இருமல் ஒரு வியாதி அல்ல. ஆனால், வியாதியின் அறிகுறியாகும்.
ஜலதோஷத்தால் வரும் இருமல் ஒரு சில நாட்களில் ஆறிவிடும்.
ஆனால், நமது தீய உணவு முறையால் அஜீரணம் ஏற்பட்டு புள்ளித் திகட்டல், வாய்வு தொல்லை, மலச்சிக்கல் ஆகியவை ஏற்படுகின்றன. இவற்றை குறித்து நாம் கவலையின்றி இருக்கும் போது உணவு பொருட்கள் ஜீரணமாகி வெளியேற்றப்படாமல் பல நாட்கள் உடலினுள் தங்கி இருக்க நேரிடுகிறது. இந்த உணவுப் பொருட்களில் இருந்து உற்பத்தியாகும் விஷப் பொருட்கள் சிறிது சிறிதாக இரத்தத்தில் கலக்கிறது, உடல் இந்த விஷத்தை வெளியேற்ற முயற்சி செய்கிறது. இந்த முயற்சியின் போது நுரையீரலில் கபம் சேர்கிறது. இந்த கபம் இருமல் மூலம் வெளியேற்ற உடல் முயற்சிக்கும்.
பெரியோர்களுக்கு தொடர்ந்து வரட்டு இருமல் இருக்குமாயின் அவர்களுக்கு நிம்மோனியா அல்லது இதய நோய் இருக்க வாய்ப்பு உண்டு. இருமலுடன் வரும் சளி வெள்ளையில் இருந்து மஞ்சள் பச்சை நிறமாக மாறி இருந்தால் கிருமித் தொற்று உள்ளது என்று பொருள்.
ஆஸ்துமா உள்ளவர்களுக்கு வெள்ளையாக நுரையுடன் கூடிய சளி வரும். தொடர்ந்து ரத்தம் கலந்த சளி வந்தால் அது நிமோனியா, காச நோயின் அறிகுறி ஆகும்.
நுரையீரலை மூடியுள்ள செல்களில் நீர் கட்டிக் கொண்டால் வலியுடன் கூடிய இருமல் வரும். நுரையீரல் புற்றுநோய்க்கு அறிகுறியாக இருப்பதும் இருமல் தான். எனவே இருமல் சாதாரணமானது தான் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது.சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் பூரணமாக முழுமையாக குணப்படுத்த முடியும். http://www.siddharmedicine.in/ @ 9943909495, 04258-226495