♂🧘♂🧘♂🧘♂🧘♂
*உடல்நலனை விரும்புவோர் முறையான உணவுப் பழக்கத்தை*
*மேற்கொண்டால், நெடுநாள் நலமாக வாழலாம்.* *உண்பதற்காக*
*வாழாமல்,* *வாழ்வதற்காக உண்டால் மருந்தென்பதே உடலுக்குத்*
*தேவை இல்லை. திருமூலரும்* *உடலைக் காத்தலின் *தேவையை*
*வலியுறுநாடு* *நலம்பெற நல்லுடல் பெற்ற மக்கள் தேவை.* *நல்லுடல் பெற* *நல்லுணவு* *முறையை* *மேற்கொள்ளுதல் வேண்டும்.*
*உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை* *வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே. – திருமூலர்.*
🧘♂🧘♂🧘♂🧘♂🧘♂🧘♂
*அறுசுவையின் பயன்கள் :*
*இனிப்பு –* *வளம்.*
*துவர்ப்பு –* *ஆற்றல்.*
*கைப்பு –* *மென்மை.*
*கார்ப்பு –* *உணர்வு.*
*உவர்ப்பு –* *தெளிவு.*
*புளிப்பு –* *இனிமை*
🌷🌷🌷🌷🌷🌷
*உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்*
🤭🤭🤭🤭🤭🤭
*உடலில்* *உள்ள*
*எல்லா உடல் நல குறைபாடுகளையும்*
*சரிசெய்ய*
*இயற்கை வாழ்வியல்* *முறை சார்ந்த*
*ஆலோசனைகள்* *வழங்கபடும்*
💞💞💞💞💞💞
*நன்றி வணக்கம்* *பெருசங்கர்*
*ஈரோடு மாவட்டம்*
*பவானி*
*செல் நம்பர்*
*6383487768*
*வாட்ஸ் அப்* *எண்*
*7598258480*
🧘♂🧘♂🧘♂🧘♂🧘♂🧘♂