*பெரும்பாலான கொடிய நோய்களுக்கு மலச்சிக்கலும் ஒரு காரணமாகிறது.*
இதற்கு யார் வேண்டுமானாலும் செய்யத்தக்க ஒரு எளிமையான மற்றும் இனிமையான மருந்தொன்றை பகிறுகிறேன்
ரோஜாப்பூ குல்கந்து - 250 கிராம்
நிலா வாரை சூரணம் - 125 கிராம் (இதை கடைகளில் சூரணமாகவே வங்கிக் கொள்ளலாம், இதற்கு நிலவாகை என்றும் பெயர்)
செய்முறை: மேற்சொன்ன இரண்டையும் ஒரு பாத்திரத்தில் இட்டு பிசரி ஒரு கண்ணாடி பாட்டலில் போட்டு வைத்துக்கொள்ளவும், அவ்வளவுதான் மருந்து ரெடி. இதை இரவு படுக்கும் முன் ஒரு வேளை மட்டும் பயன் படுத்துங்கள் போதுமானது.
இதன் அளவு ஒருவருக்கு 2 கிராம் முதல் 10 கிராம் வரை எடுக்கலாம், எனினும் அவரவர் இதை சாப்பிட்டு அவர்களுக்கேற்றாற்போல் அளவை நிர்நயித்துக்கொள்ளவேண்டும் ஏனெனில், ஒவ்வெருவரின் வயது மற்றும் பிரச்சனையின் தன்மையை பொருத்து இதன் தேவை இருக்கும்.
இதில் ரோஜாப்பூ இருப்பதால் மற்ற நிலாவாரை அவிழ்தங்களைப் போல வயிற்று வலி பிரச்சனை இருக்காது, ஒரு வேளை வயிற்றுவலியோ அல்லது பேதியோ இருப்பின் பயம் வேண்டாம் அளவை குறைத்துக்கொள்ளுங்கள் மறு நாள் சீராக இருக்கும், அல்லது உணவில் மோர் மற்றும் நெய் போன்ற குளுமை தரக்கூடிய பதார்த்தங்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.
இம்மருந்து அனேக வைத்தியப் பண்டிதர்களுக்கு தெரிந்தே இருக்கும், எனினும் வைத்தியம் பயிலுபவர்களுக்கும், பொதுமக்களுக்கும் எளிதில் அவர்களே இனிமையாக செய்து நற்பலனை தரக்கூடிய முறையாகையால் இங்கு பகிற்கிறேன்.
*ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய மருத்துவ முறை அவசியம் என்பதை அனைவருக்கும் பகிர்ந்து ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்.....!*