Saturday, September 15, 2018

சானிடரி நாப்கின் பயன்படுத்துபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை...

சானிடரி நாப்கின் பயன்படுத்துபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை...

நாப்கின், பெண்கள் வாழ்வோடு இணைந்த ஒன்று. பெண்களின் டீன்ஏஜ் வயதில் இணையும் நாப்கின் 48 வயதுவரை உடன் பயணிக்கிறது. ஒரு பெண் தன் வாழ்நாளில் சராசரியாக 15000 சானிட்டரி நாப்கின்களை உபயோகிப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. நம் வாழ்க்கையோடு இணைந்த நாப்கினைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா…

நம்மில் பலரும் விளம்பரத்தை பார்த்து மட்டுமே நாப்கின் வாங்கலாம் என்று முடிவெடுக்கிறோம். நாம் பருத்தியினால் உற்பத்தி செய்யப்பட்ட நாப்கின்களைத்தான் பயன்படுத்துவதாக நினைக்கிறோம். ஆனால்,  நாப்கின் தயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்தி செலவை குறைப்பதற்காக மீள் சுழற்சி செய்யப்பட்ட காகிதங்களை பயன்படுத்துகின்றன.

நாப்கின்களின் லேயர்களில் பயன்படுத்தப்படும் டிஸ்யூ பேப்பர்களின் வண்ணங்களை நீக்குவதற்கு ப்ளீச் செய்யப்படுகின்றன. மீள்சுழற்சி செய்யப்பட்ட காகிதங்களையே மூலப் பொருட்களாக பயன்படுத்துகின்றன. நாப்கின் தயாரிப்பில் டயாக்ஸின் என்னும் கெமிக்கல் பயன்படுத்தப்படுகிறது. இது கர்ப்பப் பையை பாதிக்கும் அளவிற்கு தீங்கானது. மேலும், இந்த கெமிக்கலினால் பெண்களின் நோய் தடுப்பாற்றலும், கருமுட்டை உற்பத்தித் திறனும் குறைகிறது.

நாப்கின் லேயர்ஸ்

நாப்கினின் முதல் லேயர் பிளாஸ்டிக்கால் தயாரானது. 2-வது லேயர் மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதத்தால் உருவான ப்ளீச் செய்யப்பட்ட டிஸ்யூ பேப்பர். 3-வது லேயர் ஈரப்பதத்தை தக்கவைக்கும் ஜெல். 4-வது லேயர் லீக்  ஆகாமல் இருப்பதற்கான பிளாஸ்டிக் லேயராக வைத்து நாப்கின் தயாரிக்கப்படுகிறது.

கவனிக்க வேண்டியவை

இன்றைய காலத்தில் பணிக்கும் செல்லும் பெண்கள் 8 அல்லது 12 மணிநேரம் வேலை செய்கிறார்கள். இதனால், நாப்கின் மாற்ற நேரமின்றி ‘அல்ட்ரா தின்’ ‘எக்ஸ்டாரா லாங்க்’ ‘லாங் நைட்’  என்று விளம்பரங்களை பார்த்து அதைப் பயன்படுத்துகிறார்கள். எந்த விதமான் நாப்கினை பயன்படுத்தினாலும் 2 மணிநேரத்திற்கு ஒரு முறை கட்டாயமாக மாற்ற வேண்டும்.

விளம்பரத்தை பார்த்து  மட்டும் வாங்காமல், சானிட்டரி நாப்கினின் மூலபொருள்கள் என்னென்ன பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை கவனித்து வாங்குங்கள்.டாயக்ஸின் இல்லாத, அன்ப்ளீச்சிங் நாப்கின்களை மட்டுமே பயன்படுத்துங்கள்

நாப்கினை மாற்றும் பொழுது சுத்தமாக கையைக் கழுவியபின் மாற்றுங்கள். நாப்கினை ஈரப்பதம் உள்ள கழிவறைகளிலேயே வைக்காதீர்கள். வாசனை நிரம்பிய நாப்கினை பயன்படுத்தாதீர்கள்.

பயன்படுத்திய நாப்கினை  டாய்லெட் பிளஷ்ஷில் போடாமல், முறையாக காகித்தாளில் சுருட்டி உடனடியாக குப்பைத் தொட்டியில் போடுங்கள்.

துணியைக் காட்டிலும் நாப்கின் பயன்படுத்துவது சுகாதரமானது. மாதவிடாய் காலத்தில் நாப்கின் பயன்படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்று. நாப்கினை வாங்க எந்தவொரு கூச்சமில்லாமல் கடைகளில் கேட்டு வாங்குங்கள். எத்தனை பாதுகாப்பாக இருந்தாலும் கறை ஏற்படுவது சில சமயங்களில் தவிர்க்க முடியாது. கறை ஏற்படுவது இயல்பான ஒன்றே. இதைக் குறித்து அவமானமாக உணரவேண்டிய அவசியமில்லை என பிள்ளைகளுக்கு புரியவையுங்கள்.
நன்றி:ஆனந்த விகடன் .

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...