Monday, November 12, 2018

நோய் எதிர்ப்பு சக்தியை வரவழைக்க என்ன செய்கிறாய்?

நோய்க்கு விடாமல் மருந்து தேடும் மானிடா....நோய் எதிர்ப்பு சக்தியை வரவழைக்க என்ன செய்கிறாய்?  வந்தபின் வாழ்வே கேள்விகுறியாகி போனதும் பதறும் பகுத்தறிவாளனே எங்கே உனது தைரியம்? உடலுக்கு  உணவு எது சரி? எது தவறு? என்று தெரியாமலே வாய் ருசிக்கு ஆசைப்பட்டு மருந்து தேடுவது புத்திசாலிதனமா? நாகரீக வளர்ச்சியில் நாமும் மாறிபோனது உண்மையா?         குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் வருவது அதுக்கு வழங்கும் சாபம் அல்லவா?  வியர்வை சிந்தி உழைக்கும் மானிடபிறவி  தற்போது உள்ளதா? கல்லை தின்றாலும் கரையும் வயதில் மருத்துவமனையில் மண்டியிடுவது மானமுள்ள தமிழனுக்கு அழகா?  நமது இல்லத்தை, நமது தெருவை, நமது ஊரை சுத்தமாக வைத்து கொள்ள அரசாங்கம் மட்டும் தான் செய்ய வேண்டுமா? நம்முடைய பங்கு இல்லையா?  நோய் எங்கு எதனால், எப்படி வருகிறது தெரியுமா?  உடலில் நாம் இழக்கும் ஒவ்வொரு உறுப்பும் நமக்கு அழிவு என்பது தெரியுமா?  ஆங்கில மருந்தில் அபாயம் தெரியுமா? உடனடி நிவாரணத்தில் (ஆங்கில மருத்துவம்) ஏன் நாட்டம்? அவசரம்? உடல் சோர்வு ஏற்படும் போது போதிய ஓய்வு தேவை, ஆனால் ஊசியை போட்டு உடனடியாக பணிச்செய்யும் போது உடல் உங்களுக்கு ஒத்துழைக்குமா? உணர்வில்லாத இயந்திரம் கூட ஒய்வு வழங்கவில்லையெனில் இயங்காது....ஆனால் மனிதன்? சிந்திக்கவும்....  வருமுன் காப்பதே சிறந்தது...வந்தபின் பார்ப்பது ஆறுதலே அன்றி நிரந்தர தீர்வல்ல...புத்தியுள்ள பிள்ளைகளுக்கு இது புரியும்...   நன்றி                                     அகத்தியர் இயற்றை உலகம்

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...