துளசி ஊற வைத்த தண்ணீர், ஓமம் காய்ச்சிய தண்ணீர் அவ்வ போது குடிக்கலாம்.
மூலிகை ஆவி(not vicks or other thylam) பிடிக்கலாம்.
செய்முறை:
10 நிமிடம் கொதிக்க வைத்த நீரில் சிறிது கல் உப்பு, மஞ்சள் தூள், துளசி போட்டு போர்வை போட்டு மூடி 10-15 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும்.
பச்சை கற்பூரம் சூடான தேங்காய் எண்ணெயில் கலந்து நெஞ்சில், முதுகில் தடவ வேண்டும்.
தினம் இரு முறை செய்து வந்தால் நன்கு பலனளிக்கும். துளசிக்கு பதில் யூகலிப்ட்ஸ், வேப்பிலை, நொச்சி இலை கூட பயன்படுத்தலாம்.
முக்கியமான ஒன்று இரவு தூங்கும் போது கொசுவிரட்டி சுருள், திரவம் உபயோகிக்க வேண்டாம்.
மின் விசிறிக்கு கீழே தூங்கவேண்டாம்.