https://m.facebook.com/groups/1828757960722252?view=permalink&id=2227199030878141
#தாயத்து!
தொப்புள் கொடி மூலமும் நோயை கண்டுபிடிக்க முடியுமா ?
தாயையும் குழந்தையும் இணைக்கும் ஒரே உறுப்பு தொப்புள் கொடி தான். தாயிடம் இருந்து குழந்தை உயிர் வாழ தேவைப்படும் உணவு மற்றும் பிராணவாயு இதன் மூலம் கிடைக்கிறது. தாயிடமிருந்து அனைத்து ஊட்டசத்துக்களும் தொப்புள் கொடி மூலமே குழந்தைக்கு செல்கிறது.
குழந்தைகளுக்கு நுறையீரல் செயல்படுமா ?
குழந்தை கருவில் இருக்கும் போது நுறையீரல் செயல்படாது. தாயின் இரத்தத்தில் இருக்கும் பிராணவாயு தொப்புள் கொடி மூலமே குழந்தைகளுக்கு செல்கிறது. தொப்புள் கொடியில் 3 இரத்த நாளங்கள் உண்டு.
நோயை எப்படி கண்டறியலாம் ?
தொப்புள் கொடியின் நிறம் வெண்மையாக இருக்கும். மஞ்சள் நிறமாக இருந்தால் தாயின் வயிற்றில் மலம் கழித்து விட்டது என்று அர்த்தம். தொப்புள் கொடி வீக்கமாக இருந்தால் தாய்க்கு சர்க்கரை நோய் இருக்க வாய்ப்பு உண்டு. தொப்புள் கொடி மெல்லியதாக காணப்பட்டால் தாய்க்கு இரத்த அழுத்த நோய் உள்ளது என அர்த்தம்.
எப்படி நுரையீரல் செயல்படும் ?
குழந்தை பிறந்த பின் தொப்புள் கொடி வெட்டப்படும். அதற்கு பின் நுரையீரல் செயல்பட துவங்கும். தொப்புள் கொடியை வெட்டும் போது கிளாம்ப் செய்ய வேண்டும். கொடி முழுமையாக விழ 1 முதல் 2 வாரம் ஆகும். அதற்கு பின்னறும் தொப்புள் கொடி விழாமலும், வீக்கம் மற்றும் சீழ் இருந்தால் குழந்தைகளுக்கு நோய்தொற்று ஏற்பட்டிருக்கலாம். அதனால் குழந்தைகளின் தொப்புள் கொடியை நன்கு கவனிக்க வேண்டும்.
ஸ்டெம் செல்கள் :
குழந்தை பிறந்ததும் அதன் வயிற்றில் தொங்கும் சிறு தொப்புள் கொடியில் இருக்கும் சுமார் 80 மி.லி இரத்தம் தொப்புள் கொடி இரத்தம் (Umblical cord blood) எனப்படுகின்றது. இந்த இரத்தத்தில் அதிக அளவு ஆதார செல்கள் (ஸ்டெம் செல்கள்) உள்ளன. இந்த ஆதார செல்களிலிருந்து உடலின் உறுப்புக்களை உருவாக்கலாம். இந்த இரத்த ஆதார செல்களை குழந்தை பிறக்கும் போது தொப்புள் கொடியிலிருந்து பிரித்தெடுத்து சேமித்து வைத்தால் இரத்த சம்பந்தமாக ஏற்படும் 80-க்கும் மேற்பட்ட நோய்களை இந்த சேமித்த ஆதார செல்களை பயன்படுத்தி அந்த குழந்தையையோ அல்லது இது பொருந்தக்கூடிய மற்ற குழந்தையையோ குணமாக்கலாம். இதற்காகவே முன்னோர்கள் 2 வாரங்களில் தானாக விழும் தொப்புள் கொடியை எடுத்து பதப்படுத்தி குழந்தைகளுக்கு தாயத்து ஆக அணிவிக்கின்றனர்.