Tuesday, December 18, 2018

அந்தக் காலகட்டத்தில் குழந்தை பிறந்தது என்றால் உரைமருந்து ஊற்றியாச்சா? என்று கேட்பார்கள்.

வினீத் (9840980224):
அந்தக் காலகட்டத்தில் குழந்தை பிறந்தது என்றால் உரைமருந்து ஊற்றியாச்சா? என்று கேட்பார்கள்.

இந்த உரைமருந்து என்ன என்றால் சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, அதிமதுரம், சீரகம், கருஞ்சீரகம், காட்டுச்சீரகம், வால்மிளகு, வெள்ளை மிளகு இதனுடன் மூலிகைச்சாறு, கற்பூரவல்லிச் சாறு, வெற்றிலைச்சாறு, துளசிச்சாறு, திருநீற்றுபச்சிலைச்சாறு இவற்றையெல்லாம் சேர்த்து அரைத்து சாக்பீஸ் மாதிரி உருட்டி ஒவ்வொரு வீட்டிலும் ஒரு டப்பாவில் போட்டு வைத்திருப்பார்கள்.

குழந்தைக்கு உண்டாகக் கூடிய முதல் நோய் மாந்தம். தாய்ப்பாலே குழந்தைக்கு மாந்தமாக மாறும்.

குழந்தை பிறந்த பிறகு தசையை கட்டுவது அதாவது அந்தக் குழந்தைக்கு தினசரி நல்லெண்ணெய் தேய்த்து தலைக் குளிக்கவைத்து, குழகுழ வென்று இருக்கக்கூடிய அந்தக் குழந்தையை நல்ல வலுவாக கொண்டுவருவது. முதல் பதினைந்து நாளிலிருந்து ஒரு மாதத்திற்குள் வலிமை கொடுக்கக்கூடிய தன்மை எல்லாம் இருந்தது.

உரைமருந்து என்று சொன்னோமே அந்த உரைமருந்தை தாய்ப்பாலில் மெதுவாக இளைத்து, அந்தத் தாய்ப்பாலை சங்கில் அரைசங்கு ஊற்றும் பொழுது அந்தக்குழந்தைக்கு முதன்முதலில் உண்டாகக்கூடிய மாந்தம் என்பது சரியாகும்.

கிராமங்களில் ஒரு குழந்தையை நன்றாக அழவைத்து பாலைக்குடு என்று சொல்லுவார்கள். நன்றாக அழட்டும், நன்றாக கத்தட்டும் அதன் பிறகு பால் கொடுத்தால் செரித்துவிடும் என்பதற்கு காரணம் என்னவென்றால் அப்பொழுதுதான் ஒழுங்கான பசியாக இருக்கும். இல்லையென்றால் பழக்கத்தின் அடிப்படையில் குடுப்பதால் நிறைய மாந்தம் உண்டாவதற்கு வாய்ப்பு உண்டு.

நன்றி - சித்த மருத்துவர் அருண் சின்னையா

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...