வெறும் 7 நாட்கள் தொடர்ந்து எலுமிச்சை சாற்றை குடிங்க! உடலில் மாற்றங்கள் நிகழுமாம்.
.
நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படும் பொருட்களில் ஒன்று எலுமிச்சை.
எலுமிச்சசை இதய நோய்களை தடுத்து, உயர் ரத்த அழுத்தத்தை இது கட்டுப்படுத்துகிறது. மேலும், எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.
எலுமிச்சை பல நோய்களுக்கு எதிரியாகும். இதில் எண்ணற்ற மருத்துவ பயன்கள் ஏராளமாக உள்ளது.
அந்தவகையில் 1 வாரம் தொடர்ந்து எலுமிச்சை நீரை குடித்து வருவதால் உடலில் ஏற்பட கூடிய தாக்கங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து இங்கு பார்ப்போம்.
1 வாரத்திற்கு நீங்கள் எலுமிச்சை நீரை குடித்து வந்தால் உங்களின் உடல் எடை குறையு அத்துடன் அடிக்கடி பசி எடுப்பதை தடுத்து சீரான அளவில் உங்களை சாப்பிட வைக்கவும் இது உதவும்.
1 வாரத்திற்கு காலை வேளையில் எலுமிச்சை நீரை குடித்து வந்தால் அந்த நாள் முழுக்க படு வேகமாகவே செயல்படுவீர்கள். மலச்சிக்கல் பிரச்சினைக்கும் இந்த நீர் நல்ல தீர்வை தரும்.
தொடர்ந்து 7 நாட்கள் எலுமிச்சை சாற்றை குடித்து வருவதால் எளிதாக நமது உடலில் சேர்ந்துள்ள அழுக்குகளை வெளியேற்றி விடலாம். இதனால் குடலில் உண்டாக கூடிய புற்றுநோயும் தடுக்கப்படுகிறது.
தொடர்ந்து 7 நாட்கள் எலுமிச்சை நீரை குடிப்பதனால் , ஹார்மோன்களை சீரான அளவில் உற்பத்தி செய்து மன அழுத்தம் போன்றவற்றை குறைக்கிறது. அத்துடன் ரத்த ஓட்டத்தை இது சீராக வைத்து, உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.
எலுமிச்சை பழத்தை உள்ள சிட்ரிக் அமிலம் சிறுநீரக கற்களை உண்டாகாமல் பார்த்து கொள்ளும் தன்மை கொண்டது. மேலும், ஏற்கனவே கற்கள் உருவாகி இருந்தாலும் அதனையும் இது அகற்றி விடுமாம்.
தொடர்ந்து 7 நாட்கள் இந்த எலுமிச்சை நீரை குடித்து வந்தால் உங்களின் முகத்தில் ஏற்பட கூடிய மாற்றங்களை உணர முடியும். குறிப்பாக நீங்கள் அதிக இளமையாக உங்களின் சருமம் மிருதுவாகவும், பொலிவாகவும் மாறும்.
உடலில் சேர்ந்துள்ள கொழுப்புகளை குறைக்க இந்த எலுமிச்சை வைத்தியம் நன்கு உதவும். தொப்பையும் குறைய கூடும்.
தயாரிப்பு முறை
1 கிளாஸ் வெது வெதுப்பான நீரில் 1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றை சேர்த்து கொள்ளவும். பிறகு இவற்றுடன் தேவைக்கு 1 ஸ்பூன் தேன் கலந்து கொள்ளலாம். இந்த நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மேற்சொன்ன பலன்களை எளிதில் அடைய முடியும்.