#உணவுசெரிமானம் #அடையவில்லையா..இயற்கை வழியில் உடனடி தீர்வுகள் இதோ..!..
சிலர் திடீரென வழக்கத்திற்கு மாறாக அதிகமாக உணவு உண்டுவிட்டால் செரிமானம் அடைய என்ன செய்வதெனத் திகைத்துக் கொண்டிருப்பார்கள் அல்லது உண்ட உணவு செரிமானமடைய நேரம் எடுத்துக் கொண்டாலும் வயிறு அசௌகரியமாக இருக்கும். இதற்கு உடனடி தீர்வு வீட்டிலேயே இருக்கிறது. அவை என்னென்ன என்பதைக் காணலாம்...
தண்ணீர் : செரிமானம் அடைய வயிற்றுக்கு போதுமான நீர் அவசியம். அப்போதுதான் உணவில் உள்ள ஊட்டச்சத்தை உறிஞ்சக் கூடிய தன்மை அதிகரிக்கும். குறிப்பான சுடு தண்ணீர் அருந்தினால் வயிறு இலகுத் தன்மை அடையும். செரிமானமும் அதிகரிக்கும்.
உண்டதும் நிமிர்ந்து படுக்காதீர்கள் : நேராகப் படுக்கும்போது அமிலங்களானது எதிர்வினையாக மேல் நோக்கி வரும். இதனால் நெஞ்சு எரிச்சல், உணவு எடுத்துக் கொண்டு வருவது போன்ற உபாதைகள் ஏற்படும்.
இஞ்சி : இது முன்னோர்கள் காலத்திலிருந்து பின்பற்றப்படும் மருத்துவம். இஞ்சியில் இருக்கும் ஜின்ஜரோல்ஸ் மற்றும் ஷொகோல்ஸ் என்னும் அமிலம் செரிமானத்தை அதிகரிக்கும். இது வாந்தி, வயிற்றுப் போக்கு போன்ற பிரச்னைகள் வர நேர்ந்தாலும் தடுத்துவிடும். இதற்கு வெறும் இஞ்சியை அப்படியேவும் அல்லது சூடாக இஞ்சி டீ அருந்தலாம்.
புதினா : செரிமானமற்ற உணவால் ஏற்படக் கூடிய நெஞ்சு எரிச்சல், வாந்தி, வயிற்றுப் போக்கு போன்ற பிரச்சினைகளைத் தடுக்க புதினா பாரம்பரிய மருத்துவம். இது செரிமானத்தையும் அதிகரிக்கும். புதினா டீ, புதினாவை அப்படியே மென்று உண்பது, புதினா மிட்டாய்கள் போன்றவை உண்ணலாம்.
லைம் சோடா : எலுமிச்சை சாற்றுடன் சோடா கலந்து அதோடு புதினாவும் சேர்த்துக் குடிப்பதால் வயிறு இலகுவாகி செரிமானம் தூண்டப்படும்.
பட்டை : செரிமான பாதையில் ஏதேனும் கோளாறு இருப்பின் அதைச் சரி செய்து உணவு செரிமானத்தைச் சுலபமாக்கிவிடும். இதற்கு உங்கள் உணவில் பட்டை சேர்த்துக் கொள்ளலாம். சிறு பட்டையை வாயில் வைத்து மிட்டாய் போல் சப்பி எச்சில் சாற்றை விழுங்கலாம். பட்டையில் டீ போட்டுக் குடிக்கலாம்.
கிராம்பு : வாயுத் தொல்லை இருப்போர்கள் கிராம்பை உண்டால் தீரா பிரச்னைக் குறையும். செரிமான குறைவு, வயிறு இறுகிப் பிடித்தல், வயிறு மந்த நிலை போன்ற உபாதைகளைச் சரிசெய்யக் கிராம்பு சரியான தீர்வு. ஒன்று அல்லது இரண்டு கிராம்புகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சூடாகக் குடித்தால் செரிமானம் சீராகி , வயிற்றுப் பிரச்னைகளும் இருக்காது. கிராம்பை வாயில் வைத்துச் சப்பி உண்ணலாம். கிராம்பு டீ அருந்தலாம்.
சோம்பு : பொதுவாக உணவகங்களிலும் சோம்பு கொடுக்கப்படுவதற்குக் காரணம் அதன் செரிமானத்திற்காகத்தான். செரிமான பிரச்னை இருந்தாலோ அல்லது அதிகமாக உண்டு விட்டாலோ உடனே ஒரு ஸ்பூன் சோம்புவை வாயில் போட்டு மென்று விழுங்குவதால் அஜீரணம் இருக்காது.
அத்திப் பழம் : அத்திப் பழம் ஜீரண சக்தியை அதிகரிப்பதுடன் மலச்சிக்கல் பிரச்னை, இரத்தக் குறைபாடு போன்றவற்றையும் சரி செய்யும்.
ஏலக்காய் : உணவு உண்டவுடன் ஒரு ஏலக்காயை வாயில் போட்டுக் கொண்டு மென்று விழுங்கினால் அஜீரணம் இருக்காது. வயிறு இலகுவாகும்....
🚶🏼HAROON SB 👍🏼