Tuesday, November 13, 2018

வாஸ்து வழியாக தாய் தந்தை உறவுகள் ஒருவர் வாழ்வில் சிறப்பு பெற வேண்டுமா?

வாஸ்து வழியாக தாய் தந்தை உறவுகள் ஒருவர் வாழ்வில்  சிறப்பு பெற வேண்டுமா?

ஜோதிட ரீதியாக அப்பாவின் நிலையை பற்றிய விபரங்களை ஒருவர் ஜாதகத்தில் ஒன்பதாம் பாவமும், கிரகத்தில் சூரியனும் நிர்நியம் செய்கின்றனர்.அதேபோல் தாயாரை குறிக்கும் கிரகம் சந்திரன் ஆவார். இதனை ஒரு இல்லத்தில் முடிவு செய்யக்கூடிய இடமாக ஒரு இடத்தில் அதாவது இல்லத்தில், வடகிழக்கு பகுதியும், வடகிழக்கு பகுதியும் அங்கம் வகிக்கின்றது.அந்தவகையில் ஒரு இல்லத்தில் வடகிழக்கு மற்றும் வடமேற்கு தவறான அமைப்புக்களை பெற்றிருந்தால்,ஒருவரின் வாழ்வில் அப்பா அம்மா அன்பு என்பது கிடைக்காது போய் விடும்.அல்லது மிகப்பெரிய தவறுகள் இருக்கும் பட்சத்தில், அவர்களின் உயிர் சார்ந்த  நிகழ்வுகளில் கூட பாதிப்பை ஏற்படுத்தும்.

வடகிழக்கு வாஸ்து தவறுகள் அப்பாவின் உறவுநிலை மற்றும், அவரின் ஆயுள் நிலையைக்கூட இல்லத்தின் வடகிழக்கு பகுதி ஆக்கிரமிப்பு செய்யும். வடகிழக்கு பகுதியில் இருக்கும் வாஸ்து குற்றங்கள் என்ன என்பதனைப் பார்ப்போம்.

ஒரு இல்லத்தில் ஆண்களின் வெற்றியில் பங்குபெறும் வடகிழக்கு தவறுகள்.

1,ஒரு இல்லத்தில் பூஜையறை வடகிழக்கில் இருப்பது.

2. குளிக்கும் அறைகளும், கழிவறைகளும் வடகிழக்கு பகுதியை ஆக்கிரமிப்பு செய்வது.

3.இலங்கை மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் இருப்பது போல வடகிழக்கில் சமையலறை.

4.குடும்ப தலைவர் படுக்கையறை இருப்பது.

5.வடகிழக்கு பகுதியில் இருக்கும் படிக்கட்டுகள்.

6.வடகிழக்கு பகுதியில் கிணறு இருந்தால் நல்லது என்று வாஸ்து கூறுகிறது. ஆனால் ஓரு அளவைவிட பெரிய கிணறுகள் இருப்பது வடகிழக்கில் மிகப்பெரிய தவறான அமைப்பாகி விடும்.

அம்மாவின் ஸ்தானம் ஆன வடமேற்கு பகுதியில் இருக்கும் தவறுகள் ஒரு குடும்பத்தில் அம்மாவின் உறவுநிலை,மற்றும் அம்மா அப்பாவை பிரிந்து சென்றுவிடுவது.அல்லது அம்மாவின் உயிர் சார்ந்த நிகழ்வுகளில் பாதிப்பை ஏற்படுத்துவது போன்ற பாதிப்பைக் கொடுக்கும்.

அம்மா சார்ந்த உறவில் பாதிப்பு கொடுக்கும் வடமேற்கு தவறுகள்.

1.வடமேற்கு பகுதிகளில் மூடப்பட்ட படிக்கட்டுகள்.

2. படிகளுக்கு ரூம் அமைத்து மாடியில் உயர அமைப்பு ஏற்படுத்துவது.

3.வடமேற்கு பகுதியில் மிகப்பெரிய பள்ளங்கள் இருப்பது.

4.மூலைப்பகுதியில் உள்ளே தவறாக படிகளை அமைத்து கொள்வது.

5.வடமேற்கு பகுதியில் இருக்கும் கிணறுகள்.

இப்படி பலவிதமான வாஸ்து குற்றங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...